என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "teenage magic"
- வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்று விட்டார்.
- அக்கா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே அசகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன் (வயது 27). இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்று விட்டார். இந்நிலையில் இவரது மனைவி மலர்விழி (24), மகள்கள் இதலிகா (3), லியா (1) ஆகியோர் வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று மலர்விழி தனது 2 மகள்களுடன் சிவகாசியில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
ஆனால் மீண்டும் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து இளவரசனின் அக்கா பிரவீனா வெளிநாட்டில் உள்ள தனது தம்பிக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்