search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளை அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம்
    X

    களியக்காவிளை அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம்

    • மாலையில் வீட்டிற்கு வந்த போது மனைவி மகளை காணவில்லை.
    • தாய்-மகள் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை அருகே உள்ள மீனச்சல் பகுதியில் செயல்பட்டு வரும் கடையில் அல்வா தயாரிக்கும் மாஸ்டராக வேலை பார்ப்பவர் ஆறுமுக கண்ணன். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆகும்.

    இவர் தற்போது மீனச்சல் பகுதியில் வாடகை வீட்டில் மனைவி சண்முக ஆனந்தி (வயது 22), மகள் முத்து இனியா (1) ஆகியோருடன் வசித்து வருகிறார். ஆறுமுக கண்ணன் காலையில் வேலைக்கு சென்ற பிறகு சண்முக ஆனந்தி யாரிடமோ போனில் பேசுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று ஆறுமுக கண்ணன் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்த போது மனைவி மகளை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். மேலும் தன்னுடைய உறவுக்காரர்கள் வீட்டிற்கு சென்றும் தேடி உள்ளார். ஆனால் சண்முக ஆனந்தி மற்றும் மகள் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து களியக்கா விளை போலீஸ் நிலையத்தில் ஆறுமுக கண்ணன் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முக ஆனந்தி, அவரது மகள் முத்து இனியா ஆகியோரை தேடி வருகின்றனர். தாய்-மகள் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×