என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
களியக்காவிளை அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம்
- மாலையில் வீட்டிற்கு வந்த போது மனைவி மகளை காணவில்லை.
- தாய்-மகள் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி :
களியக்காவிளை அருகே உள்ள மீனச்சல் பகுதியில் செயல்பட்டு வரும் கடையில் அல்வா தயாரிக்கும் மாஸ்டராக வேலை பார்ப்பவர் ஆறுமுக கண்ணன். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆகும்.
இவர் தற்போது மீனச்சல் பகுதியில் வாடகை வீட்டில் மனைவி சண்முக ஆனந்தி (வயது 22), மகள் முத்து இனியா (1) ஆகியோருடன் வசித்து வருகிறார். ஆறுமுக கண்ணன் காலையில் வேலைக்கு சென்ற பிறகு சண்முக ஆனந்தி யாரிடமோ போனில் பேசுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று ஆறுமுக கண்ணன் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்த போது மனைவி மகளை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். மேலும் தன்னுடைய உறவுக்காரர்கள் வீட்டிற்கு சென்றும் தேடி உள்ளார். ஆனால் சண்முக ஆனந்தி மற்றும் மகள் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து களியக்கா விளை போலீஸ் நிலையத்தில் ஆறுமுக கண்ணன் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முக ஆனந்தி, அவரது மகள் முத்து இனியா ஆகியோரை தேடி வருகின்றனர். தாய்-மகள் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்