search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்தாமரைகுளம்அருகே செல்போனில் பேசியதை கணவர் கண்டித்ததால் இளம்பெண் மாயம்
    X

    தென்தாமரைகுளம்அருகே செல்போனில் பேசியதை கணவர் கண்டித்ததால் இளம்பெண் மாயம்

    • 5 வயதில் ஒரு பெண் குழந்தையும். 1½ வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
    • தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் சரவணன் புகார் அளித்தார்

    கன்னியாகுமரி :

    தென்தாமரைகுளம் அருகே பொற்றையடியை அடுத்த கரம்பவிளையை செர்ந்தவர் சரவணன் (வயது 25). இவரது மனைவி ஆதிலட்சுமி (21) இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும். 1½ வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

    ஆதிலட்சுமி அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு வந்துள்ளார். இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று ஆதிலட் சுமி வீட்டில் இருந்து மாயமானார். மாயமான ஆதிலட்சுமியை பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடிய வில்லை. இது குறித்து தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் சரவணன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆதிலட்சுமியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×