search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் கற்பழிப்பு"

    • ரோட்டில் இளம்பெண் ஒருவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறியபடி ஓடிவந்தார்.
    • திருவனந்தபுரம் போலீசார், ஆற்றிங்கல் சென்று அங்கு பதுங்கி இருந்த கிரணை கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த கழக்கூட்டம் பகுதியில் நேற்று அதிகாலை 5 மணிக்கு பொதுமக்கள் சிலர் டீக்கடைக்கு செல்ல ரோட்டில் நடந்து சென்றனர்.

    அப்போது இளம்பெண் ஒருவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறியபடி ஓடிவந்தார். சத்தம் கேட்டு மக்கள் அந்த பெண்ணை நோக்கி ஓடினர். அவர் உடலில் ஆடைகள் எதுவும் இல்லை. நிர்வாணமாக இருந்த அவர் கைகளால் உடலை மூடியபடி ரோட்டில் விழுந்து அழுது புரண்டார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள், அந்த பெண்ணுக்கு பக்கத்து வீட்டில் இருந்து உடை வாங்கி கொடுத்தனர். அதனை அணிந்த பின்பு அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறிய மக்கள், அவர் ஏன்? நிர்வாணமாக ஓடி வந்தார் என கேட்டனர்.

    அதற்கு அந்த பெண், திருவனந்தபுரத்தை அடுத்த ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த கிரண் என்ற வாலிபர், தன்னை கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனது ஆடைகளையும் கிழித்து எறிந்து விட்டதாகவும் கூறினார். அதிகாலையில் அவர் தூங்கி கொண்டிருந்தபோது தப்பி வந்ததாகவும் கூறினார்.

    இதையடுத்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் கவுன்சிலிங்கும் வழங்கப்பட்டது. அதன்பின்பு மகளிர் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த கிரண் என்பது தெரியவந்தது.

    திருவனந்தபுரம் போலீசார், ஆற்றிங்கல் சென்று அங்கு பதுங்கி இருந்த கிரணை கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் கிரண் வேலை பார்த்த நிறுவனத்தில் அந்த பெண்ணும் வேலை பார்த்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில் நேற்று முன்தினம், அந்த பெண், இன்னொருவருடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிரண், அந்த பெண்ணை தன்னோடு வருமாறு அழைத்துள்ளார். முதலில் வரமறுத்த பெண், பின்னர், கிரண் கெஞ்சியதை பார்த்து அவருடன் சென்றுள்ளார். அங்கிருந்து அந்த பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்த கிரண், கழக்கூட்டம் பகுதியில் உள்ள ஒரு குடோனுக்கு அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு அந்த பெண்ணை சரமாரியாக அடித்து உதைத்ததோடு, அவரது ஆடைகளை கிழித்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை செல்போனில் படமும் எடுத்துள்ளார். பின்னர் தன்னை தவிர வேறு யாருடனாவது பேசினால், ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.

    அன்று இரவு முழுவதும் அந்த பெண்ணை குடோனில் அடைத்து சித்ரவதை செய்த கிரண், அதிகாலை நேரத்தில் தூங்கி உள்ளார். அந்த நேரத்தில் தான் அந்த பெண், குடோனில் இருந்து தப்பி வெளியே வந்துள்ளார். விசாரணையில் தெரியவந்த இந்த தகவல்களை தொடர்ந்து போலீசார் கிரணை கைது செய்தனர்.

    • கொலை செய்யப்பட்டவர் கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பிற்காக சென்று வந்துள்ளார்.
    • இளம்பெண்ணை கடந்த 15 நாட்களாக தினேஷ் என்ற வாலிபர் பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    ஜெய்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க தலித் பெண் ஒருவர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கொலை செய்யப்பட்டவர் கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பிற்காக சென்று வந்துள்ளார். அவரை கடந்த 15 நாட்களாக தினேஷ் என்ற வாலிபர் பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் கம்ப்யூட்டர் வகுப்பிற்காக அந்த பெண் சென்ற போது கஜூவாலா போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் மனோஜ் குமார் மற்றும் பாகீரத்குமார் என்ற 2 போலீஸ்காரர்கள் மற்றும் தினேஷ் உள்ளிட்ட கும்பலால் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை எடுக்க கூடாது என பெண்ணின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு தேஜஸ்வனி கவுதம் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    முதல் கட்டமாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களான மனோஜ் குமார், பாகீரத் குமார் ஆகிய 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பெண்ணின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • நெல்லூர் நகரப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
    • தனியாக செல்லும் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நெல்லூரில் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திரா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண். இவரது சகோதரிக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.

    இதற்காக நெல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணின் சகோதரியை சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு துணையாக இளம்பெண் ஆஸ்பத்திரியிலேயே தங்கி இருந்து கவனித்து வந்தார். நேற்று சகோதரிக்கு மருந்து வாங்கி வரும்படி தெரிவித்தனர்.

    மருந்து கடைக்கு செல்வதாக கூறிவிட்டு இளம்பெண் ஆஸ்பத்திரியில் இருந்து புறப்பட்டார். அவர் நெல்லூர் காந்தி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பொதுமக்கள் நடமாட்டம் மிக குறைவாக இருந்தது.

    இளம்பெண்ணை பின்தொடர்ந்து ஆட்டோவில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தனர்.

    அவர்கள் இளம்பெண்ணின் அருகில் சென்று வழி கேட்பது போல பேச்சு கொடுத்தனர். அப்போது இளம்பெண் ஆட்டோவிற்கு அருகில் சென்று அவர்களிடம் பேசினார்.

    அந்த நேரத்தில் ரோட்டில் மக்கள் நடமாட்டம் இல்லை. திடீரென ஆட்டோவில் இருந்த கும்பல் இளம்பெண்ணை இழுத்து ஆட்டோவில் தூக்கி போட்டனர்.

    மேலும் அவர் சத்தம் போடாமல் இருக்க கைகளால் வாயை பொத்திக்கொண்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ அங்கிருந்து புறப்பட்டது. நெல்லூர் அடுத்த கோலக சாலையில் இளம்பெண்ணை கடத்திச் சென்றனர்.

    அங்குள்ள தனியார் பள்ளி அருகே பெரிய புதர் பகுதி உள்ளது. அந்த பகுதிக்கு இளம்பெண்ணை கொண்டு சென்றனர். அங்கு வைத்து 4 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை மாறி மாறி கற்பழித்தனர். அவர்கள் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது.

    மேலும் இளம்பெண்ணை அவர்களது நண்பர்களுக்கும் விருந்தாக்க முடிவு செய்தனர்.

    இளம்பெண்ணை கடத்தி வைத்திருப்பது குறித்து அவர்களது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து அவரது நண்பர்கள் 5 பேர் காரில் அங்கு விரைந்து வந்தனர். அவர்களும் சேர்ந்து இளம்பெண்ணை கற்பழித்தனர்.

    இதனால் வலி தாங்க முடியாமல் இளம்பெண் கதறி அழுதார்.

    சத்தம் கேட்டு அந்தப்பகுதி வழியாக சென்ற சிலர் அங்கு வந்தனர். அவர்களை 9 பேர் கொண்ட கும்பல் மிரட்டி விரட்டி அடித்தனர்.

    அவர்களிடம் இருந்து தப்பிய பொதுமக்கள் இதுகுறித்து வேட்டையப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அதற்குள் இளம்பெண்ணை அங்கேயே போட்டுவிட்டு கும்பல் ஆட்டோ மற்றும் கார்களில் தப்பி சென்று விட்டனர். போலீசார் புதர் பகுதியில் இருந்து இளம்பெண்ணை மீட்டனர். அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் கும்பலைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லூர் நகரப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    அதில் ஆட்டோ மற்றும் கார்களின் பதிவு எண் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது. அதனை வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனியாக செல்லும் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • இளம்பெண் தனது காதலன் முருகேசனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி வந்தார்.
    • முருகேசன் கடந்த 1 மாதத்துக்கு முன்பு அவரது உடமைகளை எடுத்துக்கொண்டு காதலியை தவிக்க விட்டு மாயமானார்.

    கோவை:

    கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண்.

    இவருக்கு கடந்த 1 ஆண்டுக்கு முன்பு கோவை சூலூரை சேர்ந்த சமையல் மாஸ்டர் முருகேசன் (வயது 35) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் செல்போன் மூலமாக பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில் காதலர்கள் 2 பேரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு நேரில் சந்தித்தனர். அப்போது 2 பேருக்கும் பிடித்து போனதால், திருமணம் செய்து கொள்வதற்கு அவர்கள் முடிவு செய்தனர்.

    இதையடுத்து முருகேசன் சூலூரில் வீடு வாடகைக்கு எடுத்து இளம்பெண்ணுடன் தங்கினார்.

    அப்போது அவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதனால் அவர் 5 மாத கர்ப்பமானார். அவர் தனது காதலன் முருகேசனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி வந்தார். ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தார்.

    இந்த நிலையில் முருகேசன் கடந்த 1 மாதத்துக்கு முன்பு அவரது உடமைகளை எடுத்துக்கொண்டு காதலியை தவிக்க விட்டு மாயமானார். இதனால் அதிர்ச்சியான இளம்பெண் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது பேசிய முருகேசன் தான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறியதுடன், அந்த பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தையும் அனுப்பினார். இதனை பார்த்து இளம்பெண் அதிர்ச்சியடைந்தார்.

    தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவான முருகேசனை தேடி வருகிறார்கள்.

    • காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விப்பேடு பகுதியை சேர்ந்த தென்னரசு உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • குற்றவாளி தென்னரசுவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளம் பெண்ணை மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விப்பேடு பகுதியை சேர்ந்த தென்னரசு உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில் ஏற்கனவே 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் இந்த கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியான தென்னரசுவை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதைத்தொடர்ந்து குற்றவாளி தென்னரசுவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை சிறைத்துறை அதிகாரிகளுக்கு காஞ்சிபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழங்கினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த சில நாட்களுக்கு முன்புதான், நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீலின் காதலிக்கு அவர் ஏற்கனவே திருமணமானவர் எனவும், அவருக்கு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.
    • விசாரணை நடத்திய போலீசார் நிகுஞ்ச் குமாரை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 376 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    சூரத்:

    குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்தவர் நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீல்.

    நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீலுக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணிடம் நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீல் தனக்கு திருமணமானதை மறைத்து பழகினார். இந்த பழக்கம் காதலாக மாறியது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து கொண்டனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்புதான், நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீலின் காதலிக்கு அவர் ஏற்கனவே திருமணமானவர் எனவும், அவருக்கு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.

    இதை அறிந்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார். நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீலுடன் இருந்த காதலை முறித்து கொண்டார். மேலும் அவரை சந்திக்கவும் மறுத்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீல் சம்பவத்தன்று, அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அவரது அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடியையும் வைத்தார். இதில் உடலில் எரிச்சல் ஏற்பட்டு அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி சூரத் போலீசில் அந்த பெண் புகார் செய்தார். அதில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, தனது ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் நிகுஞ்ச் குமாரை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 376 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    • பெண்ணிடம் உன்னை திருமணம் செய்து கொள்வதாக விக்னேஷ் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய வாலிபரை கைது செய்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ள நம்மோன்காடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது21). இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். மலைதாங்கிபுரம் பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவரும் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இவர்கள் இருவரும் திருப்பூரில் வேலை பார்த்து வந்ததால் நட்பாக பழகி வந்தனர். பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் அவர்கள் பல இடங்களுக்கு சென்று சுற்றியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் விக்னேஷ், அந்த பெண்ணிடம் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனால் அந்த பெண்ணை விக்னேஷ் கோட்டப்பட்டி அருகேயுள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணிடம் விக்னேஷ் உல்லாசமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

    பின்னர் அந்த பெண்ணிடம் சரியாக பேசவில்லை. இது பற்றி அந்த பெண் கேட்டபோது உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று விக்னேஷ் கூறியுள்ளார்.

    இதனால் அந்த பெண் வீட்டில் கதறி அழுதார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து அந்த பெண் தனது பெற்றோரிடம் கூறினார். இதனை கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய வாலிபரை கைது செய்தனர்.

    • இளம்பெண் தனது உறவினர்களை அழைத்து அன்று இரவே வீட்டை காலி செய்து சென்று விட்டார்.
    • பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மநபர்கள் கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் சுல்தான்பேட்டை சேடர் தெருவை சேர்ந்தவர் அருள்செல்வன் (வயது 56). இவர், பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு சுல்தான்பேட்டையில் உள்ளது.

    இந்த வீட்டை லாரி டிரைவர் ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். இவர் கடந்த வாரம் அவர் வெளிமாநிலத்துக்கு லாரியை வாடகைக்கு ஓட்டிச்சென்றார். இதனால் வீட்டில் இவரது மனைவி, தனது குழந்தையுடன் தனியாக இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணிக்கு மர்மநபர்கள் 5 பேர் அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தில் கர்சிப் கட்டிக்கொண்டு வீட்டிற்குள் புகுந்தனர். வீட்டில் அந்த பெண் தனது குழந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது சத்தம் கேட்டு எழுந்த அந்த பெண் வீட்டின் உள்ளே 5 பேர் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மர்மநபர்கள் 5 பேர் , திடீரென அந்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். அப்போது அலறி அடித்துக் கொண்டு அவர்களிடம் இருந்து தப்பி தெருவில் வந்து கூச்சலிட்டார்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் தங்களது வீடுகளில் இருந்து வெளியே வரவே சுதாகரித்துக்கொண்ட 5 பேர் தங்களது மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பி ஓடி விட்டனர்.

    இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் தனது உறவினர்களை அழைத்து அன்று இரவே வீட்டை காலி செய்து சென்று விட்டார். இதனால் சுல்தான்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் அருள்செல்வன் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த பகுதியில் வைத்திருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவான வீடியோ ஆதாரத்துடன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதில் தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற 5 நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    அதன்பேரில் பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மநபர்கள் கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    இரவு நேரங்களில் பகவதி அம்மன் கோவில், சந்தை வளாகம் மற்றும் சேடர் தெரு ஆகிய பகுதிகளில், மர்மநபர்கள் சாலையிலேயே அமர்ந்து மது அருந்துகின்றனர். இவர்களை தட்டிக் கேட்டால் பொதுமக்களை மிரட்டுகின்றனர்.

    பாதிக்கப்பட்ட அந்த பெண் இந்த பகுதியில் தகுந்த பாதுகாப்பு இல்லை என உடனடியாக வெளியேறி விட்டார். பரமத்திவேலூர் போலீசார் இரவு நேரங்களில் இப்பகுதியில் ரோந்து வரவேண்டும். அசம்பாவிதம் ஏற்படும் முன் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நடிக்க செல்லும் முன்பு அது பற்றி பேசவேண்டும் என ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு வருமாறு இளம்பெண்ணை அழைத்தார்.
    • சினிமா வாய்ப்பு தராதது குறித்து கேட்டால் மிரட்டுகிறார்கள்.

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஒருவர், தனக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறினார். நடிக்க செல்லும் முன்பு அது பற்றி பேசவேண்டும் என ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு வருமாறு அழைத்தார்.

    அங்கு சென்ற என்னை அவரும், அவரது நண்பரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன்பின்பு அவர்கள் எனக்கு சினிமாவில் வாய்ப்பு தரவில்லை. இதுபற்றி கேட்டால் அவர்கள் என்னை மிரட்டுகிறார்கள். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் விசாரணையில் 4 பேரில் ஒருவருக்கும், புகார் செய்த இளம்பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருந்து வந்தது தெரியவந்தது.
    • சம்பவத்தன்று வாலிபர் இளம்பெண் வீட்டிற்கு சென்ற போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று ஒரு போன் வந்தது. அதில் பேசிய இளம்பெண் ஒருவர், நான் தனியாக வீட்டில் இருந்த போது எனது வீட்டிற்கு வந்த வாலிபர்கள் 4பேர் என்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததுடன் எனது வீட்டில் இருந்த 3பவுன் நகை, ரூ.20ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த நல்லூர் போலீசார் உடனே அந்த இளம்பெண் வசித்து வரும் விஜயாபுரம் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளம்பெண் கூறிய அடையாளம் மூலம் அப்பகுதியை சேர்ந்த 4 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் 4 பேரில் ஒருவருக்கும், புகார் செய்த இளம்பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருந்து வந்தது தெரியவந்தது. சம்பவத்தன்று அந்த வாலிபர் இளம்பெண் வீட்டிற்கு சென்ற போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இளம்பெண், வாலிபரிடம் இருந்த பணத்தை பறித்து விட்டு அனுப்பியுள்ளார். இது பற்றி அந்த வாலிபர் தனது நண்பர்கள் 4பேரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இளம்பெண்ணிடம் இருந்து நகை-பணத்தை பறிக்க திட்டமிட்ட 4 பேரும் நேற்று விஜயாபுரத்தில் இளம்பெண் வசித்து வரும் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சென்றதும், 4பேரும் இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததுடன், வீட்டில் இருந்த 3பவுன்நகை, ரூ.20ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர். போலீசார் விசாரணையில் 4 பேரும் சிக்கிக்கொண்டனர்.

    தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் இந்த சம்பவம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    • இளம்பெண்ணும், மலையூரை சேர்ந்த வாலிபர் ஒருவரும் நண்பர்களாக பழகி உள்ளனர்.
    • வாலிபரும், இளம்பெண்ணும் நேற்று இரவு செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து மாம்பாக்கம் பகுதிக்கு தனியாக சென்றதாக தெரிகிறது.

    செங்கல்பட்டு:

    சென்னை சைதாப்பேட்டையில் தங்கி 21 வயது இளம்பெண் வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் ஆகும்.

    இந்த நிலையில் நேற்று இரவு அவர் செங்கல்பட்டு அருகே உள்ள சாலவாக்கம் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் தன்னை 4 பேர் கும்பல் கற்பழித்துவிட்டதாக அங்கிருந்த பொதுமக்களிடம் தெரிவித்தார்.

    மேலும் இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் புகார் தெரிவித்தார். இதுபற்றி அறிந்ததும் சாலவாக்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது இளம்பெண் போலீசாரிடம் கூறும்போது, செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து சைதாப்பேட்டை செல்வதற்காக காத்திருந்தேன். அப்போது அங்குவந்த 4 பேர் என்னை மிரட்டி வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். பின்னர் அவர்கள் கூட்டு பலாத்காரம் செய்து தப்பி ஓடிவிட்டனர் என்று கூறினார்.

    இதையடுத்து போலீசார் இளம்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரிடம் மேலும் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக கூறிவருகிறார். இதனால் போலீசார் கற்பழிப்பு குற்றம் நடந்ததா? என்ற முடிவுக்கு வரமுடியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

    அந்த இளம்பெண்ணும், மலையூரை சேர்ந்த வாலிபர் ஒருவரும் நண்பர்களாக பழகி உள்ளனர். நேற்று இரவு அவர்கள் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து மாம்பாக்கம் பகுதிக்கு தனியாக சென்றதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இளம்பெண் தனது நண்பர் உள்ளிட்ட 4 பேர் கற்பழித்ததாக குற்றம் சாட்டி உள்ளார்.

    இதுதொடர்பாக சாலவாக்கம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செங்கல்பட்டு ரெயில் நிலையம் மற்றும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    மேலும் இளம்பெண்ணும் தொடர்பில் இருந்த வாலிபர் மற்றும் அவரது நண்பர்கள் குறித்தும் தகவல்களை சேகரித்து வருகிறார்கள். இளம்பெண் எதற்காக செங்கல்பட்டு வந்தார் என்றும் விசாரணை நடக்கிறது.

    பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

    இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னைக்கு செல்வதற்காக செங்கல்பட்டு ரெயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த இளம்பெண், 4 பேர் கொண்ட கும்பலால் மகிழுந்தில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

    ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணை கடத்தி, பல கிலோமீட்டர் தொலைவுக்கு கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறது என்றால், அதற்கு பாதுகாப்பு குறைபாடுகள் தான் காரணம். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    பாலியல் வன்கொடுமை செய்தால், மிகக்குறைந்த காலத்தில் மிகக் கடுமையாக தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் குற்றவாளிகளுக்கு இல்லாதது தான் இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் ஆகும். பாலியல் குற்ற வழக்குகளில் விரைவாக தீர்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். பொது இடங்களிலும், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும் காவல்துறை பாதுகாப்பை வலுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • திருவள்ளூரில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் சாம்ராஜ், சதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரைச் சேர்ந்த சீயஞ்சேரி பகுதியைச்சேர்ந்தவர் விஜய் (18). ஆட்டோ டிரைவர். இவருக்கும் காக்களூர் பகுதியைச் சேர்ந்த திருமணமான 26 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

    இந்த நிலையில் இளம்பெண்ணை விஜய் தனது ஆட்டோவில் அழைத்து வந்தார். பின்னர் அவர்கள் தனிமையில் இருந்தனர்.

    அப்போது அங்கு விஜய்யின் நண்பர்களான சாம்ராஜ், சதீஷ் ஆகியோரும் அங்கு வந்து தங்களது ஆசைக்கு இணங்கும்படி இளம்பெண்ணை வற்புறுத்தினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அவர்களிடம் இருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனால் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் சாம்ராஜ், சதீஷ் ஆகியோர் சேர்ந்து இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    பின்னர் இதுபற்றி வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    தனக்கு நேர்ந்த கொடுமையால் இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் புள்ளரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் சாம்ராஜ், சதீஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    திருவள்ளூரில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×