search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    20 வயது தலித் பெண்ணை கடத்தி கற்பழித்து கொன்ற கும்பல்- 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு
    X

    20 வயது தலித் பெண்ணை கடத்தி கற்பழித்து கொன்ற கும்பல்- 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு

    • கொலை செய்யப்பட்டவர் கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பிற்காக சென்று வந்துள்ளார்.
    • இளம்பெண்ணை கடந்த 15 நாட்களாக தினேஷ் என்ற வாலிபர் பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    ஜெய்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க தலித் பெண் ஒருவர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கொலை செய்யப்பட்டவர் கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பிற்காக சென்று வந்துள்ளார். அவரை கடந்த 15 நாட்களாக தினேஷ் என்ற வாலிபர் பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் கம்ப்யூட்டர் வகுப்பிற்காக அந்த பெண் சென்ற போது கஜூவாலா போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் மனோஜ் குமார் மற்றும் பாகீரத்குமார் என்ற 2 போலீஸ்காரர்கள் மற்றும் தினேஷ் உள்ளிட்ட கும்பலால் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை எடுக்க கூடாது என பெண்ணின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு தேஜஸ்வனி கவுதம் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    முதல் கட்டமாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களான மனோஜ் குமார், பாகீரத் குமார் ஆகிய 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பெண்ணின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×