search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் கற்பழிப்பு"

    • இரு தினங்களுக்கு முன்பு வல்லம் அருகே நாட்டாணி பகுதியில் வசிக்கும் பிரபுவின் மைத்துனர் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • பிரபு பக்கத்து வீட்டை சேர்ந்த கருப்புசாமியுடன் மது அருந்திவிட்டு பேசிக்கொண்டிருந்தார்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கொசுவபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் சர்மிளா (வயது 22). சில ஆண்டுகளுக்கு முன்பு தாயார் இறந்து விட்டார்.

    அதன் பின்னர் தந்தை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து சென்றுவிட்டார்.

    இதனால் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட சர்மிளா 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு சென்னையில் உள்ள செல்போன் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    விடுமுறை நாட்களில் புதுக்கோட்டை தச்சாங்குறிச்சி பகுதியில் வசிக்கும் தனது தாய்மாமன் பிரபு வீட்டுக்கு வந்து செல்வார். அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தச்சான்குறிச்சிக்கு வந்தார்.

    பின்னர் தாய்மாமன் பிரபு வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தார். அதன் பின்னர் சென்னைக்கு புறப்பட்டு செல்ல ஆயத்தமானார்.

    இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வல்லம் அருகே நாட்டாணி பகுதியில் வசிக்கும் பிரபுவின் மைத்துனர் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் பிரபு தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் பங்கேற்றார். அப்போது சர்மிளாவும் உடன் சென்றார்.

    பின்னர் பிரபு வீடு திரும்பிய நிலையில் சர்மிளா நாட்டாணியில் தங்கியிருந்தார்.

    நேற்று இரவு சர்மிளா தனது தாய் மாமன் பிரபுவிற்கு போன் செய்து தன்னை அழைத்து செல்லுமாறு கூறினார்.

    அப்போது பிரபு பக்கத்து வீட்டை சேர்ந்த கருப்புசாமியுடன் மது அருந்திவிட்டு பேசிக்கொண்டிருந்தார்.

    அதிக மது போதையில் இருந்ததால் தனது நண்பர் கருப்புசாமியிடம் தங்கை மகளை அழைத்து வர சொல்லி தனது மோட்டார் சைக்கிளை கொடுத்து அனுப்பினார்.

    பின்னர் கருப்புசாமி நாட்டாணி சென்று சர்மிளாவை அழைத்து கொண்டு தச்சான்குறிச்சி ஓட்டிச் சென்றார்.

    வல்லம் அருகே சென்னம்பட்டி காட்டுப்பகுதிக்கு சென்றபோது மது போதையில் இருந்த கருப்புசாமியின் குணம் மாறியது.

    மோட்டார் சைக்கிளை காட்டுப்பகுதியில் சாலையோரம் திடீரென நிறுத்தினார். அப்போது சிறுநீர் கழிப்பதற்காக நிறுத்தி இருக்கலாம் என சர்மிளா கருதினார்.

    ஆனால் எதிர்பாராத வகையில் கருப்புசாமி சர்மிளாவை அலேக்காக தூக்கிக்கொண்டு காட்டுப்பகுதிக்குள் சென்றார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சர்மிளா கூச்சலிட்டார். ஆனால் கருப்பு சாமியின் மிருகப் பிடியிலிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை.

    பின்னர் சர்மிளாவை அவர் கற்பழித்தார். பின்னர் போலீசில் தன்னை காட்டி கொடுத்து விடுவார் என கருதிய கருப்பசாமி அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்தார்.

    இந்த நிலையில் வெகு நேரமாகியும் சர்மிளா திரும்பி வராததால் சந்தேகமடைந்த பிரபு, கருப்புசாமி செல்போனுக்கு தொடர்பு கொண்டார்.

    அப்போது எதிர் முனையில் பேசிய கருப்புசாமி தன்னையும், சர்மிளாவையும் ஒரு கும்பல் தாக்கிவிட்டு, அவரை காட்டு பகுதிக்கு தூக்கி சென்றதாக கூறியுள்ளார்.

    இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பிரபு, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தார். பின்னர் கருப்புசாமியுடன் சேர்ந்து காட்டுப்பகுதிக்கு சென்று சர்மிளாவை தேடினார்.

    அப்போது அங்கு சர்மிளா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டு நிலைகுலைந்தார்.

    பின்னர் இது பற்றி வல்லம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சர்மிளாவின் உடலை கைப்பற்றி தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    அதன் பின்னர் கருப்புசாமியிடம் உரிய முறையில் விசாரணை நடத்திய போது, சர்மிளாவை கற்பழித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்.

    போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் கந்தர்வகோட்டை மற்றும் தஞ்சாவூர் வல்லம் பகுதியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    • பெற்றோருடன் சென்று கேட்ட போது தகாத வார்த்தைகளால் பேசி திருமணம் செய்ய மறுத்து விட்டார்.
    • வாலிபரை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறேன். கல்லூரியில் படிக்கும் போது எனக்கு நெய்வேலியை சேர்ந்த புவன் கிருஷ்ணன் (வயது 24) என்ற வாலிபருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் 2 பேரும் கடந்த 5 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தோம். அப்போது புவன் கிருஷ்ணன் என்னை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றார்.

    அவர் என்னிடம் திருமணம் செய்வதாக உறுதியளித்து என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பின்னர் என்னை அவர் திருமணம் செய்ய மறுத்தார். பின்னர் புவன் கிருஷ்ணன் என்னிடம் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார்.

    இது குறித்து நான் செப்டம்பர் மாதம் 17-ந்தேதி ஏற்கனவே புகார் அளித்தேன். புகாரின் பேரில் போலீசார் அவரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் என்னை திருமணம் செய்வதாக போலீசாரிடம் கூறினார். ஆனால் தற்போது வரை அவர் என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருகிறார். இது குறித்து நான் எனது பெற்றோருடன் சென்று கேட்ட போது தகாத வார்த்தைகளால் பேசி திருமணம் செய்ய மறுத்து விட்டார்.

    எனவே திருமணம் செய்வதாக உறுதியளித்து என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த புவன் கிருஷ்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து திருமணம் செய்ய மறுத்த புவன் கிருஷ்ணனை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • செல்போன்கள் இல்லாததால் ஆதரவற்று தவித்த பெண்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் போலீசை தொடர்பு கொண்டு புகார் செய்தனர்.
    • கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ஷிலாஜ் பகுதியை சேர்ந்த 41 வயது பெண் ஒருவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 9-வது மாடியில் ஒரு வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அதிகாலை இவரது வீட்டிற்குள் ஒரு கொள்ளை கும்பல் புகுந்தது. அவர்கள் வீட்டின் மின் இணைப்பை துண்டித்து விட்டு உள்ளே புகுந்து அந்த பெண்ணை தாக்கி கட்டி போட்டனர்.

    பின்னர் வீட்டில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கப்பணம், லேப்டாப் மற்றும் செல்போன்கள், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றையும், காரையும் கொள்ளையடித்துள்ளனர்.

    சத்தம் கேட்டு அங்கு சென்ற 19 வயதான வீட்டு பணிப்பெண்ணை கொள்ளை கும்பல் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் 2 பெண்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

    செல்போன்கள் இல்லாததால் ஆதரவற்று தவித்த அந்த பெண்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் போலீசை தொடர்பு கொண்டு புகார் செய்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதோடு பக்கத்து மாவட்ட போலீசாரையும் உஷார் படுத்தினர்.

    தொடர்ந்து நடந்த விசாரணையில் கொள்ளை கும்பல் பஞ்சாப் நோக்கி தப்பி செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

    அப்போது ஒரு பஸ்சில் பதுங்கி இருந்த கொள்ளை கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 3 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். மற்றொரு வாலிபர் உத்தரபிரதேசத்தையும், ஒரு வாலிபர் மத்திய பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள். 5 பேரும் காவலாளிகளாக வேலை பார்த்து வந்துள்ளனர்.

    தீபாவளிக்கு விடுமுறையில் ஊருக்கு செல்வதற்கு முன்பாக கொள்ளையடிக்க திட்டம் தீட்டி அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை நோட்டமிட்டதும், அப்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பெண் தனியாக வசித்து வருவதையும் அறிந்து அவரது வீட்டில் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாபு சிவேஷ், தனது நண்பர் ரமேசை வீட்டிற்கு அழைத்து வந்து அவருடன் சேர்ந்து மது குடித்தார்.
    • கொடுமை தாங்க முடியாமல் இருந்த இளம்பெண் விக்னேஷ்பாபுவிடம் இருந்து தப்பித்து மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் வந்தார்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில மாதங்களிலேயே, கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதன் காரணமாக, இளம்பெண் கணவரை பிரிந்து அதே பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வசித்து வந்தார்.

    இந்தநிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பாபு சிவேஷ் ( வயது 26) இளம்பெண் தனிமையில் வசிப்பதை அறிந்து கொண்டு அவருக்கு ஆறுதல் கூறி தன்னுடன் வருமாறு அழைத்தார். பின்னர் இளம்பெண்ணிடம் அவர் திருமணம் செய்து கொள்கிறேன், உன்னை ராணிபோல் பார்த்து கொள்கிறேன் என ஆசை வார்த்தை கூறினார். இதை உண்மை என நம்பிய இளம்பெண் பாபு சிவேஷ்சுடன் மேட்டுப்பாளையத்துக்கு சென்றார்.

    மேட்டுப்பாளையத்தில் ராமசாமி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து இளம்பெண்ணை பாபு சிவேஷ் தங்க வைத்தார்.

    அதன் பின்னர் பாபு சிவேஷ், தனது நண்பர் ரமேசை வீட்டிற்கு அழைத்து வந்து அவருடன் சேர்ந்து மது குடித்தார். பின்னர் அவர் இளம்பெண்ணை மிரட்டி 2 பேரும் ஒன்றாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். நடந்த சம்பவத்தை வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதனால் பயந்த இளம்பெண் நடந்த சம்பவங்களை யாரிடமும் சொல்லாமல் இருந்தார்.

    மேலும் 2 பேரும் மாதக்கணக்கில் வீட்டில் அடைத்து வைத்து இளம்பெண்ணை அவ்வப்போது பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர். இதோடு விடாமல் அந்த இளம்பெண்ணை கோவை மற்றும் ஊட்டி ஆகிய பல்வேறு பகுதிகளில் உள்ள ஓட்டல்களுக்கு அழைத்து சென்று பலருடன் உடலுறவு கொள்ள வைத்து பணம் சம்பாதித்து வந்தனர்.

    கொடுமை தாங்க முடியாமல் இருந்த இளம்பெண் விக்னேஷ்பாபுவிடம் இருந்து தப்பித்து மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் வந்தார். பின்னர் நடந்த சம்பவங்களை இளம்பெண் உறவினர்களிடம் கூறி கதறி அழுதார். இதனை கேட்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய ராகுல், நீலகிரி மாவட்டம் கூடலூர் சேரம்பாடி சேர்ந்த செந்தில்குமார் (36) ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பாபு சிவேசை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று இரவு அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ரமேஷ் என்பவர் உள்பட பலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கருத்துவேறுபாடு அதிகரிக்கவே இளம்பெண் தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
    • இளம்பெண்ணை, வெளியில் அழைத்து செல்வதாக கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

    கோவை:

    கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண்.

    இவருக்கும், அவரது ஊரின் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக இளம்பெண்ணை காணவில்லை. அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கம் வீடுகள், உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இளம்பெண் நேற்று மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அவரது உறவினர்கள் பார்த்து இளம்பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவரிடம் இவ்வளவு நாள் எங்கு சென்றாய் என விசாரித்தனர். அப்போது இளம்பெண் தன்னை பல நபர்கள் பலாத்காரம் செய்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

    இதை கேட்டதும் அதிர்ச்சியான அவரது உறவினர்கள் சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

    இளம்பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே திருமணம் ஆன சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டையும் நடந்துள்ளது.

    கருத்துவேறுபாடு அதிகரிக்கவே இளம்பெண் தனது கணவரை பிரிந்து அந்த பகுதியில் தனியாக வசித்து வந்தார். அப்போது அவருக்கு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சிவனேஷ் பாபு என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார்.

    அவர் இளம்பெண்ணிடம் நீ இங்கு தனியாக இருக்க வேண்டாம். என்னுடன் வேண்டுமானால் வந்து விடு என தெரிவித்துள்ளார். இதனை இளம்பெண்ணும் நம்பி அவருடன் சென்றார்.

    இதையடுத்து சிவனேஷ்பாபு இளம்பெண்ணுக்கு மேட்டுப்பாளையம் ராமசாமி நகரில் ஒரு வீடு பார்த்து குடியமர்த்தினார். பின்னர் வெளியில் செல்வதாக கூறி விட்டு, சென்ற போது அந்த வீட்டின் கதவையும் பூட்டி சென்று விட்டார். இதனால் இளம்பெண்ணுக்கு பயம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து சிவனேஷ்பாபு, வீட்டிற்கு வந்தார். அப்போது அவருடன் மற்றொரு வாலிபரும் வந்திருந்தார்.

    அவர் யார் என்று கேட்டபோது, தனது நண்பர் என்றும், அவரது பெயர் ராகுல் என்றும் மெக்கானிக்காக இருப்பதாகவும் தெரிவித்தார்.

    சிறிது நேரம் பெண்ணிடம் பேசி கொண்டிருந்த நபர்கள், திடீரென அவரிடம் தவறாக நடக்க முயன்றனர்.

    அதிர்ச்சியான இளம்பெண் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் 2 பேரும் இளம்பெண்ணை தாக்கி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர். தொடர்ந்து இதுபோன்று வீட்டிற்குள் அடைத்து வைத்து பல முறை பலாத்காரம் செய்துள்ளனர்.

    மேலும் இளம்பெண்ணை, வெளியில் அழைத்து செல்வதாக கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது இளம்பெண்ணிடம் தாங்கள் கூறும் நபர்களுடன் நீ உல்லாசம் அனுபவிக்க வேண்டும்.

    இல்லையொன்றால் கொன்று விடுவதாக மிரட்டிஉள்ளனர். அவர் மறுக்கவே அடித்து உதைத்துள்ளனர். தொடர்ந்து மிரட்டி பல்வேறு நபர்களுக்கும் இளம்பெண்ணை விருந்தாக்கி உள்ளனர்.

    கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இளம்பெண்ணை வீட்டிற்குள் அடைத்து வைத்தும், வெளியில் அழைத்து சென்றும், பல நபர்களுடன் இளம்பெண்ணை உல்லாசம் அனுபவிக்க வைத்துள்ளனர்.

    தொடர்ந்து அவர்களது தொல்லைகள் அதிகரிக்கவே இளம்பெண் அவர்களிடம் இருந்து தப்பி வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சிவனேஷ் பாபு, மெக்கானிக் ராகுல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர். மேட்டுப்பாளையத்தில் பதுங்கி இருந்த மெக்கானிக் ராகுலை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இதற்கிடையே போலீசார் தேடுவதை அறிந்ததும், சிவனேஷ் பாபு தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    மேலும் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் வேறு சிலருக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண்ணை மீட்ட போலீசார் அவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
    • வாலிபர்கள் 2 பேரும் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவரும், அதே பகுதியை சேர்ந்த வாலிபரும் கடந்த 4 மாதங்களாக காதலித்து வருகின்றனர். காதலர்கள் அடிக்கடி வெளியே சென்று வந்துள்ளனர்.

    இந்நிலையில் இருவரும் நேற்று இரவு தூத்துக்குடியில் உள்ள மத்திய பாதுகாப்பு அலுவலர் குடியிருப்பு அருகே உள்ள கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளனர். நீண்ட நேரம் அங்கு பேசிக் கொண்டிருந்த இருவரும் பின்னர் அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள தென்பாகம் காவல் சரகத்திற்குட்பட்ட கடற்கரை பகுதிக்கு சென்றனர். இரவு 9.30 மணியை தாண்டியும் காதலர்கள் அங்கு தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவர்களிடம் சென்று பேச்சு கொடுத்தனர்.

    இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் சேர்ந்து அந்த பெண்ணின் காதலனை தாக்கி விரட்டினர். இதனால் அவர் தான் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றார். பின்னர் வாலிபர்கள் 2 பேரும் அந்த இளம்பெண்ணை அருகில் உள்ள மறைவான இடத்திற்கு தூக்கி சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் இளம்பெண்ணை ஏற்றி சென்று நடுரோட்டில் இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றனர்.

    இது தொடர்பாக அந்த இளம்பெண் போலீசில் புகார் செய்தார். அவரை மீட்ட போலீசார் அவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து கடற்கரை பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை சேகரித்து இந்த சம்பவத்தில் வாலிபர்கள் 2 பேரும் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

    • இளம்பெண்ணின் உடலில் உள்ள தீய சக்திகளை விரட்ட பில்லி சூனிய பூஜை செய்ய வேண்டும்.
    • இளம்பெண்ணின் கண்களை கருப்பு துணியால் கட்டி விட்டு பூஜைகள் செய்வதுபோல் நடித்து அவரை சாமியார் பலாத்காரம் செய்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண். இவருக்கும் வாலிபர் ஒருவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது.

    திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண்ணிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து இளம்பெண் தன்னுடைய தாயாரிடம் தெரிவித்தார்.

    இளம்பெண்ணை அவரது தாயார் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். அப்போதும் இளம்பெண் உடல்நிலை சரியாகவில்லை.

    இதையடுத்து கணவர் வீட்டிற்கு வந்த இளம்பெண் தனது உடல்நிலை குறித்து கணவரிடமும் அவரது மாமியாரிடமும் தெரிவித்தார்.

    இளம்பெண்ணின் மாமியார் யுனானி மருந்து கடையில் வேலை செய்யும் தனக்கு தெரிந்த சாமியாரிடம் மருமகளை அழைத்துச் சென்றார். அங்கு இருந்த சாமியார் இளம்பெண்ணின் உடலில் 5 தீய சக்திகள் உள்ளது.

    இளம்பெண்ணின் உடலில் உள்ள தீய சக்திகளை விரட்ட பில்லி சூனிய பூஜை செய்ய வேண்டும். பந்தலகுடாவில் உள்ள தனது வீட்டிற்கு மருமகளை அழைத்து வர வேண்டும் என கூறினார்.

    இதையடுத்து நேற்று முன்தினம் இரவு தனது மனைவியை சாமியார் வீட்டிற்கு கணவர் அழைத்துச் சென்றார்.சாமியார் இளம்பெண்ணை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். பின்னர் பூஜை செய்ய வேண்டி இருப்பதால் இளம்பெண்ணின் கணவரை வெளியே அனுப்பினார்.

    அப்போது இளம்பெண்ணின் கண்களை கருப்பு துணியால் கட்டி விட்டு பூஜைகள் செய்வதுபோல் நடித்து அவரை பலாத்காரம் செய்தார்.

    தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து இளம்பெண் தனது கணவரிடம் தெரிவித்தார். அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து போலி சாமியாரை கைது செய்தனர்.

    • சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • இளம்பெண்ணை வாலிபர்கள் அழைத்துச் செல்லும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளதா என்பதையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவர் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். இளம்பெண்ணை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.

    கடந்த மாதம் 27-ந்தேதி திடீரென இளம்பெண் மாயமானார். அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்தநிலையில் இளம்பெண்ணை அடையாளம் தெரியாத 3 வாலிபர்கள் நைசாக பேசி ஈச்சனாரியில் உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து 3 வாலிபர்களும் இளம்பெண்ணை பலாத்காரம் செய்தனர். பின்னர் அவர்கள் இளம்பெண்ணை அங்கேயே தவிக்க விட்டு தப்பிச் சென்றனர்.

    இளம்பெண் படுகாயத்துடன், அரைகுறை ஆடையுடன் அந்த பகுதியில் சுற்றித்திரிந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இளம்பெண்ணை மீட்டு கிணத்துக்கடவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இளம்பெண்ணுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் விசாரணையில் அந்த பெண்ணை 3 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. அந்த வாலிபர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இளம்பெண்ணை வாலிபர்கள் அழைத்துச் செல்லும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளதா என்பதையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • தனக்கு தெரிந்த ஒருவர் மூலம் சினிமாவில் நடிக்க வைப்பதாக இளம்பெண்ணிடம் அப்சீனா கூறி இருக்கிறார்.
    • சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கண்ணூரில் பணிபுரிந்து வந்தார். அப்போது அவருக்கு கண்ணூர் முன்டயாடு பகுதியைச் சேர்ந்த அப்சீனா(வயது 29) என்பவர் அறிமுகம் ஆகி உள்ளார். இருவரும் தோழியாக பழகி வந்துள்ளனர்.

    இந்நிலையில் தனக்கு தெரிந்த ஒருவர் மூலம் சினிமாவில் நடிக்க வைப்பதாக அந்த இளம்பெண்ணிடம் அப்சீனா கூறி இருக்கிறார். அதனை நம்பிய அந்த இளம்பெண் அப்சீனாவுடன் நெருங்கி பழகினார். அவர்களுடன் சந்திக்க வைப்பதாக கூறி சம்பவத்தன்று இளம்பெண்ணை ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    அங்கு வைத்து அந்த இளம்பெண்ணை சில வாலிபர்கள் கும்பலாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து யாரிடமும் கூறக்கூடாது என்று அப்சீனா உள்ளிட்டோர் மிரட்டி உள்ளனர். இருந்தபோதிலும் அந்த இளம்பெண், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து நடக்காவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் பிஜு ராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அந்த இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மலப்புரத்தைச் சேர்ந்த அபுபக்கர், சமீர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி இளம்பெண்ணின் தோழியான அப்சீனாவும் கைது செய்யப்பட்டார். சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிய ஜெயக்குமார் இளம்பெண்ணிடம் நெருங்கி பழகியுள்ளார்.
    • இளம்பெண் தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு ஜெயக்குமாரிடம் கூறியுள்ளார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வந்தார். இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தாய் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். 2 தங்கைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் இளம்பெண்ணுக்கும், கல்லூரணியை சேர்ந்த ஜெயக்குமார் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் காதலித்தனர்.

    திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிய ஜெயக்குமார் இளம்பெண்ணிடம் நெருங்கி பழகியுள்ளார். இதனால் அவர் கர்ப்பமானார். அப்போது ஜெயக்குமார் கூறியதால் காதலி கர்ப்பத்தை கலைத்தாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் இளம்பெண் தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு ஜெயக்குமாரிடம் கூறியுள்ளார். அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் காதலனின் பெற்றோர் தாவீது (50), ஜெபமலர் (45), சகோதரி ஜான்சிமேரி (26) ஆகியோரிடம் திருமணம் குறித்து பேசியுள்ளார். அப்போது அவர்கள் ஜெயக்குமாருக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என கூறியதோடு கொலை மிரட்டலும் விடுத்தாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் எம்.ரெட்டியப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமார், அவரது பெற்றோர், சகோதரி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    • அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பெண்ணை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
    • சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் கருப்பூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்றிரவு அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றார். அந்த பெண் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரை உறவினர்கள் தேடினர்.

    அப்போது அந்த பெண்ணை அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (31) என்பவர் முட்புதருக்குள் இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் புகார் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அந்த பெண்ணை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மணிகண்டன் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காட்டுப் பகுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று இளம்பெண்ணை ஆட்டோ டிரைவர் பலாத்காரம் செய்துள்ளார்.
    • பாதிக்கப்பட்ட இளம்பெண் குரும்பூர் போலீசில் புகார் செய்தார்.

    குரும்பூர்:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த 25 வயது மதிப்புள்ள இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் குரும்பூருக்கு வந்துள்ளார்.

    பின்னர் குரும்பூர் பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் ஆட்டோவில் வந்த டிரைவர் அவர் செல்ல வேண்டிய முகவரிக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். ஆனால் அந்த ஆட்டோ டிரைவர் இளம்பெண் கூறிய முகவரிக்கு செல்லாமல் மாறாக ஏரல் சாலையில் அழைத்து சென்றுள்ளார்.

    ஏரல்-குரும்பூர் சாலை மறுகால் ஓடை பாலத்தின் கீழ் காட்டுப் பகுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று இளம்பெண்ணை ஆட்டோ டிரைவர் பலாத்காரம் செய்துள்ளார். அவரை தொடர்ந்து அந்த வழியாக மோட்டார் கை்கிளில் வந்த வாலிபர் ஒருவரும் அந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்தார். பின்னர் ஆட்டோ டிரைவரும், மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் குரும்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா விசாரணை நடத்தினார். அதில் இளம்பெண்ணை ஆட்டோவில் அழைத்து சென்று கற்பழித்தது ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளம் சன்னிதி தெருவை சேர்ந்த அய்யப்ப நயினார் மகன் முத்துராம்குமார் என்ற தங்கம் (வயது 22) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குரும்பூர் நெட்டையன்காலனியை சேர்ந்த 4 வாலிபர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×