என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
3 நாட்களாக அறையில் அடைத்து இளம்பெண்ணை மது குடிக்க வைத்து பலாத்காரம் செய்த 4 பேர் கும்பல்
- வாலிபர் தன்னுடைய நண்பர்கள் 3 பேருக்கு போன் செய்து அறைக்கு வரவழைத்தார்.
- 4 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் விஜயவாடா பெங்கி சர்க்கிளில் உள்ள ஷாப்பிங் மாலில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
அங்கு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வேலை செய்து வருகிறார். பணிக்கு சென்று வரும்போது இளம்பெண்ணுக்கும் வாலிபருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணிடம் நைசாக பேசிய வாலிபர் அவரை கானூர் சனத் நகரில் உள்ள தனது அறைக்கு அழைத்துச் சென்றார். அறைக்குச் சென்றதும் இளம்பெண்ணும் வாலிபரும் சேர்ந்து மது அருந்தினர்.
இதையடுத்து வாலிபர் தன்னுடைய நண்பர்கள் 3 பேருக்கு போன் செய்து அறைக்கு வரவழைத்தார். 4 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர். தொடர்ந்து இளம்பெண்ணை அறையில் அடைத்து வைத்து 3 நாட்களாக வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தனர்.
இதனால் இளம்பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து இளம்பெண்ணை தூக்கி வந்து அங்குள்ள சாலையோரம் வீசிவிட்டு 4 பேரும் தப்பிச் சென்றனர்.
அந்த வழியாக சென்றவர்கள் சாலையோரம் இளம்பெண் படுத்து கிடப்பதை கண்டு பெனுமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளம் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வாலிபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் விஜயவாடாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்