search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு
    X

    கேரளாவில் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு

    • நடிக்க செல்லும் முன்பு அது பற்றி பேசவேண்டும் என ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு வருமாறு இளம்பெண்ணை அழைத்தார்.
    • சினிமா வாய்ப்பு தராதது குறித்து கேட்டால் மிரட்டுகிறார்கள்.

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஒருவர், தனக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறினார். நடிக்க செல்லும் முன்பு அது பற்றி பேசவேண்டும் என ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு வருமாறு அழைத்தார்.

    அங்கு சென்ற என்னை அவரும், அவரது நண்பரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன்பின்பு அவர்கள் எனக்கு சினிமாவில் வாய்ப்பு தரவில்லை. இதுபற்றி கேட்டால் அவர்கள் என்னை மிரட்டுகிறார்கள். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×