பிறந்தநாள் விருந்தில் மது குடிக்க வைத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை: 2 வாலிபர்களிடம் விசாரணை

ஹரிஷ் மற்றும் பிரமோத் இளம்பெண்ணிற்கு அடிக்கடி போன் செய்து தொல்லை கொடுத்தனர்.இளம்பெண் வர மறுப்பு தெரிவித்ததால் இருவரும் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கி துன்புறுத்தினர்.
பிறந்தநாள் விருந்தில் மது குடிக்க வைத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை: 2 வாலிபர்களிடம் விசாரணை
Published on

தெலுங்கானா மாநிலம், சூர்யா பேட்டை, தருண் நகரை சேர்ந்தவர் ஹரிஷ். இவரது நண்பர் பிரமோத். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் பழகி வந்தனர்.

அந்த தோழியுடன் வேலை செய்யும் இளம்பெண் அறிமுகமானார்.

ஹரிஷ் உள்ளிட்ட 4 பேரும் அடிக்கடி சினிமாவுக்கு செல்வது ஊர் சுற்றுவது என இருந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிறந்தநாள் விருந்து வைப்பதாக கூறி இளம்பெண்ணை ஹீஷராபாத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அப்போது இளம்பெண்ணை வற்புறுத்தி மது குடிக்க வைத்தனர்.

இளம்பெண்ணிற்கு போதை ஏறியதால் மயக்கம் அடைந்தார். அப்போது ஹரிஷ் மற்றும் பிரமோத் அவரை பாலியல் வன்கொடுமை செய்தனர்.

மேலும் இளம்பெண்ணுடன் நிர்வாணமாக இருக்கும் வீடியோ மற்றும் போட்டோக்களை தங்களது செல்போனில் பதிவு செய்து கொண்டனர்.

இளம்பெண் மயக்கம் தெளிந்து கண்விழித்து பார்த்த போது நிர்வாண நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து நண்பர்களிடம் கேட்டபோது அவர்கள் நிர்வாணமாக வீடியோ போட்டோ எடுத்து வைத்து இருக்கிறோம். இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டினர். மேலும் நாங்கள் கூப்பிடும் போது வரவேண்டும், பணம் தர வேண்டும் என மிரட்டினர்.

ஹரிஷ் மற்றும் பிரமோத் இளம்பெண்ணிற்கு அடிக்கடி போன் செய்து தொல்லை கொடுத்தனர். இளம்பெண் வர மறுப்பு தெரிவித்ததால் இருவரும் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கி துன்புறுத்தினர்.

இளம்பெண் இது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் ஹரிஷ் மற்றும் பிரமோத் அவர்களுக்கு துணையாக இருந்த பெண் தோழி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com