search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமையல் மாஸ்டர்"

    • சமையல் மாஸ்டர் வீட்டில் 35 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • இந்த சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியை சேர்ந்தவர் பால முருகன் (வயது 40). இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நாக லட்சுமி 100 நாள் வேலை திட்டத்தில் பொறுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பாலமுருகன் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 35 பவுன் நகை, ரூ.45 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.

    சிறிது நேரத்தில் வீடு திரும்பிய பாலமுருகன் கதவு உடைக்கப்பட்டு நகை-பணம் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் சாத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து விரைந்து வந்த சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடி சென்ற சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இளம்பெண் தனது காதலன் முருகேசனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி வந்தார்.
    • முருகேசன் கடந்த 1 மாதத்துக்கு முன்பு அவரது உடமைகளை எடுத்துக்கொண்டு காதலியை தவிக்க விட்டு மாயமானார்.

    கோவை:

    கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண்.

    இவருக்கு கடந்த 1 ஆண்டுக்கு முன்பு கோவை சூலூரை சேர்ந்த சமையல் மாஸ்டர் முருகேசன் (வயது 35) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் செல்போன் மூலமாக பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில் காதலர்கள் 2 பேரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு நேரில் சந்தித்தனர். அப்போது 2 பேருக்கும் பிடித்து போனதால், திருமணம் செய்து கொள்வதற்கு அவர்கள் முடிவு செய்தனர்.

    இதையடுத்து முருகேசன் சூலூரில் வீடு வாடகைக்கு எடுத்து இளம்பெண்ணுடன் தங்கினார்.

    அப்போது அவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதனால் அவர் 5 மாத கர்ப்பமானார். அவர் தனது காதலன் முருகேசனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி வந்தார். ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தார்.

    இந்த நிலையில் முருகேசன் கடந்த 1 மாதத்துக்கு முன்பு அவரது உடமைகளை எடுத்துக்கொண்டு காதலியை தவிக்க விட்டு மாயமானார். இதனால் அதிர்ச்சியான இளம்பெண் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது பேசிய முருகேசன் தான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறியதுடன், அந்த பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தையும் அனுப்பினார். இதனை பார்த்து இளம்பெண் அதிர்ச்சியடைந்தார்.

    தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவான முருகேசனை தேடி வருகிறார்கள்.

    ×