search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமையல் மாஸ்டர் வீட்டில் 35 பவுன் நகை-பணம் கொள்ளை
    X

    சமையல் மாஸ்டர் வீட்டில் 35 பவுன் நகை-பணம் கொள்ளை

    • சமையல் மாஸ்டர் வீட்டில் 35 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • இந்த சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியை சேர்ந்தவர் பால முருகன் (வயது 40). இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நாக லட்சுமி 100 நாள் வேலை திட்டத்தில் பொறுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பாலமுருகன் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 35 பவுன் நகை, ரூ.45 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.

    சிறிது நேரத்தில் வீடு திரும்பிய பாலமுருகன் கதவு உடைக்கப்பட்டு நகை-பணம் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் சாத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து விரைந்து வந்த சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடி சென்ற சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×