என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சமையல் மாஸ்டர் வீட்டில் 35 பவுன் நகை-பணம் கொள்ளை
- சமையல் மாஸ்டர் வீட்டில் 35 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
- இந்த சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியை சேர்ந்தவர் பால முருகன் (வயது 40). இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நாக லட்சுமி 100 நாள் வேலை திட்டத்தில் பொறுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பாலமுருகன் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 35 பவுன் நகை, ரூ.45 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.
சிறிது நேரத்தில் வீடு திரும்பிய பாலமுருகன் கதவு உடைக்கப்பட்டு நகை-பணம் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் சாத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து விரைந்து வந்த சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடி சென்ற சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்