search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police suspended"

    • கொலை செய்யப்பட்டவர் கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பிற்காக சென்று வந்துள்ளார்.
    • இளம்பெண்ணை கடந்த 15 நாட்களாக தினேஷ் என்ற வாலிபர் பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    ஜெய்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க தலித் பெண் ஒருவர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கொலை செய்யப்பட்டவர் கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பிற்காக சென்று வந்துள்ளார். அவரை கடந்த 15 நாட்களாக தினேஷ் என்ற வாலிபர் பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் கம்ப்யூட்டர் வகுப்பிற்காக அந்த பெண் சென்ற போது கஜூவாலா போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் மனோஜ் குமார் மற்றும் பாகீரத்குமார் என்ற 2 போலீஸ்காரர்கள் மற்றும் தினேஷ் உள்ளிட்ட கும்பலால் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை எடுக்க கூடாது என பெண்ணின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு தேஜஸ்வனி கவுதம் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    முதல் கட்டமாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களான மனோஜ் குமார், பாகீரத் குமார் ஆகிய 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பெண்ணின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • கஞ்சா, குட்கா விற்பனை செய்யும் நபர்களிடம் ெதாடர்பில் இருந்ததால் நடவடிக்கை
    • எஸ்.பி. உத்தரவு

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மற்றும் அரக்கோணம் பகுதியில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களிடம் போலீசார் சிலருக்கு தொடர்பு இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சம்பந்தப்பட்ட போலீசாரின் செல் போன் அழைப்புகளை எஸ்பி தனி பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கஞ்சா, குட்கா விற்பனையில் ஈடுபடும் நபர்களுடன் போலீசாருக்கு தொடர்பு இருப்பது உறுதியானது.

    இதனை தொடர்ந்து சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி புரியும் வேணுகோபால், அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஏட்டு ரமேஷ், அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் கண்ணன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் நேற்று உத்தரவிட்டார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி சிறையில் கைதிகள் மது அருந்தும் சம்பவம் தொடர்பாக 6 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். #Raebarelijail
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஜெயிலுக்குள் கைதிகள் மது அருந்தி உற்சாகமாக இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.

    இந்த வீடியோ காட்சிகளை உள்ளூர் டி.வி. சேனல் திரும்ப திரும்ப ஒளிபரப்பியது. அதில் கைதி ஒருவர் செல்போனில் யாரிடமோ பேசி மதுபானம் கொண்டு வருமாறு கூறுகிறார்.

    இதையடுத்து ஜெயிலுக்குள் திருட்டுத்தனமாக கொண்டு வரப்படும் மதுவை கைதிகள் அருந்தும் காட்சி மற்றொரு கைதி ஆயுதத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டும் காட்சியும் அந்த வீடியோவில் இருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


    இதையடுத்து ரேபரேலி மாவட்ட ஜெயில் மூத்த சூப்பிரண்டு பிரமோத்குமார், ஜெயிலர் கோவிந்த்ராம் மிஸ்ரா, துணை ஜெயிலர் ராம்சந்த்ர திவேரி, தலைமை வார்டன் லால்தா பிரசாத் பாண்டே, வார்டன்கள் கங்காராம், ஷிவ்மங்கள்சிங் ஆகிய 6 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 கைதிகள் வேறு ஜெயில்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    இதுபற்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து சிறைத்துறை முதன்மை செயலாளர் அரவிந்த்குமார் கூறியதாவது:-

    வீடியோ வெளியானவுடன் ஜெயில் வளாகத்தில் உடனடியாக சோதனை செய்யப்பட்டது. அங்கு 4 செல்போன்கள், சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டன.

    இதுதொடர்பாக மூத்த ஜெயில் சூப்பிரண்டு உள்பட 6 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்றார்.

    கடந்த ஜூலை மாதம் உத்தரபிரதேசத்தில் உள்ள பாக்பத் ஜெயிலில் மாபியா கும்பல் தலைவன் முன்னா பஜ்ரங்கி சக கைதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இச்சம்பவத்தின்போது ஜெயிலில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யாமல் இருந்தது தெரியவந்தது.

    இதுபோல உத்தரபிரதேசத்தில் உள்ள பல ஜெயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் சோதனை கருவிகள் செயல்படாமல் இருந்தது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது. #Raebarelijail
    கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டரிடம் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    போரூர்:

    சென்னை நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா ஹசன். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். உதவி பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

    இவர் நெற்குன்றம் சி.டி.என். நகரில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார்.

    கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை மூன்று மணி அளவில் மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் பணி புரிந்து வரும் போலீஸ்காரர் இளங்கோவன் குடிபோதையில் மருத்துவமனைக்குள் நுழைந்தார். அவர் அங்கிருந்த பெண் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதனை டாக்டர் பாத்திமா ஹசன் தட்டிக் கேட்டார். அவரிடமும் போலீஸ்காரர் இளங்கோவன் தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டார்.

    இது தொடர்பாக பாத்திமா ஹசன் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். கோயம்பேடு உதவி கமி‌ஷனர் ஜான் சுந்தர் மற்றும் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் ஆகியோர் விசாரணை நடத்தி இது தொடர்பான அறிக்கையை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இணை ஆணையர் விஜயகுமாரி, குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட போலீஸ்காரர் இளங்கோவனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார். #tamilnews
    ×