search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lady doctor"

    • பெண் டாக்டர் ஒருவர் நோயாளிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்.
    • கடந்த 2 மாதமாக மங்கலத்தில் உள்ள கிளீனிக்கில் சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது.

    திருப்பூர் :

    திருப்பூரை அடுத்த மங்கலம் நால்ரோடு பகுதியில் உரிய அனுமதியின்றி கிளீனிக் செயல்படுவதாக கலெக்டருக்கு புகார் வந்தது. அவர் இது குறித்து விசாரிக்க மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனருக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இணை இயக்குனர் கனகராணி தலைமையிலான குழுவினர் மங்கலம் நால் ரோடு பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட கிளீனிக்குக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அங்கு பெண் டாக்டர் ஒருவர் நோயாளிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் விழுப்புரத்தை சேர்ந்த பிரியங்கா (வயது 30) என்பதும், கடந்த 2 மாதமாக மங்கலத்தில் உள்ள கிளீனிக்கில் சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. அவரது சான்றிதழ்களை பெற்று விசாரணையை தொடங்கினர். இதில் அவர் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு முடித்து, அதன்பிறகு இந்திய மருத்துவ கழகத்தின் தகுதி தேர்வு எழுதாமல் சிகிச்சை அளித்தது கண்டறியப்பட்டது. மேலும் கிளீனிக் நடத்தவும் உரிய அனுமதி பெறவில்லை. இதைத்தொடர்ந்து அந்த கிளீனிக்கை பூட்டி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

    இது குறித்து மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் கனகராணி கூறும்போது, மங்கலத்தில் ஏற்கனவே வேறு ஒரு டாக்டர் இந்த கிளீனிக்கை நடத்தி வந்துள்ளார். அதன் பிறகு அவர் சென்று விட்டார். கடந்த 2 மாதமாக பிரியங்கா இங்கு வந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். இந்திய மருத்துவ கழக தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பிறகு தான் இந்தியாவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். பிரியங்கா தேர்வு எழுதியும் அவர் தேர்ச்சி பெறவில்லை. மீண்டும் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளார். ஆனால் குடும்ப வறுமை காரணமாக இங்கு வந்து சிகிச்சை மேற்கொண்டதாக தெரிவித்தார். அவ்வாறு சிகிச்சை அளிக்கக்கூடாது என்று எச்சரித்து கிளீனிக் மூடப்பட்டுள்ளது. இன்று பிரியங்காவிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

    கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டரிடம் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    போரூர்:

    சென்னை நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா ஹசன். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். உதவி பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

    இவர் நெற்குன்றம் சி.டி.என். நகரில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார்.

    கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை மூன்று மணி அளவில் மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் பணி புரிந்து வரும் போலீஸ்காரர் இளங்கோவன் குடிபோதையில் மருத்துவமனைக்குள் நுழைந்தார். அவர் அங்கிருந்த பெண் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதனை டாக்டர் பாத்திமா ஹசன் தட்டிக் கேட்டார். அவரிடமும் போலீஸ்காரர் இளங்கோவன் தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டார்.

    இது தொடர்பாக பாத்திமா ஹசன் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். கோயம்பேடு உதவி கமி‌ஷனர் ஜான் சுந்தர் மற்றும் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் ஆகியோர் விசாரணை நடத்தி இது தொடர்பான அறிக்கையை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இணை ஆணையர் விஜயகுமாரி, குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட போலீஸ்காரர் இளங்கோவனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார். #tamilnews
    ×