என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டரிடம் ரகளை செய்த போலீஸ்காரர் சஸ்பெண்டு
Byமாலை மலர்4 Oct 2018 8:48 AM GMT (Updated: 4 Oct 2018 8:48 AM GMT)
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டரிடம் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
போரூர்:
சென்னை நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா ஹசன். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். உதவி பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
இவர் நெற்குன்றம் சி.டி.என். நகரில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை மூன்று மணி அளவில் மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் பணி புரிந்து வரும் போலீஸ்காரர் இளங்கோவன் குடிபோதையில் மருத்துவமனைக்குள் நுழைந்தார். அவர் அங்கிருந்த பெண் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதனை டாக்டர் பாத்திமா ஹசன் தட்டிக் கேட்டார். அவரிடமும் போலீஸ்காரர் இளங்கோவன் தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக பாத்திமா ஹசன் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். கோயம்பேடு உதவி கமிஷனர் ஜான் சுந்தர் மற்றும் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் ஆகியோர் விசாரணை நடத்தி இது தொடர்பான அறிக்கையை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
இந்த நிலையில் இணை ஆணையர் விஜயகுமாரி, குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட போலீஸ்காரர் இளங்கோவனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார். #tamilnews
சென்னை நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா ஹசன். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். உதவி பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
இவர் நெற்குன்றம் சி.டி.என். நகரில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை மூன்று மணி அளவில் மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் பணி புரிந்து வரும் போலீஸ்காரர் இளங்கோவன் குடிபோதையில் மருத்துவமனைக்குள் நுழைந்தார். அவர் அங்கிருந்த பெண் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதனை டாக்டர் பாத்திமா ஹசன் தட்டிக் கேட்டார். அவரிடமும் போலீஸ்காரர் இளங்கோவன் தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக பாத்திமா ஹசன் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். கோயம்பேடு உதவி கமிஷனர் ஜான் சுந்தர் மற்றும் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் ஆகியோர் விசாரணை நடத்தி இது தொடர்பான அறிக்கையை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
இந்த நிலையில் இணை ஆணையர் விஜயகுமாரி, குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட போலீஸ்காரர் இளங்கோவனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X