search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை அதிபர் சிறிசேனா"

    வருகிற 5-ந்தேதி இலங்கை பாராளு மன்றம் மீண்டும் கூடுகிறது. அப்போது பெரும்பான்மையை நிரூபிப்பவருக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என்று சிறிசேனா முடிவு செய்துள்ளார். #srilankaparliament #sirisena #rajapaksa

    கொழும்பு:

    இலங்கையில் அதிபராக இருந்த ரனில் விக்ரம சிங்கேவை அதிபர் மைத்ரிபால சிறிசேனா திடீரென நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை பிரதமர் ஆக்கினார்.

    இதை ஏற்க ரனில் விக்ரம சிங்கே மறுத்து விட்டார். சபாநாயகர் கரு.ஜெய் சூரியாவும் அவரை ஏற்க வில்லை. மெஜாரிட்டியை நிரூபிக்க பாராளுமன்றத்தை கூட்டும்படி வலியுறுத்தினார். முதலில் பாராளுமன்றம் கூடும் தேதியை சிறிசேனா அறிவித்தார்.

    ஆனால் ராஜபக்சேவுக்கு மெஜாரிட்டி கிடைக்காத நிலை ஏற்பட்டதை அறிந்து பாராளுமன்றத்தை திடீரென கலைத்தார். அதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விழித்தது. ராஜபக்சேவை பிரதமராக அறிவித்ததற்கும் தடை விதிக்கப்பட்டது.

    அதையடுத்து பாராளு மன்றம் கூடியது அங்கு ராஜபக்சே மீது 3 முறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு வெற்றி பெற்றது. இருந்தும் அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்க அதிபர் சிறிசேனா மறுத்து வருகிறார்.

    எனவே, பிரதமர் அலுவலகம் அரசு பணத்தை செலவு செய்ய தடை விதித்து பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தகைய பிரச்சினைகளால் இலங்கை அரசியலில் குழப்பம் நிலவுகிறது.

    பதவி நீக்கம் செய்யப்பட்ட ரனில் விக்ரமசிங்கே தொடர்ந்து நான் தான் பிரதமர் என கூறி வருகிறார். அதிபர் சிறிசேனாவால் நியமிக்கப்பட்ட ராஜபக்சே பிரதமர் பணியை ஆற்றி வருகிறார். இவர்களில் யார் உண்மையான பிரதமர் என்ற சந்தேகம் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் வருகிற 5-ந்தேதி இலங்கை பாராளு மன்றம் மீண்டும் கூடுகிறது. அப்போது ராஜபக்சேவுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பினருக்கு பிரதமர் பதவியை வழங்க அதிபர் சிறிசேனா முடிவு செய்துள்ளார். இந்த தகவலை தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். #srilankaparliament #sirisena #rajapaksa

    இலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கேயை மீண்டும் நியமிக்க மாட்டேன் என்று அதிபர் சிறிசேனா கூறினார். #sirisena #RanilWickramasinghe #rajapaksa
    கொழும்பு:

    இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த மாதம் அதிரடியாக பிரதமர் விக்ரமசிங்கேயை நீக்கிவிட்டு, ராஜபக்சேவை பிரதமராக்கினார். இந்த நடவடிக்கை இலங்கை அரசியலில் பல சிக்கல்களை ஏற்படுத்தியது. விக்ரமசிங்கே, ராஜபக்சே இருவரும் தாங்கள் தான் முறையான பிரதமர் என்று கூறிவந்தனர்.

    இந்நிலையில் அதிபர் சிறிசேனா நேற்று வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் மீண்டும் பிரதமராக விக்ரமசிங்கேயை நியமிப்பதற்கு வாய்ப்பே இல்லை. எனது முடிவால் அரசியலில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. ஆனாலும் இதை நான் தீவிரமான அரசியல் நெருக்கடியாக கருதவில்லை.


    விக்ரமசிங்கே அரசு நிர்வாகத்தில் பல தீவிரமான கொள்கை மாறுபாடுகளை கடைபிடித்தார். அதில் முதன்மையானது உயரதிகாரிகள் நியமனம். அறிவியல் அடிப்படையில் உயரதிகாரிகளை நியமிக்க கல்வியாளர்கள் கொண்ட ஒரு குழுவை நியமித்தேன். ஆனால் விக்ரமசிங்கே அதன் பரிந்துரையை நிராகரித்தார்.

    உயர் கல்வித் துறையையும், நெடுஞ்சாலைத் துறையையும் ஒரே அமைச்சகம் கையாளும் என்று விக்ரமசிங்கே அறிவித்தார். மற்றொரு முக்கிய பிரச்சினை, மத்திய வங்கி கவர்னராக சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த அர்ஜூனா மகேந்திரன் என்பவரை நியமித்தார். அவர் இலங்கையை சேர்ந்தவர் இல்லை, அவரை அந்த பதவிக்கு நியமிக்கக் கூடாது என்று நான் கூறியும், அதனை நிராகரித்துவிட்டு அவரையே வங்கி கவர்னராக நியமித்தார்.

    மத்திய வங்கி பத்திரங்கள் வெளியிட்டதில் மிகப்பெரிய நிதி முறைகேடு நடைபெற்றதற்கு மகேந்திரனே பொறுப்பு. விசாரணையில் அவர் குற்றவாளி என்றும் உறுதியானது. ஆனால் அவர் இப்போது தலைமறைவாகிவிட்டார். அவர் எங்கே இருக்கிறார் என்பது விக்ரமசிங்கேவுக்கு தெரியும்.

    விக்ரமசிங்கேவின் 3 ஆண்டு பிரதமர் பதவிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை நியமித்துள்ளேன்.

    இவ்வாறு சிறிசேனா கூறினார்.  #sirisena #RanilWickramasinghe #rajapaksa
    பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றி விட்டதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மீது 122 எம்.பி.க்கள் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்துள்ளனர். #srilankaparliament #rajapaksa
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் பதவி வகித்த ரனில் விக்ரம சிங்கேவை கடந்த மாதம் 26-ந்தேதி அதிபர் சிறிசேனா நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபக்சே நியமிக்கப்பட்டார். எனினும் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு ராஜபக்சேவுக்கு கிடைக்கவில்லை.

    எனவே பாராளுமன்றத்தை கலைத்து விட்டு ஜனவரி 5-ந்தேதி பொதுத்தேர்தல் நடத்த அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். அதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. அதைத் தொடர்ந்து அதிபரின் உத்தரவுக்கு கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

    அதன்பின்னர் இலங்கை பாராளுமன்றத்தில் 2 முறை ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாதீர்மானம் கொண்டு வந்தன. அவை இரண்டிலும் ராஜபக்சேவுக்கு தோல்வியே கிடைத்தது.

    இதற்கிடையே நேற்று இலங்கை பாராளுமன்றத்தில் சபாநாயகர் 12 பேர் கொண்ட தேர்வு குழு பட்டியலை வெளியிட்டார். அதில் சர்ச்சை வெடித்தது. அதைத் தொடர்ந்து தேர்வுக்குழு நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

    அதில் சபாநாயகரின் முடிவுக்கு ஆதரவாக 121 ஓட்டுகள் கிடைத்தது. ராஜபக்சேவுக்கு ஆதரவாக ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை.

    அதன்மூலம் பாராளுமன்றத்தில் 3-வது முறையாக நடத்தப்பட்ட ஓட்டெடுப்பிலும் ராஜபக்சேவுக்கு கடும் தோல்வி ஏற்பட்டது.

    இந்த நிலையில் 122 எம்.பி.க்கள் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மீது கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர்.

    அதில், “பிரதமர் ராஜ பக்சேவும், அவரது மந்திரிகளும் சர்ச்சைக்குரிய முறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியடைந்த நிலையில் ராஜபக்சே பிரதமர் அலுவலகத்தை அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அவரது நியமனம் செல்லாது என அறிவிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. #srilankaparliament #rajapaksa
    இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் நியமித்த தேர்வுக்குழு மீது நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில் ராஜபக்சே அணி மீண்டும் தோல்வி கண்டது. #srilankaparliament #rajapaksa
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேயை கடந்த மாதம் 26-ந்தேதி அதிபர் சிறிசேனா அதிரடியாக நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய பிரதமராக நியமித்தார். எனினும் பெரும்பான்மைக்கு தேவையான 113 உறுப்பினர்களை ராஜபக்சேயால் திரட்ட முடியவில்லை.

    இதையடுத்து நாடாளு மன்றத்தை கலைத்துவிட்டு ஜனவரி 5-ந்தேதி பொதுத் தேர்தல் நடந்த அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். இதை எதிர்த்து ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனா ஆகியவை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. அதிபரின் உத்தரவுக்கு கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

    இதன்பின்னர் இலங்கை நாடாளுமன்றத்தில் 2 முறை ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. அந்த இரண்டிலும் ராஜபக்சேவுக்கு தோல்வியே கிடைத்தது. இதனால் அவருடைய ஆதரவு எம்.பி.க்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். ராஜபக்சே, விக்ரமசிங்கே இருவருமே தாங்கள் பிரதமர் பதவியில் தொடர்வதாக கூறி வருவதால் இலங்கை அரசியலில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

    இந்த நிலையில் அனைத்து கட்சித் தலைவர்களையும் சிறிசேனா அழைத்துப் பேசி நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதனால் கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றம் அமைதியாக நடந்தது.

    அப்போது அதிபரின் யோசனைப்படி நாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த தேர்வுக் குழு ஒன்றை அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றம் நேற்று மீண்டும் கூடியது. அப்போது சபாநாயகர் 12 பேர் கொண்ட தேர்வுக்குழு பட்டியலை வெளியிட்டார். அதில் அதிபர் சிறிசேனா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் 5 உறுப்பினர்கள் இடம் பெற்று இருந்தனர்.

    அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியில் 5 உறுப்பினர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனதா விமுக்தி பெரமுனா ஆகியவற்றின் சார்பில் தலா ஒரு உறுப்பினர்களும் தேர்வுக் குழுவில் இடம் பெறுவார்கள் என்று சபாநாயகர் அறிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஜனதா விமுக்தி பெர முனாவும் ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால் தேர்வுக்குழுவிலும் விக்ரமசிங்கேயின் கையே ஓங்கியது.

    இதை ஜீரணிக்க முடியாத ராஜபக்சே ஆதரவாளர்கள் சபாநாயகரின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசாங்கம் எங்களது தலைமையில் நடப்பதால் எங்களுக்கே தேர்வுக்குழுவில் அதிக இடம் ஒதுக்கவேண்டும் என்று கோஷமிட்டனர். பின்னர் சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து தேர்வுக்குழு நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக ஓட்டெடுப்பு நடத்தும்படி ஜனதா விமுக்தி பெரமுனா எம்.பி. விஜிதா கேட்டக் கொண்டார். இதையடுத்து ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சபாநாயகரின் முடிவுக்கு ஆதரவாக 121 ஓட்டுகள் கிடைத்தன. எதிராக, அதாவது ராஜபக்சேவுக்கு ஆதரவாக ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை.

    நாடாளுமன்றத்தில் 3-வது முறையாக நடத்தப்பட்ட ஓட்டெடுப்பிலும் ராஜபக்சேவுக்கு பலத்த அடி விழுந்துள்ளது, குறிப்பிடத்தக்கது. #srilankaparliament #rajapaksa #ranilwickramasinghe #sirisena
    ராஜபக்சேவுக்கு எதிரான 2-வது நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியை அதிபர் சிறிசேனா ஏற்கவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது. #SriLankanparliament #noconfidencemotion #SriLankagovernment

    கொழும்பு:

    இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரணில் விக்ரம சிங்கேவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டது. இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டார். புதிய பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டார்.

    ஆனால் அவரால் பாராளுமன்றத்தில் பெரும் பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதையடுத்து பாராளுமன்றம் கலைக்கப் படுவதாகவும், ஜனவரி மாதம் தேர்தல் நடத்தப்படும் என்றும் அதிபர் சிறிசேனா அறிவித்தார். ஆனால் அதற்கு இலங்கை சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.

    இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் கரு.ஜெயசூரியா அறிவித்து நிறைவேற்றினார். அதை ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் ஏற்காமல் ரகளையில் ஈடுபட்டனர். சபாநாயகரை முற்றுகையிட்டு கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

    ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை அதிபர் சிறிசேனாவும் ஏற்கவில்லை. இதனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவா? அல்லது ராஜபக்சேவா? என்ற குழப்பம் நீடித்தது.

     


    இதற்கிடையே பாராளுமன்றத்தில் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அதிபர் சிறிசேனா சம்மதித்தார். இதையடுத்து நேற்று பாராளுமன்றம் கூடியது. அப்போதும் ராஜபக்சேவின் ஆதரவு எம்.பி.க்கள் கோ‌ஷங்களை எழுப்பி ரகளையில் ஈடுபட்டனர். மிளகாய் பொடி தூவியும், நாற்காலிகளை வீசியும் ரகளையில் ஈடுபட்டனர்.

    ஆனாலும் கடும் அமளிக்கு இடையே சபையை நடத்திய சபாநாயகர் கரு.ஜெயசூரியா, ராஜபக்சே அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை குரல் வாக்கெடுப்பாக நடத்தினார். இதில் 2-வது நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

    இதற்கிடையே 2-வது நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியையும் அதிபர் சிறிசேனா ஏற்கவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதுதொடர்பாக சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியை சேர்ந்த லட்சுமண்யபா அபய் வர்தனே கூறும்போது, “அதிபர் சிறிசேனா 2-வது நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்கவில்லை. அதை அவர் நிராகரித்து உள்ளார்” என்றார். ஆனால் இது தொடர்பாக சிறிசேனா அலுவலகத்தில் இருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

    ரணில் விக்ரமசிங்கே கூறும்போது, “எங்களிடம் மெஜாரிட்டி உள்ளது. எங்களது அரசை நாங்கள் அமைப்போம். சட்டப்படி நாங்கள் செயல்படுவோம்” என்றார்.

    இதனால் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. #SriLankanparliament #noconfidencemotion #SriLankagovernment

    இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை சட்டவிரோதமாக அறிவிக்கக் கோரி மூன்று பிரதான கட்சிகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. #SriLanka #SriLankaParliament
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர்  சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை.  எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து மூன்று பிரதான கட்சிகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. பாராளுமன்றத்தில் இந்த கட்சிகள் பெரும்பான்மை பெற்றுள்ளன.


    அதிபர் சிறிசேனாவின் பாராளுமன்ற கலைப்பு நடவடிக்கை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும், மீண்டும் பாராளுமன்றம் செயல்படுவதற்கு உத்தரவிடவேண்டும் என்றும் இந்த கட்சிகள் தங்கள் மனுவில் கூறியுள்ளன.  #SriLanka #SriLankaParliament
    இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. எந்தவிதமான நன்மையும் கிடைக்கப்போவது இல்லை என்று புதுக்கோட்டையில் நடந்த திருமண விழாவில் வைகோ பேசினார். #vaiko #SriLanka #rajapaksa

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்றார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. எந்தவிதமான நன்மையும் கிடைக்கப்போவது இல்லை. ஒருவேளை ராஜபக்சே வெற்றி பெற்றால் இலங்கை அரசின் சட்டத்தை திருத்தி அதிபர் பதவியில் இருந்து சிறிசேனாவை கழற்றி விட்டு அவர் அதிபராக வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதை அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் தமிழர்களின் பண் பாட்டு தலங்கள் அழிக்கப்படும் அபாயமும் உள்ளது


    இலங்கைப் பிரச்சினையை பொறுத்தவரை தமிழ் மாகாண சபை தலைவர் விக்னேஸ்வரன் கொண்டு வந்த தீர்மானம் மட்டுமே ஒரே தீர்வாக இருக்கும். தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்கள் நலனுக்காக செயல்பட வில்லை. அவர்கள் முழுவதுமாக சிங்களர் சார்ந்த வி‌ஷயங்களில் கவனம் செலுத்தி அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள் .

    இலங்கை அரசு கலைக்கப்பட்டதை கண்டித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அங்குள்ள தமிழ் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன. ஒரு வேளை வழக்கு தொடரப்பட்டால் இலங்கை அரசு கலைக்கப்பட்டது செல்லாது என்று அறிவிப்பு வரலாம். ஏனென்றால் இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைப்பதற்கு நான்கு ஆண்டு காலம் முடிய வேண்டும் என்று சட்ட விதி உள்ளது. ஆனால் அந்த சட்டத்தை மீறி தான் தற்போது நாடாளு மன்றம் கலைக்கப்பட்டு உள்ளது.

    தமிழக மீனவர் நலன் குறித்து மத்திய அரசுக்கு அக்கறை கிடையாது. இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட படகுகள் மற்றும் மீனவர்களை விடுதலை செய்வதற்கு அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதை கண்டிப்பதற்கும் அந்த சட்டத்தை விளக்குவதற்கும் நானே நேரில் பிரதமரை சந்தித்து, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை முடித்து வைக்குமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் இருந்து தமிழக மீனவர்கள் மீது மோடிக்கு அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது. 

    இவ்வாறு அவர் கூறினார்.  #vaiko #SriLanka #rajapaksa

    இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து ஜனவரி 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என இலங்கை அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். #Sirisena #Ranilwickremesinghe #SrilankaParliament #ParliamentElection
    கொழும்பு:

    இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே இருந்து வந்த பனிப்போர் சமீபத்தில் மோதலாக வெடித்தது. பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்ரமசிங்கேயை அதிபர் சிறிசேனா கடந்த மாதம் 26-ந் தேதி திடீரென்று நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய பிரதமராக நியமித்தார்.

    ஆனால் தானே பிரதமர் என்றும், நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் ரனில் விக்ரமசிங்கே கூறினார். அத்துடன் பிரதமர் மாளிகையை விட்டு வெளியேறவும் அவர் மறுத்தார்.

    இதனால், நாடாளுமன்றத்தை வருகிற 16-ந் தேதி வரை முடக்கி வைத்து சிறிசேனா உத்தரவிட்டார். 225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் ரனில் விக்ரமசிங்கேவுக்கு 120-க்கும் அதிகமான உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது.

    நாடாளுமன்ற சபாநாயகரின் ஆதரவும் ரனில் விக்ரமசிங்கேவுக்கு இருந்தது. அவர் ராஜபக்சேவை பிரதமராக ஏற்க மறுத்துவிட்டார்.




    இந்த நிலையில், நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க இரு தரப்பினருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததால், நாடாளுமன்றம் வருகிற 14-ந் தேதி கூடும் என்று சிறிசேனா அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியில் ராஜபக்சே ஈடுபட்டார். ஆனால் அவரது முயற்சிக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. 15 எம்.பி.க்களை கொண்ட தமிழ்தேசிய கூட்டமைப்பும் ராஜபக்சேயை ஆதரிக்க மறுத்துவிட்டது.

    இதனால் நாடாளுமன்றத்தில் பலப்பரீட்சை நடைபெற்றால் ராஜபக்சே தோற்பது உறுதி ஆனது. இது அதிபர் சிறிசேனாவுக்கு பேரிடியாக அமைந்தது.

    இதைத்தொடர்ந்து, தனக்கு நெருக்கமானவர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்த அதிபர் சிறிசேனா, நேற்று இரவு திடீரென்று நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். இந்த தகவலை மூத்த மந்திரி ஒருவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ராஜபக்சே தரப்புக்கு (ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி) 8 எம்.பி.க்களின் ஆதரவு குறைவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

    தற்போதைய இலங்கை நாடாளுமன்றத்தின் பதவி காலம் 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை உள்ளது. நாடாளுமன்றத்தின் ஆயுள் இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில், அதிபர் சிறிசேனா அதை அதிரடியாக கலைத்து இருப்பது இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் இலங்கை நாடாளுமன்றத்துக்கு ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. புதிய நாடாளுமன்றம் ஜனவரி 17ம் தேதி பதவியேற்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து ரனில் விக்ரமசிங்கே தரப்பு கோர்ட்டுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.  இதனால் இலங்கை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Sirisena #Ranilwickremesinghe #SrilankaParliament #ParliamentElection  
    அடுத்த வாரம் பாராளுமன்றம் கூட இருந்த நிலையில், அதிபர் சிறிசேனா இன்று இரவு பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார். #sirisena #ranilwickremesinghe #srilankaparliament
    கொழும்பு:

    இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இதில் கடந்த மாதம் 26–ந் தேதி சிறிசேனா அதிரடியாக ரனில் விக்ரம சிங்கேயை நீக்கி விட்டு, ராஜபக்சேயை பிரதமராக நியமித்தார். ஆனால் ரனில் விக்ரம சிங்கே, ‘‘நான்தான் பிரதமர்’’ என்று அறிவித்தார்.

    இருவரில் யார் பிரதமர் என்ற அதிகாரப்போட்டி தொடர்கிறது. ரனில் விக்ரம சிங்கே பிரதமர் மாளிகையை விட்டு வெளியேற மறுத்து விட்டார். சபாநாயகர் கரு ஜெயசூரியா அவரைத்தான் பிரதமராக அங்கீகரித்துள்ளார். இருப்பினும் நாடாளுமன்றத்தை கூட்டி, பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இரு தரப்பினருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 

    நாடாளுமன்றத்தை 16–ந் தேதி வரை முடக்கி வைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். இதற்கிடையே, பாராளுமன்றம் 14–ம் தேதி கூடும் என அவர் அறிவித்தார்.

    இந்நிலையில், இன்று இரவு பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். இதனால் இலங்கை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #sirisena #ranilwickremesinghe #srilankaparliament
    இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி பாராளுமன்றத்தை அதிபரால் கலைக்க முடியாது என்று கூறப்படுகிறது. எனவே இப்போதைக்கு பாராளுமன்றம் கலைப்பு இல்லை என சிறிசேனா தெரிவித்துள்ளார். #SriLankanParliament
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேயை கடந்த மாதம் 26-ந்தேதி திடீரென நீக்கிய அதிபர் சிறிசேனா, அன்றிரவு ராஜபக்சேயை அழைத்து பிரதமராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    கடந்த 3 ஆண்டுகளாக எதிரிகளாக இருந்த சிறிசேனாவும், ராஜபக்சேயும் திடீரென கைகோர்த்ததால் இலங்கையில் கடும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

    225 எம்.பி.க்களைக் கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாகவும், எனவே பிரதமர் பதவியில் நீடிப்பதாகவும் ரனில் விக்ரமசிங்கே அறிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறிசேனாவும் ராஜபக்சேவும் கடந்த மாதம் 28-ந்தேதி இலங்கை பாராளுமன்றத்தை நவம்பர் 16-ந்தேதி வரை முடக்கி அறிவித்தனர். அதன் பிறகு அவர்கள் எம்.பி.க்களை விலைபேசி வளைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

    ஆனால் அவர்களது முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. 113 எம்.பி.க்கள் இருந்தால்தான் பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும் என்ற நிலையில் சுமார் 100 எம்.பி.க்களே ராஜபக்சேக்கு ஆதரவாக உள்ளனர். மேலும் 13 எம்.பி.க்கள் தேவைப்படும் நிலையில், சிறிசேனா- ராஜபக்சே கூட்டணிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

    இந்த நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்துள்ள அழுத்தம் காரணமாக இலங்கை பாராளுமன்றத்தை வரும் 14-ந்தேதி கூட்டப் போவதாக சிறிசேனாவும், ராஜபக்சேயும் அறிவித்துள்ளனர். ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும், தமிழர்களின் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்தும் 13 எம்.பி.க்களை பேரம் பேசி இழுத்து விட முடியும் என்று அவர்கள் நம்பினார்கள்.

    கடந்த இரு தினங்களாக தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர்கள், எம்.பி.க்களுடன் சிறிசேனாவும், ராஜபக்சேயும் மீண்டும் பேச்சு நடத்தினார்கள். தங்களுக்கு ஆதரவு தராவிட்டாலும் பரவாயில்லை, ஓட்டெடுப்பின் போது நடுநிலை வகிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் இதை ஏற்க தமிழ் எம்.பி.க்கள் மறுத்து விட்டனர்.

    இது சிறிசேனாவுக்கும் ராஜபக்சேக்கும் கடும் அதிர்ச்சியை அளித்தது. இந்த நிலையில் துணை மந்திரியாக இருந்த மனுஷா நானயக்காரா என்பவர் ராஜபக்சே அணியில் இருந்து விலகி ரனில் பக்கம் சாய்ந்து விட்டார். இதுவும் ராஜ பக்சேக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    இதற்கிடையே 14-ந்தேதி பாராளுமன்றம் கூடும்போது, பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட ரனில் விக்ரமசிங்கே, ராஜபக்சே இருவருக்கும் உத்தரவிடுவேன் என்று சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார்.

    இதனால் இன்னும் 5 நாட்களுக்குள் பெரும்பான்மை பலத்துக்கு ஏற்ப எம்.பி.க்களை திரட்ட வேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலை சிறிசேனாவுக்கும், ராஜபக்சேக்கும் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மனுஷா நானயக்காரா போன்று மேலும் சில எம்.பி.க்கள் ரனில் பக்கம் ஓடி விடக் கூடாது என்ற பயம் ராஜபக்சேக்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று அவர் மேலும் 3 பேருக்கு மந்திரி பதவி அளித்தார்.

    அதன்படி ராஜபக்சேயின் சகோதரர் சமல் சுகாதார மந்திரியாகவும், எஸ்.பி. திச நாயக்க நெடுஞ்சாலைகள் துறை மந்திரியாகவும், பவித்ரா வன்னியராச்சி பெட்ரோலியம் வள மந்திரியாகவும் பதவி ஏற்றனர். இதன் தொடர்ச்சியாக சில உத்தரவுகளை சிறிசேனா வெளியிட்டார். பெரும்பாலான அதிகாரங்களை தன் வசம், தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வகையில் சிறிசேனா உத்தரவிட்டிருப்பதால் இலங்கையில் உள்ள அனைத்து கட்சி எம்.பி.க்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கடந்த ஒரு வாரமாக மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்துள்ளதால் சிறிசேனா விரக்தி அடைந்துள்ளார். எனவே அவர் பாராளுமன்றத்தை கலைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. பாராளுமன்றம் 14-ந்தேதி கூட்டப்படுவதற்கு முன்பே அவர் அதை கலைத்து விடுவார் என்று கொழும்பில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    இதற்கு பிரதமராக பதவி ஏற்ற ராஜபக்சே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பாராளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது என்று அவர் நேற்றிரவு திட்டவட்டமாக அறிவித்தார். இதனால் வேறு வழி தெரியாத சிறிசேனாவும் பாராளுமன்றத்தை கலைக்க மாட்டேன் என்று இன்று காலை அறிவித்தார்.

    சிறிசேனாவும் ராஜபக்சேயும் பாராளுமன்றத்தை கலைக்க மாட்டோம் என்று கூறி இருப்பதால், அவர்களால் பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


    அதிபர் சிறிசேனா, பிரதமராக பதவியேற்ற ராஜபக்சே, சபாநாயகர் ஜெயசூர்யா மூவரும் தினம், தினம் புதிய அறிவிப்புகளை வெளியிடுவது இலங்கையில் அரசியல் நெருக்கடிகளை அதிகரிக்க செய்துள்ளது. 14-ந்தேதி பாராளுமன்றத்தில் ரனில் விக்ரமசிங்கே மெஜாரிட்டியை நிரூபித்து காட்டினாலும் அவருக்கு பிரதமர் பதவியை வழங்க இயலாது என்று சிறிசேனா மிரட்டல் விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) கொழும்பில் ரனில் ஆதரவாளர்கள் பிரமாண்ட பேரணி நடத்தினார்கள். இது கொழும்பில் அரசியல் குழப்பத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

    இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி பாராளுமன்றத்தை அதிபரால் கலைக்க முடியாது என்று கூறப்படுகிறது. அதுபோல பிரதமராக இருப்பவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து காட்ட வேண்டும் என்று சட்டத்தில் கூறப்படவில்லையாம்.

    இதை காரணம் காட்டி ராஜபக்சே பதவியை காப்பாற்ற முயற்சி நடக்கிறது. இதனால் இலங்கை அரசியலில் நாளுக்கு நாள் புதிய குழப்பங்களும் நெருக்கடியும் அதிகரித்தப்படி உள்ளது. #SriLankanParliament #Rajapaksa #Sirisena #Rajapaksa #RanilWickremesinghe
    ஓட்டெடுப்பில் வெற்றி கிடைக்காவிட்டால் தேர்தலை நடத்த ராஜபக்சே திட்டமிட்டிருப்பதால் அவரது ஆதரவாளர்கள் கொழும்பில் குவிய தொடங்கி உள்ளனர். இதனால் கொழும்பில் மீண்டும் பதட்டம் உருவாகி உள்ளது. #Rajapaksa #ranilwickramasinghe #sirisena

    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ரணில் விக்ரமசிங்கேயை கடந்த மாதம் 26-ந்தேதி திடீரென அதிபர் சிறிசேனா நீக்கினார். பிறகு தனது சுதந்திரா கட்சியில் தனி அணியாக செயல்பட்டு வந்தவரும், கடந்த 3 வருடங்களாக எதிரியாக இருந்தவருமான ராஜ்பக்சேவை அழைத்து பிரதமராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    இதன் காரணமாக இலங்கையில் பிரதமர் யார் என்ற குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்பத்தை தீர்க்க வேண்டுமானால் பாராளுமன்றத்தை கூட்டி இருவரையும் பெரும்பான்மை நிரூபிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச அளவில் எழுந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறிசேனாவும், ராஜபக்சேவும் பாராளுமன்றத்தை 16-ந்தேதி வரை முடக்கி அறிவித்தனர். இதை கண்டித்து ரணில் விக்ரமசிங்கே ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக பாராளு மன்றத்தை கூட்ட சிறிசேனா முன் வந்தார். முதலில் 5-ந்தேதி பாராளுமன்ற கூடும் என்று தகவல் வெளியானது. பிறகு 7-ந்தேதி கூடும் என்று கூறப்பட்டது.

    இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி பாராளுமன்றம் கூட்டப்படும் என்றும் அன்றே பெரும்பான்மையை நிரூபிக்க ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று சிறிசேனா நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இலங்கை அரசிதழில் இது வெளியிடப்பட்டுள்ளது.

    இலங்கை பாராளுமன்றம் கூடுவதற்கு இன்னும் 8 தினங்களே உள்ள நிலையில் தனக்கு பெரும்பான்மை பலத்தை உருவாக்க ராஜபக்சே போராடிய படி உள்ளார். 225 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 113 எம்.பி.க்கள் ஆதரவு தேவை.

    சிறிசேனா-ராஜபக்சே அணியினருக்கு 96 எம்.பி.க்கள் ஆதரவே உள்ளது. 4 எம்.பி.க்கள் மாற்று கட்சிகளில் இருந்து வந்திருப்பதால் அவர்களது பலம் 100 ஆக உள்ளது. இன்னும் 13 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

    இந்த நிலையில் 16 எம்.பி.க்களை வைத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களின் ஆதரவை பெற ராஜபக்சே முயற்சி செய்தார். ஆனால் ஒரு தமிழ் எம்.பி.யை சுமார் ரூ.30 கோடி மற்றும் மந்திரி பதவி கொடுத்து இழுத்து விட்டதால் ராஜபக்சே மீது தமிழ் எம்.பி.க்களின் கோபம் மீண்டும் அதிகரித்துள்ளது.

    இதையடுத்து ராஜபக்சேவுக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என்று தமிழ் தேசிய எம்.பி.க்கள் அறிவித்துள்ளனர். மேலும் ரணில் விக்ரமசிங்கேவை ஆதரிக்கப் போவதாக கூறி உள்ளனர்.


    ஏற்கனவே பாராளுமன்றத்தில் ரணில் விக்ரம சிங்கேவுக்கு 103 எம்.பி.க்கள் ஆதரவு இருக்கிறது. தமிழ் தேசிய எம்.பி.க்கள் 15 பேர் ஆதரவு அவருக்கு கிடைத்தால் ரனில் விக்ரம சிங்கேயால் பெரும்பான்மை பலத்தை எளிதாக நிரூபித்து காட்ட முடியும்.

    மெஜாரிட்டி பலம் இல்லாத காரணத்தால் ராஜபக்சேவும், அவரது ஆதரவாளர்களும் எந்த எல்லைக்கும் செல்ல தீவிரமாக உள்ளனர். தமிழ் தேசிய எம்.பி.க்களின் ஆதரவை பெறுவதற்காக இலங்கை உள்நாட்டு போரின்போது கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ள பல்லாயிரக்கணக்கான தமிழர்களை விடுதலை செய்யவும் ராஜபக்சே தயாராகி வருகிறார்.

    இது தவிர பணம் மற்றும் பதவிகளை அள்ளித்தரவும் மாற்றுக்கட்சி எம்.பி.க்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறப்பட்டு வருகிறது. தற்போது தங்கள் பக்கம் வரும் எம்.பி.க்களுக்கு ரூ.50 கோடி வரை கொட்டிக் கொடுக்க ராஜபக்சே பேரம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    ராஜபக்சேயின் பணம் இலங்கை எம்.பி.க்களின் கைகளில் வெள்ளமாக போய் சேர தொடங்கி உள்ளது. இதனால் ரணில் ஆதரவாளர்களாக உள்ள 4 எம்.பி.க்கள் ராஜபக்சே பக்கம் தாவ தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இலங்கையில் உள்ள 2 பெரிய முஸ்லிம் தலைவர்கள் இதுவரை ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக இருந்தனர். தற்போது அவர்கள் ராஜபக்சே பக்கம் சாய பேரம் பேசி வருவதாக கூறப்படுகிறது.

    இன்னும் ஒரு வாரத்துக்குள் பெரும்பான்மை பலத்துக்கு தேவையான எம்.பி.க்களை விலைக்கொடுத்து வாங்கி விட வேண்டும் என்பதில் ராஜபக்சேவும், அவரது மகன் நமலும் தீவிரமாக உள்ளனர்.

    இதற்கிடையே ராஜபக்சே தனக்கு இருக்கும் செல்வாக்கை நிரூபித்து காட்ட இலங்கையில் மிகப்பெரிய ஊர்வலத்துக்கு ஏற்பாடுகள் செய்து வருகிறார். இலங்கை முழுவதிலும் இருந்து ராஜபக்சே ஆதரவாளர்கள் இந்த ஊர்வலத்துக்காக கொழும்பில் குவிய தொடங்கி உள்ளனர். இதனால் கொழும்பில் மீண்டும் பதட்டம் உருவாகி உள்ளது.

    கடந்த மாதம் இறுதியில் கொழும்பில் ராஜபக்சே ஆதரவாளர்கள் பேரணி நடத்தியபோது பயங்கர கலவரம் வெடித்தது. பொதுமக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. மீண்டும் ராஜபக்சே ஆதரவாளர்கள் பேரணிக்கு வருவதால் முன்புபோல கலவரம் வெடிக்குமோ என்ற பயம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஒரு வாரத்துக்குள் பெரும்பான்மைக்கு தேவையான எம்.பி.க் களை விலை கொடுத்து வாங்க முடியாவிட்டால் அடுத்தக்கட்டமாக என்ன செய்யலாம்என்று ராஜபக்சே ஆலோசனை நடத்தி வருகிறார்.

    பாராளுமன்றத்தை கலைக்க அவர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சிறிசேனா மட்டும் சற்று தயங்கிய நிலையில் இருப்பதால் ராஜபக்சே ஆலோசித்து வருகிறார்.

    என்றாலும் பாராளுமன்றத்தில் தோல்வி ஏற்பட்டால் தேர்தலை சந்திக்க ராஜபக்சே அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் நடத்துவதற்கு தயாராக இருப்பதாக இலங்கை தேர்தல் அதிகாரி அறிவித்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #Rajapaksa #ranilwickramasinghe #sirisena

    இலங்கையில் ஓய்வு பெற்ற மேஜரை தாக்கிய வழக்கில் ரணில் விக்ரமசிங்கே கட்சியைச் சேர்ந்த 2 எம்பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். #SriLanka #SriLankaMPsArrested
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரம சிங்கேவை அதிபர் சிறிசேனா கடந்த மாதம் நீக்கிவிட்டு, ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பங்களும் சர்ச்சைகளும் நீடிக்கின்றன. ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதிபரின் திடீர் முடிவுக்கு ரணில் விக்கிரம சிங்கே மற்றும் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாராளுமன்றத்தை கூட்டி ராஜபக்சேவின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் பிரதமர் ரணில் தொடர்ந்த வலியுறுத்தி வருகிறார்.

    இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், இலங்கை பாராளுமன்றம் 14-ம் தேதி கூடும் என அதிபர் சிறிசேனா அறிவித்தார். அப்போது ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

    இதற்கிடையே ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்னா மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில், ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி எம்பிக்கள் ஹேசன் விதானகே மற்றும் பலித தேவரப்பெருமா ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

    அவர்கள் இருவரும் இன்று கொலுபிட்டியா காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து 2 எம்பிக்களையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் துறைமுக மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். 

    ராஜபக்சே புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டதையடுத்து பாராளுமன்றம் கூடி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில், எம்பிக்கள் கைது செய்யப்பட்டிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #SriLanka #SriLankaMPsArrested
    ×