என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
இலங்கை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவருக்கு பிரதமர் பதவி- சிறிசேனா திடீர் முடிவு
கொழும்பு:
இலங்கையில் அதிபராக இருந்த ரனில் விக்ரம சிங்கேவை அதிபர் மைத்ரிபால சிறிசேனா திடீரென நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை பிரதமர் ஆக்கினார்.
இதை ஏற்க ரனில் விக்ரம சிங்கே மறுத்து விட்டார். சபாநாயகர் கரு.ஜெய் சூரியாவும் அவரை ஏற்க வில்லை. மெஜாரிட்டியை நிரூபிக்க பாராளுமன்றத்தை கூட்டும்படி வலியுறுத்தினார். முதலில் பாராளுமன்றம் கூடும் தேதியை சிறிசேனா அறிவித்தார்.
ஆனால் ராஜபக்சேவுக்கு மெஜாரிட்டி கிடைக்காத நிலை ஏற்பட்டதை அறிந்து பாராளுமன்றத்தை திடீரென கலைத்தார். அதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விழித்தது. ராஜபக்சேவை பிரதமராக அறிவித்ததற்கும் தடை விதிக்கப்பட்டது.
அதையடுத்து பாராளு மன்றம் கூடியது அங்கு ராஜபக்சே மீது 3 முறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு வெற்றி பெற்றது. இருந்தும் அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்க அதிபர் சிறிசேனா மறுத்து வருகிறார்.
எனவே, பிரதமர் அலுவலகம் அரசு பணத்தை செலவு செய்ய தடை விதித்து பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தகைய பிரச்சினைகளால் இலங்கை அரசியலில் குழப்பம் நிலவுகிறது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட ரனில் விக்ரமசிங்கே தொடர்ந்து நான் தான் பிரதமர் என கூறி வருகிறார். அதிபர் சிறிசேனாவால் நியமிக்கப்பட்ட ராஜபக்சே பிரதமர் பணியை ஆற்றி வருகிறார். இவர்களில் யார் உண்மையான பிரதமர் என்ற சந்தேகம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் வருகிற 5-ந்தேதி இலங்கை பாராளு மன்றம் மீண்டும் கூடுகிறது. அப்போது ராஜபக்சேவுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பினருக்கு பிரதமர் பதவியை வழங்க அதிபர் சிறிசேனா முடிவு செய்துள்ளார். இந்த தகவலை தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். #srilankaparliament #sirisena #rajapaksa
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்