search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து முன்னணி"

    • இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் வங்கதேசத்தை சோ்ந்தவா்கள் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளது தெரியவருகிறது.

    திருப்பூர்:

    வெளிநாட்டினா் ஊடுருவலைக் கண்காணிக்க இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    கோவை விமான நிலையத்தில் அன்வா் உசேன் என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தபோது வங்கதேசத்தைச் சோ்ந்தவா் என்பதும், திருப்பூரில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளதும் தெரியவந்தது.

    ஆகவே தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் வங்கதேசத்தை சோ்ந்தவா்கள் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளது தெரியவருகிறது. ஆகவே வெளிநாட்டினா் ஊடுருவலைக் கண்காணிக்கும் வகையில் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • போலீசார் பள்ளி மாணவிகள் பாதுகாப்பு கருதி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை.
    • இந்து முன்னணி தொழிற்சங்கம் சார்பில் தடையை மீறி சங்கம் அமைக்கப்போவதாக தகவல்கள் வெளியானது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தென்புறம் தினசரி மார்க்கெட் மற்றும் முப்புடாதி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதை உள்ளது. இந்த இடத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அமைக்க பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போலீசிடம் அனுமதி கேட்டு மனு வழங்கப்பட்டது. ஆனால் போலீசார் பள்ளி மாணவிகள் பாதுகாப்பு கருதி அனுமதி வழங்கவில்லை.

    இந்நிலையில் இன்று இந்து முன்னணி தொழிற்சங்கம் சார்பில் அந்த இடத்தில் போலீஸ் தடையை மீறி சங்கம் அமைக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. இதனால் போலீசார் அந்த பகுதியில் இருபுறமும் பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவா்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்படுவது கவலை அளிக்கும் விஷயம்.
    • சமூக அக்கறையுடன் செயல்படும் நபா்களுக்கு காவல் துறை தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்,டிச.20-

    தமிழகத்தில் சமூக அக்கறையுடன் செயல்படும் நபா்களுக்கு காவல் துறை தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    தமிழகத்தில் ஊழல், முறைகேடு, போதைப் பொருள் விற்பனை குறித்து நேரடியாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவா்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்படுவது கவலை அளிக்கும் விஷயம்.

    திருக்கழுக்குன்றத்தில் பா.ஜ.க. இளைஞா் அணி பொறுப்பாளா் தனசேகா் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடூரமாக தாக்கப்பட்டுள்ளாா். இவா் சில நாள்களுக்கு முன்பாக கஞ்சா பயன்படுத்திய நபரிடம் அது எங்கே கிடைக்கிறது, யாா் விற்பனை செய்கிறாா், யாா் ஆதரவு அளிக்கிறாா்கள் என்பது போன்ற கேள்விகளைக் கேட்டு சமூக ஊடகங்களில் வெளியிட்டாா்.

    இந்நிலையில், கஞ்சா வியாபாரிகளால் தனசேகா் தாக்கப்பட்டிருப்பது காவல் துறை மற்றும் அரசும் உடந்தையோ என்ற சந்தேகத்தை ஏழுப்புகிறது.

    இத்தகைய சம்பவங்களில் ஈடுபடும் நபா்கள் யாா் என்று காவல் துறைக்குத் தெரிந்திருந்தும் பல நிா்பந்தங்களால் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஆகவே, சமூக அக்கறையுடன் செயல்படும் நபா்களுக்கு காவல் துறை தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தக்கலையில் காவடி கட்டத் தடை-அனுமதியால் பரபரப்பு
    • இன்று காலை தாமதமாக தொடங்கியது ஊர்வலம்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று தக்கலை குமார கோவிலில் அமைந்துள்ள வேளிமலை முருகன் கோவில்.

    இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன் நிறைவேற்ற விரதம் இருந்து காவடி எடுத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. இந்த ஊர்வலத்தில் போலீஸ், பொதுப்பணி என அரசு துறைகள் சார்பிலும் காவடி எடுப்பது உண்டு.

    காவடி கட்டிய பின்னர் அதனை யானை மீது வைத்து ஊர்வலம் நடைபெறும். இந்த ஆண்டு ஊர்வலம் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று காலை நடை பெற்றது.முன்னதாக ஊர்வலம் செல்லும் சாலையோரம் காவடிகளை வரவேற்கும் விதமாக வாழைக்குலை தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன.

    ஊர்வலத்தில் பங்கேற்ப தற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று காவடி கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. தக்கலை போலீஸ் நிலையத்திலும் காவடி கட்டுவதற்கான பணிகள் மற்றும் பூஜை ஏற்பாடுகள் நேற்று மாலை யில் தொடங்கியது.

    ஆனால் இரவு 9 மணிக்கு மேல் பணிகள் எதுவும் நடைபெறாமல் ேபாலீஸ் நிலையம் களையிழந்து காணப்பட்டது. இந்த சூழலில் போலீஸ் நிலையம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது. இங்கு வைத்து காவடி கட்டக் கூடாது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தர விட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இதனால் பாரதிய ஜனதா வினர் அதிருப்தி அடைந்த னர். அவர்களும், இந்து முன்னணி அமைப்பினரும் நள்ளிரவு 12 மணிக்கு தக்கலை போலீஸ் நிலை யத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இன்று அதிகாலை 2 மணி வரை அவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் சமர சம் செய்ய முயன்றனர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதே நேரம் போலீஸ் நிலையத்தில் காவடி கட்டும் பணியும் நடைபெறவில்லை. இத னால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

    இதற்கிடையில் போலீஸ் காவடி இல்லாமல், வேளி மலை முருகன் கோவிலுக்கு காவடி ஊர்வலம் செல்லக் கூடாது. நாளை (இன்று) காலை அனைத்து பகுதி களில் இருந்து எடுக்கப்படும் காவடிகளும் தக்கலை போலீஸ் நிலையம் முன்பு வரவேண்டும் என போரா ட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

    இந்த சூழலில் இன்று காலை பல்வேறு பகுதிகளில் இருந்து யானையுடன் காவடி ஊர்வலங்கள் புறப்பட்டன. அவை தக்கலை போலீஸ் முன்பு வரக்கூடும் என்பதால் பல இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையாக குவிக்கப்பட்டனர்.

    இது தொடர்பாக பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலங் காலமாக செந்தூர் முருகன் காவடி, தக்கலை காவல் நிலையத்தில் இருந்து ஆரம்பித்து வேளிமலை முருகன் சந்நிதியில் நிறைவு பெறும். ஆனால் இந்த ஆண்டு ஏற்பட்ட பிரச்சி னையால் இன்று அதிகாலை தொடங்க வேண்டிய பூஜை சடங்குகள் திட்டமிட்டபடி ஆரம்பிக்கப்படவில்லை.

    எனவே அனைத்து முருக பக்தர்களும், பாரதிய ஜனதா நிர்வாகிகளும், பொது மக்களும் தக்கலை காவல் நிலையம் முன்பு நியாயம் கேட்க திரள வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

    ஆண்டு தோறும் காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய காவடி ஊர்வலம் இன்று தொடங்கப்படாதது குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காலை 9.30 மணியளவில் போலீஸ் காவடிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் காவடி கட்டும் பணிகள் தொடங்கின.

    இதனை தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் புறப்பட்ட காவடிகள், வேளிமலை முருகன் கோவிலை நோக்கி ஊர்வலமாகச் சென்றன.

    இந்த நிலையில் தக்கலைக்கு வந்த முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில் பாரம்பரியமாக தக்கலை காவல் நிலையத்தில் இருந்து ்பொதுப்பணித்துறை உட்பட பல்வேறு அரசு அமைப்புகள் சார்பில் குமாரகோவிலுக்கு காவடிக்கட்டு செல்வது பாரம்பரியமாக நடை பெற்று வருகிறது

    ஆனால் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் மேடைகளிலும் பொது வெளியிலும் மத ஒற்றுமையை பற்றி பேசி விட்டு இது போன்ற பாரம்பரியமான நிகழ்ச்சி களுக்கு திட்டமிட்டு தடை ஏற்படுத்தி வருகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட நிர்வாகமும் ஆளும் கட்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்து செயல் படுகின்றனர். மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு போன்ற அதிகாரிகள் குறைந்த கால கட்டங்களில் மாவட்டத்தில் பணிபுரிவார்கள். ஆனால் உள்ளூர் அமைச்சர் அதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.

    • தமிழகத்தில் கோவில்களில் இருந்து வரும் வருமானம் முழுவதையும் அரசு எடுத்துக் கொள்கிறது.
    • விளக்குகள் கூட ஏற்றமுடியாத பல்லாயிரம் கோவில்கள் அறநிலையத் துறையின் கீழ் உள்ளன.

    திருப்பூர்:

    காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்திலிருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடம் 600 ஆண்டுகள் பாரம்பரியம் உடையது. தமிழ் மொழியை வளா்த்ததிலும் ஆன்மிகத்தை செம்மைப்படுத்தியதிலும் தொண்டை மண்டல ஆதீனத்தின் பங்கு அளப்பரியதாகும்.

    தமிழகத்தில் கோவில்களில் இருந்து வரும் வருமானம் முழுவதையும் அரசு எடுத்துக் கொள்கிறது. ஆனால் தரிசனத்துக்காக வரும் பக்தா்களின் நலனின் அரசு துளியும் அக்கறை காட்டியது இல்லை. சிதிலமடைந்த கோவில்களை சீரமைப்பதில்லை. விளக்குகள் கூட ஏற்றமுடியாத பல்லாயிரம் கோவில்கள் அற நிலையத் துறையின் கீழ் உள்ளன. இந்தக்கோவில்கள் மீது எல்லாம் அக்கறை காட்டாமல் அலட்சியம் காட்டும் அறநிலையத் துறை ஆதீனத்தின் மீது பாா்வையை திருப்புவதன் நோக்கம் என்ன?

    காஞ்சிபுரம் தொண்டை மண்டலத்தின் 233வது ஆதீனமாக திருச்சிற்றம்பலம் ஞானதேசிக பரமாச்சாரியாா் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறாா். இந்நிலையில் அறநிலையத் துறை அமைச்சரின் உறவினா் பல்லாயிரம் கோடி சொத்துள்ள ஆதீன மடத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் அவருக்கு தொல்லை கொடுத்து வந்த சூழலில் உடல் நலத்தைக் காரணம் காட்டி அவா் பதவியில் இருந்து விலகியுள்ளாா்.

    இதைத்தொடா்ந்து காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்துக்கு செயல் அலுவலரை நியமித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். ஆகவே தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விஷயத்தில் தலையிட்டு ஆதீனத்தை ஆக்கிரமிக்கும் இந்து சமய அறநிலைத் துறை செயல்களை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

    • மாவட்டம் முழுவதும் 5 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்க திட்டம்
    • குமரி மாவட்டத்தில் 1982-ம் ஆண்டு நடைபெற்ற மண்டைக்காடு கலவரத்திற்கு பின்னர் நீதிபதி வேணுகோபால் கமிஷன் அமைக்கப்பட்டது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் 1982-ம் ஆண்டு நடைபெற்ற மண்டைக்காடு கலவரத்திற்கு பின்னர் அமைக்கப்பட்ட நீதிபதி வேணுகோபால் கமிஷன் பரிந்துரைகளின் படி புதிதாக ஆலயங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

    ஆனால் தற்போது அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து குமரி மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று நடந்தது.

    நாகர்கோவில் நாகராஜா கோவில் முன்பு நடந்த கையெழுத்து இயக்கத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், நிர்வாகிகள் கண்ணன், சுப்பிரமணியன், பிரவீன், சுரேஷ் பாபு, தியாகராஜன், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாவட்டம் முழுவதும் 5 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்க திட்டமிடப்பட்டிருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • ராமதாஸ் அந்த பகுதியில் நடைபெறும் கோவில் நிகழ்ச்சிகளில் முக்கிய பொறுப்பாளராக பங்கேற்பது வழக்கம்.
    • கடந்த மாதம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது திடீரென பிரச்சினை ஏற்பட்டது.

    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பி.முட்லூர் பகுதியை சேர்ந்தவர் சீனு என்கிற ராமதாஸ் (வயது 52). இந்து முன்னணி நிர்வாகியான இவர் அந்த பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அறங்காவலராக உள்ளார்.

    நேற்று இரவு வெளியே சென்று விட்டு தனது மகேந்திரா ஜீப்பினை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். அதன் பின்னர் வீட்டில் தூங்கினார். இன்று அதிகாலை மர்மநபர்கள் அங்கு வந்தனர்.

    அக்கம் பக்கம் பார்த்த மர்மநபர்கள் திடீரென ராமதாஸ் வீட்டின் மீது 2 பெட்ரோல் குண்டுகளை வீசினர். அது தீப்பிளம்பாக பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அந்த இடமே புகைமண்டலமாக காட்சி அளித்தது. சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிய ராமதாஸ் திடுக்கிட்டு வெளியே வந்தார்.

    அப்போது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த தனது ஜீப் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தண்ணீர் ஊற்றி அணைத்தார்.

    இதில் ஜீப்பின் டயர் எரிந்து நாசமானது. உடனே அக்கம் பக்கம் சுற்றி பார்த்தபோது 2 பெட்ரோல் குண்டுகள் கிடந்தது. வீட்டின் அருகே உள்ள பனை மரத்தின் மீதும் பெட்ரோல் குண்டுகள் கிடந்தது.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீப்போல பரவியது. இதனால் ஏராளமான இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்த சிதம்பரம் போலீஸ் டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ், பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    பெட்ரோல் குண்டின் துகள்களை போலீசார் சேகரித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்து முன்னணி நிர்வாகி ராமதாஸ் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது யார்? எதற்காக வீசினர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தொடர்ந்து நடந்த விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.

    ராமதாஸ் அந்த பகுதியில் நடைபெறும் கோவில் நிகழ்ச்சிகளில் முக்கிய பொறுப்பாளராக பங்கேற்பது வழக்கம். கடந்த மாதம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது திடீரென பிரச்சினை ஏற்பட்டது.

    அப்போது ராமதாஸ் இதில் தலையிட்டு அந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தார். இதன் எதிரொலியாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்து முடிந்த 2 நாளில் ராமதாஸ் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    இது குறித்து ராமதாஸ் கூறுகையில் கடந்த மாதம் ஏற்கனவே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. நான் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தேன். ஆனால், போலீசார் வழக்கு எதுவும் பதியவில்லை. தற்போது 2 முறையாக பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. எனவே, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகளை மர்மநபர்கள் வீசி வருகிறார்கள். இதன் எதிரொலியாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை விதிக்கப்பட்டது.

    மேலும் இந்து முன்னணி நிர்வாகி வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த சூழலில் பி.முட்லூரை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி ராமதாஸ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • தமிழக அரசு சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    • தமிழக அரசு சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பது போன்ற தொடா் வன்முறைச் சம்பவங்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அமைதிப் பூங்காவான தமிழகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பது போன்ற தொடா் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. என்ஐஏ. அதிகாரிகள் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தி பலரை கைதுசெய்துள்ளனா். இந்த சோதனையின்போதே ஒரு அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டு இடையூறு ஏற்படுத்தினா்.

    ஜனநாயக நாட்டில் சோதனையின்போது கைது செய்யப்பட்டவா்கள் மீது குற்றமில்லை எனில், விடுதலை செய்யப்படுவதே நடைமுறை. இதற்காக அறவழியில் போராடாமல் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. இந்த சம்பவங்களை முன்கூட்டியே அறிந்து தடுக்க தமிழக உளவுத் துறை தவறிவிட்டது. தமிழக காவல் துறை குற்றவாளிகளை கைது செய்யாமல் இருப்பது சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வழிவகுக்கும். எனவே,   

    • பா.ஜ.க, இந்து முன்னணியினர் 100-க்கும் மேற்பட்டோர் புளியம்பட்டி நால்ரோடு சத்தியமங்கலம் சாலையில் திடீரென ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • மறியல் செய்த 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க, இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    நீலகிரி தொகுதி தி.மு.க. எம்.பி. ஆ.ராசா இந்து மதத்துக்கு எதிராக பேசியதாக கூறி அவரை கண்டித்து நேற்று நீலகிரி தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.

    இந்த நிலையில் நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், பு.புளியம்பட்டி ஆகிய பகுதிகளிலும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக அவர்கள் பொதுமக்களிடம் நோட்டீஸ் விநியோகம் செய்தனர். இதற்கு போட்டியாக கடைகளை வழக்கம்போல் திறந்து கொள்ளலாம் என்று தி.மு.க. சார்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

    இருப்பினும் நேற்று இந்த பகுதிகளில் 60 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த போராட்டம் தொடர்பாக போலீசார் பா.ஜ.க மற்றும் இந்து முன்னணியினர் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி பா.ஜ.க, இந்து முன்னணியினர் 100-க்கும் மேற்பட்டோர் புளியம்பட்டி நால்ரோடு சத்தியமங்கலம் சாலையில் திடீரென ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    பின்னர் அவர்கள் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் கோவை-சத்தியமங்கலம் சாலையில் கடுமையான போக்குவரத்து ஏற்பட்டது. இதுகுறித்து தெரியவந்ததும் புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து மறியல் செய்த 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க, இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் 1 மணி நேரத்துக்கு பின்பு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    • நீலகிரி எம்.பி. ராஜாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இந்துக்கள் குறித்து அவதுாறாக பேசிய ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள குப்புசாமி நாயுடு புரத்தில் திருப்பூர் மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில்இந்துக்கள் குறித்து அவதுாறாக பேசிய நீலகிரி எம்.பி. ராஜாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் லோகநாதன்,சர்வேஸ்வரன், ராஜ்குமார்,மற்றும் இந்து முன்னணி மாவட்ட, நகர பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விநாயகா் சதுா்த்தி விழா தமிழகத்தின் பல இடங்களில் சுமூகமான முறையில் சிறப்பாக நடைபெற்றது.
    • ஒத்துழைப்பு அளித்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.

    திருப்பூர்  :

    இந்து முன்னணி அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூரை அடுத்த கொடுவாயில் நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.

    கூட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் அண்மையில் நடைபெற்ற இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார யாத்திரை மாபெரும் வெற்றியடைந்துள்ளது. விநாயகா் சதுா்த்தி விழா தமிழகத்தின் பல இடங்களில் சுமூகமான முறையில் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு அளித்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.

    அதேவேளையில், சென்னையில் கடந்த ஜூலை 31 ந்தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து கலை இலக்கிய முன்னணி மாநிலப் பொறுப்பாளா் கனல் கண்ணன் பேசியது ஜனநாயக ரீதியான அவரது கருத்தாகும். ஆனால், திராவிடர் கழகத்தின்ர கொடுத்த புகாரின் பேரில் தமிழக அரசு தனிப்படை அடைத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தது கருத்து சுதந்திரத்தை ஒடுக்கி இந்துக்களின் குரல்வளையை நசுக்கும் செயலாகும். ஆகவே, கருத்துரிமையை நசுக்கி ஒருதலைப்பட்சமாக செயல்படும் தமிழக அரசுக்கு கண்டணம் தெரிவித்துக் கொள்வது.இந்து தெய்வங்களை சமூக வலைதளங்களில் இழிவுபடுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • இந்துக்களின் எழுச்சித் திருவிழாவான விநாயகா் சதுா்த்தி விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது.
    • சமூக விரோதிகள் இரு கோவில்களில் விநாயகா் சிலைகளை சேதப்படுத்தி உள்ளனா்.

    திருப்பூர் :

    திருப்பூரில் 2 கோவில்களில் விநாயகா் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்துக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்துக்களின் எழுச்சித் திருவிழாவான விநாயகா் சதுா்த்தி பெருவிழா தமிழகமெங்கும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது.

    இந்து முன்னணி சாா்பில் நிகழாண்டு 'பிரிவினை வாதத்தை முறியடிப்போம் தேசிய சிந்தனையை வளா்ப்போம்' என்ற தலைப்பில் ஒன்றரை லட்சம் இடங்களில் விநாயகா் சிலைகள் பொதுமக்களின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டது. திருப்பூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவானது பல்லாயிரக்கணக்கானோா் கலந்துகொண்ட மாபெரும் மக்கள் எழுச்சி விழாவாக கொண்டாடப்பட்டதை பொறுத்துக் கொள்ள முடியாத சமூக விரோதிகள் இரு கோவில்களில் விநாயகா் சிலைகளை சேதப்படுத்தி உள்ளனா்.சிலைகளை சேதப்படுத்தியவா்களை காவல் துறையினா் உடனடியாக கைது செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் இந்து முன்னணி சாா்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாஜக சாா்பில் மனு :

    விநாயகா் சிலைகளை சேதப்படுத்திய நபா்களைக் கைது செய்யக் கோரி பாஜக. சாா்பில் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவா் பி.செந்தில்வேல் திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- தமிழகம் முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.இந்நிலையில், திருப்பூா் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், சக்தி மாரியம்மன் கோவில் ஆகிய இடங்களில் விநாயகா் சிலைகளை சிலா் சேதப்படுத்தியுள்ளனா்.சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.ஆகவே விநாயகா் சிலைகளை தேதப்படுத்தியவா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×