search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து முன்னணி"

    • கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடங்களை கிருஷ்ணா புரத்தில் உள்ள தனி நபர்கள் ஆக்கிரமித்து வைத்து உள்ளனர்.
    • இடம் தொடர்பாக ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

    நெல்லை:

    இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் பிரம்மநாயகம் தலைமையில் மத்திய அரசு வக்கீல்கள் குற்றாலநாதன், பாலாஜி கிருஷ்ணசுவாமி, மாவட்ட தலைவர் சிவா மற்றும் கிருஷ்ணாபுரம் கிராம மக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    பாளை தாலுகா நொச்சி குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அனைத்து சமுதாய மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.

    இங்கு 800 வருடங்களுக்கு முன்னர் பாண்டிய மன்னர்க ளால் கட்டப்பட்ட பெருமாள் கோவில், சிவன் கோவில் மற்றும் திருச் செந்தூர் செல்லும் பாதை யாத்திரை பக்தர்கள் தங்கி செல்வதற்கு கல் மண்டபமும் உள்ளது. இந்த மண்டபத்தில் யாரால் அமைக்கப்பட்டது என்ற பெயருடன் கூடிய பதிக்கப்பட்ட கல்வெட்டுகள் சுவர்களில் இருந்து வருகிறது.

    இந்த சத்திரம் மற்றும் கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடங்களை கிருஷ்ணா புரத்தில் உள்ள தனி நபர்கள் ஆக்கிரமித்து வைத்து உள்ளனர்.

    அந்த இடத்திற்கு போலி ஆவணங்கள் தயார் செய்து மோசடியாக சிலர் பட்டா பெற்றுள்ளனர். இதனை மீட்க போராடிய நபர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.

    இந்த இடம் தொடர்பாக ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வழக்கு போடப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. அந்த இடம் தற்போது கோடிக்கணக்கில் இருக்கும் என்பதால் அதனை தனி நபர்கள் ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

    எனவே மாவட்ட கலெக்டர் இந்த பிரச்சினையில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு செய்ய முயலும் தனி நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும். அந்த இடத்தையும் மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    அப்போது அவர்களுடன் மாவட்ட செயலாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகி கள் விமல், தாஸ், ரமேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • தி கேரளா ஸ்டோரி படம் பயங்கரவாத செயல்களுக்கு இளைஞர்களை மூளைச்சலவை செய்வது பற்றி எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
    • விழிப்புணர்வு படத்துக்கு தடை விதிக்க கோர்ட்டு மறுத்த நிலையில் போராட்டம் நடத்துகிறார்கள்.

    சென்னை:

    தி கேரளா ஸ்டோரி படம் தொடர்பாக இந்து முன்னணி மாநகர தலைவர் இளங்கோவன் டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    இந்த படம் பயங்கரவாத செயல்களுக்கு இளைஞர்களை மூளைச்சலவை செய்வது பற்றி எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வு படத்துக்கு தடை விதிக்க கோர்ட்டு மறுத்த நிலையில் போராட்டம் நடத்துகிறார்கள். சீமான் தலைமையில் முற்றுகையிட போவதாக கூறி உள்ளார்கள். அவரை கைது செய்ய வேண்டும். திரையிடப்பட்டுள்ள திரையரங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • ஸ்ரீ பெரும்புதுாரில் கடந்த8 மாதத்தில், 3 பேர் வெட்டி கொல்லப்பட்டுள்ளனர்.
    • குற்றங்களை கட்டுப்படுத்த தமிழக முதல்வர், போலீஸ்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்.

    திருப்பூர்:

    போலீஸ் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை மற்றும் போதையில் மூழ்கும் மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. சமீபத்தில், தூத்துக்குடி, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொடூரமாக கொல்லப்பட்டார். சேலம், ஓமலுார் கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார் கொலைவெறியோடு துரத்திய கும்பலிடம் இருந்து தப்பிக்க, போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்து உயிர் தப்பினார். போதை பொருட்களால் குடும்பமே பாதிக்கப்பட்ட ஈரோடை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கீதா கலெக்டர் அலுவலகம் முன், போதைப்பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க தனிநபர் சத்தியாகிரகம் செய்துள்ளார்.

    ஸ்ரீ பெரும்புதுாரில் கடந்த8 மாதத்தில், 3 பேர் வெட்டி கொல்லப்பட்டுள்ளனர். பா.ஜ.க., பட்டியலின பிரிவு மாநில பொறுப்பாளர் சங்கர் கொல்லப்பட்டார். முன் பகை என காரணம் காட்டி போலீஸ்துறை கடந்து செல்வது எந்த வகையிலும் ஏற்க கூடியதில்லை. கஞ்சா முதலான போதை பொருட்கள் நடமாட்டம் தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது.

    குற்றங்களை கட்டுப்படுத்த தமிழக முதல்வர், போலீஸ்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். மது கொள்கையை விரிவுபடுத்தி மக்கள் நிம்மதியை கெடுக்க வேண்டாம். வியாபாரிகள், அரசு அதிகாரிகள் ஆகியோரை அச்சுறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ெரயில் சேவையைத் தொடங்க மத்திய அரசு ரூ. 90 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
    • தனுஷ்கோடி ரெயில் திட்டம் நிறைவேறினால் யாத்ரீகா்களின் வருகை பலமடங்கு அதிகரிக்கும்.

    திருப்பூர் :

    ராமேசுவரம்-தனுஷ்கோடி ெரயில் இணைப்புத் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- காசியைப் போன்று மிகவும் பிரசித்தி பெற்றது ராமேசுவரத்தில் உள்ள தனுஷ்கோடியாகும். கடந்த 1960 ஆம் ஆண்டில் வந்த சுனாமிப் பேரலையால் தனுஷ்கோடி அழிந்தது. இதன் பிறகு அந்தத் தீவைப் புனரமைக்க மத்திய, மாநில அரசுகள் எந்தவிதமான முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

    இதனிடையே, தனு ஷ்கோடி புனரமைக்கப்பட்டு ராமேசுவரத்தில் இருந்து ரெயில் சேவையைத் தொடங்க மத்திய அரசு ரூ. 90 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தனுஷ்கோடி ரெயில் திட்டம் நிறைவேறினால் யாத்ரீகா்களின் வருகை பலமடங்கு அதிகரிக்கும். ஆகவே, ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே ரெயில் சேவை தொடங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிப்பு
    • கட்டுமானம் நடைபெறும் பகுதியில் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தின் தட்டி போர்டு ஒன்று இருந்தது

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே, பத்ம னாபபுரம் நகராட்சிக் குட்பட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை முன்பு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கழிவுகளை வீசி வருவதால் இப்பகுதியில் எப்போதும் துர்நாற்றம் வீசும்.

    இந்தநிலையில் மருத்துவ மனை முன்பு பூங்கா அமைக்க சிலர் திட்டமிட்டு அதற்கான கட்டுமான பணிகளில் ஈடுபட்டனர். கட்டுமானம் நடைபெறும் பகுதியில் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தின் தட்டி போர்டு ஒன்று இருந்தது. இதை கண்ட இந்து முன்னணியினர் அப்பகுதியில் கட்டுமான பணி நடத்த கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    மேலும் உடனடி நடவடிக்கை எடுக்க தக்கலை போலீஸ் நிலையத்தில் இந்து முன்னணி நகர தலைவர் ரஞ்சித் புகார் செய்தார். இந்நிலையில் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் கட்டுமான பணியை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதியில் இந்து முன்னணியினர் குவிந்தனர்.

    தகவல் அறிந்த தக்கலை போலீசார் மற்றும் மற்றொரு சமுதாய அமைப்பினர் அங்கு வந்தனர். நகராட்சி தலைவர் அருள் சோபன், தி.மு.க. நகர செயலாளர் சுபிகான், பா.ஜ.க.வை சேர்ந்த வக்கீல் வேலுதாஸ், சுரேஷ் குமார் இந்து முன்னணி செந்தில், மிசா சோமன், ரஞ்சித் உள்பட ஏராளமானோர் குவிந்தனர்.

    பின்னர் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன் மற்றும் இன்ஸ்பெக்டர் நெப்போலி யன் தலைமை யில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. நகராட்சி நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் சர்வே செய்து முறையான அறிக்கை தாக்கல் செய்த பிறகு பூங்கா அமைப்பது குறித்து முடிவு செய்ய திட்டமிடப்பட்டது. அந்தப் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் பேரி கார்டு

    அமைத்து போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • இடஒதுக்கீடு குறித்து தெளிவான கண்ணோட்டத்தை அம்பேத்கர் தந்துள்ளார்.
    • மதமாற தூண்டும் சக்திகளுக்கு துணைபோகும் நடவடிக்கையாக உள்ளது.

    திருப்பூர் :

    இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய பட்டியலினத்தவர்களுக்கும் இடஒதுக்கீடு சலுகை வழங்க சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ளதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இடஒதுக்கீடு குறித்து தெளிவான கண்ணோட்டத்தை அம்பேத்கர் தந்துள்ளார். சமூக நீதிக்கான சலுகையை பெற, மதமாற தூண்டும் சக்திகளுக்கு துணைபோகும் நடவடிக்கையாக உள்ளது.

    தமிழக அரசின் தவறான போக்கை கண்டித்து பட்டியலின சமூக மக்களும், அமைப்புகளும் முன்வர இந்து முன்னணி அறைகூவல் விடுக்கிறது. சட்டரீதியாகவும், பொதுமக்களின் கருத்துகளை திரட்டி ஜனநாயக ரீதியில் போராடியும் இந்து முன்னணி, மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு அரசு கொண்டு வரும் மசோதாவை முறியடிக்க தயங்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • கிறிஸ்துவ சர்ச், ஜெப கூடங்களை புனரமைக்க விண்ணப்பிக்கும் வேண்டுகோளை அறிக்கையாக அளித்து வருகின்றனர்.
    • தமிழகத்தில் தி.மு.க.,வின் ஆட்சி வந்த பின் கிறிஸ்துவர்களின் மதமாற்றம் தலைவிரித்தாடுகிறது.

    திருப்பூர் :

    இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த ஆண்டு முதல் தமிழகத்தின் மாவட்ட கலெக்டர்கள், கிறிஸ்துவ சர்ச், ஜெப கூடங்களை புனரமைக்க விண்ணப்பிக்கும் வேண்டு கோளை அறிக்கையாக அளித்து வருகின்றனர். மதசார்பற்ற அரசு, மக்களின் வரி பணத்தை மத வழிபாட்டு தலங்கள் சீரமைப்பு நிதியாக அளிப்பது கூடாது.

    இந்துகோவில்களை அரசு, தனது அதிகாரம் எனும் இரும்பு பிடிக்குள் வைத்து ஆட்டிப்ப டைத்து வருகிறது. பல்லாயிரம் கோவில்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இருந்தும் ஒரு கால பூஜை கூட இல்லாத நிலை இருக்கிறது.ஆனால் தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில், கோவில்களை சீரமைக்க அளிப்பதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை ஒன்றும் செய்யவில்லை. சர்ச்சுகளுக்கு மக்கள் வரிப்பணத்தை வாரி இறைக்க காரணம் கிறிஸ்துவ ஓட்டு வங்கி தான். தமிழகத்தில் தி.மு.க., வின் ஆட்சி வந்த பின் கிறிஸ்துவர்களின் மதமாற்றம் தலைவிரித்தாடுகிறது. சர்ச் புனரமைப்பு நிதி தருவது அரசியல் சாசன சட்டத்துக்கு புறம்பானது. இந்த அறிவிப்பை அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்,

    • கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த 4-ந் தேதி நடைபெற்றது.
    • கடந்த 10-ந் தேதி கடைகளின் மேற்கூரைகள் சரிந்து மூவருக்கு காயம் ஏற்பட்டது.

    பெருமாநல்லூர் :

    பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. பக்தர்கள் பலர் குண்டம் இறங்கும் போது தீக்காயம் அடைந்தனர்.10-ந் தேதி கடைகளின் மேற்கூரைகள் சரிந்து மூவருக்கு காயம் ஏற்பட்டது. இதைக்கண்டித்து இந்து முன்னணி அமைப்பு சார்பாக பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அறிவித்திருந்தது. இந்த நிலையில் கோவில் நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் இந்து முன்னணி அமைப்பினருடன் பேச்சுவார்த்தை கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    பேச்சுவார்த்தையில் ஆர்.எஸ்.எஸ்.கோட்ட பொறுப்பாளர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில செயலாளர் செந்தில்குமார், கோவில் நிர்வாகத்தின் சார்பில் செயல் அலுவலர் காளிமுத்து, கோவில் மிராசுதாரர்கள் மற்றும் கட்டளைதாரர்கள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே வருகிற 20-ந் தேதி இணை ஆணையர் அலுவலகம் முற்றுகையிடப்படும் என இந்து முன்னணியினர் அறிவித்துள்ளனர்.

    • பக்தர்கள் ஆண்டுதோறும் பாதயாத்திரையாக வந்து குண்டம் இறங்குவது வழக்கமாக நடக்கிறது.
    • 90 சதவீதம் பக்தர்கள் பூக்குழிக்குள் இறங்க அனுமதிக்கப்படவில்லை.

    பெருமாநல்லூர் :

    இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றது. திருப்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்ர்கள் ஆண்டுதோறும் பாதயாத்திரையாக வந்து குண்டம் இறங்குவது வழக்கமாக நடக்கிறது. இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையினரின் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தாலும், அலட்சியத்தாலும் குண்டம் திருவிழாவில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. குண்டம் இறங்குவதில் ஏராளமான பக்தர்கள் தீக்காயம் அடைந்தனர். இதன்காரணமாக 90 சதவீதம் பக்தர்கள் பூக்குழிக்குள் இறங்க அனுமதிக்கப்படவில்லை.

    விரதம் இருந்து குண்டம் இறங்க வந்த ஏராளமான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இது ஒருபுறம் இருக்க கோவிலுக்கு வெளியே தற்காலிக கடைகள் அமைக்க டெண்டர் விட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தன. இந்தநிலையில் கடைகள் அமைக்கப்பட்டு இருந்த ஒட்டுமொத்த இரும்பு கொட்டகையும் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு விஷயத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் இவ்வளவு அலட்சியம் காட்டியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இந்து அல்லாதவர்களுக்கு டெண்டர் கொடுக்கக்கூடாது. குண்டத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 16-ந் தேதி காலை 11 மணிக்கு பெருமாநல்லூர் நால்ரோட்டில் இந்து முன்னணி சார்பில் பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்துவது என இந்து முன்னணி முடிவு செய்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • வடமாநில தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பாக, கலந்தாய்வு கூட்டம் இந்து முன்னணி சார்பில் நடந்தது.
    • திருப்பூர் எப்போதும் வந்தாரை வாழ வைக்கும் நகரம், அச்சமின்றி தங்கி பணியாற்றலாம்.

    திருப்பூர் :

    திருப்பூரில் கடந்த மாதம் வடமாநிலத்தவர் குறித்தும் அவர்களது செயல்பாடுகள் குறித்து தேவையற்ற பிரச்சினை கிளப்பும் வகையிலான வீடியோக்கள் வதந்தியாக பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்த போலீ சார், இச்செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருப்பூருக்கு வந்த, டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேரில் ஆய்வு செய்து, வடமாநிலத்தவர் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தார். இம்மாதம் 5-ந் தேதி கோவை - பீகார் இடையே கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.இந்த சிறப்பு ரெயிலில் 1,350 வடமாநிலத்தவர் ஹோலி பண்டிகை கொண்டாட தங்கள் சொந்த மாநிலங்களுக்கு பயணமாகினர்.

    பண்டிகை கொண்டாட்டம் முடிந்ததுடன், திருப்பூரில் எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல், இயல்பு நிலை நிலவுதால், சொந்த மாநிலம் சென்ற பலரும் ெரயிலில் திருப்பூர் திரும்பி வருகின்றனர். திருப்பூர் வழியாக பயணிக்கும் பல்வேறு தினசரி, வாராந்திர ெரயில்களில் அதிக அளவில் வடமாநிலத்தவர் திருப்பூர் நோக்கி வந்து கொண்டுள்ளனர். தொழிலாளர்கள் மீண்டும் திரும்புவதால் திருப்பூர் தொழில் துறையினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இந்தநிலையில் திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பாக, கலந்தாய்வு கூட்டம் இந்து முன்னணி சார்பில் நடந்தது.மாநில அமைப்பாளர் பக்தன், மாநில பொதுசெயலாளர் கிஷோர்குமார் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்துக்கு தலைமை வகித்து, மாநில தலைவர் காடஸ்வரா சுப்ரமணியம் பேசுகையில், திருப்பூர் எப்போதும் வந்தாரை வாழ வைக்கும் நகரம். அச்சமின்றி தங்கி பணியாற்றலாம். சமூக விரோதிகள் மற்றும் வெளிநாட்டு சக்திகள் இந்தியாவை சீர்குலைக்கும் முயற்சிக்கு யாரும் இடமளிக்க கூடாது. பிரிவினைவாதிகளை கண்டு பயப்பட தேவையில்லை என்றார்.

    உத்திரபிரதேச இந்துமத் பொறுப்பாளர் சிவமூர்த்தி பேசுகையில், தமிழகத்தில் மொழி ஒரு பிரச்சினை இல்லை. தமிழர்கள் காசிக்கு வருகின்றனர். காசியில் இருந்து ராமேஸ்வரம் வந்து வணங்குகிறோம். எப்போதும் வடக்கு, தெற்கு என்ற பாகுபாடு வந்துவிடக்கூடாது என்றார்.

    • வழிபாட்டுக் கூடம் அமைப்பதாக சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.
    • கட்டடிம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காளி வேலம்பட்டி பகுதியில், பெரும்பான்மை மக்கள் வசித்து வரும் பகுதியில், மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் தொழிற்சாலை கட்ட அனுமதி வாங்கி, வழிபாட்டுக் கூடம் அமைப்பதாக, ஏற்கனவே சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இது குறித்து நேற்று இந்து முன்னணி மேற்கு மாவட்ட செயலாளர் லோகநாதன் தலைமையில் இந்து முன்னணியினர், பல்லடம் தாசில்தார் மற்றும் பல்லடம் போலீஸ் நிலையத்தில், அந்தக் கட்டடிம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.

    • சில ஆண்டுகளாக முன் விரோதம் இருந்து வருகிறது.
    • உடலில் பல இடங்களில் சரமாரியாக குத்தி விட்டு, அங்கிருந்து தலைமறைவானார்.

    திருப்பூர் :

    திருப்பூர், சாமுண்டிபுரம் சூரியகாந்தி வீதியை சேர்ந்தவர் சுரேந்திரன் (வயது 25). இந்து முன்னணி சாமுண்டிபுரம் பகுதி பொறுப்பாளர்.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராம்பிரபு, (26), என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக முன் விரோதம் இருந்து வருகிறது. இந்தநிலையில் சுரேந்திரன், நேற்று சாமுண்டிபுரம் செல்லம்மாள் காலனியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, போதையில் வந்த ராம்பிரபு, சுரேந்திரனை கத்தியால் உடலில் பல இடங்களில் சரமாரியாக குத்தி விட்டு, அங்கிருந்து தலைமறைவானார்.

    இதில் படுகாயம் அடைந்த சுரேந்திரன், திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான ராம்பிரபுவை தேடி வருகின்றனர்.

    ×