என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து முன்னணி"

    • மாநாட்டில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் மாதிரித் திருக்கோவில்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தன.
    • சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு ஒரே நேரத்தில் 'கந்த சஷ்டி கவசம்' பாடி சாதனை நிகழ்த்தினார்கள்.

    உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் வகையில் சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேல் யாத்திரை, பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்பட்டது.

    அந்த வரிசையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் ஜூன் 22-ந்தேதி அன்று முருக பக்தர்கள் மாநாடு பிரமாண்டாக நடைபெற்றது. மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே உள்ள அம்மா திடலில் நடைபெற்ற மாநாட்டில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் மாதிரித் திருக்கோவில்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தன.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் அ.தி.மு.க.வினர் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

    இந்த மாநாட்டை நடத்துவதற்கு தடை விதிக்கக்கோரி நீதிமன்றங்களையும் நாடினர். இருந்தும் மாநாடு நடத்துவதற்கு மதுரை ஐகோர்ட் பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. அதன்படி, முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் பாஸ் பெற்றிருக்க வேண்டும். ஆன்மிக மாநாட்டில் அரசியல் கலக்கும் நோக்கத்தில் செயல்படக்கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

    ஆனால் இந்த மாநாட்டில், திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் எனவும், அங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும். இந்து சமய அறநிலையத் துறையிடமிருந்து கோவில் நிர்வாகத்தை மீட்டு பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 முக்கியத் தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்த மாநாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா குறித்து வீடியோ ஒன்று ஒளிப்பரப்பட்டன.

     

    சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு ஒரே நேரத்தில் 'கந்த சஷ்டி கவசம்' பாடி சாதனை நிகழ்த்தினார்கள். தொடர்ந்து மாநாட்டு உறுதி மொழி எடுக்கப்பட்டு மாநாட்டு மேடையில் அமைக்கப்பட்ட அறுபடை வீடுகளின் முன் மகா தீபாராதனை நடத்தப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன.

    இதனை தொடர்ந்து மாநாட்டில் நீதிமன்ற உத்தரவை மீறி தீர்மானம் நிறைவேற்றம் மற்றும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டதாக கூறி கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் கட்சியின் கொள்கை தலைவர் குறித்து இழிவுபடுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட நேரம் அ.தி.மு.க.வினர் கண்டனம் தெரிவிக்காததும் சர்ச்சையானது.

     

    திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் எனவும், அங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தான் அண்மையில் நடைபெற்று வரும் திருப்பரங்குன்றம் சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டது என்றே கூறலாம்.

    இதற்கு முன்னதாக தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சர்வதேச முத்தமிழ் முருகன் மாநாடு 2024 ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் பழனியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இந்துக்களை ஏமாளியாக நினைத்து ஓட்டு வாங்கலாம் என நினைக்கின்றனர்.
    • இந்த நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து.

    திருப்பூர்:

    இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருப்பூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக்கூடாது என காவல் துறையை வைத்து தடுப்பது இந்துக்களுக்கு மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது. மனுதாரரையும் தடுத்து அரசு இரட்டை வேடம் போடுகிறது. தி.மு.க. இந்து விரோத அரசாக செயல்படுகிறது. 178 கோவில்களை தி.மு.க. அரசு இடித்துள்ளது. சிறுபான்மையினர் ஓட்டுக்காக இப்படி செய்கின்றனர். இந்துக்களை ஏமாளியாக நினைத்து ஓட்டு வாங்கலாம் என நினைக்கின்றனர். காவல் துறையும் கூலிக்காரர்கள் போல நடத்தப்படுகிறார்கள். இதனை கண்டித்து வருகிற 7-ந்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். சட்டத்துறை அமைச்சர் தவறான தகவல்களை சொல்கிறார்.

    இந்த நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து. ஆனால் மற்ற மதத்தை போல இந்துக்களை நடத்துவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்து முன்னணியினர், போலீசாரின் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
    • விநாயகர் சிலை ஊர்வலம் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலைக்கு வந்ததும், அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று மாவட்டம் முழுவதும் இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் 2234 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அனுமதி கேட்டிருந்தனர். இதற்கிடையே திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள், விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தி வருகின்றனர். ஆனால், இந்து அமைப்புகள் சார்பில் அங்கு விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.

    இதை ஏற்காத இந்து முன்னணியினர், போலீசாரின் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ், நகர் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதற்கிடையே இந்து முன்னணி நகர தலைவர் ஞானசுந்தரம் தலைமையில் மாவட்டத் துணைத் தலைவர்கள் ரவிச்சந்திரன், ராஜேந்திரன் மற்றும் இந்து முன்னணியினர் மேளதாளம் முழங்க வேனில் 3½ அடி விநாயகர் சிலையை குடைப்பாறைப்பட்டிக்கு கொண்டு வந்து அங்குள்ள காளியம்மன், பகவதியம்மன் கோவிலில் வைத்தனர். பின்னர் அந்த சிலையை கருப்பணசாமி கோவிலுக்கு கொண்டு வந்து வைத்து சிறப்பு பூஜை செய்தனர். அதையடுத்து கோவிலில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. இந்த விநாயகர் சிலை ஊர்வலம் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலைக்கு வந்ததும், அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர்.

    மேலும் தடையை மீறி ஊர்வலமாக கொண்டு வந்த விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட செயலாளர் வீரதிருமூர்த்தி மற்றும் 24 பெண்கள் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். அதேநேரம் இந்து முன்னணியினரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட விநாயகர் சிலையை போலீசார் சரக்கு வாகனத்தில் கொண்டு சென்று மேற்கு தாசில்தார் ஜெயப்பிரகாஷ் முன்னிலையில் கோட்டைக்குளத்தில் பூஜைகள் செய்து கரைத்தனர். இந்த சம்பவத்தால் குடைப்பாறைப்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் வினோத்ராஜ் நிருபர்களிடம் தெரிவிக்கையில், குடைப்பாறைப்பட்டியில் இந்துக்கள் தான் அதிகம் உள்ளனர். ஆனால் ஒரு விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து ஊர்வலமாக எடுத்துச்செல்ல போலீசார் அனுமதி மறுக்கின்றனர். ஊர்வலம் செல்பவர்களை கைது செய்கின்றனர். இந்த பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகமோ, போலீசாரோ நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்து முன்னணி சார்பில் தினமும் ஒரு விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து ஊர்வலமாக எடுத்துச்செல்வோம் என்றார்.

    • இந்து முன்னணி சார்பில் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது.
    • மாநாட்டில் நீதிமன்ற உத்தரவை மீறி மதவெறியைத் தூண்டும் வகையில் பேசப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

    மதுரை:

    இந்து முன்னணி சார்பில் கடந்த மாதம் 22-ந்தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு அனுமதி தொடர்பான மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ''மதவெறியைத் தூண்டும் அரசியல் உரைகள் கூடாது. இதனை முன்கூட்டியே காவல்துறை உறுதி செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் மாநாட்டில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என உத்தரவிட்டிருந்தது.

    இதையடுத்து நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் நீதிமன்ற உத்தரவை மீறி மதவெறியைத் தூண்டும் வகையில் பேசப்பட்டதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் அளித்திருந்தார்.

    இந்த நிலையில், மதுரை அண்ணாநகர் போலீசார், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்டோர் மீது மதம், இனம் குறித்து பேசி பகைமையை உருவாக்குதல், மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் பேசுதல், மத ரீதியாக புண்படுத்தி பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • நாங்களும் அந்த வழியைப் பின்பற்றி கொண்டு வருபவர்கள்தான்.
    • இருபெரும் தலைவர்களை விமர்சித்து 'முருக பக்தர்கள் மாநாடு' என்ற போர்வையில் இந்து முன்னணி வீடியோ வெளியிட்டது கடும் கண்டனத்திற்குரியது.

    சென்னை :

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பகுத்தறிவுச் சிந்தனைகளை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்று சமுதாயத்தில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார். தந்தை பெரியாரின் கொள்கைகளை, திராவிட சித்தாந்தத்தை முன்னிறுத்தி தேர்தலில் களம் கண்டு தமிழக அரசியலில் மிகப்பெரிய ஆட்சி மாற்றத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா.

    பேரறிஞர் அண்ணாவின் கொள்கைக்கு மாறான ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றபோது அதனை எதிர்த்து பேரறிஞர் அண்ணாவின் பெயரில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தொடங்கி, கட்சியின் கொடியில் அவரது உருவத்தைப் பொரித்து, தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாட்டில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியினை அமைத்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து, போறிஞர் அண்ணா காட்டிய வழியில் நான்கு முறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அமைத்தவர் புரட்சித் தலைவி. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழக மக்களால், மக்கள் சக்தியை தன்னகத்தே கொண்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி ஆகியோரால் மதிக்கப்பட்ட போற்றப்பட்ட தலைவர்கள் தந்தை பெரியார் மற்றும் போறிஞர் அண்ணா ஆகியோர். நாங்களும் அந்த வழியைப் பின்பற்றி கொண்டு வருபவர்கள்தான்.

    தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய புரட்சியை உருவாக்கிய தந்தை பெரியார் மற்றும் போறிஞர் அண்ணா ஆகிய இருபெரும் தலைவர்களை விமர்சித்து 'முருக பக்தர்கள் மாநாடு' என்ற போர்வையில் இந்து முன்னணி வீடியோ வெளியிட்டது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார். 

    • மாநாடு வளாகத்திற்கு பொதுமக்கள் செல்ல இரு நுழைவு வாயில்களும், வி.ஐ.பி., வாகனங்கள் செல்ல ஒரு நுழைவு வாயிலும் அமைக்கப்பட்டுள்ளது.
    • பாதயாத்திரை பக்தர்கள் வெளியூர்களில் இருந்தும் பஜனை பாடியவாறும், சஷ்டி கவசம் கோஷமாக படித்தும் மாநாட்டு திடலில் திரண்டனர்.

    மதுரை:

    உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் வகையில் சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் வேல் யாத்திரை, பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடாக திகழும் திருப்பரங்குன்றம் மலை மீதான சர்ச்சைக்கு பிறகு தமிழ்க்கடவுள் முருகனுக்கு முக்கியத்துவம் அளித்தும், இந்துக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வரிசையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் இன்று முருக பக்தர்கள் மாநாடு பிரமாண்டாக நடைபெறுகிறது. குன்றம் காக்க, கோவிலை காக்க என்ற தலைப்பில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு கடந்த மாதம் 28-ந்தேதி கால்கோள் விழாவுடன் மாநாட்டு பணிகள் தொடங்கின.

    இதையடுத்து கடந்த 8-ந்தேதி மதுரை வருகை தந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் 5 லட்சம் பக்தர்கள் குடும்பத்துடன் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இந்த மாநாட்டிற்காக மதுரை பாண்டிகோவில் ரிங்ரோடு வண்டியூர் டோல்கேட் அருகே அம்மா திடலில் 8 லட்சம் சதுரஅடி பரப்பளவுள்ள இடத்தில் பந்தல், மேடை அமைக்கும் பணிகள் நடந்தது. அதில் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகள் கண்காட்சி கடந்த 16-ந்தேதி தொடங்கியது.

    ஒரே இடத்தில் பக்தர்கள் அறுபடை வீடுகளையும் காணும் வகையில் முகப்பு தோற்றம், கோபுரங்கள், பிரகாரங்கள் மற்றும் மூலவர் சன்னதியில் கோவிலில் இருப்பதை போன்று முருகன் சிலை வேலுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதனை காண மதுரை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலும் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அவர்கள் பூஜை பொருட்களுடன் கோவிலுக்கு வருவதை போன்று வந்து அறுபடை முருகனை தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்களுக்கு முந்திரி, வேர்க்கடலை உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது.



    மாநாட்டை பிரபலப்படுத்தும் வகையில் புதுச்சேரி மந்திரி நமச்சிவாயம், கவர்னர்கள் ஆர்.என்.ரவி (தமிழ்நாடு), கைலாஷ்நாதன் (புதுச்சேரி), சி.பி.ராதாகிருஷ்ணன் (மகாராஷ்டிரா), த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி உள்ளிட்டோர் வந்து தரிசனம் செய்தனர். அதன் மூலம் அறுபடை வீடுகள் கண்காட்சியை கடந்த 6 நாட்களில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டு சென்றுள்ளனர்.

    இதையடுத்து முருக பக்தர்கள் மாநாடு இன்று நடைபெறுகிறது. மாநாடு நடைபெறும் பாண்டி கோவில் அம்மா திடலில் முருகனின் பிரமாண்ட தோற்றத்துடன் நுழைவு வாயில், திருப்பரங்குன்றம் மலையையும், வேல் ஏந்தியவாறு முருகப்பெருமான் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பது போலவும் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் சதுர அடி பரப்பில் 5 லட்சம் பக்தர்கள் அமரும் வகையில் தரை விரிப்புகள் போடப்பட்டுள்ளன. மேலும் முதியோர்கள், பெண்கள், குழந்தைகளுடன் வருபவர்கள் அமர 1 லட்சம் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த 2 நாட்களாகவே வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்காணக்கானோர் மதுரை வந்து சேர்ந்தனர். அவர்கள் மதுரையில் பல்வேறு விடுதிகளில் தங்கி மதுரையை சுற்றியுள்ள கோவில்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டனர். இன்று காலை மாநாட்டு திடலில் பக்தர்கள் குவிந்தனர். அதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இந்து முன்னணியினர் அழைப்பு விடுத்ததின் பேரில் முருக பக்தர்கள் மட்டுமின்றி சாய் பாபா பக்தர்கள், ஓம்சக்தி வழிபாட்டு குழுவினர், ஐயப்ப பக்தர்கள் உள்ளிட் டோர் தங்கள் குடும்பத்துடன் மாநாட்டுக்கு வருகை தந்தனர். இதன் மூலம் 5 பக்தர்கள் மாநாட்டுக்கு வருகை தந்தனர்.

    குறிப்பாக முருக பக்தர்கள் ஏராளமானோர் மாநாட்டு கால்கோள் விழா நடந்த நாளில் இருந்து விரதம் மேற்கொண்டு இதில் கலந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், மஞ்சள் ஆடை, மாலை அணிந்து ஆண், பெண் பக்தர்கள் கையில் வேல் ஏந்தியும், பால் குடங்களை தலையில் சுமந்தும் மாநாட்டுக்கு ஊர்வலமாக வந்தனர். அதேபோல் பாதயாத்திரை பக்தர்கள் வெளியூர்களில் இருந்தும் பஜனை பாடியவாறும், சஷ்டி கவசம் கோஷமாக படித்தும் மாநாட்டு திடலில் திரண்டனர்.



    அனைத்து பக்தர்களும் பிற்பகல் 3 மணிக்குள் மாநாட்டு திடலுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பக்தி கோஷங்கள் முழங்கவும், முருகன் திருப்புகழ் பாடியும் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. மாலை 4 மணிக்கு தமிழர்களின் பாரம்பரியமிக்க கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதற்கான சிறிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு ஆதீனங்கள், மடாதிபதிகள், இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்புகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிறப்புரையாற்றுகிறார்கள்.

    மாலை 6 மணிக்கு ஒரே நேரத்தில் 5 லட்சம் பக்தர்கள் ஒன்றாக இணைந்து கந்த சஷ்டி கவசம் பாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக மாநாட்டு வளாகம் முழுவதும் 18 பிரமாண்ட எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டுள்ளது. அந்த திரையில் கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் வரும் வகையிலும், அதனை பார்த்தும், பக்தர்களுக்கு வழங்கப்படும் கையடக்க சஷ்டி கவசம் புத்தகம் வாயிலாகவும் படிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது உலகளவில் கின்னஸ் சாதனை நிகழ்ச்சியாக பதிவு செய்யப்படுகிறது. இதில் நேரில் கலந்துகொள்ள இயலாதவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து மாலை 7 மணிக்கு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியும், தீவிர முருக பக்தருமான பவன்கல்யாண் சிறப்புரையாற்றுகிறார். இதற்காக அவர் ஆந்திராவில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு மாநாட்டில் கலந்துகொள்கிறார்.

    மாநாட்டில் இரவு 7.30 மணிக்கு தமிழகத்தில் உள்ள அறுபடை முருகன் உள்ளிட்ட கோவில்களை பாதுகாக்க தமிழக அரசை வலியுறுத்துவது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முருகன் மாநாடுகளை நடத்துவது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. இரவு 8 மணிக்கு மாநாடு நிறைவு பெறுகிறது.

    முன்னதாக மாநாட்டுக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள், பாஸ் பெற அவசியம் இல்லை என்று கோர்ட்டு உத்தரவிட்டதால் வெளியூர்களில் இருந்து மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப வாகனங்களை பார்க்கிங் செய்யவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    வண்டியூர் டோல்கேட் அருகே பிரதான சாலையில் மாநாடு வளாகம் அமைந்துள்ளதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாநாட்டிற்கு வரும் முக்கிய விருந்தினர்களுக்கு சிறப்பு வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாநாடு வளாகத்திற்கு பொதுமக்கள் செல்ல இரு நுழைவு வாயில்களும், வி.ஐ.பி., வாகனங்கள் செல்ல ஒரு நுழைவு வாயிலும் அமைக்கப்பட்டுள்ளது.

    வாகனங்களை ஒருங்கிணைக்கவும், பக்தர்களை வழிநடத்தவும் மாநாடு நடைபெறும் பகுதியில் மட்டும் 300 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு கூட்டத்திற்கு ஏற்ப பக்தர்கள் பிரித்து விடப்படுவார்கள். மாற்றுத்திறனாளிகள் மாநாட்டு திடலுக்குள் சிரமமின்றி செல்ல சக்கர நாற்காலிகளும், தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலுாட்ட தனி அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநாட்டு திடலில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில், 1,000 லிட்டர் தண்ணீர் டேங்குகள், தற்காலிக தண்ணீர் பந்தல்கள், 200 கழிப்பறைகள் அமைக்கட்டுள்ளன.

    மாநாட்டையொட்டி மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் ஐந்து துணை கமிஷனர்கள், 15 உதவி கமிஷனர்கள், 54 இன்ஸ்பெக்டர்கள் உட்பட மொத்தம் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேர் வரை பங்கேற்ப இருப்பதாக தெரிகிறது.
    • இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

    மதுரையில் இந்து முன்னணி சார்பில் நாளை பாண்டிக்கோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து அரசியல் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், மடாதிபதிகள், ஆதீனங்கள் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.

    சிறப்பு விருந்தினர்களாக, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகின்றனர். இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேர் வரை பங்கேற்க இருப்பதாக தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

    இதனிடையே நாளை மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வேகமாக பரவியது. இந்த நிலையில் முருக பக்தர்கள் மாநாட்டில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பதாக வெளியான செய்தி உண்மை அல்ல என ரஜினிகாந்த் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சினிமா பி.ஆர்.ஓ. ரியாஸ் அகமது எக்ஸ் தளத்தில், "ஜூன் 22ஆம் தேதி மதுரையில் நடைபெற இருக்கும் முருகன் பக்தர்கள் மாநாட்டில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார் என்று உலாவரும் செய்தி பொய்யானது. தலைவர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள போவதில்லை" என கூறியுள்ளார்.

    • மாநாட்டிற்கு பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
    • தமிழகம் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பலர் கலந்து கொள்கின்றனர்.

    சுவாமிமலை:

    கும்பகோணத்தில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மதுரையில் வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு மக்கள் வரக்கூடாது என தமிழக அரசு, காவல்துறை மூலம் மிரட்டுகிறது. வழிபாடு பாதயாத்திரை குழுக்களை போலீசார் செல்லக்கூடாது என கூறியுள்ளனர். அத்தனை தடைகளையும் மீறி, இந்த மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டும். இந்த மாநாட்டிற்கு பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த அரசியல் சார்பற்ற ஆன்மீக மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, அமைச்சர்கள் சேகர்பாபு, துரைமுருகனிடம் நேரில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். மேலும், தமிழகம் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பலர் கலந்து கொள்கின்றனர்.

    இதில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பங்கேற்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். நாம் இந்துக்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும். இந்த மாநாட்டில் பா.ஜ.க.வினரும் பங்கேற்கிறார்கள். இதில் அனைத்து அரசியல் கட்சியும் கலந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரையில் வருகிற 22-ந் தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது.
    • முறையான ஆவணங்களை சமர்ப்பித்து உரிய வாகன அனுமதி சீட்டினை பெற்று கலந்து கொள்ளலாம்.

    மதுரை:

    மதுரையில் நடக்கும், முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாகனங்களில் வருபவர்களுக்கு மாநகர போலீசார் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து மதுரை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரையில் வருகிற 22-ந் தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு நடத்துவதற்கு மதுரை ஐகோர்ட்டு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. மாநகர் வண்டியூர் சுங்கச்சாவடி அருகே இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது.

    அதன்படி, வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை அடையாளம் காணும் பொருட்டு ஒவ்வொரு மண்டலத்தில் இருந்து வரும் வாகனத்திற்கும், தனித்தனி வண்ணங்களில் வாகன அனுமதி சீட்டு, அந்தந்த மாவட்ட, மாநகர போலீசார் மூலம் வழங்கப்பட உள்ளது. முறையான ஆவணங்களை சமர்ப்பித்து உரிய வாகன அனுமதி சீட்டினை பெற்று கலந்து கொள்ளலாம்.

    மாநாட்டில் பங்கேற்பவர்கள் அந்தந்த துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் விண்ணப்பித்து, வாகன அனுமதி சீட்டை பெறவேண்டும். தெற்கு மாவட்டங்களான மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு பச்சை நிற அனுமதி சீட்டும், வடக்கு மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ஆவடி, தாம்பரம், சென்னையிலிருந்து வரும் வாகனங்களுக்கு வெள்ளை நிற அனுமதி சீட்டும் வழங்கப்பட உள்ளன.

    மத்திய மாவட்டங்களான திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சியில் இருந்து வரும் வாகனங்களுக்கு நீல நிற அனுமதி சீட்டும், மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, சேலம், திருப்பூரில் இருந்து வரும் வாகனங்களுக்கு மஞ்சள் நிற அனுமதி சீட்டும், பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு சிவப்பு நிற அனுமதி சீட்டும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனுமதி சீட்டு உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

    மேலும், வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வரும் வாகனங்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்ட வழியாகவே மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்து, மாநாடு முடிந்த பிறகு அதே வழியிலேயே திரும்பிச்செல்ல வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜெகதீசன் கடந்த 20 ஆண்டுகளாக இந்து முன்னணியில் செயல்பட்டு வருகிறார்.
    • கீதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் கீதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்ள ஒரு மாடி வீட்டில் மாடியில் வாடகைக்கு குடியிருந்து வருபவர் ஜெகதீசன் (வயது 40). இவரது மனைவி கீதா (36). இவர்களுக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விட்டிருப்பதால் குழந்தைகள் இருவரும் பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளனர்.

    ஜெகதீசன் கடந்த 20 ஆண்டுகளாக இந்து முன்னணியில் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 7ஆண்டுகளாக இந்து முன்னணி நாமக்கல் மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறார். அவர் குடியிருக்கும் வீட்டின் மாடியில் அவரது இந்து முன்னணி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று கணவன், மனைவி மற்றும் குழந்தைகளுடன் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இரவு சுமார் 12 மணி அளவில் 2 மர்ம நபர்கள் வீட்டுக்கு வந்து கதவை தட்டி உள்ளனர்.

    இவர்கள் குடியிருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றுள்ளதால் அவர்கள் தான் திரும்பி வந்து சாவி வாங்குவதற்காக கதவை தட்டுகிறார்கள் என நினைத்து கீதா தனது வீட்டின் கதவை திறந்தார்.

    அப்போது வெளியே நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த கத்தியால் திடீரென கீதாவை பிடித்து கழுத்தின் குரல் வளையை அறுத்தனர். மேலும் அவரை சரமாரியாக வெட்டினார்கள்.

    இதில் கீழே சரிந்து கீதா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் துடிதுடித்துக் கொண்டிருந்தார். அப்போது சத்தம் கேட்டு அங்கு வந்த கணவர் ஜெகதீசனையும் மர்ம கும்பல் வெட்டினர். தலை, கை என 3 இடங்களில் சரமாரியாக வெட்டினர்.

    சுதாரித்து கொண்ட ஜெகதீசன் வீட்டின் கதவை கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டார். மர்ம நபர்கள் தொடர்ந்து கதவை தட்டினர். ஆனால் கதவை திறக்கவில்லை. பின்னர் வலி தாங்க முடியாமல் ஜெகதீசன் சத்தம் போட்டு உள்ளார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அப்போது மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கணவன்- மனைவி இருவரையும் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு கீதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் கீதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஜெகதீசனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    • மாவட்டம் முழுவதும் 5 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்க திட்டம்
    • குமரி மாவட்டத்தில் 1982-ம் ஆண்டு நடைபெற்ற மண்டைக்காடு கலவரத்திற்கு பின்னர் நீதிபதி வேணுகோபால் கமிஷன் அமைக்கப்பட்டது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் 1982-ம் ஆண்டு நடைபெற்ற மண்டைக்காடு கலவரத்திற்கு பின்னர் அமைக்கப்பட்ட நீதிபதி வேணுகோபால் கமிஷன் பரிந்துரைகளின் படி புதிதாக ஆலயங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

    ஆனால் தற்போது அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து குமரி மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று நடந்தது.

    நாகர்கோவில் நாகராஜா கோவில் முன்பு நடந்த கையெழுத்து இயக்கத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், நிர்வாகிகள் கண்ணன், சுப்பிரமணியன், பிரவீன், சுரேஷ் பாபு, தியாகராஜன், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாவட்டம் முழுவதும் 5 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்க திட்டமிடப்பட்டிருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • தமிழகத்தில் கோவில்களில் இருந்து வரும் வருமானம் முழுவதையும் அரசு எடுத்துக் கொள்கிறது.
    • விளக்குகள் கூட ஏற்றமுடியாத பல்லாயிரம் கோவில்கள் அறநிலையத் துறையின் கீழ் உள்ளன.

    திருப்பூர்:

    காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்திலிருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடம் 600 ஆண்டுகள் பாரம்பரியம் உடையது. தமிழ் மொழியை வளா்த்ததிலும் ஆன்மிகத்தை செம்மைப்படுத்தியதிலும் தொண்டை மண்டல ஆதீனத்தின் பங்கு அளப்பரியதாகும்.

    தமிழகத்தில் கோவில்களில் இருந்து வரும் வருமானம் முழுவதையும் அரசு எடுத்துக் கொள்கிறது. ஆனால் தரிசனத்துக்காக வரும் பக்தா்களின் நலனின் அரசு துளியும் அக்கறை காட்டியது இல்லை. சிதிலமடைந்த கோவில்களை சீரமைப்பதில்லை. விளக்குகள் கூட ஏற்றமுடியாத பல்லாயிரம் கோவில்கள் அற நிலையத் துறையின் கீழ் உள்ளன. இந்தக்கோவில்கள் மீது எல்லாம் அக்கறை காட்டாமல் அலட்சியம் காட்டும் அறநிலையத் துறை ஆதீனத்தின் மீது பாா்வையை திருப்புவதன் நோக்கம் என்ன?

    காஞ்சிபுரம் தொண்டை மண்டலத்தின் 233வது ஆதீனமாக திருச்சிற்றம்பலம் ஞானதேசிக பரமாச்சாரியாா் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறாா். இந்நிலையில் அறநிலையத் துறை அமைச்சரின் உறவினா் பல்லாயிரம் கோடி சொத்துள்ள ஆதீன மடத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் அவருக்கு தொல்லை கொடுத்து வந்த சூழலில் உடல் நலத்தைக் காரணம் காட்டி அவா் பதவியில் இருந்து விலகியுள்ளாா்.

    இதைத்தொடா்ந்து காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்துக்கு செயல் அலுவலரை நியமித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். ஆகவே தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விஷயத்தில் தலையிட்டு ஆதீனத்தை ஆக்கிரமிக்கும் இந்து சமய அறநிலைத் துறை செயல்களை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

    ×