search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா ஆஸ்திரேலியா"

    • 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்களை குவித்தது.

    உலகக் கோப்பை 2023 தொடரை தொர்ந்து ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னணியில் உள்ளது.

    அந்த வகையில், திருவனந்தபுரத்தில் இன்று (நவம்பர் 26) நடைபெறும் 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் போட்டியை போன்ற இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

    இந்திய அணியை பொருத்தவரை கடந்த போட்டியில் களமிறங்கிய வீரர்களே இன்றும் களம் கண்டனர். ஆஸ்திரேலிய அணியில் பெரன்டோர்ஃப்க்கு மாற்றாக ஆடம் ஜாம்பாவும், ஹார்டிக்கு மாற்றாக மேக்ஸ்வெல் களமிறங்கினர்.

    முதலாவதாக களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருத்துராஜ் ஜோடியில், யாஷஸ்வி 25 பந்துகளில் அரை சதம் அடித்து 53 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    தொடரந்து, ருத்துராஜ்- இஷான் கிஷான் ஜோடி களத்தில் இருந்தது. இதில், இஷான் கிஷான் அரை சதம் அடித்து 52 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து, சூர்ய குமார் யாதவ் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    18 ஓவரில் ருத்துராஜூடன் ரிங்கு சிங் களத்தில் இருந்தார். இதில், ருத்துராஜ் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து, ரங்கு சிங்குடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இதில், ரிங்கு சிங் 31 ரன்களும், திலக் வர்மா 7 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்களை குவித்தது.

    இதன்மூலம், 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

    • சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் முதல் போட்டியில் அரைசதம்.
    • ரிங்கு சிங் நெருக்கடியை எளிதாக சமாளித்து போட்டியை முடித்து வைத்தார்.

    இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஆஸ்திரேலியாவை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. 2-வது போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

    முதல் போட்டியில் ஆஸ்திரேலியா சிறப்பாக பேட்டிங் செய்த போதிலும், இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் (42 பந்தில் 80 ரன்), இஷான் கிஷன் (39 பந்தில் 58 ரன்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு முக்கிய காரணமாக இருந்தனர். ரிங்கு சிங் இறுதியில் 14 பந்தில் 22 ரன்கள் எடுத்து பினிஷராக செயல்பட்டார்.

    தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 8 பந்தில் 21 ரன் எடுத்த போதிலும், ருதுராஜ் கெய்க்வாட் ரன்ஏதும் எடுக்காமல் ரன்அவுட் ஆனார். இந்த ஜோடி குறைந்தபட்சம் பவர்பிளேயான முதல் ஆறு ஓவர்கள் விளையாடினால் இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயரும். திலக் வர்மா 10 பந்தில் 12 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார். இந்த ஆறு பேட்ஸ்மேன்களில் மூன்று பேருக்கு கிளிக் ஆனால் இந்தியாவின் பேட்டிங் டாப்பாக இருக்கும்.

    பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், பிரசித், முகேஷ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். முகேஷ் குமார் மட்டுமே குறைவான ரன்கள் (ஓவரில் 29 ரன்கள்) விட்டுக்கொடுத்தார். அதேபோல் அக்சார் பட்டேல் 32 ரன்கள் விட்டுக்கொடுத்தார். மற்ற பந்து வீச்சாளர்கள் கவனம் செலுத்துவது அவசியம்.

    ஆஸ்திரேலியாவை பொறுத்தரை பேட்டிங்கில் ஸ்மித், மேத்யூ ஷார்ட், இங்லிஸ், ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், வடே என உள்ளனர். பந்து வீச்சில்தான் அந்த அணிக்கும் சறுக்கல் ஏற்பட்டது. இதனால் பந்து வீச்சில் கவனம் செலுத்தும்.

    இரு அணிகளில் சிறப்பாக பந்து வீசும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.

    • கடைசி கட்ட நெருக்கடியை சிறப்பாக எதிர்கொண்டு ரிங்கு சிங் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தார்.
    • இவர் கொல்கத்தா அணியில் விளையாடும்போது தொடர்ந்து நான்கு சிக்ஸ் விளாசியவர்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி கடந்த 23-ந்தேதி (நேற்று முன்தினம்) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 207 ரன்கள் குவித்தது.

    பின்னர் இந்தியா 19.5 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. சூர்யகுமார் அவுட்டானதும் கடைசி நேரத்தில் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அப்போது ரிங்கு சிங் களத்தில் இருந்தார். கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை ரிங்கு சிங் ஆஃப்சைடு பவுண்டரிக்கு விரட்டினர். அடுத்த பந்தில் ஒரு ரன் கிடைத்தது. அதன்பின் அடுத்த மூன்று பந்துகளில் இந்தியா விக்கெடடுகளை இழந்தது. இதில் இரண்டு ரன்அவுட் ஆகும்.

    கடைசி பந்தை ரிங்கு சிங் சந்தித்தார். இக்கட்டான நேரத்தில் அவர் நெருக்கடிக்கு உள்ளாகவில்லை. நிதானமாக பந்தை எதிர்கொண்டு லாங்-ஆன் திசையில் சிக்ஸ் விரட்டினார். இந்த பந்து நோ-பால் என அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியா வெற்றி பெற்றது. இருந்தபோதிலும், இக்கட்டான நிலையில் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தது அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது. ரிங்கு சிங்கிடம் திறமையும் நிதானமும் இருக்கிறது என விமர்சகர்கள் பாராட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தல தோனியிடம் இருந்துதான், இக்கட்டான நிலையை எப்படி எதிர்ககொள்ள வேண்டும் என்று கற்றுக் கொண்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரிங்கு சிங் கூறியதாவது:-

    என்னுடைய நிதானம் ரகசியம், எம்.எஸ். தோனியிடம் கலந்துரையாடல் செய்ததன் மூலம் கிடைத்ததுதான். அவரிடம் நான் உரையாடியபோது, முடிந்த அளவிற்கு நிதானமாக இருக்க முயற்சிக்க வேண்டும். அதேபோல், கடைசி நேரத்தில் பந்து வீச்சாளர்களுக்கு நேராக மிட்ஆன்- மிட்ஆஃப் திசையில் ஷாட் செலக்சன் இருக்க வேண்டும் என்றார். அந்த வகையில்தான் இந்த போட்டியில் நிதானத்தை கடைபிடிக்க முயற்சி செய்தேன்.

    இவ்வாறு எம்.எஸ். தோனி அறிவுரை வழங்கியது குறித்து ரிங்கி சிங் தெரிவித்துள்ளார். ஆனால், தோனி எப்போது அறிவுரை வழங்கினார் என்பதை ரிங்கு சிங் தெரிவிக்கவில்லை.

    இதற்கிடையே கடைசி பந்து சிக்ஸ் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பது குறித்து கவலை இல்லை. அணியின் வெற்றிதான் முக்கியம் என்றார். 

    இதுகுறித்து ரிங்கி சிங் கூறுகையில் "நான் சிக்ஸ் அடித்த பந்து நோ-பால் என்று கருதவில்லை. வெளியில் இருந்து அக்சார் பட்டேல்தான் நோ-பால் என்றார். அதன்பின்தான் நோ-பால் என்று எனக்குத் தெரியும். வெற்றிக்கான சிக்ஸ் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வில்லை என்பது பெரிய விசயம் அல்ல. நாங்கள் போட்டியில் வெற்றி பெற்றோம். இதுதான் விசயம்" என்று ரிங்கு சிங் தெரிவித்தார்.

    ஐபிஎல் போட்டியில் கொல்கததா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரிங்கு சிங், தொடர்ந்து நான்கு சிக்ஸ் விளாசினார். அப்போது தேர்வாளர்கள் கண்ணில் பட்டு இந்திய அணிக்கு தேர்வானார்.

    • கடைசி கட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்தினர்.
    • மைதானத்தில் ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்தனர்.

    ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டித்தொடரில் விளையாடுகிறது.

    விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது. ஜோஷ் இங்லிஸ் சதம் (110) அடித்தார். பின்னர் விளையாடிய இந்தியா 19.5 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 209 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

    சூர்யகுமார் யாதவ் 80 ரன்னும், இஷான்கிஷன் 58 ரன்னும் எடுத்தனர். கடைசி பந்தில் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் ரிங்கு சிங் சிக்சர் அடித்தார். ஆனால் அது 'நோ-பால்' ஆக வீசப்பட்டதால் சிக்சர் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை.

    வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-

    மைதானத்தில் வீரர்கள் திறமையை வெளிப்படுத்திய விதத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நாங்கள் நெருக்கடியில் இருந்தோம். ஆனால் அதில் இருந்து ஒவ்வொரும் மீண்டு வெற்றி பெற்றது சிறப்பானது.

    கேப்டன் பொறுப்பு என்பது ஒரு பெருமையான தருணம். இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு எல்லோருக்கும் இருக்கும். இன்று நான் கேப்டனாக அறிமுகமாகி விளையாடியது மிகப்பெரிய தருணமாக நினைக்கிறேன்.

    இந்த போட்டியின் போது 2-வது பாதியில் பனி இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் பனி தாக்கம் இல்லை. இந்த மைதானம் சிறியது என்று தெரியும். இதனால் 230 ரன்கள் இலக்கு வரும் என்று நினைத்தேன்.

    ஆனால் கடைசி கட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்தினர். 16-வது ஓவருக்கு பிறகு மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் ஆட்டத்தை எங்கள் பக்கம் கொண்டு வந்தனர். இது அற்புதமானது.

    இஷான் கிஷனிடம், இலக்கை பற்றி நினைக்காமல் உங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள். 10 ஓவர்களுக்கு பிறகு சேசிங் செய்ய வேண்டிய ரன்கள் எவ்வளவு என்று பார்த்து கொள்ளலாம் என்று கூறினேன்.

    இதனால் ரன் இலக்கை தொட முடிந்தது. ரிங்கு சிங் அருமையாக போட்டியை முடித்து வைத்தார். நான் கேப்டன்சியை டிரஸ்சிங் ரூமில் விட்டு விட்டேன். நான் 10 அல்லது 40 பந்துகளில் பேட்டிங் செய்தாலும் ரசித்து விளையாட முயற்சித்தேன். மைதானத்தில் ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இரு அணிகள் மோதும் 2-வது இருபது ஓவர் போட்டி 26-ந்தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

    • ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
    • சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட அணி களம் இறங்க உள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன். கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர், அணியில் சேர்க்கப்பட்டதைவிட, புறக்கணிக்கப்பட்ட சம்பவம்தான் அதிகம்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடருக்கான அணியில் சீனியர் வீரர்கள் இடம் பெறாத நிலையில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    சூர்யகுமார் யாதவ் கேப்டனான நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சஞ்சு சாம்சனை அணியில் எடுக்காதது குறித்து ரசிகர் ஒருவர், அவரின் சாதனையை குறிப்பிட்டு எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இதை ஷேர் செய்து, அதற்கு பதில் அளித்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர்" இது உண்மையிலேயே விவரிக்க முடியாதது. சஞ்சு சாம்சனை அணியில் மட்டும் எடுத்திருக்கக் கூடாது. இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்திருக்க வேண்டும். சூர்யகுமாரை விட கேரள அணிக்கு, ராஜஸ்தான் அணிக்கு அவர் கேப்டனாக பணியாற்றி அனுபவம் அதிகம்.

    கிரிக்கெட்டை விரும்பும் மக்களுக்கு தேர்வுக்குழு இதுகுறித்து விளக்கம் அளிப்பது அவசியம். மேலும், சாஹலை ஏன் தேர்வு செய்யவில்லை?" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் சூர்யகுமார் யாதவ் கேப்டன்.
    • 2021-ல் இருந்து இந்திய டி20 அணியின் 9-வது கேப்டன் இவராவார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை வீரர்கள், ரசிகர்கள் மட்டுமல்ல, ஏறக்குறைய கிரிக்கெட் தெரிந்த அனைத்து தரப்பு மக்களாலும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

    இதற்கிடையே இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று நடைபெற இருக்கிறது. இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2021-ம் ஆண்டில் இருந்து இந்தியா டி20 அணியின் 9-வது கேப்டன் இவராவார்.

    முதன்முறையாக கேப்டனாக பொறுப்பேற்றுள்ள சூர்யகுமார் யாதவ், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். முதன்முறையாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமான செய்தியாளர்கள் கேள்வி கேட்க அமர்ந்திருப்பார்கள் என உற்சாகமாக வந்தார்.

    ஆனால், அங்கே இரண்டு செய்தியாளர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர். இது அவருக்கும், பிசிசிஐ-க்கும் நிச்சயமாக தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும்.

    ஏறக்குறைய இந்தியாவின் "பி" அணி என்று நினைத்து செய்தியாளர்கள் கலந்து கொள்ளவில்லையா? அல்லது தோல்வியின் விரக்தியில் கலந்து கொள்ளவில்லையா? என்பது தெரியவில்லை.

    எதுவாக இருந்தாலும், முதன்முறையாக இந்திய அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சூர்யகுமார் யாதவுக்கு இது ஏமாற்றதை அளித்திருக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 240 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
    • ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி சாம்பியன் பட்டம் வென்றது.

    50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. இதில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர் முழுவதும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை, இந்திய ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

    பல ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். பெரும்பாலான ரசிகர்கள், இந்திய அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்லவே முடியாதா?... என தலையில் அடித்துக் கொண்டனர். இதற்கிடையே இரண்டு ரசிகர்கள் விபரீத முடிவை எடுத்துள்ளனர்.

    ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் பகுதியை சேர்ந்த தேவ் ராஜன் தாஸ் (23) என்ற ரசிகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதேபோல் மேற்கு வங்காள மாநிலம் பெங்குரா பகுதியை சேர்ந்த ராகுல் லோகர் (23) என்ற ரசிகரும் தற்கொலை செய்து கொண்டார். இவர் போட்டி முடிந்த அன்று இரவு தனது அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தியாவின் தோல்வி இரண்டு இளம் உயிர்களை பறித்துள்ளது.

    ரசிகர்கள் விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும். விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம். அதை உயிர்ப்போகும் அளவிற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையிலும், இதுபோன்ற விபரீத முடிவு எடுக்கப்பட்டு வருவதுதான் துரதிருஷ்டவசமானது. வேதனைக்குரியது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது.
    • விசாகப்பட்டினத்தில் நாளைமறுதினம் முதல் போட்டி நடைபெற இருக்கிறது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளைமறுதினம் (நவம்பர் 23) முதல் நடைபெற இருக்கிறது.

    இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அணி விவரம்:-

    1. சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), 2. ருதுராஜ் கெய்க்வாட் (துணைக் கேப்டன்), 3. இஷான் கிஷன், 4. ஜெய்ஸ்வால், 5. திலக் வர்மா, 6. ரிங்கி சிங், 7. ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), 8. வாஷிங்டன் சுந்தர், 9. அக்சார் பட்டேல், 10. ஷிவம் டுபே, 11. ரவி பிஷ்னோய், 12. அர்ஷ்தீப்சிங், 13. பிரசித் கிருஷ்ணா, 14. அவேஷ் கான், 15. முகேஷ் குமார்.

    ஷ்ரேயாஸ் அய்யர் கடைசி இரண்டு போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    • முதலில் பேட்டிங் செய்த இந்தியா 240 ரன்கள் சேர்த்தது.
    • ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    இத்தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி, இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணிக்கு தலைவர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

    அந்த வகையில் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் "இந்திய அணி வீரர்களே, நீங்கள் போட்டியில் சிறப்பாக விளையாடினீர்கள். வெற்றியோ அல்லது தோல்வியோ, நாங்கள் உங்களை  நேசிக்கிறோம். அடுத்ததை வெல்வோம். உலகக் கோப்பை வெற்றிக்கு தகுதியான ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • சுப்மன் கில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம்.
    • முகமது சிராஜ் புதுப்பந்தில் பும்ராவுடன் பந்து வீச வாய்ப்பு கொடுக்கவில்லை.

    உலகக் கோப்பை தொடரில் தோல்வியை சந்திக்காமல் வந்த இந்தியா, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. அதற்கான முக்கிய காரணங்களை பார்ப்போம்.

    1. சுப்மன் கில் சொற்ப ரன்களில் அவுட்

    இந்த தொடரில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாட, அவருக்கு துணையாக சுப்மன் கில் சிறப்பாக விளையாடி வந்தார். ஆனால் ஸ்டார்க் பந்தில் தேவையில்லாமல் ஆஃப் சைடு வந்த பந்தை லெக்சைடு தூக்கி அடிக்க முயற்சி செய்து, மிட்-ஆன் திசையில் கேட்ச் கொடுத்தார். அவர் 5-வது ஓவரில் ஆட்டமிழக்க, விராட் கோலி உடனடியாக வர வேண்டிய நிலை ஏற்பட்டது. ரோகித் சர்மா 10-வது ஓவரில் ஆட்டமிழக்க ஷ்ரேயாஸ் அய்யரும் விரைவாக களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சுப்மன் கில் சுமார் 10 ஓவரை வரையாவது நிலைத்து நின்றிருந்தால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்திருக்கும்.

    2. மிடில் ஓவரில் மந்தமான ஸ்கோர்

    10.3-வது ஓவரில் விராட் கோலியுடன் கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தார். இருவரும் மிகவும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 11-வது ஓவரில் இருந்து 20 ஓவர் வரை இந்தியாவுக்கு 35 ரன்கள், 21-வது ஓவரில் இருந்து 30-வது ஓவர் வரை 37 ரன்கள் மட்டுமே கிடைத்தது. ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு 13 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் மட்டுமே கிடைத்தது. 10-வது ஓவருக்குப் பிறகு 4 பவுண்டரிகள் மட்டுமே கிடைத்தது.

    3  சூர்யகுமார் யாதவை பின்னால் வைத்தது

    விராட் கோலி 63 பந்தில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கும்போது, சூர்யகுமாருக்கு பதிலாக ஜடேஜா களம் இறக்கப்பட்டார். ஜடேஜாவால் 22 பந்தில் 9 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. ஒருவேளை கே.எல். ராகுல் உடன் ஜோடி சேர்ந்து ஒரு பார்ட்னர்ஷிப் கொடுத்திருந்தால் நிலைமை மாறியிருக்கலாம். அடுத்தடுத்து விக்கெட் இழந்ததால், அவரால் அதிரடியாக ஆட முடியாத நிலை ஏற்பட்டது. என்றபோதிலும், போட்டி முடிவடைவதற்கு 15 பந்துகளுக்கு முன்னதாக 28 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து விட்டார். கடைசி வரை நின்றிருந்தால் கூடுதல் ரன்கள் வந்திருக்கலாம்

    4. முகமது சிராஜிக்கு புதிய பந்தில் பந்து வீச வாய்ப்பு வழங்காதது

    தொடர் முழுவதும் பும்ரா உடன் முகமது சிராஜ் புது பந்தில் பந்து வீசி வந்தார். இந்த போட்டியில் பும்ரா உடன் முகமது சமி பந்து வீசினார். இந்தியா 3 விக்கெட்டுகளை தொடக்கத்தில் வீழ்த்தியது. என்றாலும் ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடிய நிலையில், முகமது சிராஜால் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீச முடியவில்லை. அவர் புதுப்பந்தில் சிறப்பாகத்தான் பந்து வீசி வந்தார். இதுவும் இந்தியாவுக்கு ஒரு பின்னடைவாக அமைந்தது எனலாம்.

    5. ஆக்ரோசமான தாக்குதல் இல்லாமல் போனது

    எப்போதும் துடிப்புடன் விளையாடும் இந்திய அணி ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியாவை 47 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தது. அதன்பின் டிராவிஸ் ஹெட் (137)- லபுஷேன் (58*) ஆகியோரை ஆதிக்கம் செலுத்த விட்டுவிட்டனர். இவர்கள் 192 ரன்கள் குவித்தது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதகமாக அமைந்துவிட்டது.

    • மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 201 ரன்கள் அடித்தது தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ரன்னாகும்.
    • முகமது சமி 24 விக்கெட்டுகளுடன், அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த தொடரில் முத்திரை படைத்த வீரர்கள் குறித்து பார்ப்போம்.

    1. விராட் கோலி (765) அதிக ரன்கள் அடித்துள்ளார்.

    2. மேக்ஸ்வெல் (201*) தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ஸ்கோராகும்

    3. டி கா (4) அதிக சதம் அடித்த வீரர்

    4. ரோகித் சர்மா (31) அதிக சிக்ஸ் அடித்த வீரர்

    5. முகமது சமி (24) அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்

    6. முகமது சமி (7/57) ஒரு போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்

    7. டி காக் (20) அதிக விக்கெட் வீழ்த்திய விக்கெட் கீப்பர்

    8. டேரில் மிட்செல் (11) அதிக கேட்ச் பிடித்த பீல்டர்

    அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது

    1. மொஹிந்தர் அமர்நாத் (1983)

    2. அரவிந்த டி சில்வா (1996)

    3. ஷேன் வார்னே (1999)

    4. டிராவிஸ் ஹெட் (2023)

    இறுதிப் போட்டியில் மட்டும் தோற்கடிக்கப்பட்ட அணி

    1. இங்கிலாந்து (197- 4 வெற்றிகள்)

    2. நியூசிலாந்து (2015- 8 வெற்றிகள்)

    3. இந்தியா (2023- 10 வெற்றிகள்)

    • ஐசிசி-யின் இரண்டு இறுதிப் போட்டியிலும், ஒரு அரையிறுதியிலும் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார்.
    • இவரது தலைமையில் இந்திய சீனியர் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முடியாமல் ஏமாற்றம்.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டி தோல்வி அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

    ராகுல் டிராவிட் இரண்டு ஐசிசி-யின் இறுதிப் போட்டியிலும், ஒரு அரையிறுதி போட்டியிலும் இந்திய அணியை வழிநடத்திச் சென்றுள்ளார். எதிர்கால பயிற்சியாளர் பதவி குறித்தும் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிவற்றில் ஒன்றிற்கு பயிற்சியாளராக இருப்பீர்களா என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த ராகுல் டிராவிட் "என்னுடைய பதவியின் எதிர்காலம் குறித்து சிந்திக்கவில்லை. தற்போதுதான் இந்த போட்டியில் இருந்து வெளியே வந்துள்ளேன். அது குறித்து யோசிக்க நேரம் இல்லை. எனக்கு நேரம் கிடைக்கும்போது அது குறித்து யோசிப்பேன். இந்த நேரம் வரை, இந்த தொடரில்தான் முழுக் கவனம் செலுத்தினேன். இதைத்தவிர என்னுடைய மனதில் வேறு ஒன்றுமில்லை. எதிர்காலத்தில் என்ன நிகழும் என்று எதையும் நினைக்கவில்லை" என்றார்.

    ×