search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவணம்"

    • பாபநாசம் வட்ட அலுவலகத்தில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.
    • மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு சிற்பான்மை யினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொரு ளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் தனி நபர் கடன் திட்டம், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் பாபநாசம் வட்ட அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை ) 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.

    மேற்படி, கடன் பெறுவதற்கு 18 முதல் 60 வயது உடையவர்கள் தகுதியானவர்கள். சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு விண்ணப்ப ங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து, மனுக்களுடன் மனுதாரரின் சாதி சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் / திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது/செலான் (அசல்) மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு அனைத்து பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்தவர்கள் கடன் உதவி பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெற உள்ளது.
    • கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் தனி நபர் கடன் திட்டம், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் திருவையாறு வட்ட அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெற உள்ளது.

    மேற்படி கடன் பெறுவதற்கு 18 முதல் 60 வயது உடையர்கள் தகுதியானவர்கள். சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து கடன் மனுக்களுடன் மனுதாராரின் சாதி சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் - திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் , கல்விக்கட்டணங்கள் செலுத்திய இரசீது-செலான் (அசல்) மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்து உள்ளார்.

    • குத்தகை காலங்கள் தொடர்பான ஆவணங்களை மாநகராட்சி நிர்வாகம் பரிசீலனை.
    • 5 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய தமிழ் நூலகமும், டென்னிஸ் கிளப்பும் இயங்கியன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் 1872-ம் ஆண்டு வாசகசாலை மற்றும் நூலகம், நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தொடங்கப்பட்டது.

    பின்னர் பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டை மதில் சுவர் இடிக்கப்பட்டு, அதிலிருந்த செம்புரான் கற்களை கொண்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு 1874-ம் ஆண்டு அப்போதைய மாவட்ட நீதிபதி பர்னர் ஆர்தர் கோக் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது.

    இதையடுத்து 1892-ம் ஆண்டு இந்தக் கட்டிடத்துக்கு தஞ்சாவூர் யூனியன் கிளப் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

    இந்த கிளப்பில் ஹாவ்லேக் என்ற பெயரில் ஆங்கில நூலகமும், பாவேந்தர் பெயரில் 5 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய தமிழ் நூலகமும், டென்னிஸ் கிளப்பும் இயங்கியன.

    1919-ம் ஆண்டு பிப்.12-ம் தேதி தஞ்சாவூருக்கு வருகை தந்த ரவீந்திரநாத் தாகூர், இந்த யூனியன் கிளப்புக்கு வருகை தந்து உரையாற்றியுள்ளார். அதேபோல் அண்ணா, பாரதிதாசன் உள்ளிட்ட தலைவர்களும் வந்து சென்றுள்ளனர்.

    இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டிடங்களை நேரில் ஆய்வு செய்து, குத்தகை காலங்கள் தொடர்பான ஆவணங்களை மாநகராட்சி நிர்வாகம் பரிசீலனை செய்தது.

    இதில் 99 ஆண்டுகள் குத்தகை காலம் முடிவடைந்ததாக கூறி யூனியன் கிளப் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் தண்டாரோ மூலம் அறிவித்து இடங்களை கையகப்படுத்துவதாக நோட்டீஸ் ஒட்டியது.

    இதனால் தஞ்சாவூர் மாநகராட்சியை எதிர்த்து மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதன் தீர்ப்பு வந்தது.

    அதில் மாநகராட்சிக்கு சாதகமான தீர்ப்பு வெளியிடப்பட்டது.

    இதையடுத்து இன்று மதியம் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் யூனியன் கிளப்புக்கு சென்று கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என எழுதப்பட்டது.

    இது தொடர்பான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

    இதுகுறித்து மேயர் சண். ராமநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

    தஞ்சை நகரின் மையப் பகுதியில் யூனியன் கிளப் இயங்கி வந்தது.

    150 ஆண்டுகால பழமையான கட்டிடம் ஆகும். இங்கு நூலகம் இயங்கி வந்தது.

    இந்த இடத்திற்கு பல்வேறு தலைவர்கள் வந்துள்ளனர்.

    ஒரு கட்டத்தில் இந்த யூனியன் கிளப் தனியார் வசமானது.

    தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் யூனியன் கிளப் கையகப்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து மதுரை நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கின் தீர்ப்பு மாநகராட்சிக்கு சாதகமாக வந்துள்ளது.

    தற்போது மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    இதன் மொத்த பரப்பளவு 35 ஆயிரம் சதுர அடி ஆகும். இவற்றின் மதிப்பு 60 முதல் 75 கோடி வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மீட்கப்பட்ட யூனியன் கிளப் கட்டிடத்தில் அடுத்து என்ன செய்யலாம் என ஆணையர், கவுன்சிலர்கள் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.

    பொது மக்களிடம் கருத்து கேட்கப்படும். தற்போது கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள்.
    • ரூ. 5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக " சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது " 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

    சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000/- (ஐந்து லட்சம் ) விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் முதல்-அமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார்.

    2022-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.

    எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம்.

    தங்களது விண்ணப்பம் தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

    2022 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருத்திற்கான விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.10.2022 ஆகும்.

    மேலும் விபரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை விமான நிலைய விரிவாக்க நில இழப்பீட்டு தொகை பெறாதவர்கள் ஆவணங்களை சமர்பித்து பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • நிலஉரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை மதுரை விமான நிலைய விரிவாக்க தனிவட்டாட்சியர்களால் வழங்கப்பட்டு வருகிறது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-மதுரை தெற்கு வட்டம் மற்றும் திருப்பரங்குன்றம் வட்டத்தில் மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக அயன்பாப்பாகுடி, குசவன்குண்டு, கூடல்செ ங்குளம், வலையபட்டி, பாப்பானோடை மற்றும் பெருங்குடி கிராமங்களில் நிலங்கள் கையகம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி நிலஉரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை மதுரை விமான நிலைய விரிவாக்க தனிவட்டாட்சியர்களால் வழங்கப்பட்டு வருகிறது. நில உரிமையாளர்களில் இழப்பீட்டுத் தொகை பெறாதவர்கள் அலுவலக வேலை நாட்களில் நில உரிமை தொடர்பான சான்று ஆவணங்களுடன் பழைய ராமநாதபுரம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மதுரை விமான நிலைய விரிவாக்க தனி வட்டாட்சியர் அலுவலகங்களில் சமர்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சீர்காழி கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
    • குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளதால் மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவையை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரதி மாதம் நான்காவது வெள்ளிக் கிழமைகள் தோறும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், வருவாய் வட்டாட்சியர்கள், சமூக பாதுகாப்பு வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், இணை இயக்குநர் சுகாதாரபணிகள் ஆகிய துறைகளை கொண்டு சீர்காழி கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி சீர்காழி கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வருகின்ற 23-ந் தேதி (வெள்ளிகிழமை) மாற்றுத்தி றனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

    அன்றைய தினம் காலை 11 மணி அளவில் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளதால் சீர்காழி கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவையை மனுக்களாக அளித்து பயன் பெறலாம்.

    மேலும் இதுநாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் தாங்கள் மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அனைத்து பக்கங்களின் நகல், மற்றும் மருத்துவ சான்று நகல், ஆதார் அட்டைநகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் அளிவிலான தற்போதைய போட்டோ 1, கைப்பேசிஎண், ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 4,389 விவசாயிகள், ஆதார் எண்ணுடன் இணைந்த மொபைல் எண் புதுப்பிக்காமல் உள்ளனர்.
    • பி.எம்., கிஷான் திட்டத்தின் கீழ், தொடர்ந்து நிதி உதவி பெற, ஆதார் எண்ணுடன் இணைந்த செல்போன் எண் இணைக்க வேண்டும்.

    உடுமலை :

    பிரதமரின் விவசாய கவுரவ உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியான விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் 3 தவணைகளாக வழங்கப்படுகிறது.நடப்பாண்டு செப்டம்பர் 12வது தவணையாக,ரூ.2 ஆயிரம் விவசாயிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.குடிமங்கலம் வட்டாரத்தில் ஆமந்தக்கடவு கிராமத்தைச்சேர்ந்த 216 விவசாயிகளும், அணிக்கடவு 265, ஆத்துக்கிணத்துப்பட்டி 387, தொட்டம்பட்டி 129, குடிமங்கலம் 230, இலுப்ப நகரம் 165, கொண்டம்பட்டி 238, கொங்கல்நகரம் 227, கொசவம்பாளையம் 99, கோட்டமங்கலம் 294.கும்பம்பாளையம் 77, மூங்கில் தொழுவு 183, முக்கூடுஜல்லிபட்டி 115, பொன்னேரி 192,பெரியபட்டி 167, பண்ணைக்கிணறு 90, பூளவாடி 121, புதுப்பாளையம் 78, புக்குளம் 277, சோமவாரபட்டி 221, வடுகபாளையம் 211, வாகத்தொழுவு 147, வீதம்பட்டி 100, விருகல்பட்டி 125 என, மொத்தம், 4,389 விவசாயிகள், ஆதார் எண்ணுடன் இணைந்த மொபைல் எண் புதுப்பிக்காமல் உள்ளனர்.

    அதே போல் ஏறத்தாழ, 1,300 விவசாயிகள், தங்களது நில ஆவணங்களான, சிட்டா, ஆதார்எண் நகல், ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றை, தங்களது கிராமத்திற்குட்பட்ட, உதவி வேளாண் அலுலர்களிடம் சரிபார்க்கும் பணிக்காக வழங்கவில்லை.

    இது குறித்து குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது:- பி.எம்., கிஷான் திட்டத்தின் கீழ், தொடர்ந்து நிதி உதவி பெற, ஆதார் எண்ணுடன் இணைந்த செல்போன் எண் இணைக்க வேண்டும்.நில ஆவணங்களின்நகல்களை வேளாண் உதவி அலுவலர்களிடம் கொடுத்து, சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் இணைந்த செல்போன் எண் பதிவேற்றம் செய்யாமல், 4,389 விவசாயிகள் உள்ளனர்.எனவே குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள விவசாயிகள், தங்கள் ஆதார் எண்ணுடன்இணைந்த செல்போன் போன் எண் மற்றும் வங்கி பாஸ் புக் ஆகியவற்றை, அருகிலுள்ள, அரசு பொது சேவை மையம், தபால் நிலையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு சென்று, கண்டிப்பாக பதிவை புதுப்பிக்க வேண்டும்.புதுப்பிக்கவில்லை என்றால், ஊக்கத்தொகை கிடைக்காது. எனவே புதுப்பிக்க தவறிய விவசாயிகள் உடனடியாக புதுப்பிக்க வேண்டும்.அதே போல் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு 1,300 விவசாயிகள் நகல்கள் வழங்காமல் உள்ளதால் அப்பணிகளும் தாமதமாகி வருகிறது.

    பி.எம்., கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் நிதி உதவி பெற ஆவணங்கள் புதுப்பித்தல் அவசியமாகும். வருமான வரி செலுத்தாத அரசுப்பணியாளர் அல்லாத விவசாய குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பி.எம்., கிஷான் திட்டத்தில் பயன் பெற முடியும்.எனவே, தகுதியான அனைத்து விவசாயிகளும் இ.கே.ஒய்.சி., வழியாக ஆதார்எண்ணுடன் இணைந்த செல்போன் எண்ணை உடனடியாக புதுப்பித்து ஊக்கத்தொகையை தொடர்ந்துபெற்று பயனடையலாம்.இவ்வாறு உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    • அரியலூர் மாவட்டத்தில் இருந்து வந்த லாரியை போலீசார் வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர்.
    • டிரான்சீட் படிவம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள், பில்கள் முறையாக இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், வெளி மாவட்டங்களில் இருந்து எடுத்து வந்து நெல் விற்பனை செய்ய கூடாது என உத்தரவு அமலில் உள்ளது.

    இதனால் வியாபாரிகள், வெளி மாவட்ட நெல் மூட்டைகளை கொண்டு வந்து தஞ்சை மாவட்ட நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் குடிமை பொருள்வழங்கல் குற்ற புலனாய்வுதுறை காவல்துறை இயக்குனர் ஆபாஸ்குமார் உத்தரவி ன்பேரில் திருச்சி மண்டல குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மேற்பார்வையில் தஞ்சாவூர் சரக குடிமைபொருள் குற்ற புலனாய்வு துறை டி.எஸ்பி. சரவணன் தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட குறறபுலனாய்வு துறை உதவி ஆய்வாளர் விஜய் மற்றும் போலீசார் தஞ்சை மாவட்ட எல்லையான கும்பகோணம் அருகே நீலத்தநல்லூர் சோதனை சாவடியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அரியலூர் மாவட்டத்தில் இருந்து ஒரு லாரி வந்தது. அந்த லாரியை போலீசார் வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 10½ டன் நெல் மூட்டைகள் இருந்தது

    . இது குறித்து லாரியில் இருந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் அரியலூர் மாவட்டம் சாத்தாம்பாடி வடக்கு தெருவை சேர்ந்த வெற்றிமணி (வயது 22), அரியலூர் நாகமங்கலத்தை சேர்ந்த முருகேசன் (52) என்பதும் தெரியவந்தது.

    மேலும் அவர்கள் வெளி மாவட்டத்தில் இருந்து விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி, தஞ்சாவூர் மாவட்ட கொள்முதல் நிலையங்களில் அதிக விலைக்கு விற்க கொண்டு வந்ததும், டிரான்சீட் படிவம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள், பில்கள் முறையாக இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து நெல் மூட்டைகளோடு லாரியை யும் பறிமுதல் செய்து திருநாகேஸ்வரம் அரசு நவீன அரிசி ஆலை நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

    அங்கு வெற்றிமணி, முருகேசன் ஆகியோரிடம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கும்பகோணம் டிவிசன் டெப்டி மேனேஜர் இளங்கோவன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    முழுமையான விசாரணைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை அமையும். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • விவரங்களை வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் பூர்த்தி செய்து கொடுத்து ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம்.
    • பான் கார்டு உட்பட 11 வகையான இதர ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தின் விபரத்தினை வழங்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் பேரில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் 1-8-2022 முதல் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களில் இதுவரை சுமார் 6 லட்சம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.

    தற்பொ ழுது பொதுமக்கள் நலன் கருதி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 2305 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதற்கு ஏதுவாக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    எனவே, பொதுமக்கள் அனைவரும் தாங்களாகவே முன் வந்து அவர்கள் வழக்கமாக வாக்குச் செலுத்தக்கூடிய வாக்குச்சாவடிகளில் அவர்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் மொபைல் எண் ஆகிய விவரங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவம் 6B -இல் பூர்த்தி செய்து கொடுத்து வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம்.

    பொதுமக்கள் அவர்களது ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையின் ஜெராக்ஸ் நகலினை கொடுக்க வேண்டிய கட்டாயமில்லை.

    ஆதார் எண் இல்லாதவர்கள் இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ள 100 நாள் வேலை அடையாள அட்டை, அஞ்சல் / வங்கி கணக்கு புத்தகம், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு உட்பட 11 வகையான இதர ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தின் விபரத்தினை வழங்கலாம்.

    எனவே, நாளைநடைபெறவுள்ள சிறப்புமுகாமில் பொதுமக்கள் அனை வரும் பங்குபெற்று இரட்டை பதிவற்ற நூறுசதவீத தூய்மையான வாக்காளர் பட்டியலினை ஏற்படுத்து வதற்கு தங்களது முழு பங்களிப்பும் ஒத்துழைப்பும் நல்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து பத்திரப்பதிவு செய்து வருகின்றனர்.
    • தங்களது சொத்தின் ஆவணங்களை சுபமுகூர்த்த நாளில் தங்களது பத்திரத்தை பதிவு செய்கின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களது சொத்துக்கான ஆவணங்களை பதிவு செய்து வருகின்றனர்.

    தமிழக அரசு பத்திரப்பதிவுகளை ஆன்லைன் முறையில் மாற்றியதை தொடர்ந்து பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்கள் தங்களது பத்திரங்களை பதிவு செய்ய முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து பத்திரப்பதிவு செய்து வருகின்றனர்.

    ஒரு சிலர் சுப முகூர்த்த நாளில் தங்களது சொத்தின் ஆவணங்களை பதிவு செய்ய விரும்பி அதற்கு ஏற்றது போல் முன்பதிவு செய்து சுப முகூர்த்த நாளில் தங்களது பத்திரத்தை பதிவு செய்கின்றனர். இதனால் முகூர்த்த நாட்களில் பத்திர பதிவு செய்ய வருபவர்கள் எண்ணிக்கை மற்ற சாதாரண நாட்களை விட அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் நேற்றுமுன்தினம் சுபமுகூர்த்த தினம் என்பதால் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாங்கள் புதிதாக வாங்கியுள்ள சொத்தின் ஆவணங்களை பதிவு செய்ய முன்பதிவு செய்து நேற்று முன்தினம் காலை ஆவண பதிவுக்காக கும்பகோணம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தனர்.

    ஆனால் கும்பகோணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் காலை இணையதள சேவை முடங்கியது.இதனால் எந்த ஒரு ஆவணத்தையும் பதிவு செய்ய முடியாத சூழல் நிலவியது.

    முன்பதிவு செய்து வந்திருந்த பொதுமக்கள் ஆவண பதிவுக்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் அன்று முழுவதும் இணையதள சேவை கிடைக்காததால் எந்த ஒரு ஆவணமும் பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    • போலியாக ஆவணங்கள் தயார் செய்து கடந்த ஜூன் மாதம் பேராவூரணி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்துள்ளனர்.
    • வருவாய் துறை ஆவணங்களை ஆய்வு செய்து பார்த்தபோது போலியான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டது தெரியவந்தது.

    திருச்சிற்றம்பலம்:

    தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தைசாமி (வயது49).

    இவருக்கும் இவரது உறவினர்களுக்கும் சொந்தமான இடம் களத்தூர் கிராமத்தில் உள்ளது.

    இதனை அவர்கள் யாரும் இதுவரை பாகப்பிரிவினை செய்து கொள்ளவில்லை.

    இந்த நிலையில் இதே கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (50) என்பவரிடம், குழந்தைசாமி தன்னிச்சையாக விலை பேசி, பணி ஓய்வு பெற்ற முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் மூலமாக போலியாக ஆவணங்கள் தயார் செய்து கடந்த ஜூன் மாதம் பேராவூரணி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்துள்ளனர்.

    இது குறித்த தகவல்கள் அண்மையில் நிலத்தின் உரிமையாளர்களுக்கு தெரிய வந்தது.

    தகவலின் பேரில், களத்தூர் கிராம நிர்வாக அலுவலர் தனசேகரன் வருவாய் துறை ஆவணங்களை ஆய்வு செய்து பார்த்தபோது போலியான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டதன் மூலம் பத்திர பதிவு நடைபெற்று இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் தனசேகரன், திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தைசாமியை கைது செய்தனர்.

    தலைமறைவாக உள்ள சக்திவேலை தேடி வருகின்றனர்.

    • ஏற்றுமதி வர்த்தகத்தில் பில் ஆப் லேடிங்'(பி.எல்.,) என்ற ஆவணம் முக்கியமானது.
    • இறக்குமதியாளர் ஆடைக்கான தொகையை வங்கியில் செலுத்தி பி.எல்., ஆவணத்தை பெறவேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் உலகளாவிய வர்த்தகர்களிடம் ஆர்டர் பெற்று பின்னலாடைகளை தயாரித்து அனுப்புகின்றன. ஏற்றுமதி வர்த்தகத்தில் பில் ஆப் லேடிங்'(பி.எல்.,) என்ற ஆவணம் முக்கியமானது. ஏற்றுமதி நிறுவனம் ஆர்டர் சார்ந்த முழு விவரங்கள் அடங்கிய பி.எல்., ஆவண தொகுப்பை வங்கியில் ஒப்படைக்கிறது.

    இறக்குமதியாளர் ஆடைக்கான தொகையை வங்கியில் செலுத்தி பி.எல்., ஆவணத்தை பெறவேண்டும். ஆவணத்தை வழங்கினால் மட்டுமே கப்பல் சரக்கு கையாளும் நிறுவனம் ஏற்றுமதியாளர் அனுப்பிய சரக்குகளை இறக்குமதியாளர் வசம் ஒப்படைக்கவேண்டும் என்பது விதிமுறை.

    இது குறித்து திருப்பூர் ஆர்பிட்ரேசன் கவுன்சில் தலைவர் கருணாநிதி, உறுப்பினர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:-

    சில கப்பல் சரக்கு முகமை நிறுவனங்கள், ஆவண விதிகளை மீறுகின்றன. தொகை செலுத்திய விவரங்களுடன் கூடிய பி.எல்., ஆவணத்தை பெறாமலேயே ஆடைகளை இறக்குமதியாளரிடம் வழங்கி விடுகின்றன. சரக்கு கையாளும் நிறுவனமும் வெளிநாட்டு வர்த்தகர்களும் கூட்டணி சேர்ந்தால் மட்டுமே இத்தகைய மோசடிகள் சாத்தியம்.

    திருப்பூரில் 10 ஏற்றுமதி நிறுவனங்கள் அனுப்பிய மொத்தம் 5 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகளை, பி.எல்., ஆவணமின்றி அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி நாட்டு வர்த்தகர்கள் கைப்பற்றியது தெரியவந்துள்ளது. இதில் பல்லடத்தை சேர்ந்த ஒரே ஏற்றுமதி நிறுவனம் மட்டும் 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகளை பறிகொடுத்துள்ளது. ஆவணமின்றி ஆடைகளை கைப்பற்றிக்கொள்ளும் வெளிநாட்டு வர்த்தகர்கள், தொகையை வழங்காமல் இழுத்தடிக்கின்றனர்.

    ஏற்கனவே ஆய்வுக்கு உட்படுத்தி அனுப்பியபோதும், தரம் சரியில்லை என சாக்குபோக்கு கூறி, விலையை குறைக்கின்றனர். இதனால், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது.சட்டரீதியாக போராடி, வெளிநாட்டு வர்த்தகர்களிடம் இருந்து தொகையை பெறுவதற்குள் நிறுவனம் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்.

    ஏற்றுமதி நிறுவனங்களுக்கு உரிய தொகையை பெற்றுத்தருவதற்காக ஆர்பிட்ரேசன் கவுன்சில் மூலம் சரக்கு கையாளும் நிறுவனங்கள் வெளிநாட்டு வர்த்தகர்கள் மற்றும் உள்ளூரில் இயங்கும் வர்த்தக முகமை நிறுவனத்தினரிடம் பேச்சு நடத்திவருகிறோம்.பின்னலாடை ஏற்றுமதியாளர் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். ஆர்டர்களுக்கு தவறாமல் இ.சி.ஜி.சி., எனப்படும் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×