search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரம்ப சுகாதார நிலையம்"

    • பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையத்தை தேசிய தரக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
    • டாக்டர் நபீஷாபானு முன்னிலையில் நடைபெற்றது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் தேசி யதர சான்றிதழ் வழங்குவதற் கான ஆய்வு நடைபெற்றது.

    பிரான்மலையில் மேம் படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல் பட்டு வருகின்றது. இங்கு தினந்தோறும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து கர்ப் பிணி பெண்கள் உள்பட 250-க்கு மேற்பட்ட பொது மக்கள் பல்வேறு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்ற னர்.

    இந்த பகுதி கிராம மக்களின் நம்பிக்கை யை பெற்ற பிரான்மலை ஆரம்ப சுகாதார மையத்தில் வாரத் தில் 2 நாட்கள் கர்ப்பிணி பெண்களுக்கு தர மான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகை யில் மேலும் பல்வேறு சிகிச் சைகள் அளித்திட மேலும் வசதிகள் கிடைப்பதற்காக தேசிய தரச் சான்றிதழ் வழங்குவதற்காக ஆய்வினை தேசிய தரச் சான்று ஆய்வு குழு நிபுணர்கள் வருகை தந்து ஆய்வு மேற்கொண்ட னர்.

    தேசிய தரச்சான்று ஆய்வுக்குழு நிபுணர்கள் டாக்டர் மணிஸ் மதன்லால் சர்மா, டாக்டர் பிரசாந்த், சூரிய வள்ளி ஆகியோர் ஆய்வினை மேற்கொண்ட னர். துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் டாக்டர் விஜய் சந்திரன் தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் நபீஷாபானு முன் னிலையில் நடைபெற்றது.

    • மாதத்திற்கு எவ்வளவு நோயாளிகள் வருகிறார்கள் என்று கேட்டறிந்தார்.
    • 3 படுக்கைகள் இருந்த அறையை ஆய்வு மேற்கொண்டார்

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட கலெக்டராக குலோத்துங்கன் பதவியேற்ற நாள் முதல், பல்வேறு அரசுத்துரைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, நேரு நகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இருந்த டாக்டர்களிடம், இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிப்புற சிகிச்சை பிரிவில் எத்தனை நோயாளிகள் தினமும் வருகிறார்கள்? மாதத்திற்கு எவ்வளவு நோயாளி கள் வருகிறார்கள் என்று கேட்டறிந்தார்.

    மேலும் நோயாளிகள் தங்குவதற்காக 3 படுக்கைகள் இருந்த அறையை ஆய்வு மேற்கொண்டார், அறை உபயோகத்தில் இருந்தாலும், இல்லா விட்டாலும், தினசரி சுத்தமாக பராமரிக்கவேண்டும். போதுமான அளவு மருந்து மாத்திரைகள் இருப்பில் வைத்து கொள்ளவேண்டும். மேலும் விடுபட்ட குழந்தைகளுக்கு மாதந்திர தடுப்பு ஊசியை அவசியம் போட வேண்டும். சுகாதாரநிலையம் முழுவதும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்றார்.

    • மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்தார்
    • தாயும் குழந்தையும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்

    திருவண்ணாமலை:

    108 ஆம்புலன்சில் கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஆண் குழந்தை பிறந்தது. திருவண்ணமலை தாலுகா நூக்காம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் மனைவி தீபா (வயது 28). நிறைமாத கர்ப்பிணியான தீபாவிற்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. அவரை குடும்பத்தினர் 108 ஆம்புலன்சில்அழைத்துச்சென்றனர்.

    நூக்கம்பாடியில் இருந்து மங்கலம் வழியே சென்று கொண் டிருந்தபோது தீபாவிற்கு பிரசவவலி அதிகரிக்கவே உடனடியாக மருத்துவ உதவியாளர் செல்வி ஆம்புலன்சை ஓரமாக நிறுத்த டிரைவர் தினகரனுக்கு அறிவுறுத்தினார்.

    பின்னர் மருத்துவ உதவியாளர் செல்வி ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். அதில் தீபாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்பு தாயும், சேயும் பத்திரமாக மங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலையரசன் கொசு ஒழிப்பு ஊழியராக தற்காலிக அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மரவனூரைச் சேர்ந்தவர் கலையரசன் (வயது 28). இவர் மரவனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு ஊழியராக தற்காலிக அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரை மணப்பாறை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணிக்கு வரச் சொல்லி உள்ளனர். அதன்படி பணிக்கு வந்த கலையரசன் மருத்துவ கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்து மாத்திரைகளை எரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அவரின் சட்டையில் திடீரென தீப்பிடித்து எரியவே என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த அவர் எரியும் நெருப்புடன் சட்டையை கழற்றி வீசியபடி மருத்துவமனை வளாகத்தில் ஓடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தீக்காயம் அதிக அளவில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கலையரசன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏழ்மை நிலையில் வாழும் குடும்பம் என்ற நிலையில் கலையரசன் இந்த துயர சம்பவத்தில் இறந்து விட்டதால் அவரது குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

    • அய்யாபுரம் பகுதியில்ஆரம்ப சுகாதார நிலையத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • மருத்துவ பணிகளை நகராட்சி தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    புளியங்குடி:

    புளியங்குடி நகராட்சி 33-வது வார்டு அய்யாபுரம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனையடுத்து புளியங்குடி நகராட்சி தலைவரும், மாவட்ட தி.மு.க. மகளிர் தொண்டர் அணி அமைப்பாளருமான விஜயா சவுந்தரபாண்டியன் தலைமை தாங்கி மருத்துவ பணிகளை தொடங்கி வைத்தார்.

    விழாவில் நகர்மன்ற துணை தலைவரும், தி.மு.க.நகர செயலாளருமான அந்தோணிசாமி, சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் பொதுமருத்துவர்கள் சூர்யா, ரேவதி, மாவட்ட மலேரியா அலுவலர் தண்டாயுதபாணி, சுகாதாரத்துறை அலுவலர்கள் ராமலிங்கம், பாலாஜி, சர்போஜி, கமிஷனர் சுகந்தி, என்ஜினீயர் முகைதீன் அப்துல் காதர், சுகாதார அலுவலர் கணேசன், 33-வது வார்டு செயலாளர் வெள்ளபாண்டி, ஊர் நாட்டாண்மை எட்வர்ட் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் அய்யாபுரம் இந்திரா தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் டேனியல் இன்பராஜ் நன்றி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் வருகை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அங்கிருந்த டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
    • நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று நாமக்கல் மாவட்டத்திற்கு வந்தார்.

    அவர் திருச்செங்கோட்டில் அரசு ஆஸ்பத்திரி சிடி ஸ்கேன், சீதாராம் பாளையம் நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம் உட்பட பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

    இன்று காலை கொல்லிமலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார். இதையொட்டி கொல்லிமலை சென்று, இன்று காலை அங்கு நடைபயிற்சி மேற்கொண்டார்.

    அப்போது, கொல்லி மலை வட்டம், சோளக்காடு-புதுவளவு நலவாழ்வு மையம் மற்றும் இலக்கியம்பட்டி நலவாழ்வு மையத்தில் அமைச்சர் சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் வருகை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அங்கிருந்த டாக்டர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் இருப்பு குறித்தும் ஆய்வு செய்த அவர், நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அமைச்சர் திடீரென ஆய்வுக்கு வந்த சம்பவம், ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கலந்து கொண்டு திறந்து வைத்தார்
    • பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டியன்கோவில் ஊராட்சியில் தாயம் பாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார துணை நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார துணை நிலையத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்ப ட்டுள்ளது. இதன் திறப்பு விழா காங்கேயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சுகாதா ரத்துறை அமைச்சர் மா .சுப்பிரமணியன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து தாயம் பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல்.எஸ்.குமார், கண்டியன் கோவில் ஊராட்சி மன்ற தலைவர் கோபால் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தனர் .

    இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி துணை தலைவர் மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் துளசிமணி சண்முகம், லோகு பிரசாந்த் மற்றும் பெருந்தொழுவு ரவி,அர்ச்சுணன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சுந்தரவேல், டாக்டர். சாம்பால், சுகாதார ஆய்வாளர் கந்த சாமி மற்றும் சுகாதார துறை மருத்துவர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தாயம்பாளையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது.
    • 4 தளங்களுடன் கூடிய ஒவ்வொரு தளமும் 8ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகாவுக்கு உட்பட்ட சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ மருந்துத்துறையின் சார்பில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டப்பட்டது.

    தாயம்பாளையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இந்த 2 புதிய கட்டிடங்களை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் காங்கயம் நகரில் கட்டப்பட்டு வரும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தரம் உயர்த்த ரூ.12 கோடி மதிப்பீட்டில் 50 கூடுதல் படுக்கைகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் கட்டும் பணியினை ஆய்வு செய்தனர். அதை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது :- வட்டார மருத்துவமனையாக இருந்த காங்கயம் மருத்துவமனை தற்போது மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அதற்கு தேவையான புதிய கட்டிடம் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    4 தளங்களுடன் கூடிய ஒவ்வொரு தளமும் 8ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது. தமிழ்நாட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் 20 என்ற எண்ணிக்கையில் இருந்த நிலையில் தற்போது தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 24 புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளை தந்துள்ளார். இதற்கான கட்டிட பணி நடைபெற்று வருகின்றன. விரைவில் கட்டிட பணிகள் முடிந்து திறந்து வைக்கப்படும்.தாராபுரத்தில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட பணிகள் முடிந்து, விரைவில் திறந்து வைக்கப்படும்.மேலும் திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 500 படுக்கை வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை கட்டிட பணிகளும் விரைவில் முடிந்து திறந்து வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் கலெக்டர் வினீத், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், காங்கயம் ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார், காங்கயம் தி.மு.க. நகர செயலாளர் வசந்தம் நா.சேமலையப்பன், தெற்கு ஒன்றிய செயலாளர் கே.கே.சிவானந்தன், வடக்கு ஒன்றிய செயலாளர் கருணை பிரகாஷ், சிவன்மலை ஊராட்சி மன்ற தலைவர் கே.கே.துரைசாமி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் கனகராணி, துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கே.முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 6 மாதங்களை கடந்தும் இன்று வரை டாக்டரோ, செவிலியர்களோ நியமிக்கப்படவில்லை.
    • ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்

    சிங்காநல்லூர்,

    கோவை பீளமேடு விளாங்குறிச்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக கட்டப்பட்டு வந்தது. இது பணி முடிந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திறந்து வைக்கப்பட்டது. திறக்கப்பட்டு 6 மாதங்களை கடந்தும் இன்று வரை இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டாக்டரோ, செவிலியர்களோ நியமிக்கப்படவில்லை.

    மேலும் சுற்றுச்சுவர்களும் இல்லாமல் கிடப்பதால், அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் மதுவாங்கி கொண்டு இங்கு வந்து அமர்ந்து மது குடிக்கும் நிலை காணப்படுகிறது. எனவே இந்த பகுதியில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏர்வாடி, சிக்கல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதாரத்துறை இயக்குநர் ஆய்வு செய்தார்.
    • வருடத்திற்கு 2 முறை வீடு, வீடாக சென்று தெளிப்பான்கள் மூலம் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படுகிறது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் நடைபெற்று வரும் மலேரியா, டெங்கு ஒழிப்பு பணிகளை பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறையின் இயக்குநர் செல்வவிநாயகம் ஆய்வு செய்தார். கடலோர கிராம பகுதிகளில் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்க வருடத்திற்கு 2 முறை வீடு, வீடாக சென்று தெளிப்பான்கள் மூலம் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படுகிறது.

    கிணறுகளில் வளரும் கொசு புழுக்களை சாப்பிடும் கம்பூசியா என்ற ஒரு வகை மீன்களும், வீடுகள் மற்றும் பொதுக்கிணறுகளில் சுகாதாரத் துறை பணியாளர்களால் விடப்படுகிறது. இந்த பணிகள் நடைபெற்ற சின்ன ஏர்வாடி பகுதிகளில் பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார்.

    பின்னர் ஏர்வாடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சிக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவ ஆய்வகங்கள், பிரசவ அறை, பிரசவத்திற்கு பின்கவனிப்பு அறை, உள்நோயாளிகள் வார்டு உள்ளிட்டவைகளை பார்வையிட்டு மருத்துவ பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார். நோயாளிகளிடம் தரமான சிகிச்சை கிடைக்கிறதா? என்றும் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது மருத்துவர்கள் அரவிந்தராஜ், இளையராஜா, வினோத்குமார், மாவட்ட மலேரியா அலுவலர் ரமேஷ், விருதுநகர் மண்டல பூச்சியியல் அலுவலர் கல்விக்கரசன், இளநிலை பூச்சியியல் வவ்லுநர்கள் கண்ணன், பாலசுப்பிரமணியன், கடலாடி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பூமிநாதன், பகுதி சுகாதார செவிலியர் கலா, சுகாதார ஆய்வாளர்கள் செல்ல துரை, சுப்பிரமணியன், கோவிந்தகுமார், இஜாஜ் அகமது, ஹரி கிருஷ்ணா, மருத்துவ ஆய்வக நுட்பனர்கள் வளர்மதி, முனியராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அரியப்பபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒருவர் மட்டுமே பணிக்கு வருவதாக கூறப்படுகிறது.
    • ஸ்கேன் பார்ப்பதற்கு செல்லும் கர்ப்பிணி பெண்களை அலைக்கழிப்பதாக கூறுகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி தாலுகா திப்பனம்பட்டி கிராமம் அரியப்பபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 மருத்துவர்கள் பணியாற்றி வந்தநிலையில் கடந்த 6 மாத காலமாக ஒருவர் மட்டுமே பணிக்கு வருவதாக கூறப்படுகிறது.

    வாரத்தில் செவ்வாய்க் கிழமை தோறும் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரி சோதனைகள் செய்வதற்கு மருத்துவர் இல்லாத சூழ்நிலை இருந்து வருகிறது.

    இங்கு பணியில், இருக்கும் ஒரு மருத்துவரும் கர்ப்பிணி பெண்களிடம் கூறும் பதில், தென்காசிக்கு செல்லுங்கள். இங்கே நான் ஒருவர் என்ன செய்ய முடியும். அதனால் ஸ்கேன் பார்ப்பதற்கு தென்காசிக்கு செல்லுங்கள் என்று கூறுகிறார். தென்காசி சென்றால் அங்கும் இன்று போய் நாளைவா என்று கூறி கர்ப்பிணி பெண்களை அலைக்கழிப்பதாக புகார் கூறுகின்றனர்.

    தினசரி கூலிக்கு வேலைக்கு செல்லும் நபர்களும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நம்பி உள்ளனர். இவர்கள் தென்காசிக்கு செல்வதற்கு இங்கிருந்து பஸ் போக்கு வரத்து வசதிகள் ஏதும் கிடையாது.

    எனவே இதை கவனத்தில் கொண்டு கர்ப்பிணி பெண்கள் நலன்கருதி தேவையான மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழன் மக்கள் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    • ஆரம்ப சுகாதார நிலையம், உட்கட்டமைப்பு வசதிகள், தேவையான மருத்துவ உபகரணங்கள் ஆகியவை குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்ட கங்களை கலெக்டர் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், சூராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள், தேவையான மருத்துவ உபகரணங்கள் ஆகியவை குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இளையான்குடி வட்டாரம், சாலைக்கிராமம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட சூராணம் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் சுற்று வட்டாரத்திலுள்ள 22 ஆயிரம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் 8 துணை சுகாதார நிலையங்கள் மூலம் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் பெண் சுகாதார தன்னார்வலர்கள் மூலம் தொற்றா நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சூராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அருகிலுள்ள கிராமங்களில் இருந்தும், தினசரி சுமார் 120 பேர் வெளிநோயாளிகள் சிகிச்சைக்காகவும், மாதந்தோறும் சராசரியாக 5 பிரசவங்களும் நடைபெறு கிறது. இதன்மூலம் அருகில் உள்ள கிராமங்களில் கர்ப்பிணித் தாய்மார்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

    இந்த மருத்துவமனையின் செயல்பாடுகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் 1989-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு மதிப்பீட்டு அறிக்கை பொதுப்பணித்துறையின் சார்பில் பெறப்பட்டு, அரசிற்கு கருத்துரு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்ட கங்களை கலெக்டர் வழங்கி னார். துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) விஜய்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் ஆரோன் அரவிந்த்ரேசிஸ், மருத்துவ அலுவலர் செந்தில்குமாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    ×