என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஏர்வாடி, சிக்கல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதாரத்துறை இயக்குநர் ஆய்வு
- ஏர்வாடி, சிக்கல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதாரத்துறை இயக்குநர் ஆய்வு செய்தார்.
- வருடத்திற்கு 2 முறை வீடு, வீடாக சென்று தெளிப்பான்கள் மூலம் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படுகிறது.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் நடைபெற்று வரும் மலேரியா, டெங்கு ஒழிப்பு பணிகளை பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறையின் இயக்குநர் செல்வவிநாயகம் ஆய்வு செய்தார். கடலோர கிராம பகுதிகளில் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்க வருடத்திற்கு 2 முறை வீடு, வீடாக சென்று தெளிப்பான்கள் மூலம் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படுகிறது.
கிணறுகளில் வளரும் கொசு புழுக்களை சாப்பிடும் கம்பூசியா என்ற ஒரு வகை மீன்களும், வீடுகள் மற்றும் பொதுக்கிணறுகளில் சுகாதாரத் துறை பணியாளர்களால் விடப்படுகிறது. இந்த பணிகள் நடைபெற்ற சின்ன ஏர்வாடி பகுதிகளில் பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் ஏர்வாடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சிக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவ ஆய்வகங்கள், பிரசவ அறை, பிரசவத்திற்கு பின்கவனிப்பு அறை, உள்நோயாளிகள் வார்டு உள்ளிட்டவைகளை பார்வையிட்டு மருத்துவ பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார். நோயாளிகளிடம் தரமான சிகிச்சை கிடைக்கிறதா? என்றும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது மருத்துவர்கள் அரவிந்தராஜ், இளையராஜா, வினோத்குமார், மாவட்ட மலேரியா அலுவலர் ரமேஷ், விருதுநகர் மண்டல பூச்சியியல் அலுவலர் கல்விக்கரசன், இளநிலை பூச்சியியல் வவ்லுநர்கள் கண்ணன், பாலசுப்பிரமணியன், கடலாடி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பூமிநாதன், பகுதி சுகாதார செவிலியர் கலா, சுகாதார ஆய்வாளர்கள் செல்ல துரை, சுப்பிரமணியன், கோவிந்தகுமார், இஜாஜ் அகமது, ஹரி கிருஷ்ணா, மருத்துவ ஆய்வக நுட்பனர்கள் வளர்மதி, முனியராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்