search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Primary Health Center"

    • முறையான பராமரிப்பு இல்லாததால் பார்த்தீனியம் செடிகள் மற்றும் புதர் மண்டி காணப்படுகிறது.
    • மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த துணை சுகாதார நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும் என மலை கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமை ந்துள்ளது கொட்டக்குடி கிராமம். இந்த மலை கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இவர்களது முக்கிய தொழில் விவசாயமாகும். இதனால் மலை கிரா மங்களில் தங்கி தோட்ட விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான மருத்துவ வசதி இல்லாததால் குரங்கணி மற்றும் போடி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் அவல நிலை உள்ளது.

    மேலும் போக்குவரத்து வசதியும் இல்லாததால் சிகிச்சைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிதாக அரசு துணை சுகா தார மையம் கட்டப்பட்டது.

    ஆனால் பல மாதங்கள் ஆகியும் இங்கு பணிகள் தொடங்கப்படவில்லை. மேலும் முைறயான பராமரிப்பு இல்லாததால் பார்த்தீனியம் செடிகள் மற்றும் புதர் மண்டி காணப்படுகிறது.

    இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த துணை சுகாதார நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும் என மலை கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலையரசன் கொசு ஒழிப்பு ஊழியராக தற்காலிக அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மரவனூரைச் சேர்ந்தவர் கலையரசன் (வயது 28). இவர் மரவனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு ஊழியராக தற்காலிக அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரை மணப்பாறை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணிக்கு வரச் சொல்லி உள்ளனர். அதன்படி பணிக்கு வந்த கலையரசன் மருத்துவ கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்து மாத்திரைகளை எரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அவரின் சட்டையில் திடீரென தீப்பிடித்து எரியவே என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த அவர் எரியும் நெருப்புடன் சட்டையை கழற்றி வீசியபடி மருத்துவமனை வளாகத்தில் ஓடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தீக்காயம் அதிக அளவில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கலையரசன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏழ்மை நிலையில் வாழும் குடும்பம் என்ற நிலையில் கலையரசன் இந்த துயர சம்பவத்தில் இறந்து விட்டதால் அவரது குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

    • மாணவர் காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவர்தன் கோரிக்கை
    • செவிலியர்களுக்கான பணியிடங்களுக்கு மட்டும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாணவ காங்கிரஸ் தலைவர் டாக்டர் ஹர்ஷவர்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் 5 அரசு மருத்துவமனைகளும், 32 ஆரம்ப சுகாதார நிலையங்க ளும், காரைக்காலில் 1 அரசு பொது மருத்துவமனையும், 13 ஆரம்ப சுகாதார நிலை யங்களும், மாகியில் 1 அரசு பொது மருத்துவ மனையும், 2 ஆரம்ப சுகாதார நிலையங்களும், ஏனாம் பகுதியில் 1 அரசு பொது மருத்துவமனையும் 1 ஆரம்ப சுகாதார நிலையமும் என மொத்தம் 56 ஆஸ்பத்திரிகள் உள்ளன.

    இதில் கடந்த சில ஆண்டு களாக பார்மசி, பிசியோ தெரபி, லேப் டெக்னீசியன் மற்றும் லேப் அசிஸ்டண்ட் போன்ற துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

    தற்போது செவிலியர்களுக்கான பணியிடங்களுக்கு மட்டும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    எனவே முதல்- அமைச்சர் ரங்கசாமி தலையிட்டு மருத்து வமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்து பிரிவு காலி இடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கலந்து கொண்டு திறந்து வைத்தார்
    • பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டியன்கோவில் ஊராட்சியில் தாயம் பாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார துணை நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார துணை நிலையத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்ப ட்டுள்ளது. இதன் திறப்பு விழா காங்கேயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சுகாதா ரத்துறை அமைச்சர் மா .சுப்பிரமணியன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து தாயம் பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல்.எஸ்.குமார், கண்டியன் கோவில் ஊராட்சி மன்ற தலைவர் கோபால் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தனர் .

    இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி துணை தலைவர் மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் துளசிமணி சண்முகம், லோகு பிரசாந்த் மற்றும் பெருந்தொழுவு ரவி,அர்ச்சுணன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சுந்தரவேல், டாக்டர். சாம்பால், சுகாதார ஆய்வாளர் கந்த சாமி மற்றும் சுகாதார துறை மருத்துவர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 6 மாதங்களை கடந்தும் இன்று வரை டாக்டரோ, செவிலியர்களோ நியமிக்கப்படவில்லை.
    • ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்

    சிங்காநல்லூர்,

    கோவை பீளமேடு விளாங்குறிச்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக கட்டப்பட்டு வந்தது. இது பணி முடிந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திறந்து வைக்கப்பட்டது. திறக்கப்பட்டு 6 மாதங்களை கடந்தும் இன்று வரை இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டாக்டரோ, செவிலியர்களோ நியமிக்கப்படவில்லை.

    மேலும் சுற்றுச்சுவர்களும் இல்லாமல் கிடப்பதால், அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் மதுவாங்கி கொண்டு இங்கு வந்து அமர்ந்து மது குடிக்கும் நிலை காணப்படுகிறது. எனவே இந்த பகுதியில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உயர் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யும் கருவி மற்றும் ரத்த அளவு பார்க்கும் கருவிகள் பேரூராட்சி தலைவி சீதாலட்சுமி முத்து வழங்கினார்.
    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்காக கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    சாம்பவர்வடகரை:

    சாம்பவர் வடகரையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உயர் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யும் கருவி மற்றும் ரத்த அளவு பார்க்கும் கருவிகளை தனது சொந்த செலவில் பேரூராட்சி தலைவி சீதாலட்சுமி முத்து வழங்கினார்.

    அவர் கூறும் போது, முதல்-அமைச்சரின் மகத்தான திட்டங்களில் ஒன்றான மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள வயதான முதியவர்கள் மற்றும் நீரழிவு நோயாளிகள் பயன்பட்டு வருகின்றனர். கர்ப்பிணிப் பெண்களின் தேவையற்ற அலைச்சலை குறைக்கும் பொருட்டு சாம்பவர் வடகரை பேரூராட்சி பொதுமக்களின் கோரிக்கையான அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்தப் பரிசோதனை நிலையம் அமைக்கவும், கர்ப்பிணிப் பெண்களுக்காக கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தவும் தமிழக அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிகழ்ச்சியின் போது சாம்பவர் வடகரை பேரூர் செயலாளர் முத்து மற்றும் மருத்துவர் முத்து பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தேவிபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட நிலையமாக மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் தொடர் முழக்க பிரசாரம் நடந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை போற்றும் வகையிலும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையிலும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் தொடர் முழக்க பிரசாரம் நடந்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக மக்கள் சங்கமம் என்ற பெயரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 இடங்களில் நடத்த திட்டமிட்டு 6-வது நிகழ்ச்சியாக மக்கள் சங்கமம் மாநாடு கூரியூர் ஜின்னா திடலில் நடந்தது.

    மாநாட்டு குழு தலைவர் தமீம் அன்சாரி தலைமை தாங்கினார். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் திருவாடானை தலைவர் ஹமீது இப்ராஹிம் வரவேற்றார். நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சமீரா பானு, தேவிபட்டினம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேகு அபுல் ஹசன், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவர் கைசர், எஸ்.டி.பி.ஐ.கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், அகில இந்திய இமாம் கவுன்சில் மாநில பொதுச் செயலாளர் அர்ஷத் அஹமது அல்தாபி ஆகியோர் பேசினர்.

    பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் செய்யது இபுராஹிம், மாவட்ட செயலாளர்கள் சேக் தாவூது, ராஜிக் ரஹ்மான், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் கான், கிழக்கு மாவட்ட செயலாளர் நஜ்முதீன், தேவிபட்டினம் நகர் தலைவர் ஜலாலுதீன், தொகுதி இனணச் செயலாளர் நூர் முகமது முன்னிலை வகித்தனர்.

    பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தேவிபட்டினம் மக்கள் சங்கமம் குழு உறுப்பினர் அபுதாஹிர் நன்றி கூறினார்.

    தேவிபட்டினத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கவும், தேவிபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை விபத்து மீட்பு சிகிச்சை பிரிவுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக மாற்ற நடவடிக்கை எடு க்கவும், மீனவர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் கடல் அட்டையின் மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தேனி அருகே வீட்டில் குழந்தை பெற்றெடுத்த பெண் தனது குழந்தையுடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், ஆங்கில மருத்துவம் பார்க்க வேண்டாம் என பெற்றோர் வேண்டுகோள் விடுத்தனர். #HomeBirth
    தேனி:

    தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டி தென்றல் நகரை சேர்ந்த தனுஷ்கோடி மகன் கண்ணன் (வயது 29). என்ஜினீயர். இவருடைய மனைவி மகாலட்சுமி (25). இவர் எம்.பி.ஏ. பட்டதாரி. இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மகாலட்சுமிக்கு கடந்த 2-ந்தேதி வீட்டிலேயே சுகப்பிரசவம் ஆனது. அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    அவருடைய கணவரே அவருக்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. ஆனால், தொப்புள் கொடியில் இருந்து நச்சுக்கொடியை அகற்றாமல் அவர்கள் இருந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மருத்துவ குழுவினர் நேற்றுமுன்தினம் அவருடைய வீட்டுக்கு சென்று நச்சுக்கொடியை அகற்ற வேண்டும் என்றும், தாய், சேய் நலன் கருதி மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினர். ஆனால், அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இயற்கையாக நடந்த சுகப்பிரசவத்தில் தாய், சேய் ஆரோக்கியமாக இருப்பதாக கூறினர்.

    நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு சித்த மருத்துவர்களும் வந்து அந்த தம்பதிக்கு ஆலோசனை வழங்கினர். அதன்பிறகு நச்சுக்கொடி அகற்றப்பட்டது.

    இந்தநிலையில், பிறந்த குழந்தையின் உடல்நிலையை பரிசோதனை செய்ய வேண்டும் என்பது குறித்து குழந்தையின் பெற்றோருக்கு மருத்துவ குழுவினர் ஆலோசனைகள் வழங்கினர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு வருவதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

    அதன்பேரில் நேற்று காலையில் ஆம்புலன்ஸ் மூலம் மகாலட்சுமியும், அவருடைய குழந்தையும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது அவருடைய கணவர் கண்ணனும் உடன் இருந்தார். மகாலட்சுமி மற்றும் அவருடைய குழந்தையை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.

    அப்போது பரிசோதனைக்கு உடன்படுவதாகவும், தங்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்க்கக்கூடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. தொடர்ந்து மருத்துவ குழுவினரின் கண்காணிப்பில் தாயும், குழந்தையும் உள்ளனர். #HomeBirth 
    சீர்காழியில் தேவையான மாத்திரைகள் இல்லாததால் ஆரம்ப சுகாதார நிலையத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    சீர்காழி:

    சீசீர்காழி ஈசானியத்தெருவில் நகர ஆரம்ப சுகாதாரநிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கும், சிகிச்சைப்பெறவும் வந்து செல்கின்றனர். 

    இந்நிலையில் கடந்த கடந்த 25 நாட்களுக்கு மேலாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாமல் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளும், மருத்துவ பரிசோதனைகளுக்கு வரும் கர்ப்பிணி பெண்களும் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் மருத்துவர் இல்லாமல் கடந்த 20நாட்களுக்கு மேலாக அலைக்கழிப்பு செய்வதாலும், சுகர் மாத்திரை உள்ளிட்ட தேவையான மாத்திரைகள் கடந்த 6மாதமாக இருப்பு இல்லாததாலும் ஆவேசமடைந்து மருத்துவமனை முன்பு திடீர் முற்றுகையில் ஈடுபட்டனர். 

    முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை பணியிலிருந்த மருத்துவ செவிலியர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ×