search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாங்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் பயன்பாட்டுக்கு வருமா?
    X

    விளாங்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் பயன்பாட்டுக்கு வருமா?

    • 6 மாதங்களை கடந்தும் இன்று வரை டாக்டரோ, செவிலியர்களோ நியமிக்கப்படவில்லை.
    • ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்

    சிங்காநல்லூர்,

    கோவை பீளமேடு விளாங்குறிச்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக கட்டப்பட்டு வந்தது. இது பணி முடிந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திறந்து வைக்கப்பட்டது. திறக்கப்பட்டு 6 மாதங்களை கடந்தும் இன்று வரை இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டாக்டரோ, செவிலியர்களோ நியமிக்கப்படவில்லை.

    மேலும் சுற்றுச்சுவர்களும் இல்லாமல் கிடப்பதால், அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் மதுவாங்கி கொண்டு இங்கு வந்து அமர்ந்து மது குடிக்கும் நிலை காணப்படுகிறது. எனவே இந்த பகுதியில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×