என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டிலேயே பிரசவம்"

    • சத்யாவின் பெற்றோர்கள் தனது மகளின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவ்வப்போது ஆஸ்பத்திரிக்கு சென்று வருமாறு கூறியுள்ளனர்.
    • சத்யாவுக்கு 20 அல்லது 21-ந்தேதி குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 32). இவர் திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சத்யா (26). இவர்கள் கோபால்பட்டி எல்லை நகரில் வசித்து வருகின்றனர். சத்யா ஓசூரில் உள்ள கல்லூரியில் இளநிலை பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

    கர்ப்பிணியாக இருந்த நிலையில் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அவ்வப்போது உடல் நலம் குறித்து மகப்பேறு டாக்டரிடம் பரிசோதனை செய்து வந்துள்ளார். ஆனால் அவரது கணவர் கஜேந்திரன் இயற்கை முறையில் மட்டுமே குழந்தை பிறக்க வேண்டும். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு செல்லக்கூடாது என தெரிவித்துள்ளார்.

    இதனால் 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலேயே மனைவியை வீட்டுக்கு வரவழைத்தார். கஜேந்திரன் இயற்கை முறை கருத்தரித்தல் குறித்து வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி அதில் உள்ள நண்பர்களிடம் கருத்துகளை கேட்டு வந்துள்ளார். குழுவில் உள்ளவர்கள் அந்த காலத்தில் 10 குழந்தைகள் கூட வீட்டிலேயே இயற்கை முறையில் பிறந்துள்ளது. ஆனால் ஆஸ்பத்திரிக்கு சென்றால் தாய் மற்றும் குழந்தையின் உடல் நிலை பாதிக்கப்படும் என்று கூறி வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது எப்படி என்பது குறித்து கஜேந்திரனுக்கு தெரிவித்துள்ளனர். இருந்தபோதும் சத்யாவின் பெற்றோர்கள் தனது மகளின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவ்வப்போது ஆஸ்பத்திரிக்கு சென்று வருமாறு கூறியுள்ளனர்.

    அதன்படி ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தபோது சத்யாவுக்கு 20 அல்லது 21-ந்தேதி குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று சத்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் அவரது வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது தனது மனைவிக்கு தானே பிரசவம் பார்ப்பேன் என்றும், டாக்டர்கள் யாரும் வர வேண்டாம் என கஜேந்திரன் உறுதியாக கூறி விட்டார். கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் ரெங்கசாமி, அரசு மருத்துவ அலுவலர் பிவின் ஆரோன், டாக்டர் சந்தானகுமார், செவிலியர்கள், சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், கிராமநிர்வாக அதிகாரி சுப்புராஜ் மற்றும் போலீசார் அவர்கள் வீட்டுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் யார் பேச்சையும் கஜேந்திரன் கேட்பதாக இல்லை.

    தனது செல்போனில் வீடியோ கால் செய்து குழுவில் உள்ள அட்மின் தெரிவித்த கருத்தின்படி மனைவி சத்யாவுக்கு கணவர் கஜேந்திரன் பிரசவம் பார்த்தார். இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகாவது தாய் மற்றும் குழந்தையின் நிலை குறித்து பரிசீலிப்பதற்காக வீட்டு முன்பு ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் குழந்தை பிறந்த பிறகு கூட கஜேந்திரன் மருத்துவக்குழுவினரை பார்வையிட அனுமதிக்கவில்லை. குழந்தை பிறந்ததை வீடியோ மூலம் எடுத்து குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு அனுப்பி கஜேந்திரன் பெருமிதம் கொண்டார்.

    இதனிடையே சத்யாவின் தாய் எப்படியாவது தனது மருமகனை பிரசவம் பார்ப்பதில் இருந்து தடுத்து நிறுத்த வேண்டும் என்று சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்தார். ஆனால் அதற்குள் குழந்தை பிறந்த விபரம் தெரியவரவே போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. மதியம் முதல் இரவு வரை யாரையும் அனுமதிக்காமல் கஜேந்திரன் வீட்டை பூட்டிக் கொண்டு குழுவில் உள்ள நபர்களிடமே பேசிக் கொண்டு இருந்தார்.

    இன்று காலை அவரது வீட்டுக்கு சென்ற சுகாதாரக்குழுவினர் சத்யா மற்றும் அவரது குழந்தையை பார்வையிட்டு சோதனை செய்தனர். அப்போது இருவரும் நலமாக இருப்பதை அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டனர். இச்சம்பவம் கோபால்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து திண்டுக்கல் மாவட்ட சுகாதாரக்குழு அதிகாரி டாக்டர் செல்வக்குமார் தெரிவிக்கையில், தமிழகம் முழுவதும் இயற்கை உணவுகள், இயற்கை வாழ்வியல் முறை, இயற்கை முறையில் பிரசவித்தல் குறித்த புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இயற்கை முறையில் டாக்டர்கள் இல்லாமல் பிரசவம் பார்ப்பது குறித்த பரப்புரையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி தமிழகம் முழுவதும் ஒருவித செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது மக்களிடையே அதிகரிக்கும் பட்சத்தில் விபரீத விளைவுகள் ஏற்படும். எனவே மாவட்ட கலெக்டருக்கு இது குறித்து தெரிவித்து அவரது பரிந்துரையின் பேரில் மக்களை தவறான முறையில் வழிநடத்தும் வாட்ஸ்அப் குழுவின் அட்மின் மற்றும் அதில் இடம்பெற்றுள்ளவர்கள் யார்? யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்.

    இனி வரும் காலங்களில் இது போன்று நடைபெறாமல் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

    தேனி அருகே வீட்டில் குழந்தை பெற்றெடுத்த பெண் தனது குழந்தையுடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், ஆங்கில மருத்துவம் பார்க்க வேண்டாம் என பெற்றோர் வேண்டுகோள் விடுத்தனர். #HomeBirth
    தேனி:

    தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டி தென்றல் நகரை சேர்ந்த தனுஷ்கோடி மகன் கண்ணன் (வயது 29). என்ஜினீயர். இவருடைய மனைவி மகாலட்சுமி (25). இவர் எம்.பி.ஏ. பட்டதாரி. இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மகாலட்சுமிக்கு கடந்த 2-ந்தேதி வீட்டிலேயே சுகப்பிரசவம் ஆனது. அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    அவருடைய கணவரே அவருக்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. ஆனால், தொப்புள் கொடியில் இருந்து நச்சுக்கொடியை அகற்றாமல் அவர்கள் இருந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மருத்துவ குழுவினர் நேற்றுமுன்தினம் அவருடைய வீட்டுக்கு சென்று நச்சுக்கொடியை அகற்ற வேண்டும் என்றும், தாய், சேய் நலன் கருதி மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினர். ஆனால், அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இயற்கையாக நடந்த சுகப்பிரசவத்தில் தாய், சேய் ஆரோக்கியமாக இருப்பதாக கூறினர்.

    நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு சித்த மருத்துவர்களும் வந்து அந்த தம்பதிக்கு ஆலோசனை வழங்கினர். அதன்பிறகு நச்சுக்கொடி அகற்றப்பட்டது.

    இந்தநிலையில், பிறந்த குழந்தையின் உடல்நிலையை பரிசோதனை செய்ய வேண்டும் என்பது குறித்து குழந்தையின் பெற்றோருக்கு மருத்துவ குழுவினர் ஆலோசனைகள் வழங்கினர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு வருவதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

    அதன்பேரில் நேற்று காலையில் ஆம்புலன்ஸ் மூலம் மகாலட்சுமியும், அவருடைய குழந்தையும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது அவருடைய கணவர் கண்ணனும் உடன் இருந்தார். மகாலட்சுமி மற்றும் அவருடைய குழந்தையை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.

    அப்போது பரிசோதனைக்கு உடன்படுவதாகவும், தங்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்க்கக்கூடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. தொடர்ந்து மருத்துவ குழுவினரின் கண்காணிப்பில் தாயும், குழந்தையும் உள்ளனர். #HomeBirth 
    தேனி அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகளை மிரட்டிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #HomeBirth
    மேலசொக்கநாதபுரம்:

    தேனி அருகே உள்ள கோடாங்கிப்பட்டி தென்றல் நகரைச் சேர்ந்த தனுஷ்கோடி மகன் கண்ணன் (வயது 27). இவகள் ஜவுளி வியாபாரம் பார்த்து வருகிறார். இவருக்கும் மகாலெட்சுமி (21) என்பவருக்கும் கடந்த 1 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. கண்ணன் தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்.

    மகாலெட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் இன்று காலை அவருக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்தது அக்கம் பக்கத்தில் இருந்தவர்ளுக்கு தெரிய வந்தது. நேற்று இரவு தனது மனைவிக்கு கண்ணன் பிரசவம் பார்த்து ஆண் குழந்தையை எடுத்ததாக அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

    அந்த குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத் தீ போல பரவியதால் அவரது வீட்டுக்கு போலீசாரும், அரசு மருத்துவர்களும் வந்தனர். வீட்டிலேயே பிரசவம் பார்த்தது குறித்து கண்ணனிடம் கேட்டபோது, இது எனது மனைவி மற்றும் என்னுடைய சம்மதத்தின் பேரிலேயே நடந்தது.

    ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்க்க எனக்கு விருப்பம் இல்லை. என் குடும்பத்தில் பெரும்பாலானோர் வீட்டிலேயே பிறந்தவர்கள் தான். தற்போது வரை நாங்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறோம். ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பார்க்கும் பிரசவத்தில் கூட தவறு நடக்கலாம். ஆனால் எங்கள் வீட்டில் நடந்த எந்த பிரசவத்திலும் தவறு நடக்கவில்லை. யாரும் இறந்து போகவும் இல்லை. குழந்தை பெற்றெடுத்த பிறகு என் மனைவி எவ்வித சோர்வும் இல்லாமல் வீட்டு வேலைகளை சுறுசுறுப்பாக செய்து வருகிறார். நான் அவருக்கு சிறிய உதவிகள் மட்டுமே செய்தேன் என்று தெரிவித்தார்.

    கண்ணன் மற்றும் அவரது மனைவியிடம் டாக்டர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து ஊசி போட்டுக் கொள்ளுமாறு கூறினர். அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். மேலும் குழந்தையின் தொப்புள் கொடியையும் அறுக்க எதிர்ப்பு தெரிவித்தனர். தொப்புள் கொடி தானாக விழ வேண்டும். அப்போதுதான் அதில் இருந்து நச்சுப் பொருட்கள் உடலில் சேர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியை தரும் என்று கண்ணனின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

    வீட்டில் பிரசவம் பார்த்து ஏதேனும் விபரீதம் நடந்திருந்தால் பெரியவர்கள்தான் பொறுப்பு என போலீசார் தெரிவித்த போது கண்ணனின் தந்தை தனுஷ்கோடி, தாயார் அழகம்மாள் ஆகியோர் அதிகாரிகளை தரக்குறைவாக பேசினார். இதனால் போலீசாருக்கும் கண்ணன் குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    டாக்டர்கள் மற்றும் போலீசாரை தரக்குறைவாக பேசியது மற்றும் அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது போன்ற குற்றத்துக்காக கண்ணன், அவரது தந்தை தனுஷ்கோடி தாயார் அழகம்மாள் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து தனுஷ்கோடியை போலீசார் கைது செய்தனர்.

    மருத்துவர்களின் நீண்ட நேர அறிவுரைக்கு பிறகு மகாலெட்சுமி மற்றும் அவரது குழந்தையை டாக்டர்கள் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.

    திருப்பூர் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு யூ-டியூப் மூலம் வீடியோவை பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தேனி அருகே நடந்த இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #HomeBirth
    ×