search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ்"

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 சீரிஸ் ஐம்பது லட்சம் யூனிட்கள் விற்பனை செய்திருப்பதாக சியோமி அறிவித்துள்ளது.




    இந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போன்களை வாங்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வரும் நிலையில், குற்றம் சுமத்துவோரை சோதிக்கும் வகையில் சியோமியின் புதிய அறிவிப்பு அமைந்திருக்கிறது.

    ரெட்மி நோட் 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை நான்கே மாதங்களில் 50 லட்சம் யூனிட்களை கடந்து இருப்பதாக சியோமி தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் இந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சியோமி அறிமுகம் செய்தது.

    சியோமி ரெட்மி நோட் 5 விலை ரூ.9,999, ரெட்மி நோட் 5 ப்ரோ விலை ரூ.13,999 என நிர்ணயம் செய்யப்பட்டது. பின் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதும், ரெட்மி நோட் 5 ப்ரோ விலை ரூ.1,000 அதிகரிக்கப்பட்டது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் மெல்லிய பெசல்கள், 18:9 ரக டிஸ்ப்ளே, செல்ஃபி லைட் மாட்யூல், 4,000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய விற்பனை சாதனையின் மூலம் ரெட்மி நோட் 5 சீரிஸ் இந்தியாவின் அனைத்து வித தளங்களிலும் அதிவேகமாக ஐம்பது லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்த மொபைல் போன் சீரிஸ் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. 



    "ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ மாடல்களின் அனைத்து வேரியன்ட்களும் சியோமி ப்ரியர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ மாடல்களை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் வகையில் உற்பத்தியை அதிகரிக்க கடினமாக பணியாற்றி வருகிறோம்," என சியோமி வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரெட்மி நோட் 5 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வாரம் கழித்தே முதல் ஃபிளாஷ் விற்பனை துவங்கியது. மூன்று நிமிடங்கள் நடைபெற்ற முதல் ஃபிளாஷ் விற்பனையில் சுமார் 3,00,000 அதிக ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ யூனிட்களை விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனையாகி வரும் நிலையில், ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் தொடர்ந்து ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

    முன்னதாக சியோமி அறிமுகம் செய்த ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போனாக உருவெடுத்தது. அறிமுகமான ஒரே வருடத்தில் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்கள் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையானதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    ஆடி நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை கியூ5 எஸ்.யு.வி. பெட்ரோல் வேரியன்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.




    ஜெர்மன் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான ஆடி தனது இரண்டாம் தலைமுறை கியூ5 எஸ்.யு.வி. மாடல் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. டீசல் இன்ஜின் கொண்ட கியூ5 மட்டும் அறிமுகமான நிலையில், ஆடி கியூ5 பெட்ரோல் வேரியன்ட் இன்று இந்தியாவில் அறிமுகமாக செய்யப்பட்டது.

    ஏற்கனவே ஆடி கியூ7 பெட்ரோல் வேரியன்ட் 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், 2020-ம் ஆண்டு வாக்கில் அதிக பெட்ரோல் கார்களை விற்பனை செய்ய ஆடி திட்டமிட்டிருக்கிறது. இரண்டாம் தலைமுறை கியூ5 எஸ்.யு.வி. ஆடி 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்த முதல் தலைமுறை மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய ஆடி கியூ 5 டீசல் வேரியன்ட் 2.0 லிட்டர் TFSI பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜின் 248 பி.ஹெச்.பி. பவர், 370 என்.எம். டார்கியூ மற்றும் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. 

    முந்தைய மாடலை விட பெரிதாக காட்சியளிக்கும் புதிய ஆடி கியூ5 உள்புறத்தில் 12.3 இனஅச் டி.எஃப்டி டிஸ்ப்ளே, 8.3 இன்ச் டிஸ்ப்ளே டேஷ்போர்டில் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் இருக்கைகள் பெய்க்-நிறத்திலான லெதர் மற்றும் பெரிய பானாரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் டைனமிக், ஆட்டோ, கம்ஃபர்ட், இன்டிவிடுவல் மற்றும் ஆஃப்ரோடு போன்ற டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது. புதிய மாடலில் அடாப்டிவ் சஸ்பென்ஷன் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டும் போது ஹேன்ட்லிங் மற்றும் அனுபவத்தை சிறப்பாக வழங்கும். 

    இந்தியாவில் ஆடி கியூ5 பெட்ரோல் வேரியன்ட் விலை ரூ.55.27 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    மகாராஷ்டிராவில் விருந்து நிகழ்ச்சியின்போது உணவு சாப்பிட்டு 5 பேர் பலியானதற்கு காரணமான, பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
    ராய்காட்:

    மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் காலாப்பூர் அருகே உள்ள மகத் கிராமத்தில் கடந்த 18-ம் தேதி சுபாஷ் மானே என்பவரின்  வீட்டு கிரகப்பிரவேசம்  நடைபெற்றது. இதையொட்டி அப்பகுதியில் உள்ள கோவில் வளாகத்தில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு தலைசுற்றல், வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது. பெரியவர்களுக்கும் வயிற்று உபாதை ஏற்பட்டு வலியால் அவதிப்பட்டனர். பாதிக்கப்பட்ட அனைவரையும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 4 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். சுமார் 120 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர்.

    இந்த சம்பவம் குறித்து காலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீட்டு உரிமையாளர் மீது பொறாமை கொண்ட நபர்கள், உணவில் விஷம் கலந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில், பிரத்னியா (வயது 23) என்ற பெண்ணை பிடித்து விசாரித்ததில், அதிர்ச்சி தகவல் வெளியானது.

    சுபாஷ் மானேவின் நெருங்கிய உறவினரான அந்த பெண் கோபோலியைச் சேர்ந்தவர். இவர், குடும்ப சண்டை காரணமாக தன் கணவர், மாமியார், 2 நாத்தனார்கள் மற்றும் சுபாஷ் மானே குடும்பத்தினரைத் தீர்த்துக் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்காக விருந்தின்போது பறிமாறப்பட்ட குழம்பில் பூச்சி மருந்தை கலந்துள்ளார். விஷம் கலந்ததை ஒப்புக்கொண்டதையடுத்து பிரத்னியாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். #FoodPoisoningDeath
    ஆடி நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை கியூ5 எஸ்.யு.வி. மாடலின் பெட்ரோல் வேரியன்ட் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.





    ஜெர்மன் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான ஆடி தனது இரண்டாம் தலைமுறை கியூ5 எஸ்.யு.வி. மாடலை இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. டீசல் இன்ஜின் கொண்ட கியூ5 மட்டும் அறிமுகமாகி இருக்கும் நிலையில், ஆடி கியூ5 பெட்ரோல் வேரியன்ட் ஜூன் 28-ம் தேதி அறிமுகமாக இருக்கிறது.

    முன்னதாக கியூ7 பெட்ரோல் வேரியன்ட் 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், 2020-ம் ஆண்டு வாக்கில் அதிக பெட்ரோல் கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறது. இரண்டாம் தலைமுறை கியூ5 எஸ்.யு.வி. ஆடி 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்த முதல் தலைமுறை மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது.

    இரண்டாம் தலைமுறை ஆடி கியூ5 மாடல் MLB இவோ பிளாட்ஃபார்ம் சார்ந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் தற்போதைய மாடலை விட இதன் எடை 100 கிலோ வரை குறைக்கப்பட்டிருக்கிறது. புதிய கியூ5 மாடலில் நீண்ட வீல்பேஸ் மற்றும் உயரமாக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்த வடிவமைப்பு கூர்மையாக்கப்பட்டு, முன்பக்கம் சிங்கிள்-ஃபிரேம் கிரில், மேட்ரிக்ஸ் ஹெட்லேம்ப் மற்றும் ஸ்போர்ட் பொனெட் கொண்டுள்ளது.



    முந்தைய மாடலை விட பெரிதாக காட்சியளிக்கும் புதிய ஆடி கியூ5 உள்புறத்தில் 12.3 இனஅச் டி.எஃப்டி டிஸ்ப்ளே, 8.3 இன்ச் டிஸ்ப்ளே டேஷ்போர்டில் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் இருக்கைகள் பெய்க்-நிறத்திலான லெதர் மற்றும் பெரிய பானாரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஆடி கியூ 5 டீசல் வேரியன்ட் 2.0 லிட்டர் TDI இன்ஜின் கொண்டிருக்கிறது. 

    இந்த இன்ஜின் 190 பி.எஸ். 400 என்.எம். டார்கியூ மற்றும் 7-ஸ்பீடு எஸ்-டிரானிக் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. புதிய ஆடி கியூ5 மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 7.9 நொடிகளில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ARAI சான்று பெற்றிருப்பதால் லிட்டருக்கு 17.01 கிலோமீட்டர் செல்லும் என ஆடி தெரிவித்தது.

    இத்துடன் டைனமிக், ஆட்டோ, கம்ஃபர்ட், இன்டிவிடுவல் மற்றும் ஆஃப்ரோடு போன்ற டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது. புதிய மாடலில் அடாப்டிவ் சஸ்பென்ஷன் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டும் போது ஹேன்ட்லிங் மற்றும் அனுபவத்தை சிறப்பாக வழங்கும். 
    கார்மின் நிறுவனத்தின் ஃபீனிக்ஸ் 5எஸ் சீரிஸ் மல்டிஸ்போர்ட் ஜிபிஎஸ் வாட்ச் மாடல்கள் - 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் மாடல்கள் அறிமுகம்.




    கார்மின் நிறுவனம் ஃபீனிக்ஸ் 5 சீரிஸ் மல்டிஸ்போர்ட் ஜிபிஎஸ் வாட்ச்களை அறிமுகம் செய்துள்ளது. 

    கார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்களில் பில்ட்-இன் ரூட் செய்யக்கூடிய டோபோகிராஃபிக்கல் மேப்ஸ், மியூசிக் பிளேலிஸ்ட்களுக்கான ஸ்டோரேஜ், கார்மின் பே கான்டாக்ட்லெஸ் பேமென்ட் வசதி, ரிஸ்ட் சார்ந்த பல்ஸ் ஆக்சிமீட்டர் வசதி வழங்கப்பட்டுள்ளது. 42 மில்லிமீட்டர் முதல் 51 மில்லிமீட்டர் அளவுகளில் கிடைக்கும் ரக்கட் ஸ்மார்ட்வாட்ச்களை நேரடி சூரிய வெளிச்சத்திலும் சிரமமின்றி பயன்படுத்தக்கூடிய டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருக்கிறது.

    முந்தைய ஃபினிக்ஸ் 5 மாடல்களை போன்று புதிய ஸ்மார்ட்வாட்ச்களிலும் ரிஸ்ட்-சார்ந்த ஹார்ட் ரேட், மல்டிஸ்போர்ட் மற்றும் ஸ்மார்ட் கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மேப்களை கொண்டு ரவுன்ட்-ட்ரிப் கோர்ஸ் க்ரியேட்டர் எனும் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இதை கொண்டு மேப்களில் வழங்கப்பட்டு இருக்கும் வழித்தடங்களில் ஓட்டப்பயிற்சி அல்லது சைக்கிள் பயணங்களை மேற்கொள்ள முடியும்.

    வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளை டிராக் செய்து அவற்றை மேம்படுத்தும் அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் டிரெயினிங் ஸ்டேட்டஸ்-களை தானாக மதிப்பீடு செய்து, சில சமயங்களில் அதீத பயிற்சி செய்யும் போது, வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும். கனெக்ட் ஐகியூ கொண்டிருப்பதால், பயனர்கள் தங்களது வாட்ச்-இன் விட்ஜெட்கள், டேட்டா ஃபீல்டுகள், வாட்ச் ஃபேஸ்கள் மற்றும் ஆப்ஸ்களை கஸ்டமைஸ் செய்ய முடியும்.

    ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட்டால், பயனர்கள் அழைப்பு, குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் நோட்டிஃபிகேஷன்களை தங்களது வாட்ச்-இல் பெற முடியும். இவை மல்டி-நெட்வொர்க் சாட்டிலைட் வசதியை கொண்டிருப்பதால், ஜிபிஎஸ் இல்லாத இடங்களிலும் சிறப்பான சேவையை இது வழங்குகிறது.



    கார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 1.2 இன்ச் 240x240 பிக்சல் சன்லைட்-விசிபிள், டிரான்ஸ்ஃப்ளெக்டிவ் மெமரி-இன்-பிக்சல் டிஸ்ப்ளே
    - சிறிய மல்டிஸ்போர்ட் ஜிபிஎஸ் ஸ்மார்ட்வாட்ச், இதயதுடிப்பு தொழில்நுட்பம்
    - ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெசல், பட்டன்கள் மற்றும் ரியர் கேஸ்
    - வாட்ச்-இல் 500 பாடல்களை சேமிக்கும் வசதி
    - ப்ளூடூத் ஹெட்போன்களுடன் இணைக்கும் வசதி
    - கார்மின் பே கான்டாக்ட்லெஸ் பேமென்ட் வசதி
    - நேவிகேஷன் சென்சார்கள் 
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
    - ரிஸ்ட்-சார்ந்த ஆக்சிமீட்டர்
    - ஸ்மார்ட்வாட்ச் மோடில் 7 நாள் பேக்கப் வழங்கும் பேட்டரி

    பிவிடி-கோட்டிங் செய்யப்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெசல் கொண்டிருக்கும் ஃபீனிக்ஸ் 5 பிளஸ் சீரிஸ் வாட்களில் சிலிகான் வாட்ச் பேன்ட் மற்றும் டைட்டானியம் பிரேஸ்லெட் வெர்ஷனில் டைட்டானியம் பெசல் வழங்கப்பட்டிருக்கிறது. இவற்றின் விலை 699.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.47,735) முதல் துவங்கி 1149.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.78,480) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    அணுஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை பாய்ந்து செல்லக்கூடிய நவீன ‘அக்னி-5’ ரக ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது. #AgniV #AbdulKalamisland
    புவனேஸ்வர்:

    அணுஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை பாய்ந்து செல்லக்கூடிய நவீன ‘அக்னி-5’ ரக ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது.

    இந்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மூன்றுகட்ட உந்துதல் செயல்பாட்டுடன் 1.5 டன் எடையை சுமந்துச் செல்லக்கூடிய வகையில் 17 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் கொண்ட ‘அக்னி–5' ரக ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.

    அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று எதிரிகளின் இலக்குகளை அழிக்கும் இந்த 'அக்னி–5' ஏவுகணைகள் சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை, கண்டம்விட்டு கண்டம் பாய்ந்துச் சென்று தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள பலசோர் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள அப்துல் கலாம் தீவில் (பழைய பெயர் வீலர் தீவு) இருந்து இன்று காலை 9.48 மணியளவில் 'அக்னி–5' ஏவுகணை பரிசோதித்து பார்க்கப்பட்டது.

    இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும், நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை குறிதவறாமல் 'அக்னி–5' பாய்ந்து தாக்கி, அழித்ததாகவும் தெரியவந்துள்ளது. #AgniV #AbdulKalamisland
    திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் யானை தாக்கி இறந்த பாகன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை: 

    திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மசினி என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை மண்ணச்சநல்லூரை சேர்ந்த பாகன் கஜேந்திரன் என்பவர் பராமரித்து வந்தார்.

    கடந்த 25-ம் தேதியன்று கோவில் யானை மசினி தாக்கியதில் பாகன் கஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்நிலையில், சமயபுரம் கோவில் யானை தாக்கி உயிரிழந்த பாகன் குடும்பத்துக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி ரூ. 5 லட்சம் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார்.  

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமயபுரம் கோவில் யானை மசினி தாக்கியதில் உயிரிழந்த பாகன் கஜேந்திரன் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், யானை தாக்கி உயிரிழந்த பாகன் கஜேந்திரனின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். #Tamilnews
    சீன ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான ரெட்மி நோட் 5 ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.999 விலையில் வாங்குவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 5 மற்றும் நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் எக்சேஞ்ச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்தால் அதிகபட்சம் ரூ.11,000 வரை தள்ளுபடி பெற முடியும்.

    ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என இருவித மெமரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் விலை முறை ரூ.9,999 மற்றும் ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்து 64 ஜிபி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.11,000 தள்ளுபடியும், 32 ஜிபி மாடல் வாங்குவோருக்கு ரூ.9,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.



    ப்ளிப்கார்ட் தளத்தில் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்வோருக்கு ஒவ்வொரு மாடலுக்கும் குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்சேஞ்ச் சலுகை தவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5% தள்ளுபடி மற்றும் மாத தவனை முறை வசதியும் வழங்கப்படுகிறது.

    இதேபோன்று ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் 64 ஜிபி மாடல் விலை ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோர் பழைய ஸ்மாக்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.14,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5% தள்ளுபடி மற்றும் மாத தவனை முறை வசதியும் வழங்கப்படுகிறது.

    ப்ளிப்கார்ட் மட்டுமின்றி ரெட்மி நோட் 5 மற்றும் நோட் 5 ப்ரோ வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ சார்பில் ரூ.2,200 வரை கேஷ்பேக் வழங்கபப்டுகிறது. கேஷ்பேக் தொகை ரூ.50 மதிப்புள்ள 44 வவுச்சர்களாக வழங்கப்படும். இவை மைஜியோ செயலியில் நேரடியாக சேர்க்கப்பட்டு விடும்.
    ×