search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cm palanisami"

    திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் யானை தாக்கி இறந்த பாகன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை: 

    திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மசினி என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை மண்ணச்சநல்லூரை சேர்ந்த பாகன் கஜேந்திரன் என்பவர் பராமரித்து வந்தார்.

    கடந்த 25-ம் தேதியன்று கோவில் யானை மசினி தாக்கியதில் பாகன் கஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்நிலையில், சமயபுரம் கோவில் யானை தாக்கி உயிரிழந்த பாகன் குடும்பத்துக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி ரூ. 5 லட்சம் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார்.  

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமயபுரம் கோவில் யானை மசினி தாக்கியதில் உயிரிழந்த பாகன் கஜேந்திரன் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், யானை தாக்கி உயிரிழந்த பாகன் கஜேந்திரனின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். #Tamilnews
    ×