என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அறுவை சிகிச்சை"
- அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார்.
- விரைவில் சொந்த காலில் நிற்க ஆசை என முகமது சமி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய டெஸ்ட் அணியில் முகமது சமி இடம் பெற்றிருந்தது. ஆனால் காயம் காரணமாக அந்த தொடரிலிருந்து விலகினார்.
அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி 3 போட்டிகளில் அவர் விளையாடுவார் என கூறப்பட்டது. ஆனால் காயம் குணமடையாததால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்தும் முகமது சமி விலகினார். இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்வதற்காக சமி ஜனவரி மாதம் லண்டன் சென்றார்.
இந்நிலையில் கணுக்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் சரியாக சில நாட்கள் ஆகும். விரைவில் சொந்த காலில் நிற்க ஆசைபடுவடுவதாகவும் சமி தெரிவித்தார்.
இதனால் அவர் ஐபிஎல் தொடரை இலக்க நேரிடும். மேலும் டி20 உலகக் கோப்பை தொடருக்குள் அவர் களமிறங்க வாய்ப்பு இருக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி முகமது சமி சாதனை படைத்தார்.
- நரம்பை ஒட்டியே இந்த கட்டி பெரும்பாலும் உண்டாகும்.
- ஆய்வுகள் இன்றைக்கும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
உடம்பில் ஆங்காங்கே சிறுசிறு கட்டிகளாக வரும் கொழுப்புக் கட்டிகளை, நியூரல் பைப்ரோலைப்போமா' என்று மருத்துவ உலகில் சொல்லுவார்கள். கொழுப்பும் நார்த்தன்மையும் சேர்ந்த திசுக்களின் அதிகப்படியான வளர்ச்சியே இந்த கட்டியாகும். உடம்பில், நரம்புகளின் ஓடுபாதையில், நரம்பை ஒட்டியே இந்த கட்டி பெரும்பாலும் உண்டாகும். இந்தக்கட்டிகள் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வரும். இந்தக் கட்டி ஏன் வருகிறது, எதனால் வருகிறது என்ற ஆய்வுகள் இன்றைக்கும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
கொழுப்பை அதிகமாக சாப்பிட்டதால் தான், அது மொத்தமாக உடலின் பல இடங்களில் திரண்டு கொழுப்புக் கட்டிகளாக உருவாகிறது என்று சொல்வதுண்டு. உடலில் காயங்கள் ஏற்பட்ட பிறகுதான் இந்த கட்டி உருவாகிறது என்ற பேச்சும் உண்டு. தோலுக்கு அடியில் இருக்கும் இந்த கொழுப்புக்கட்டியை அப்படியே விட்டுவிட்டால், புற்றுநோய் கட்டியாக மாறிவிடும் என்றும் சொல்வ துண்டு. இவையெல்லாம் உண்மையில்லை.
பெரும்பாலும் 30 வயதுக்குட்பட்ட வர்களுக்கே வரும் இந்த கட்டி சில நேரங்களில், சில பேருக்கு கட்டியைச் சுற்றி வலியும், மரத்துப்போவதும் உண்டு. உடலுக்கு எதுவும் தொந்தரவு கொடுக்காமல் அமைதியாக இருக்கும் வரை அப்படியே விட்டுவிடுவது நல்லது. கட்டி பெரிதானாலோ, வலி உண்டானாலோ, அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது தான் இதற்கு இறுதித் தீர்வு.
ஒன்று, இரண்டு என்று இருந்தால் அகற்றி விடலாம். உடல் முழுக்க இருந்தால் எப்படி அறுவை சிகிச்சை செய்து கொள்வது என்று நீங்கள் யோசிக்கலாம். தொந்தரவு பண்ணுவதை மட்டும் அகற்றுங்கள். மீதியை அப்படியே விட்டுவிடுங்கள். மாற்று மருத்துவத்தில் சில நேரங்களில், சில பேருக்கு பலன்கள் கிடைப்பதுண்டு. ஆனால் அதை உறுதியாகக் கூற முடியாது.
கட்டியைச் சுற்றி மரத்துப்போனாலோ, வலி எடுத்தாலோ, உடனே உங்கள் குடும்ப டாக்டரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.
- கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
- சந்திரசேகர் ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தனது வீட்டின் குளியலறைக்கு சென்ற போது திடீரென வழுக்கி விழுந்தார். கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக அவருக்கு இடதுபுற இடுப்பு எலும்பு மாற்றப்பட வேண்டும் என்றும், இது முழுமையாக குணமடைய ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, சந்திரசேகர் ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், மருத்துவமனைக்கு நேரில் சென்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திரா மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் சந்திரசேகர் ராவை சந்தித்து நலம் விசாரித்தார்.
இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் நலம் விசாரித்தனர்.
தற்போது அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் கட்சியின் தேசிய தலைவருமான சந்திரசேகரராவ் ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக முகாம் அலுவலகத்தில் குடும்ப நல அறுவை சிகிச்சையில் விழுப்புரம் மாவட்டம் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்ததை தொடர்ந்து துணை இயக்குனர் (குடும்ப நலம்) டாக்டர் மணிமேகலை, மற்றும் துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர் செந்தில்குமார், மற்றும் டாக்டர்கள் மாவட்ட கலெக்டர் பழனி யை நேரில் சந்தித்து கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். இதில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் லட்சுமணன் உட்பட பலர்கலந்து கொண்டனர்.
- குழந்தை தொடர் இருமல் மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டது.
- குழந்தைகள் விளையாடும் போது பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்ட யம் பகுதியை சேர்ந்த 7 மாத குழந்தைக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அந்த குழந்தை தொடர் இருமல் மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டது. இதையடுத்து அந்த குழந்தையை கோட்டயத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை டாக்டர்கள் பரிசோதித்ததில், குழந்தையின் நுரையீரலின் கீழ் பகுதியில் ஏதோ ஒரு பொருள் சிக்கியிருப்பதை கண்டறிந்தனர். அதனால் தான் குழந்தைக்கு தொடர் இருமல் ஏற்பட்டது மட்டுமின்றி, மூச்சுத்திணறலும் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து குழந்தைக்கு மூச்சுக்குழாய் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் குழந்தையின் வலது நுரையீரலில் சிவப்பு நிற சிறிய எல்.இ.டி.பல்ப் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து உடனடியாக அகற்றினர்.
இதன்மூலம் அந்த குழந்தையை டாக்டர்கள் காப்பாற்றினர். குழந்தை விளையாடிய பொம்மை யில் இருந்து எல்.இ.டி. பல்ப் தெரியாமல் வாய் வழியாக உடலுக்குள் சென்றிருக்கலாம் என்றும், இதுபோன்ற நிகழ்வு மிகவும் அரிதாக நடக்கக்கூடியது எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
குழந்தைகள் விளையாடும் போது பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். உயிருக்கு ஆபத்தில்லாத விளையாட்டு பொருட்களையே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுத்து பார்த்தபோது மாற்றுத்திறனாளி வயிற்றில் பாட்டில் இருப்பதை பார்த்து டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- வயிற்றுக்குள் இருந்தது கண்ணாடியாலான குளிர்பான பாட்டில் என்பது தெரியவந்தது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரை சேர்ந்தவர் 45 வயதுடைய வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர், தனது ஆசனவாயிலில் இருந்து ரத்தம் வருவதாக கூறி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அவரது நடவடிக்கை இயல்புக்கு மாறாக காணப்பட்டது.
அதைதொடர்ந்து டாக்டர்கள் மாற்றுத்திறனாளியை பரிசோதனை செய்தனர். மேலும் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுத்து பார்த்தபோது மாற்றுத்திறனாளி வயிற்றில் பாட்டில் இருப்பதை பார்த்து டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது வயிற்றுக்குள் இருந்தது கண்ணாடியாலான குளிர்பான பாட்டில் என்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி டீன் ராஜ்மோகன் ஆலோசனையின்படி, அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நிர்மலாதேவி தலைமையில், டாக்டர்கள் குழு மாற்றுத்திறனாளியை முழு பரிசோதனை செய்து அவரது வயிற்றில் இருக்கும் பாட்டிலை எப்படி அகற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசித்தனர்.
மேலும் அவரது உடலில் வேறு தொந்தரவு உள்ளதா என்பதையும் பரிசோதனை செய்தனர். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுமார் 2 மணிநேரம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின் மாற்றுத்திறனாளி வயிற்றில் இருந்து பாட்டிலை வெளியே எடுத்தனர். மேலும் மாற்றுத்திறனாளி வயிற்றுக்குள் எப்படி பாட்டில் சென்றது என்பது குறித்து டாக்டர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மாற்றுத்திறனாளி தனது ஆசனவாயிலில் அவரே பாட்டிலை சொருகிக் கொண்டதாக சைகையிலேயே போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர் சைகை மூலமாக காட்டியது உண்மையா? அல்லது வேறு ஏதும் காரணமா? எப்படி அவர் வயிற்றுக்குள் பாட்டில் சென்றது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உடனடியாக அவனது பெற்றோர் விஜயவாடாவில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- சி.ஆர்ம் எக்ஸ்ரே என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, நவீன அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
தெலுங்கானா மாநிலம், கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், இவரது மனைவி துர்கா தம்பதியின் மகன் நெகன் ஆர்யா(வயது 7).
இவனுக்கு சில நாட்களுக்கு முன், கடும் வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டது. உடனடியாக அவனது பெற்றோர் விஜயவாடாவில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு மருத்துவர்கள் நெகனின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தனர்.
அப்போது உருண்டை வடிவிலான பல பொருட்கள் இருப்பது தெரியவந்தது. பெற்றோரிடம் விசாரித்த போது, சிறிய காந்த உருண்டைகள் கொண்ட பொம்மைகளை வைத்து அவன் விளையாடுவது வழக்கம் என தெரிவித்தனர்.
இதையடுத்து, சி.ஆர்ம் எக்ஸ்ரே என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, நவீன அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. சிறுகுடல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50 காந்த உருண்டைகள் வெளியே எடுக்கப்பட்டன.
பின்னர் சில மணிநேரம் ஐ.சி.யு வார்டில் முழு கண்காணிப்பில் வைத்தனர். இப்போது, சிறுவன் நெகன் ஆர்யா முழுமையாக குணமடைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
திருவனந்தபுரம் :
திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை பல்வேறு சிறப்பு சிகிச்சைகளை செய்து வருகிறது. இங்கு கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சைப் பிரிவு கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு 10-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கிம்ஸ்ஹெல்த்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் சஹதுல்லா விழா வை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சுகாதார துறையின் மிக முக்கிய அம்சங்களுள் ஒன்றாக உடலுறுப்பு தானம் கருதப்பட வேண்டும். சமுதாயத்திற்கு ஒவ்வொரு தனிநபரும் கொண்டிருக்கும் அக்கறை மற்றும் பொறுப்புறுதியின் வழியாக ஒவ்வொரு உறுப்புதான செயல்பாடும் நிகழ்கிறது. உறுப்புதானம் செய்வதற்கு தங்களது விருப்பத்தை தாராள மனதுடன் வெளிப்படுத்த அதிக எண்ணிக்கை யிலான நபர்கள் முன்வர வேண்டும்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் மிக உயர்ந்த அளவிலான வெற்றி விகி தத்தை கிம்ஸ்ஹெல்த் மருத் துவமனை கொண்டிருக்கி றது. கிம்ஸ்ஹெல்த், முதன் முதலில் கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சையினை 2013 ஜுலை 23-ந்தேதி அன்று வெற்றிகரமாக மேற் கொண்டது. அதைத் தொடர்ந்து, இதுவரை 120-க்கும் அதிகமான கல்லீரல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செயல்முறைகளை இது வெற்றிகரமாக செய்தி ருக்கிறது. கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய இரண்டை யும் ஒருங்கிணைந்த செயல் பாட்டை மேற்கொண்டது.
பிரிக்கப்பட்ட கல்லீரலின் மூலம் உறுப்பு மாற்று சிகிச்சை, டயாலிசிஸ் உடன் சேர்த்து கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சை மற்றும் மிகக்குறைவான உடல் எடை கொண்ட குழந்தைக்கு உறுப்பு மாற்று சிகிச்சை ஆகிய சாதனை நிகழ்வுகளை கேரளா மாநிலத்தில் வெற்றிகரமாக நிகழ்த்திய முதல் மருத்துவமனை என்ற பெருமையை கிம்ஸ்ஹெல்த் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவானது உறுப்புதானம் அளித்த வர்கள் மற்றும் உறுப்புதானம் பெற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒருங்கிணைந்த மனதை நெகிழச்செய்யும் விதமாக அமைந்தது. உறுப்புதானம் பெற்ற 160 பேர் ஆர்வத் தோடு கலந்துகொண்டனர்.
6 பேருக்கு தனது உடலு றுப்புகளை தானமாக வழங்கிய 16 வயதான சாரங் மற்றும் இரு கண்களையும், சிறுநீரகங்களையும் தானமாக வழங்கிய சரத் கிருஷ்ணன் ஆகியோரது குடும்பங்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றன. அவர்கள் விழாவில் கவுரவிக்கப்பட்ட னர்.
கிம்ஸ் ஹெல்த்தில் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை மேறெ் கொள்ளப்பட்ட 10 வயதான ஆன் மேரி என்ற சிறுமி, அவளது கைவினை திறன் களை வெளிப்படுத்தும் தயாரிப்புகளின் கண்காட்சி யை நடத்தினாள். மேலும் டாக்டர் சஹதுல்லாவுக்கு இதய வடிவில் தாளினால் உருவாக்கப்பட்ட அழகான மாலையை அச்சிறுமி வழங்கினாள்.
நிகழ்ச்சியில் கிம்ஸ் ஹெல்த்தின் துணைத்தலை வர் டாக்டர் விஜயராகவன், கேரளா கல்லீரல் பவுண்டே ஷனின் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கல்லீரல், கணையம் மற்றும் ஈரல் பித்தக்கால்வாய் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறையின் தலை மை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் சபீர்அலி வரவேற்று பேசினார்.
மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பா ளரும், உறுப்புமாற்று சிகிச்சையின் ஒருங்கிணைப் பாளருமான டாக்டர் பிரவீன் முரளிதரன், நன்றி கூறினார்.
இதில் இரையக்குடலியல் துறையின் முதுநிலை நிபுணர்கள் டாக்டர் மது சசிதரன் மற்றும் டாக்டர் அஜித் கே. நாயர், கல்லீரல், கணையம் மற்றும் பித்தக் கால்வாய் துறையின் நிபு ணர்கள் டாக்டர்கள் வர்கீஸ் ஹெல்டோ மற்றும் ஸ்ரீஜித், மயக்க மருந்தியல் துறையின் நிபுணர் டாக்டர் ஹஷிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டது.
- கை, கால்கள் மீண்டும் செயல்பட்டு பழைய நிலைக்கு திரும்பி உள்ளார்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (40) கூலி தொழிலாளி. இவர் கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதி தனது வீட்டு மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டு கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டு, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு, கை, கால்கள் செயலிழந்து மயக்க நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கல்லூரி டீன் கீதாஞ்சலி தலைமையில் எலும்பியல் துறை தலைவர் அறிவழகன் ,டாக்டர்கள் அஞ்சன் ராமச்சந்திரநாத், விக்ரம், பொன்னப்பன், மயக்கவியல் நிபுணர்கள் டாக்டர்கள் செந்தில்குமார், தோசிப் சுப்பிரமணியம், மணிகண்டன் மற்றும் செவிலியர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் கடந்த ஜூலை மாதம் 8-ந் தேதி முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்து கழுத்து எலும்பில் பிளேட் பொரு த்தினர். இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டதன் பேரில் தற்போது கை, கால்கள் மீண்டும் செயல்பட்டு பழைய நிலைக்கு திரும்பி உள்ளார். தற்பொழுது அவர் முழுமையாக குணமாகி எவ்வித துணையும் இன்றி தனியாக நடக்கின்றார்.
இது போன்ற மருத்துவ சிகிச்சையை வெளியே தனியார் மருத்து வமனையில் செய்தால் ரூபாய் 3.5 லட்சம் செலவாகும்.மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் இது போன்ற அறுவை சிகிச்சைகளுக்கு அரசு மருத்துவமனையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி தெரிவித்தார். உண்டு உைறவிட டாக்டர் ரவிக்குமார், துணை உண்டு உறைவிட டாக்டர் வெங்கடேசன், நிர்வாக அலுவலர் சிங்காரம் மற்றும் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் குழுவினர் உடன் இருந்தனர்.
- முகாமில் பங்கேற்றவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்றது.
- ஏற்பாடுகளை நிர்வாகிகள் சிவகுருநாதன், ராஜகுரு, சக்திவேல், முருகன், அமுதா செய்திருந்தனர்.
கடலூர்:
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, தி.மு.க., சார்பில் கடலுார், மஞ்சக்குப்பம் வரதம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் 10 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முகாமில் பங்கேற்ற வர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்றது.விழாவிற்கு டாக்டர் பிரவீன் அய்யப்பன் தலைமை தாங்கினார். விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 100 பேருக்கு 1 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பிலான கண் கண்ணாடிகளை வழங்கி னார். விழாவில், முன்னாள் மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா குண சேகரன், பிரகாஷ், சரத் தினகரன், தமிழரசன், சுமதி ரங்கநாதன், மகேஸ்வரி விஜயன், ராதிகா பிரேம்குமார், கீர்த்தனா ஆறுமுகம், பாரூக் அலி, கர்ணன், அரசு காண்டிராக்டர் ராஜசேகர், முன்னாள் ஊராட்சித் தலைவர் சுதாகர் ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நிர்வாகிகள் சிவகுருநாதன், ராஜகுரு, சக்திவேல், முருகன், அமுதா செய்திருந்தனர்.
- வாலிபரின் வயிற்றில் இருந்து எண்டோஸ்கோபி கருவி மூலம் 13 ஹேர்பின், 5 ஊக்குகள், 5 பிளேடுகள் உள்ளிட்ட இரும்பு பொருட்களை அகற்றினர்.
- வாலிபரின் வயிற்றில் இருந்து இரும்பு பொருட்கள் அகற்றிய பின்னர் வாலிபர் வழக்கமான உணவுகளை சாப்பிட தொடங்கியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு 20 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரை கடும் வயிற்றுவலி காரணமாக சிகிச்சை பெற அவரது உறவினர்கள் அழைத்து வந்தனர்.
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவ குழுவினர் அந்த வாலிபரின் வயிற்றில் பிளேடு, ஹேர்பின், ஊக்குகள் குவியலாக இருப்பதை கண்டு அதிர்ந்து போனார்கள்.
தொடர்ந்து அந்த வாலிபரின் வயிற்றில் இருந்து எண்டோஸ்கோபி கருவி மூலம் 13 ஹேர்பின், 5 ஊக்குகள், 5 பிளேடுகள் உள்ளிட்ட இரும்பு பொருட்களை அகற்றினர்.
இதுகுறித்து மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் சசிக்குமார் கூறியதாவது:-
வாலிபரின் வயிற்றில் இருந்து இரும்பு பொருட்கள் அகற்றிய பின்னர் அந்த வாலிபர் வழக்கமான உணவுகளை சாப்பிட தொடங்கியுள்ளார். அதனால் மறுநாளே அவர் உடல் நலத்துடன் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த செயல்முறை சவாலாக இருந்தது. குறிப்பாக வயிற்றில் இருந்த ஹேர்பின்கள், ஊக்குகள் போன்றவை உடல்நலத்துக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தும். அதை அகற்ற அதிக தொழில்நுட்பதிறன் தேவைப்படும். அதனை எங்கள் மருத்துவ குழுவினர் சிறப்பாக செய்து சாதனை படைத்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.
- ஸ்டான்லி மருத்துவமனை நிபுணர்கள் நெல்லையில் தங்கியிருக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகிய 2 பேரும், சக பள்ளி மாண வர்கள் உள்ளிட்ட கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த 2 பேருக்கும் நெல்லை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்களும் நேரடியாக ஆஸ்பத்திரிக்கு வந்து மாணவருக்கு ஆறுதல் தெரிவித்து உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
நேற்று மதியம் மாணவர் சின்னத்துரையை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து டாக்டர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்த அவர், மாணவர் சின்னத்துரையின் கையில் பலத்த வெட்டுக்காயங்கள் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மாணவரை இங்கிருந்து இடமாற்றம் செய்வதில் சிரமம் உள்ளதால், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து நிபுணர்கள் குழு வரவழைக்கப்பட்டு மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.
தொடர்ந்து அமைச்சரின் உத்தரவின்பேரில், ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பாலாஜியின் அறிவுறுத்தலின்படி இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து கை அறுவை சிகிச்சை செய்வதில் நிபுணத்துவம் பெற்ற 3 பேர் கொண்ட டாக்டர்கள் குழு விமானம் மூலம் தூத்துக்குடி வந்தனர். அங்கிருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு வரும் அந்த குழு, முதல் கட்டமாக மாணவருக்கு இதுவரை அளிக்கப்பட்டுள்ள சிகிச்சைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தனர்.
அதன்பின்னர் மாணவரின் கையில் ஏற்பட்டுள்ள வெட்டு காயங்களின் தன்மை, தற்போதைய நிலை உள்ளிட்டவற்றை அறிந்து கை அறுவை சிகிச்சை செய்வது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவருக்கு அறுவை சிகிச்சை முடியும் வரை ஸ்டான்லி மருத்துவமனை நிபுணர்கள் நெல்லையில் தங்கியிருக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்