என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவின் 10-வது ஆண்டு விழா
திருவனந்தபுரம் :
திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை பல்வேறு சிறப்பு சிகிச்சைகளை செய்து வருகிறது. இங்கு கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சைப் பிரிவு கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு 10-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கிம்ஸ்ஹெல்த்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் சஹதுல்லா விழா வை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சுகாதார துறையின் மிக முக்கிய அம்சங்களுள் ஒன்றாக உடலுறுப்பு தானம் கருதப்பட வேண்டும். சமுதாயத்திற்கு ஒவ்வொரு தனிநபரும் கொண்டிருக்கும் அக்கறை மற்றும் பொறுப்புறுதியின் வழியாக ஒவ்வொரு உறுப்புதான செயல்பாடும் நிகழ்கிறது. உறுப்புதானம் செய்வதற்கு தங்களது விருப்பத்தை தாராள மனதுடன் வெளிப்படுத்த அதிக எண்ணிக்கை யிலான நபர்கள் முன்வர வேண்டும்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் மிக உயர்ந்த அளவிலான வெற்றி விகி தத்தை கிம்ஸ்ஹெல்த் மருத் துவமனை கொண்டிருக்கி றது. கிம்ஸ்ஹெல்த், முதன் முதலில் கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சையினை 2013 ஜுலை 23-ந்தேதி அன்று வெற்றிகரமாக மேற் கொண்டது. அதைத் தொடர்ந்து, இதுவரை 120-க்கும் அதிகமான கல்லீரல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செயல்முறைகளை இது வெற்றிகரமாக செய்தி ருக்கிறது. கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய இரண்டை யும் ஒருங்கிணைந்த செயல் பாட்டை மேற்கொண்டது.
பிரிக்கப்பட்ட கல்லீரலின் மூலம் உறுப்பு மாற்று சிகிச்சை, டயாலிசிஸ் உடன் சேர்த்து கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சை மற்றும் மிகக்குறைவான உடல் எடை கொண்ட குழந்தைக்கு உறுப்பு மாற்று சிகிச்சை ஆகிய சாதனை நிகழ்வுகளை கேரளா மாநிலத்தில் வெற்றிகரமாக நிகழ்த்திய முதல் மருத்துவமனை என்ற பெருமையை கிம்ஸ்ஹெல்த் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவானது உறுப்புதானம் அளித்த வர்கள் மற்றும் உறுப்புதானம் பெற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒருங்கிணைந்த மனதை நெகிழச்செய்யும் விதமாக அமைந்தது. உறுப்புதானம் பெற்ற 160 பேர் ஆர்வத் தோடு கலந்துகொண்டனர்.
6 பேருக்கு தனது உடலு றுப்புகளை தானமாக வழங்கிய 16 வயதான சாரங் மற்றும் இரு கண்களையும், சிறுநீரகங்களையும் தானமாக வழங்கிய சரத் கிருஷ்ணன் ஆகியோரது குடும்பங்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றன. அவர்கள் விழாவில் கவுரவிக்கப்பட்ட னர்.
கிம்ஸ் ஹெல்த்தில் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை மேறெ் கொள்ளப்பட்ட 10 வயதான ஆன் மேரி என்ற சிறுமி, அவளது கைவினை திறன் களை வெளிப்படுத்தும் தயாரிப்புகளின் கண்காட்சி யை நடத்தினாள். மேலும் டாக்டர் சஹதுல்லாவுக்கு இதய வடிவில் தாளினால் உருவாக்கப்பட்ட அழகான மாலையை அச்சிறுமி வழங்கினாள்.
நிகழ்ச்சியில் கிம்ஸ் ஹெல்த்தின் துணைத்தலை வர் டாக்டர் விஜயராகவன், கேரளா கல்லீரல் பவுண்டே ஷனின் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கல்லீரல், கணையம் மற்றும் ஈரல் பித்தக்கால்வாய் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறையின் தலை மை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் சபீர்அலி வரவேற்று பேசினார்.
மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பா ளரும், உறுப்புமாற்று சிகிச்சையின் ஒருங்கிணைப் பாளருமான டாக்டர் பிரவீன் முரளிதரன், நன்றி கூறினார்.
இதில் இரையக்குடலியல் துறையின் முதுநிலை நிபுணர்கள் டாக்டர் மது சசிதரன் மற்றும் டாக்டர் அஜித் கே. நாயர், கல்லீரல், கணையம் மற்றும் பித்தக் கால்வாய் துறையின் நிபு ணர்கள் டாக்டர்கள் வர்கீஸ் ஹெல்டோ மற்றும் ஸ்ரீஜித், மயக்க மருந்தியல் துறையின் நிபுணர் டாக்டர் ஹஷிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்