search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்"

    குன்னூரில் நடைபெற்ற அரசு விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் தொழிலாளி வேலை கேட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #ADMK #TNMinister #DindigulSreenivasan
    குன்னூர்:

    டேன்டீ நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் பணப்பலன்கள் வழங்கும் விழா குன்னூர் டேன்டீ டைகர்ஹில் தேயிலை தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது.

    வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக செயலாளரும், டேன்டீ தலைவருமான சம்புகலோலிக்கர் தலைமை தாங்கினார். இதில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் பணப்பலன்களை வழங்கினார்.

    விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    தாயகம் திரும்பிய தமிழர்களுக்காக டேன்டீ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. தேயிலை சந்தையில் விலை வீழ்ச்சி ஏற்பட்டபோது அதில் சிக்கி டேன்டீ நிர்வாகமும் நஷ்டம் அடைந்தது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் முனைப்புடன் செயல்பட்டு நிறுவனத்தை லாபகரமாக நடத்தினால் தான் இந்த நிறுவனம் நல்ல முறையில் இயங்கும். தமிழக முதல்வரின் முயற்சியினால் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    தமிழக நிதி அமைச்சகம் 10 சதவீதம் தான் போனஸ் வழங்க நிதி ஒதுக்க முடியும் என்று அறிக்கை கொடுத்தார்கள். ஆனால் தமிழக முதல்வரின் தலையீட்டின் பேரில் 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டு உள்ளது. தமிழக முதல்வரிடம் பேசி டேன்டீ நிறுவனத்திற்கு ரூ.60 கோடி நிதி விடுவிக்கப்பட்டு உள்ளது.

    கூடலூர் பகுதியில் தேக்கு, மூங்கில் உள்ளிட்ட மரங்களை வளர்க்கும் பட்சத்தில் யானை உள்ளிட்ட வனவிலங்குகளிடமிருந்து மக்களை பாதுகாக்கலாம் என்ற யோசனை வரவேற்கத்தக்கது. இது குறித்து பரிசீலிக்கப்படும். தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் ரூ.13 கோடியே 9 லட்சம் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பணிக்கொடை வழங்க ஒதுக்கப்பட்டு உள்ளது. ரூ.6 கோடி நடைமுறை மூலதன செலவிற்கும், ரூ.12 கோடி வங்கி கடனை அடைக்கவும், ரூ.12 கோடியே 15 லட்சம் உரமிடுவதற்கும் செலவிடப்படும். மேலும் ரூ.4 கோடியே 41 லட்சம் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு கட்டுவதற்கும், எந்திரங்கள் வாங்குவதற்கு ரூ.2 கோடியே 30 லட்சம் விடுவிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைதொடர்ந்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொழிலாளர்கள் தங்களுடைய குறைகளை தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அப்போது ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சிலர் குறைகளை தெரிவித்தனர். இந்தநிலையில் விஜயரத்தினம் என்ற தொழிலாளி தனது மகளுக்கு வேலைகொடுக்க அதிகாரிகள் மறுப்பதாக புகார் கூறினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் விஜயரத்தினத்தை மேடைக்கு அருகில் இருந்து அப்புறப்படுத்த முயற்சித்தனர். ஆனால் அமைச்சர் அவர்களை தடுத்து வேலை வேண்டுமென்றால் முறைப்படியாக மனு கொடுக்க வேண்டும். அதுவும் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அப்போது தான் மனு பரிசீலிக்கப்படும் என்று கூறினார். #ADMK #TNMinister #DindigulSreenivasan

    தி.மு.க.வுடன் உறவு வைத்து அ.தி.மு.க.வை தினகரன் அழிக்கப் பார்க்கிறார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம் சாட்டினார். #ADMK #TNMinister #DindigulSrinivasan #TTVDhinakaran #DMK
    மதுரை:

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையொட்டி தமிழக அரசின் சாதனைகளை வாக்காளர்களுக்கு எடுத்துக் கூற பெண்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணி ஜெயலலிதா பேரவை சார்பில் வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சி முகாம், மதுரை ரிங்ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.

    முகாமில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக இங்கே திரண்டுள்ள பெண்களை பார்க்கும்போது மகளிர் மாநாடு போல இருக்கிறது. தமிழகம் தற்போது 19 அரசு துறைகளில் தலைசிறந்து விளங்கி வருகிறது.

    1972-ல் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய போது முதல் வெற்றியை தந்தது ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம். இது போன்ற ஒரு வெற்றியை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நாம் பெற வேண்டும். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்.

    புரட்சித்தலைவி அம்மா, பெண்களுக்கு பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தினார். அவரது வழியில் பெண்கள் நலம் காணும் அரசாக அ.தி.மு.க. அரசு திகழ்ந்து வருகிறது.


    டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க.வை அழிக்கப்பார்க்கிறார். தி.மு.க.வோடு உறவு வைத்துக்கொண்டு அ.தி.மு.க.வை வீழ்த்திவிடலாம் என கனவு காண்கிறார். அவரது எண்ணம் பலிக்காது. அவர் நமக்கு எதிரி அல்ல. தி.மு.க.தான் முக்கிய எதிரி. எனவே அ.தி.மு.க. வெற்றிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #ADMK #TNMinister #DindigulSrinivasan #TTVDhinakaran #DMK
    சைக்கிள் பேரணி தொடக்க விழாவில் பழமொழியை மாற்றி கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #DindigulSrinivasan #ADMK

    மதுரை:

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில் அரசு சாதனை விளக்க சைக்கிள் பேரணி நடைபெற்றது.

    அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

    விழாவில் அமைச்சர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கையில் கட்டுப் போட்ட நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார்.

    அவரை வாழ்த்தி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, யானை படுத்தாலும் ஆயிரம் பொன்... எழுந்தாலும் ஆயிரம் பொன்... என்பார்கள். அதுபோல உடல் நலக்குறைவால் மறைந்திருந்தாலும் புறநானூற்று வீரர் போல ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. உற்சாகமாக எழுந்து வந்து விட்டார் என்றார்.

    “மறைந்திருந்தாலும்” என்ற வார்த்தையை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குறிப்பிட்டது அங்கிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

     


    யானை இருந்தாலும் ஆயிரம் பொன்.... இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள் என்பதுதான் பழமொழி. ஆனால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் “யானை படுத்தாலும் ஆயிரம் பொன்... யானை எழுந்தாலும் ஆயிரம் பொன்” என்று பழமொழியை மாற்றி பேசியதாலும் அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி உறுதியாகி விட்டது. இந்த வெற்றிக்கு பிறகு தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் இருக்க முடியாது.

    ஆர்.கே.நகரில் 20 ரூபாய் நோட்டை காட்டி திருட்டுத்தனமாக வெற்றி பெற்றதுபோல திருப்பரங்குன்றத்தில் தினகரனால் வெற்றி பெற முடியாது. அதுமட்டுமல்ல சுண்டக்காய் கட்சிகளும் காணாமல்போய் விடும் என்று பேசினார். #DindigulSrinivasan #ADMK

    டெல்லி சென்று நரசிம்மராவுடன் துணை சபாநாயகர் தம்பித்துரை பேசுவார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. #ADMK #ThambiDurai #MinisterDindigulSrinivasan

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே வேடசந்தூர், கல்வார் பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில்,

    இங்குள்ள சுகாதார நிலையத்தை பரமசிவம் எம்.எல்.ஏ.வே திறந்து வைத்திருக்கலாம். எங்களை அழைத்திருக்க தேவையில்லை. ஆனால் அவரது அன்பின் வற்புறுத்தல் காரணமாக நான், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் வந்துள்ளோம்.

    தற்போது பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை பரமத்தி வேலூரில் பொதுமக்களிடம் குறை கேட்டுக் கொண்டு இருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் இங்கு வந்து விடுவார். மாலை உணவுக்கு புதுக்கோட்டை சென்று விடுவார்.

    அதன் பின்னர் டெல்லியில் போய் உட்கார்ந்து பிரமதர் நரசிம்மராவுடன் பேசுவார் என்றார். இவ்வாறு பேசியதும் விழாவில் சலசலப்பு ஏற்பட்டது.

     


    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஏற்கனவே பிரதமர் மோடிக்கு பதிலாக மன்மோகன்சிங் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். பாரத ரத்னா எம்.ஜி.ஆர். என்பதற்கு பதிலாக பாரத பிரதமர் எம்.ஜி.ஆர் என்றார்.

    மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா இட்லி சட்னி சாப்பிட்டார் என்று கூறியது பொய். எங்களை மன்னித்து விடுங்கள் என்று சர்ச்சை பேச்சுகளை பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #ADMK #ThambiDurai #MinisterDindigulSrinivasan

    மயிலாடுதுறையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உருவப்பொம்மையை எரிக்க முயற்சி செய்தது தொடர்பாக தினகரன் கட்சியினர் 47 பேரை போலீசார் கைது செய்தனர். #AMMK #MinisterDindigulSrinivasan
    மயிலாடுதுறை:

    தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வேடசந்தூரில் நடந்த அ.தி.மு.க. பொதுக் கூட்டத்தில் பேசும்போது ‘‘ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை சுருட்டியவர் டி.டி.வி.தினகரன்’’ என்று கூறினார்.

    இதனை கண்டித்தும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், மயிலாடுதுறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அவரது உருவபொம்மையை எரிக்க முயன்றனர்.

    முன்னதாக மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகத்தில் இருந்து நாகை வடக்கு மாவட்ட செயலாளர் செந்தமிழன் தலைமையில் அந்த கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர்.

    மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகே கிட்டப்பா அங்காடி வந்தடைந்தவுடன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள், திடீரென திண்டுக்கல் சீனிவாசனின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி உருவபொம்மையை கைப்பற்றினர்.

    பின்னர் போலீசார், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற மாவட்ட செயலாளர் செந்தமிழன் உள்பட 47 பேரை கைது செய்தனர். #AMMK #MinisterDindigulSrinivasan
    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். #DindigulSrinivasan #AIADMK #Jayalalithaa
    திண்டுக்கல்:

    தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், கடந்த 18-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் வெற்றி விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், நான் கலந்து கொண்டு பேசினேன். அப்போது, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியை கைப்பற்ற தினகரன் அணியினர் முயற்சி மேற்கொண்டதை பற்றி குறிப்பிட்டேன்.

    மேலும் ஜெயலலிதாவின் புகழை வைத்து, 30 வருடங்களுக்கு மேலாக அவருடன் இருந்த சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் ஜெயலலிதாவுக்கு தெரியாமல் தவறான வழியில் கொள்ளையடித்த பணத்தை வைத்து தினகரன் அரசியல் நடத்தி வருகிறார் என்று கருத்துப்பட பேசினேன்.

    அதைத்தவிர, ஜெயலலிதாவை பற்றி தவறாக எந்த கருத்தையும் பேசவில்லை. நான் என்றைக்கும் ஜெயலலிதாவின் விசுவாசி என்பது அனைவருக்கும் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #DindigulSrinivasan #AIADMK #Jayalalithaa
    ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டி.டி.வி. தினகரன் அணியில் உள்ள 18 எம்.எல்.ஏ.க்களும் பங்கு போட்டு மக்களை ஏமாற்றுகின்றனர் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #DindigulSrinivasan #AIADMK #Jayalalithaa
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் காவிரி நதி நீர் மீட்பு வெற்றிவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியை கைப்பற்ற தினகரன் அணியினர் முயற்சி மேற்கொண்டனர். இதனால் பதவி ஆசை காட்டி 18 எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் அவர் இழுத்துக் கொண்டார். ஆனால் அவரால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால் ஸ்டாலினை முதல்வராகவும், தினகரனை துணை முதல்வராகவும் உருவாக்க திட்டம் தீட்டினர்.

    அதுவும் நிறைவேறவில்லை. இதனால் சபாநயகர் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்தார். ஆனால் எப்படியாவது இந்த ஆட்சியை கலைத்து விட வேண்டும் என டி.டி.வி. தினகரன் மற்றும் ஸ்டாலின் துடித்து வருகின்றனர்.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா தன் வியர்வை, ரத்தம், பணம் ஆகியவற்றை கொடுத்து எங்கள் அனைவரையும் எம்.எல்.ஏ. ஆக்கினார். அதே போல்தான் தற்போது டி.டி.வி. தினகரன் அணியில் உள்ள 18 பேரும் எம்.எல்.ஏ.க்களாக ஜெயலலிதா தயவால் உருவாக்கப்பட்டனர்.



    ஆனால் அவரது மறைவுக்கு பின் ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரன் மூலம் 18 எம்.எல்.ஏ.க்களும் பெற்றுக் கொண்டு தற்போது மக்களை ஏமாற்றுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

    அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சீனிவாசன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப்பற்றி பேசிய இந்த சர்ச்சை பேச்சால் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. மேடையில் இருந்தவர்களும் கூட்டத்தில் இருந்தவர்களும் வியப்புடன் அமைச்சரை பார்த்துக் கொண்டிருந்தபோதே அவர் வேறு தலைப்பில் பேச்சைத் தொடங்கினார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #DindigulSrinivasan #AIADMK #Jayalalithaa
    ஜெயலலிதாவுடன் யாரையும் ஒப்பிட்டு பார்க்க முடியாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். #Jayalalithaa #EdappadiPalanisamy #TNMinister #Jayakumar
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி சிறப்பாக இருப்பதாகவும், ஜெயலலிதாவை விட பயங்கரமாக ஆட்சி செய்வதாகவும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருந்தார்.

    இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிய கருத்து திரித்து கூறப்படுகிறது. அரசாங்க கோப்புகள் வேகமாக நகருகிறது. திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது என்ற அடிப்படையில் தான் கருத்துக்களை அவர் கூறினார்.


    எனவே அம்மாவை யாருடனும் ஒப்பிட முடியாது. அம்மா என்பது தனித்துவம் மிக்க ஒரு மாபெரும் தலைவர். எனவே யாரையும் அம்மாவுடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது. வனத்துறை அமைச்சர் அந்த எண்ணத்தோடு கூறவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Jayalalithaa #EdappadiPalanisamy #TNMinister #Jayakumar
    ×