search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதாவுடன் ஒப்பிடமுடியாது- அமைச்சர் ஜெயக்குமார்
    X

    எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதாவுடன் ஒப்பிடமுடியாது- அமைச்சர் ஜெயக்குமார்

    ஜெயலலிதாவுடன் யாரையும் ஒப்பிட்டு பார்க்க முடியாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். #Jayalalithaa #EdappadiPalanisamy #TNMinister #Jayakumar
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி சிறப்பாக இருப்பதாகவும், ஜெயலலிதாவை விட பயங்கரமாக ஆட்சி செய்வதாகவும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருந்தார்.

    இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிய கருத்து திரித்து கூறப்படுகிறது. அரசாங்க கோப்புகள் வேகமாக நகருகிறது. திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது என்ற அடிப்படையில் தான் கருத்துக்களை அவர் கூறினார்.


    எனவே அம்மாவை யாருடனும் ஒப்பிட முடியாது. அம்மா என்பது தனித்துவம் மிக்க ஒரு மாபெரும் தலைவர். எனவே யாரையும் அம்மாவுடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது. வனத்துறை அமைச்சர் அந்த எண்ணத்தோடு கூறவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Jayalalithaa #EdappadiPalanisamy #TNMinister #Jayakumar
    Next Story
    ×