search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth arrested"

    • தனிப்படை போலீசார் வடக்கு மெயின் ரோடு பகுதியில் வாகன தணிக்கை யில் ஈடுபட்டனர்.
    • 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் அவர் மோட்டார் சைக்கிள் திருட்டு வாகனம் என தெரிய வந்ந்தது

    கடலூர்:

    சிதம்பரம் நகரில் இரு சக்கர வாகனங்கள் தொடர் திருட்டு போனது. இதை தடுக்க ஏஎஸ்பி ரகுபதி உத்தரவின் பேரில் சிதம்ப ரம் நகர போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் அமைக்கப் பட்ட தனிப்படை போலீசார் வடக்கு மெயின் ரோடு பகுதியில் வாகன தணிக்கை யில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழி யாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவரை தடுத்து நிறுத்தி சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற் கொண்டனர். அப்போது விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்து அவரிடமிருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் அவர் மோட்டார் சைக்கிள் திருட்டு வாகனம் என தெரிய வந்ந்தது. இதனை அடுத்து அந்த வாலிபரை போலீசார் நகர போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் சிதம் பரம் அருகே கீழமூங்கிலடி தையாக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கேப்டன் பிரபா கரன் (வயது 35) என்றும், மேலும் அவர் மோட்டார் சைக்கிள்கள் திருடியதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள் களையும் பறி முதல் செய்தனர். இது குறித்து நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து கேப்டன் பிரபாகரனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    • சென்னையை சேர்ந்த ஒரு கும்பல் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட இடுக்கியை சேர்ந்த 2 பேரை பயன்படுத்தி வந்துள்ளனர்.
    • 20 கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு தனியார் வங்கியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 500 ரூபாய் கள்ளநோட்டு 2 வந்தது. இதைபார்த்ததும் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள் இதுகுறித்து பீர்மேடு போலீசில் தகவல் தெரிவித்தனர்.

    டி.எஸ்.பி குரியன்ஜேக்கப் தலைமையிலான போலீசார் வங்கிக்கு வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்து கள்ளநோட்டை மாற்றியது யார் என ஆய்வு செய்தனர். அப்போது வண்டிபெரியாறு பகுதியை சேர்ந்த சிபின்ஜேக்கப்(28) என்பவர்தான் கள்ளநோட்டுகளை மாற்றியது தெரியவந்தது.

    இதனைதொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் தனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் மூலம் கள்ளநோட்டுகள் கிடைத்ததாகவும், அதனை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் புழக்கத்தில் விட்டதாகவும் தெரிவித்தார். அவரது வீட்டில் சோதனை செய்தபோது 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 20 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    சென்னையை சேர்ந்த ஒரு கும்பல் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட இடுக்கியை சேர்ந்த 2 பேரை பயன்படுத்தி வந்துள்ளனர். ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.2 லட்சம் கள்ளநோட்டுகள் கொடுத்துள்ளனர். அதனை வாங்கி புழக்கத்தில் விட்டு வந்துள்ளனர். அதன்படி இடுக்கி மாவட்டத்தில் 20 கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. 20 கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

    இந்த கும்பலில் தொடர்புடைய நபர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இடுக்கி மாவட்ட போலீசார் மூலம் சென்னை காவல்துறைக்கும் தகவல் தெரிவித்து கள்ளநோட்டு கும்பலை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    • கோவிந்தம்மாளுக்கும் ராஜ்குமாருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
    • ராஜ்குமார், கோவிந்தம்மாளை அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது 56). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் முருகன் மகன் ராஜ்குமார் (35) என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று கோவிந்தம்மாள் வீட்டு வாசலை பெருக்கிக் கொண்டிருந்த போது அங்கு வந்த ராஜ்குமார், கோவிந்தம்மாளை அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கோவிந்தம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.

    • சென்னை வாலிபரின் தொல்லை குறித்து மாணவி தனது தந்தையுடன் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • இன்ஸ்டாகிராம் மூலம் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது சென்னை வேளச்சேரியை சேர்ந்த சிவா என்பது தெரியவந்தது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த மாணவிக்கும், சென்னையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் 2 பேரும் தங்களது அந்தரங்க தகவல்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் 2 பேரும் இன்ஸ்டாகிராம் மூலம் தங்களுடைய புகைப்படங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துள்ளனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாணவியை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.

    அதில் பேசிய நபரும், இன்ஸ்டாகிராம் முகப்பில் இருந்த நபரின் புகைப்படமும் வெவ்வேறாக இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, அது குறித்து கேட்டபோது அழகான தோற்றத்தில் காட்சியளிக்கும் நபரை சமூக வலைதளத்தில் முகப்பில் வைத்தால் இளம்பெண்களை மயக்கலாம் என அந்த வாலிபர் கூறியதாக தெரிகிறது.

    அந்த வாலிபரின் இந்த நடவடிக்கை மாணவிக்கு பிடிக்கவில்லை. எனவே தன்னுடன் பழகுவதை விட்டுவிடுமாறு மாணவி கூறியுள்ளார். ஆனால் அந்த வாலிபர், மாணவிக்கு தொடர்ந்து ஆபாச தகவல்கள் மற்றும் செயல்கள் மூலம் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த மாணவி தனது தந்தையிடம் தெரிவித்தார். மேலும் அவர் சென்னை வாலிபரின் தொல்லை குறித்து தனது தந்தையுடன் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இன்ஸ்டாகிராம் மூலம் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் சிவா (வயது19) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    • பெண்ணிற்கு அவரது பெற்றோர் வேறொரு மாப்பிள்ளையை பார்த்து நிச்சயித்தனர்.
    • திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது.

    பல்லடம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மேட்டுப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் தரணிதரன்(வயது 29). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அம்மாபாளையம் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் தங்கி பணிபுரிந்து வந்தார்.

    அப்போது அங்கு பணிபுரிந்த இளம்பெண்ணுக்கும் தரணிதரனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இந்தநிலையில் பழகிய சில நாட்களில் தரணிதரனின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அந்த பெண் தரணிதரனிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்.

    மேலும் அந்த பெண்ணிற்கு அவரது பெற்றோர் வேறொரு மாப்பிள்ளையை பார்த்து நிச்சயித்தனர். திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது.

    இதையறிந்த தரணிதரன், தனது காதலியை தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். இல்லாவிட்டால் 2பேரும் சேர்ந்து இருந்த புகைப்படங்களை மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்து விடுவேன் என்று மிரட்டியதுடன், அந்த புகைப்படங்களை காதலிக்கு பார்த்திருந்த மாப்பிள்ளையின் செல்போனுக்கு அனுப்பினார். இதனால் அந்த பெண்ணின் திருமணம் தடைப்பட்டது.

    மேலும் காதலியை தொடர்பு கொண்ட தரணிதரன் ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் இருவரும் சேர்ந்திருந்த படங்களை இணைய தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன அந்தப்பெண் அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

    உடனே இது குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி தரணிதரனை கைது செய்தனர். தொடர்ந்து அவர் இது போல் வேறு பெண்களை ஏமாற்றியுள்ளாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூதாட்டியின் வீட்டிற்கு யாரெல்லாம் வந்து செல்வார்கள்? என்று அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
    • மூதாட்டியின் எதிர் வீட்டில் வசித்து வரும் அர்ஜூன் என்ற வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    மதுரை:

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகர் அம்பேத்கர் நகரில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்தார். அந்த மூதாட்டியின் வீடு நேற்று வெகுநேரமாகியும் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

    அப்போது அங்கு அந்த மூதாட்டி உடலில் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு மூதாட்டியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் இறந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தது யார்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீஸ் உதவி கமிஷனர் சண்முகமும் மூதாட்டியின் வீட்டிற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    மூதாட்டியின் வீட்டிற்கு யாரெல்லாம் வந்து செல்வார்கள்? என்று அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மூதாட்டியின் எதிர் வீட்டில் வசித்து வரும் அர்ஜூன்(வயது30) என்ற வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கஞ்சா போதையில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தது அவர்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து வாலிபர் அர்ஜூனை போலீசார் கைது செய்தனர்.

    மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அர்ஜூன் மீது ஏற்கனவே திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர் தெருத்தெருவாக சென்று குப்பைகள் மற்றும் பழைய பேப்பர்களை சேகரித்து விற்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்திருக்கிறார். கஞ்சா போதைக்கு அடிமையாகி இருந்த அவர், தற்போது கொலை வழக்கிலும் சிக்கியுள்ளார்.

    வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை பக்கத்து வீட்டு வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கொள்ளையர்களை பிடிக்க டி.எஸ்.பி. ராஜூ தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
    • நெல்லை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு-3 முன்னிலையில் ஆஜர்படுத்தி 2 பேரையும் பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுனை சேர்ந்தவர் சுஷாந்த் (வயது 40). தொழிலதிபரான இவர் டவுனில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    இவர் நகைகள் வாங்குவதற்காக கடந்த 30-ந் தேதி உதவியாளர்கள் 2 பேருடன் தனது காரில் கேரளா மாநிலம் நெய்யாற்றங்கரைக்கு சென்றபோது மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து சுஷாந்தை தாக்கி அவரிடம் இருந்த ரூ.1½ கோடியை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுதொடர்பாக மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க டி.எஸ்.பி. ராஜூ தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் 4 தனிப்படையினர் கேரள மாநிலம் திருவனந்தபுரம், மூணாறு, நெய்யாற்றங்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த செபின் ராஜி(26), எட்வின் தாமஸ்(27) ஆகிய 2 பேரை மூணாறு பகுதியில் போலீசார் சினிமா பாணியில் விரட்டி பிடித்து கைது செய்தனர். நேற்று மதியம் கேரளாவில் இருந்து நெல்லைக்கு அவர்கள் 2 பேரையும் கொண்டு வந்தனர்.

    பின்னர் நெல்லை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு-3 முன்னிலையில் ஆஜர்படுத்தி 2 பேரையும் பாளை மத்திய சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

    கொள்ளை சம்பவத்தில் 8 பேர் வரையிலான கும்பல் ஈடுபட்டிருக்கலாம். அதில் தற்போது பிடிபட்டுள்ள 2 பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    அவர்கள் தங்கியிருந்த விடுதி அறை முழுவதும் தேடிப் பார்த்தும், பெரிய அளவில் பணம் எதுவும் கைப்பற்ற முடியவில்லை. அவர்களிடம் விசாரிக்கும்போது, சக கூட்டாளிகளிடம் கொடுத்து விட்டதாக தெரிவிக்கின்றனர். இதனால் தனிப்படை போலீசார் தொடர்ந்து கேரளாவிலேயே முகாமிட்டு மீதமுள்ள 6 பேரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    தற்போது கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பேரின் செல்போன் அழைப்புகளை வைத்து அவர்களுடைய கூட்டாளிகள் இருக்கும் இடத்தை தேடி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இரவு நேரம் என்பதால் இருட்டை பயன்படுத்தி பின் இருக்கையில் இருந்த வாலிபர், நர்சிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
    • பஸ் காந்திபுரம் வந்ததும் நர்சு விரைந்து சென்று பஸ்நிலையத்தை ஒட்டியுள்ள காட்டூர் போலீசில் புகார் செய்தார்.

    கோவை:

    நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் தலைமை நர்சாக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு சென்றார். விடுமுறை முடிந்ததும் நர்சு கோவைக்கு புறப்பட்டார். நாகர்கோவிலில் இருந்து கோவை வந்த தனியார் சொகுசு பஸ்சில் ஏறி அவர் வந்தார். நர்சின் பின் இருக்கையில் வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார்.

    இரவு நேரம் என்பதால் இருட்டை பயன்படுத்தி பின் இருக்கையில் இருந்த வாலிபர், நர்சிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த நர்சு சத்தம் போட்டார். இது குறித்து கண்டக்டரிடம் தெரிவித்தார். கண்டக்டர் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை கண்டித்தார். ஆனால் எதையும் காதில் வாங்கி கொள்ளாத அந்த வாலிபர் தொடர்ந்து நர்சுக்கு தொல்லை கொடுத்து வந்தார்.

    பஸ் காந்திபுரம் வந்ததும் நர்சு விரைந்து சென்று பஸ்நிலையத்தை ஒட்டியுள்ள காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று நர்சிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த கூலித் தொழிலாளி முருகன் (36) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • பல்லடம் போலீசார் உடனடியாக தாராபுரம் சோதனை சாவடி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
    • தாராபுரம் சோதனை சாவடி போலீசார் காரை வழிமறித்து, அபிஷேக், பரணிதரன் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

    பல்லடம்:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் அபிஷேக். இவரது நண்பர் பரணிதரன். கோவையில் வேலை பார்த்து வந்தனர். இருவரும் சொந்த ஊரில் நடைபெறும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக இன்று அதிகாலை 3 மணியளவில் திருப்பூர் பல்லடம் - தாராபுரம் பிரிவு சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிரே லாரி ஒன்று வந்துள்ளது. அதனை ஓட்டி வந்த டிரைவர் கார் எதிரே நிறுத்தி, ஹெட்லைட்டை ஏன் இப்படி எரிய விட்டு கொண்டு வருகிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதில் 2 தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து காரை எடுத்து சிறிது தூரம் சென்ற அபிஷேக் திடீரென்று சென்று கொண்டிருந்த லாரியின் எதிரே காரை குறுக்கே நிறுத்தி துப்பாக்கியை காட்டி சுட்டுக்கொன்று விடுவேன் என்று டிரைவரை மிரட்டியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த லாரி டிரைவர் இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    பல்லடம் போலீசார் உடனடியாக தாராபுரம் சோதனை சாவடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். தாராபுரம் சோதனை சாவடி போலீசார் காரை வழிமறித்து, அபிஷேக், பரணிதரன் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்தது பொம்மை துப்பாக்கி என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவிந்து அந்த பெண்ணை கீழே பிடித்து தள்ளி விட்டு தப்பியோடி விட்டான்.
    • பாதிக்கப்பட்ட பெண்கள் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தனர்.

    சேதராப்பட்டு:

    புதுவை வில்லியனூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 29 வயது பெண் தனது குழந்தைகளுடன் வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கி கொண்டிருந்தார். அவரது கணவர் காற்றுக்காக வீட்டின் வாசலில் தூங்கினார்.

    நள்ளிரவில் அந்த பெண்ணின் பக்கத்தில் யாரோ வாலிபர் படுத்திருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே லைட்டை போட்டு பார்த்துள்ளார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் கோவிந்து படுத்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போட முயன்றார். ஆனால் அந்த வாலிபர் அந்த பெண்ணின் வாயை பொத்தி சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

    ஆனாலும் அதனை மீறி அந்த பெண் அலறல் சத்தம் போட்டார். உடனே வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருந்த அவரது கணவர் மற்றும் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதனை பார்த்ததும் கோவிந்து அந்த பெண்ணை கீழே பிடித்து தள்ளி விட்டு தப்பியோடி விட்டான்.

    இதற்கிடையே அங்கு வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த மற்றொரு பெண் சிறிது நேரத்திற்கு முன்பு அதே வாலிபர் தனது வீட்டின் கதவை திறந்து தனது கையை பிடித்து இழுக்க முயன்றதாகவும், அவரை தள்ளிவிட்டுவிட்டு கதவை பூட்டிக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

    இது கேட்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அந்த வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த வாலிபர் சிக்கவில்லை.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்தை தேடி வந்த நிலையில், கூடப்பாக்கம் மெயின்ரோட்டில் நின்று கொண்டிருந்த அவனை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பெயிண்டரான கோவிந்த் குடிபோதையில் வீடு வீடாக புகுந்து பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் கோவிந்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கைது செய்யப்பட்ட கோவிந்துக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆத்திரம் அடைந்த கோகுல்நாத் அருகே கிடந்த கல்லால் பன்னீர்செல்வத்தின் முகத்தில் தாக்கினார்.
    • கல்லால் தாக்கியதில் பன்னீர்செல்வம் படுகாயம் அடைந்தார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம்(59), தொழிலாளி. கோகுல்நாத்(22). இவர்கள் இருவரும் சேர்ந்து மதுகுடித்தபோது தகராறு ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த கோகுல்நாத் அருகே கிடந்த கல்லால் பன்னீர்செல்வத்தின் முகத்தில் தாக்கினார். இதில் பன்னீர்செல்வம் படுகாயம் அடைந்தார்.

    இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுல்நாத்தை கைது செய்தனர்.

    ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு தப்பி செல்ல திட்டமிட்ட வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ராமேசுவரம்:

    இலங்கை வவுனியா அருகே உள்ள கல்நாட்டினார்குளம் பகுதியை சேர்ந்த வர்கீர்த்தனன். இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி விசா மூலம் சென்னைக்கு வந்துள்ளார்.

    அவர் சென்னை வந்து 2 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் விசா காலாவதியாகி விட்டது. இதனால் இலங்கைக்கு விசா மூலம் செல்ல வாய்ப்பு இல்லை என்பதால், ராமேசுவரம் சென்று கடல் வழியாக ரகசிய பயணம் செய்ய கீர்த்தனன் திட்டமிட்டார்.

    இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து ரெயில் மூலம் ராமேசுவரம் வந்த அவர், படகு மூலம் இலங்கை செல்வதற்காக ஒரு ஏஜெண்டை தேடினார். அப்போது அவர் ராமேசுவரம் புது ரோடு சுனாமி காலனியை சேர்ந்த முத்துக்குமரன் என்பவரை நாடினார்.

    அவரிடம் ரூ.30 ஆயிரம் கொடுத்து தன்னை படகு மூலம் இலங்கை பகுதியில் விட்டு விடும்படி கேட்டுக்கொண்டுள்ளார். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டு தேவையான ஏற்பாடுகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் ரகசியமாக விசாரணை நடத்தி கண்காணித்து வந்த அவர்கள், ராமேசுவரம் பகுதியில் வைத்து கீர்த்தனன் மற்றும் முத்துக்குமரனை பிடித்தனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கீர்த்தனன் இலங்கைக்கு சட்ட விரோதமாக தப்பி செல்ல இருந்ததும், அவருக்கு முத்துக்குமரன் உதவி செய்ததும் உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

    மேலும் கீர்த்தனிடம் இருந்து ரூ.10 ஆயிரம் ரொக்க பணம், காலாவதியான பாஸ்போர்ட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் 2 பேரையும் இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்த போலீசார் முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
    ×