search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elderly Woman Molested"

    • மூதாட்டியின் வீட்டிற்கு யாரெல்லாம் வந்து செல்வார்கள்? என்று அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
    • மூதாட்டியின் எதிர் வீட்டில் வசித்து வரும் அர்ஜூன் என்ற வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    மதுரை:

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகர் அம்பேத்கர் நகரில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்தார். அந்த மூதாட்டியின் வீடு நேற்று வெகுநேரமாகியும் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

    அப்போது அங்கு அந்த மூதாட்டி உடலில் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு மூதாட்டியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் இறந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தது யார்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீஸ் உதவி கமிஷனர் சண்முகமும் மூதாட்டியின் வீட்டிற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    மூதாட்டியின் வீட்டிற்கு யாரெல்லாம் வந்து செல்வார்கள்? என்று அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மூதாட்டியின் எதிர் வீட்டில் வசித்து வரும் அர்ஜூன்(வயது30) என்ற வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கஞ்சா போதையில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தது அவர்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து வாலிபர் அர்ஜூனை போலீசார் கைது செய்தனர்.

    மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அர்ஜூன் மீது ஏற்கனவே திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர் தெருத்தெருவாக சென்று குப்பைகள் மற்றும் பழைய பேப்பர்களை சேகரித்து விற்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்திருக்கிறார். கஞ்சா போதைக்கு அடிமையாகி இருந்த அவர், தற்போது கொலை வழக்கிலும் சிக்கியுள்ளார்.

    வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை பக்கத்து வீட்டு வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மூதாட்டியை குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தலைமறைவாக உள்ள கட்டிட தொழிலாளியை நெகமம் போலீசார் தேடி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஏரிப்பட்டியை சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி.

    இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மாடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று மாலை 6 மணியளவில் மாடுகளை தோட்டத்தில் கட்டி வைப்பதற்காக சென்றார்.

    அப்போது அந்த வழியாக அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான 25 வயது வாலிபர் வந்தார். அவர் திடீரென தான் அணிந்து இருந்த வேட்டியால் மூதாட்டியின் முகத்தை கட்டினார். பின்னர் அவரை கீழே தள்ளி பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றார்.

    வீட்டுக்கு சென்ற மூதாட்டி இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்தார். உடனடியாக அவர் தனது மனைவியை ஆம்புலன்சு மூலமாக மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து நெகமம் போலீசில் மூதாட்டியின் கணவர் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பலாத்காரம் செய்யப்பட்ட மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர்.

    மூதாட்டியை குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தலைமறைவாக உள்ள கட்டிட தொழிலாளியை நெகமம் போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×