search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WTC final"

    • இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
    • டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    லண்டன்:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்குகியது.

    தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா முகமது சிராஜ் பந்தில் டக் அவுட்டானார். டேவிட் வார்னருடன் லாபுசேன் இணைந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது.

    69 ரன்கள் சேர்த்த நிலையில் வார்னர் 43 ரன்னில் அவுட்டானார். இதையடுத்து, லாபுசேனுடன் ஸ்மித் இணைந்தார். லாபுசேன் 26 ரன்னுடன் ஆடி வருகிறார்.

    உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 73 ரன்னுக்கு 2 விக்கெட்களை இழந்துள்ளது.

    இந்தியா சார்பில் சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டாஸ் வென்ற ரோகித் சர்மா ஆடும் லெவனை அறிவிக்கும்போது, அஸ்வின் பெயர் இல்லை.
    • இது அஸ்வின் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

    லண்டன்:

    இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என வல்லுனர்கள் கணித்த காரணத்தினால் 2 சுழற் பந்துவீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்குமா என்ற கேள்வி இருந்து கொண்டே வந்தது.

    ஏனென்றால் அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. அஸ்வின் சிறந்த ஆப் ஸ்பின்னர், ஜடேஜா சிறந்த லெக் ஸ்பின்னர். அத்துடன் இரண்டு பேரும் பேட்டிங்கும் செய்யக்கூடியவர்கள். இதனால் யாரை எடுப்பார்கள் என்ற விவாதம் நடந்து கொண்டே இருந்தது.

    இந்நிலையில், டாஸ் வென்ற ரோகித் சர்மா ஆடும் லெவனை அறிவிக்கும்போது, அஸ்வின் பெயர் இல்லை. இது அஸ்வின் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

    அஸ்வினை அணியில் சேர்க்காதது மிக கஷ்டமான ஒன்றுதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஆடும் சூழ்நிலை மற்றும் அணியின் வெற்றி காம்பினேஷன் ஆகியவற்றிற்காக அவரை தவிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என ரோகித் சர்மா தெரிவித்தார். அவருக்கு பதிலாக உமேஷ் யாதவை இந்திய அணி தேர்வு செய்துள்ளது. இந்தியா 4 வேக பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கி உள்ளது.

    வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் போட்டி மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிந்து விட்டால் அஸ்வினை சேர்க்காதது குறித்து எந்த விவாதம் எழும்ப வாய்ப்பில்லை.

    ஒரு வேளை போட்டி ஐந்தாவது நாள் வரை நீடித்தால் சுழற் பந்துவீச்சு தாக்கம் அதிகமாக இருக்கும். மேலும் ஆஸ்திரேலியாவில் ஐந்து இடதுகை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இடதுகை பேட்ஸ்மன்களுக்கு அஸ்வின் எப்போதுமே சவாலாக இருப்பார். ஆகையால் இந்தப் போட்டி முடிந்தபின் ஒருவேளை இந்தியாவுக்கு சாதகமாக போட்டி அமையாவிட்டால் அஸ்வினை அணியில் எடுக்காதது குறித்து மிகப்பெரிய விவாதம் எழும்பும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    • உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை 2019-ம் ஆண்டு ஐ.சி.சி. அறிமுகப்படுத்தியது.
    • இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    லண்டன்:

    உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை 2019-ம் ஆண்டு ஐ.சி.சி. அறிமுகப்படுத்தியது. இரு ஆண்டுகள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    2021-ம் ஆண்டு சவுத்தம்டனில் நடந்த முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது.

    இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

    டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்குகிறது.

    இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:

    இந்தியா: ரோகித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி, ரகானே, ஸ்ரீகர் பரத், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், முகமது ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ்

    ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, லாபுசேன், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லைன், ஸ்காட் போலண்ட்

    • போட்டி நடைபெறும் லண்டன் ஓவல் மைதானத்தின் ஆடுகளங்களை சேதப்படுத்தப்போவதாக கூறி உள்ளனர்.
    • மோசமான வானிலை காரணமாக போட்டி தடைபட்டால் ஒரு ரிசர்வ் டேயும் இருக்கும்.

    இரண்டாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

    இந்நிலையில் எண்ணெய் உற்பத்திக்கு எதிராக போராட்டம் நடத்தும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களால், இன்றைய கிரிக்கெட் போட்டிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    லண்டன் ஓவல் மைதானத்தில் போட்டி நடைபெறும்போது ஆடுகளம் மற்றும் மைதானத்தை சேதப்படுத்தப்போவதாக போராட்டக்காரர்கள் கூறி உள்ளனர். இதையடுத்து மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும், போராட்டக்காரர்கள், ரசிகர்களோடு ரசிகர்களாக வந்து ஆடுகளத்தில் புகுந்து சேதப்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கையாக ஐசிசி 2 ஆடுகளங்களை தயார்நிலையில் வைத்துள்ளது.

    கேப்டன்கள் ரோகித் சர்மா மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோருக்கும் நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஆடுகளம் சேதமடையும்பட்சத்தில், இருவரும் விளையாட ஒப்புக்கொண்டால், மாற்று ஆடுகளத்தில் தொடர்ந்து விளையாடுவார்கள். இல்லையெனில் போட்டி ரத்து செய்யப்படலாம் அல்லது கைவிடப்படலாம். 

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று முதல் 11 வரை இந்திய நேரடிப்படி மாலை 3 மணிக்கு தொடங்கி நடைபெறும். மோசமான வானிலை காரணமாக போட்டி தடைபட்டால் ஒரு ரிசர்வ் டேயும் இருக்கும்.

    பிரிட்டனில் புதிய புதைபடிவ எரிபொருள் உரிமம் மற்றும் உற்பத்தியை அரசு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது. இதற்காக ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் என்ற குழுவை அமைத்துள்ளனர்.

    நாட்டில் புதைபடிவ எரிபொருட்களின் ஆய்வு மற்றும் உற்பத்தி தொடர்பான அனைத்து எதிர்கால ஒப்புதல்கள் மற்றும் உரிமம் தொடர்பான ஒப்பந்தங்களை நிறுத்தவேண்டும் என இந்த அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீடு செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

    • ஓவலில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வலுவான இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்றது.
    • இந்திய அணி எந்தவிதமான கள சூழலிலும் வெல்லும் என நான் நினைக்கிறேன்.

    லண்டன்:

    இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. கோப்பையை எந்த அணி வெல்லும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் மற்றும் முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளனர்.

    ஏபிடி வில்லியர்ஸ் கூறியதாவது:-


    ஓவலில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வலுவான இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. அதிலிருந்து கொஞ்சம் நம்பிக்கை கொள்வார்கள். பேட்டிங் செய்ய இது ஒரு நல்ல விக்கெட், ஆனால் டெஸ்ட் போட்டியின் கடைசி கட்டங்களில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் விளையாடுவார்கள் என்று நான் நினைக்கிறேன்.

    நாசர் ஹூசைன் கூறியதாவது:-


    இந்திய அணி எந்தவிதமான கள சூழலிலும் வெல்லும் என நான் நினைக்கிறேன். அதற்கு ஆஸ்திரேலியாவில் அவர்களது செயல்பாடு உதாரணம். சூரியன் பிரகாசிக்கும் வகையில் வானிலை ஒத்துழைத்தால் அவர்கள் 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3-வது வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாக்கூர் என்ற ஃபார்முலாவின் அடிப்படையில் அணியை தேர்வு செய்யலாம்.

    கடந்த முறை நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி அந்த மைதானத்தின் சூழலை தவறாக கணித்து விட்டனர் என கருதுகிறேன். அதே நேரத்தில் ஓவலில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. கடந்த முறை இங்கிலாந்தை இங்கு வீழ்த்தி உள்ளது. ஷமிக்கும், கம்மின்சுக்கும் இடையே நிச்சயம் பலமான போட்டி நிலவுகிறது. அது ட்யூக் பந்தில் அவர்களது லெந்த் மற்றும் லைனில் எப்படி இருக்கப் போகிறது என்பதுதான்.

    என நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

    • இந்தியா, ஆஸ்திரேலியா இடையே உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
    • கடந்த முறை நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி அடைந்தது.

    லண்டன்:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எப்படியாவது வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றி விட இந்திய வீரர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இந்தியா வெற்றி பெறவேண்டும் என்றால் விராட் கோலியின் பேட்டிங் தரம் உயர்ந்ததாக இருக்க வேண்டும். ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா இரண்டு முறை அந்த அணியை வீழ்த்தி உள்ளது. இதனால் இந்திய அணியின் வீரர்கள் இடையே நம்பிக்கை அதிகமாக உள்ளது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி குறித்து விராட் கோலி கூறியதாவது:

    ஆஸ்திரேலியா அணி மிகவும் போட்டித் தன்மை வாய்ந்த அணியாகும்.

    அவர்களுக்கு ஒரு சிறிய வாய்ப்பு கொடுத்து விட்டாலும் அதை நமக்கு எதிராக கடுமையானதாக்கி அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார்கள்.

    அந்த அணியின் திறன் மிகவும் உயர்ந்தது. இந்த விஷயம் தான் என்னுடைய உத்வேகத்தை அதிகரிக்க காரணம். என்னுடைய ஆட்டத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லவும் இதுதான் காரணம். ஆஸ்திரேலியாவை வீழ்த்த என்னுடைய ஆட்டத்திறனை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

    கடந்த முறை நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி அடைந்தது நினைவிருக்கலாம்.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடர்பாக ஐசிசி நிகழ்ச்சியில் ரோகித் சர்மா பேசினார்.
    • கடந்த இரண்டு மூன்று வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வெற்றியை பெற்றுள்ளோம்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நாளை மறுநாள் வண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இந்திய அணி 2011ஆம் ஆண்டு டோனி தலைமையில் ஐசிசி உலக கோப்பையை கைப்பற்றியது. அதன் பின் எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் வென்றது கிடையாது. ஐசிசி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். ஆனால் நாக் அவுட், அரையிறுதி போட்டி ஆகியவற்றில் கோட்டை விட்டு கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்து ஏமாற்றம் அடையும்.

    கடந்த முறை நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. தற்போது ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாட இருக்கிறது. ஆனால் இந்த முறை அந்த தடையை தகர்த்து எறிவோம் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    ஐசிசி நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேட் கம்மின்ஸ், ராஸ் டெய்லர், இயான் பெல் ஆகிய முன்னணி வீரர்கள் மத்தியில் ரோகித் சர்மா பேசியதாவது:

    இறுதிப்போட்டி சவாலாகவே இருக்கும். பொதுவாக ஓவல் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். இந்த சவாலையே விரும்புகிறோம். நிலைத்து நின்று ஆடினால் மட்டுமே இங்கு ரன் சேர்க்க முடியும். போட்டியை கவனமாக எதிர்நோக்கினால் சிறப்பான ஆட்டம் வெளிப்படும்.

    கடந்த இரண்டு மூன்று வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வெற்றியை பெற்றுள்ளோம். இந்த முறை இறுதி தடையை கடக்கவேண்டும். அந்த நம்பிக்கையை இளம் வீரர்களுக்கு கொடுக்க வேண்டும். இதன்மூலம் அவர்கள் விளையாட விரும்பும் விதத்தில் அவர்களை ஆடவைக்க முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பரத் அல்லது இஷான் கிஷன் ஆகியோரில் யாரை தேர்வு செய்வது என யோசித்தேன்
    • ஜடேஜா, அஸ்வின் இரண்டு பேருக்கும் இடம்

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை மறுதினம் தொடங்குகிறது. இந்தியா தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப் போட்டியில் களம் இறங்குகிறது.

    இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற துடிப்பில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே ஆடும் லெவன் அணியில் இடம் பெறும் வீரர்கள் யாராக இருப்பார் என்ற ஆர்வம் தொற்றிக்கொண்டது.

    இங்கிலாந்து சூழ்நிலை பெரும்பாலும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு விளையாட சாதமாக இருக்காது. வேகப்பந்து வீச்சுக்கு சாதமாக இருக்கும் என்பதால் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இருந்தாலும் இந்திய அணி ஜடேஜா, அஸ்வின் ஆகியோருடன் களம் இறங்க வாய்ப்புள்ளது.

    இந்த கவாஸ்கர் தன்னுடைய ஆடும் லெவன் அணியை அறிவித்துள்ளார். அந்த அணி வருமாறு:-

    1. ரோகித் சர்மா, 2. சுப்மான் கில், 3. புஜாரா, 4. விராட் கோலி, 5. ரகானே, 6. கே.எஸ். பரத், 7. ஜடேஜா, 8. அஸ்வின், 9. முகமது சமி, 10. முகமது சிராஜ், 11. ஷர்துல் தாகூர்.

    இதுகுறித்து கவாஸ்கர் கூறியிருப்பதாவது:-

    பேட்டிங்கை பொறுத்தவரைக்கும் ரோகித் சர்மா, சுப்மான் கில் தொடக்க வீரர்கள், புஜரா 3-வது, விராட் கோலி 4-வது. ரகானே ஐந்தாவது இடத்தில் களம் இறங்குவார்.

    6-வது இடத்திற்கு விக்கெட் கீப்பராக கே.எஸ். பரத்தா? அல்லது இஷான் கிஷனா? என யோசித்து பார்த்தேன். எல்லோரும் பரத்தை பற்றி பேசுகிறார்கள். ஏனென்றால் அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். ஆகவே, 6-வது இடத்திற்கு அவர் சரி எனத் தோன்றுகிறது. சுழற்பந்து வீச்சில் இரண்டு ஜடேஜா, அஸ்வின் ஆகிய இருவருக்குமே இடம் கொடுத்துள்ளார்.

    • வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாறுவது எளிதாக இருக்காது.
    • டியூக் பால்களை அதிகமாக பயன்படுத்தினால் மட்டுமே அந்த பந்தின் தன்மையை அறிந்துகொள்ள முடியும்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் வரும் ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் மோதுகிறது. இதற்கான இங்கிலாந்தில் முகாமிட்டுள்ள இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போட்டியில் டியூக் பந்துகளே பயன்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் போதே நாங்கள் டியூக் பந்துகளில் பயிற்சியை தொடங்கிவிட்டதாக இந்திய வீரர் அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இந்திய வீரர் அக்சர் படேல் கூறியதாவது:-

    வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாறுவது எளிதாக இருக்காது. அதேபோல் தான் எஸ்ஜி பந்துகளில் வீசிவிட்டு டியூக் பந்துகளில் பந்துவீசுவதும் எளிதள்ள. அதிக நேரம் ஸ்விங் ஆகும் தன்மை உடைய டியூக் பால்களை வைத்து ஐபிஎல் தொடரின் போதே பயிற்சியை தொடங்கிவிட்டோம். இதற்காகவே டியூக் பால்களை அதிகளவில் ஆர்டர் செய்து பயிற்சியை மேற்கொண்டோம்.

    ஏனென்றால் டியூக் பால்களை அதிகமாக பயன்படுத்தினால் மட்டுமே, அந்த பந்தின் தன்மையை அறிந்துகொள்ள முடியும். இங்கிலாந்தில் ஆட்டம் நடப்பதால், லைன் மற்றும் லெந்தில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறோம்.

    இங்கிலாந்தில் வேகப்பந்துவீச்சே அதிகமாக எடுபடும் என்பதால், அணியில் ஒரு ஸ்பின்னருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். எனக்கு வாய்ப்பு கிடைப்பது பற்றி கவலைப்படாமல் பயிற்சியில் தீவிரமாக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா- ஆஸ்திரேலியா அணியை இணைத்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நாசர் உசேன் 11 கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார்.
    • இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    சென்னை:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐ.சி.சி.) 2019-ல் அறிமுகம் செய்யப்பட்டது. 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

    2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ந் தேதி தொடங்கியது. இதன் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணியை இணைத்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நாசர் உசேன் 11 கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார்.

    அதில் இந்திய அணி வீரர்கள் 4 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். கேப்டனாக ரோகித் சர்மா இடம் பெற்றுள்ளார். அதை தவிர விராட் கோலி, அஸ்வின், முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    அந்த அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    ரோகித் சர்மா (கேப்டன்), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபஸ்சேன், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, கேமரூன் கிரீன், அலேக்ஸ் கேரி, அஸ்வின், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், முகமது ஷமி.

    இது குறித்து நாசர் உசேன் கூறியதாவது:-

    பேட் கம்மின்ஸ் எளிதான தேர்வாக இருந்தது. ஸ்டார்க் இடதுகை வேகப்பந்து வீச்சாளராக இருப்பதாலும், ஒவ்வோரு பந்தையும் மாறுபட்டு (variation) வீசுவதாலும் அவரை 10-வது வீரராக தேர்வு செய்தேன்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி துணைக் கண்டத்திலோ அல்லது இந்தியாவிலோ நடந்தால், நான் ஜடேஜாவை தேர்வு செய்திருப்பேன். ஆனால் இந்த போட்டி இங்கிலாந்தில் நடப்பதால் அவரை தேர்வு செய்யவில்லை.

    ஆல்-ரவுண்டராக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை தேர்வு செய்வேன். அவர் 8-வது இடத்தில் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குறிப்பாக பந்து நேராக வரும் போது சுப்மன் கில் ஆபத்தான வீரர் என்பதில் சந்தேகமில்லை.
    • 2018-ல் இதே லண்டன் ஓவல் மைதானத்தில் கேஎல் ராகுல் சதமடித்து 149 ரன்கள் அடித்தார்.

    உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் 2-வது சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7 முதல் 11 வரை லண்டனில் இருக்கும் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

    அதில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மோதுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த இறுதி போட்டியில் ரோகித் சர்மாவுடன் தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் இளம் வீரர் சுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் ஸ்விங் பந்துகளை எதிர்கொள்ளும் அளவுக்கு சுப்மன் கில்லிடம் டெக்னிக்கல் அளவில் குறைபாடுகள் இருப்பதாகவும் கோப்பையை வெல்ல ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக ராகுல் தான் விளையாட வேண்டுமென்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வரலாற்றை மறந்து விட்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்காக சிறந்த 11 பேர் அணியை தேர்வு செய்யுங்கள். குறிப்பாக பந்து நேராக வரும் போது சுப்மன் கில் ஆபத்தான வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவருடைய டெக்னிக்கில் சில குறைபாடுகளை நான் பார்த்துள்ளேன்.

    குறிப்பாக பந்து நகரும் போது அவர் தன்னுடைய கைகளை பந்தை நோக்கி சற்று அதிகமாக எடுக்கிறார். அதனால் அடிக்கடி எட்ஜ் கொடுக்கிறார். எனவே கில்லுக்கு பதிலாக ராகுல் தேர்வு செய்யப்படுவாரா என்பது எனக்கு தெரியாது. ஏனெனில் நான் இந்திய அணியின் தேர்வு குழுவில் இல்லை.

    ஆனால் ஃபைனலுக்கு பின்பாக நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை கருத்தில் கொண்டு அந்த போட்டிக்கான அணியை தேர்வு செய்யாதீர்கள். நீங்கள் இறுதிபோட்டி எனும் ஒரு போட்டியில் வெல்வதற்கான சிறந்த அணியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    என்று அவர் கூறினார்.

    அவர் கூறுவது போல 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கிய கில் 28, 8 என 2 இன்னிங்சிலும் சுமாராகவே செயல்பட்டார்.

    மறுபுறம் 2021-ல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது பெற்ற ராகுல் 2018-ல் இதே லண்டன் ஓவல் மைதானத்தில் சதமடித்து 149 ரன்கள் விளாசிய அனுபவத்தை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அவர் 5 அல்லது 6-வது வரிசையில் களம் இறங்கினால் இந்திய அணியின் பேட்டிங் வலுவாக இருக்கும்.
    • அவர் கடந்த ஆண்டு இங்கிலாந்து மைதானங்களில் சிறப்பாக பேட்டிங் செய்தார்.

    புதுடெல்லி:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

    இந்தப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7 முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் லோகேஷ் ராகுலை விக்கெட் கீப்பராக தேர்வு செய்யலாம் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். தனியார் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கே.எல்.ராகுலை விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக விளையாட நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும். அவர் 5 அல்லது 6-வது வரிசையில் களம் இறங்கினால் இந்திய அணியின் பேட்டிங் வலுவாக இருக்கும். 

    ஏனென்றால் ராகுல் கடந்த ஆண்டு இங்கிலாந்து மைதானங்களில் சிறப்பாக பேட்டிங் செய்தார். லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியை தேர்ந்து எடுக்கும் போது லோகேஷ் ராகுலை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    முன்னணி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ரிஷப்பண்ட் விபத்தில் காயம் அடைந்தார். இதனால் அவர் இந்த ஆண்டு முழுவதும் எந்தவித போட்டியிலும் விளையாடமாட்டார். பண்ட் இடத்துக்கு கே.எஸ்.பரத் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அவரது பேட்டிங் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இதனால் தான் அவர் இடத்தில் ராகுலை சேர்க்கலாம் என்று கவாஸ்கர் வலியுறுத்தி இருக்கிறார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்டில் தொடக்க வீரராக ஆடிய ராகுல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 3-வது மற்றும் 4-வது டெஸ்டில் அவர் நீக்கப்பட்டார். அதோடு லோகேஷ் ராகுலின் துணை கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது. அவரது இடத்தில் இடம் பெற்ற சுப்மன்கில் தொடக்க வரிசையில் சதம் அடித்து முத்திரை பதித்தார்.

    தொடக்க வீரர் வரிசையில் சுப்மன்கில் நல்ல நிலையில் இருப்பதால் ராகுலை விக்கெட் கீப்பராக சேர்த்து 6-வது வீரராக களம் இறக்கலாம் என்ற யோசனையை கவாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

    ×