search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker kills"

    செந்துறை அருகே கட்டுமான பணியின்போது தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை கண்முன்பே கூலி தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் பகுதியில் தனியார் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் துளார் கிராமத்தில் உள்ளது. இங்கு லாரிகளுக்கான பணிமனை கட்டும் பணி நடைபெற்று வந்தது.

    இந்த பணியில் கடலூர் மாவட்டம் பிலாந்துறை கிராமத்தை சேர்ந்த கருணாநிதி, அவரது மகன் நித்திஷ் உள்ளிட்ட பலர் வேலை பார்த்து வந்தனர். 30 அடிக்கு மேல் உள்ள செட்டில் வேலை பார்த்த நித்தீஷ் அங்கிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக ஆலை நிர்வாகத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நித்திஷ் தந்தை கருணாநிதி குவாகம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தந்தையின் கண்முன்பே கூலி தொழிலாளி விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    அரும்பார்த்தபுரத்தில் வீட்டின் கூரை சரிந்து விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே அரும்பாரத்தபுரம் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 52). கூலித்தொழிலாளி. நேற்று இவர், தனது ஆஸ்பெட்டாஸ் கூரை வீட்டை மனைவி பாக்கியலட்சுமி மற்றும் குடும்பத்தினருடன் செப்பனிடும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது எதிர்பாராத விதமாக ஆஸ்பெட்டாஸ் கூரை சரிந்து விழுந்ததில் முருகானந்தம் படுகாயம் அடைந்தார்.

    உடனடியாக அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே முருகானந்தம் பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கஜா புயலில் விழுந்த தென்னை மரங்களை அகற்றியபோது மரம் முறிந்து மன்னார்குடி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தளிக்கோட்டையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). இவரது தம்பி தினேஷ் (28).

    இவர்கள் அதே பகுதியை சேர்ந்த மணி என்பவருக்கு சொந்தமான தென்னை மரங்கள் கஜா புயலில் சாய்ந்ததால் அதனை சக தொழிலாளர்களுடன் இணைந்து வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு தென்னை மரம் முறிந்து ரமேஷ் மீது விழுந்தது.

    இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு உள்ளிக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ரமேசை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    இதுபற்றிய புகாரின் பேரில் பரவாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பலியான ரமேசுக்கு பிரேமலத (32) என்ற மனைவியும், சாதனா (3) என்ற மகளும் உள்ளனர்.

    கிருமாம்பாக்கத்தில் மது என நினைத்து துணிகளை வெளுக்க வைக்கும் ஆலாவை குடித்த தொழிலாளி பலியானார்.

    பாகூர்:

    கிருமாம்பாக்கம் புறக்குட்டை பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 57). இவருக்கு அமராவதி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

    தமிழரசன் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்தார். குடிப்பழக்கம் உள்ள இவர் நேற்று மாலை மது குடித்து விட்டு வீட்டுக்கு மது பாட்டில் வாங்கி வந்தார்.

    மது பாட்டில் வைத்திருந்த இடத்தில் துணி வெளுக்க வைக்கும் ஆலா பாட்டில் இருந்ததால் குடிபோதையில் மது என நினைத்து ஆலா பாட்டிலை எடுத்து குடித்து விட்டார். இதில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்த தமிழரசனை அவரது குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ் பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தமிழரசன் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கீரனூர் அருகே குடிபோதையில் மின்சார டிரான்பார்மரில் ஏறிய தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்ட கீரனூர் அருகே உள்ள மேலப்புதுவயல்  கிராமத்தை சேர்ந்தவர் பொன்னையா. இவரது மகன் ஆறுமுகம் (வயது 27). கூலி தொழிலாளி.

    இவர் கடந்த 22-ந் தேதி மது குடித்து விட்டு போதையில் வீட்டிற்கு நடந்து வந்தார். போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் மேலப்புதுவயல் செல்லும் வழியில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறினார். பின்னர் தனது இரண்டு கைகளால் மின்சாரகம்பியை தொட்டார்.  உடனே அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி விசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாஞ்சில்குமார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    குடிபோதையில் டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்சாரம் பாய்ந்து இறந்த வாலிபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    ஆனைமலை அருகே திருமணம் ஆகி 1 வருடத்தில் ஆற்றில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொள்ளாச்சி:

    ஆனைமலை அருகே உள்ள சின்னப்பன் பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (24). மில் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. சம்பவத்தன்று வேலைக்கு சென்ற முருகானந்தம் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் தேடி வந்தனர். அவர் தனது நண்பர்களுடன் மது அருந்தியதை சிலர் பார்த்தாக கூறினார்கள். 

    இந்த நிலையில் சுந்தரபுரியில் உள்ள ஆழியாறில் முருகானந்தம் பிணமாக மிதந்தார். அவரது உடலை ஆனைமலை போலீசார் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் ஆற்றில் மூழ்கி இறந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேவாரம் அருகே தண்ணீர் பிடிக்க மோட்டாரை இயக்கிய கூலித்தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
    தேனி:

    தேவாரம் அருகே தம்மிநாயக்கன்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நீதிபதி (வயது 43). இவர் கூலி தொழிலாளி.

    சம்பவத்தன்று தனது வீட்டில் குடிநீர் பிடிப்பதற்காக மோட்டாரை இயக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக நீதிபதி மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்த உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் நீதிபதியை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நீதிபதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது அண்ணன் விஜயராஜ் தேவாரம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயபுரத்தில் ரெயில்வே நடைபாதை பணியின்போது உயர் அழுத்த மின்கம்பி மீது தவறிவிழுந்த தொழிலாளி கருகி இறந்தார்.
    ராயபுரம்:

    தர்மபுரி மாவட்டம் பயர் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் குமரேசன் (27). இவர் சென்னையில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார். தற்போது சென்னை துறைமுகம் 5-வது வாயிலில் அமைக்கப்பட்டு வரும் ரெயில்வே மேம்பால நடைபாதை பணியில் ஈடுபட்டு வந்தார்.

    நேற்று இரவு மற்ற தொழிலாளர்களுடன் குமரேசனும் வேலை செய்து கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்.

    இதில், நடை மேம்பாலத்தின் கீழே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த ரெயில்வே மின்சார கம்பியில் விழுந்தார். இதனால் குமரேசன் மின்சாரம் தாக்கி உடல் கருகி பலியானார்.

    இதை கண்ட மற்ற ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவருடைய உடல் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மார்த்தாண்டத்தில் வீட்டிற்கு நடந்து சென்ற தொழிலாளி கால்வாயில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் முளங்குழி காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை(வயது64). தொழிலாளி. இவர் நேற்று வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். பல்லன்விளை அருகே வரும் போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கால்வாயில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் கோட்டார் வட்டவிளை பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி மகேஷ்வரி(35). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அய்யப்பன் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது மகேஸ்வரி மயங்கிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார்.

    இதையடுத்து அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மகேஸ்வரி இறந்தார். இதுகுறித்து கோட்டார் போலீ சில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சாய்லெட் சுமி மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் மகேஸ்வரி அதிக அளவு மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
    எடப்பாடி அருகே தென்னை மரத்தில் தேங்காய் பறித்த தொழிலாளி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    எடப்பாடி:

    எடப்பாடியை அடுத்த வெள்ளரிவெள்ளி கிராமம், தோப்புகாடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (55), மரம் ஏறும் கூலித் தொழிலாளி. இவர் இப்பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளில் தேங்காய் பறிக்கும் கூலி வேலை செய்து வந்தார். 

    இந்நிலையில் நேற்று மாலை வெள்ளரி வெள்ளியை அடுத்த காசிக்காடு பகுதியில் உள்ள பழனிசாமி (50) என்பவருக்கு சொந்தமாக தோட்டத்தில் தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த கணேசன் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த கணேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    நாகை கூலித்தொழிலாழி ஒருவர் போதை ஏறாததால் மறுகரையில் இருந்த டாஸ்மாக் கடைக்கு செல்ல காவிரி ஆற்றை கடந்தபோது நீரில் மூழ்கி பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்து சித்தர்காடு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஓடும் காவிரி ஆற்றின் இருகரைகளிலும் தலா ஒரு டாஸ்மாக் கடை உள்ளது.

    தற்போது கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் செல்கிறது.

    காவிரி ஆற்றில் உள்ள மற்றொரு டாஸ்மாக் கடைக்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டும்

    இந்த நிலையில் மறையூர் அக்ரஹார தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி பழனிசாமி (வயது 52) என்பவர் நேற்றுமாலை சித்தர்காடு காவிரி ஆற்றின் தென்கரையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு அவர் மதுகுடித்தார். ஆனால் அவருக்கு போதை ஏறாததால் ஆத்திரம் அடைந்தார். இதனால் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் தகராறு செய்தார்.

    பின்னர் இந்த கடை சரக்கு சரியில்லை. நான் அக்கரையில் உள்ள கடைக்கு மது குடிக்க போகிறேன் என்று கூறினார். இதைகேட்டு மற்றவர்கள் ‘வேண்டாம்.. ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்கிறது,’’ என்று தெரிவித்தனர். ஆனால் அதை அவர் காதில் வாங்கி கொள்ளாமல் காவிரி ஆற்றில் குதித்து நீந்த தொடங்கினார்.

    அப்போது ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் ஆழமான பகுதிக்கு சென்ற அவரால் நீந்த முடியாமல் தத்தளித்தார். பிறகு சில நிமிடங்களில் பழனிசாமி ஆற்று தண்ணீருடன் அடித்து செல்லப்பட்டார்.

    இதைபார்த்து கரையில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மயிலாடுதுறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி தேடி பார்த்தனர். ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை. இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலையிலும் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் இளைஞர்கள் காவிரி ஆற்றில் பழனிசாமி உடலை தேடி பார்த்து வருகின்றனர்.

    டாஸ்மாக் கடைக்கு சுற்றி செல்லாமல் காவிரி ஆற்றில் இறங்கிய தொழிலாளி நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வல்லகுளம் காட்டுபகுதியில் பனையேற சென்ற தொழிலாளி மரத்தில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    செய்துங்கநல்லூர்:

    செய்துங்கநல்லூர் அருகே உள்ள அரசர்குளத்தை சேர்ந்தவர் மகாலிங்கம்(வயது 70). பனையேறும் தொழிலாளி. இன்று காலை இவர்  வல்லகுளம் காட்டுப்பகுதியில் பனையேற சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வராததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அவரை தேடி சென்றனர். அப்போது ஒரு பனை மரத்தின் கீழ் மகாலிங்கம் இறந்து கிடந்தார். 

     இது குறித்து தகவல் அறிந்த சேரகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான மகாலிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சோமன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×