search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செய்துங்கநல்லூரில் மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
    X

    செய்துங்கநல்லூரில் மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

    வல்லகுளம் காட்டுபகுதியில் பனையேற சென்ற தொழிலாளி மரத்தில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    செய்துங்கநல்லூர்:

    செய்துங்கநல்லூர் அருகே உள்ள அரசர்குளத்தை சேர்ந்தவர் மகாலிங்கம்(வயது 70). பனையேறும் தொழிலாளி. இன்று காலை இவர்  வல்லகுளம் காட்டுப்பகுதியில் பனையேற சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வராததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அவரை தேடி சென்றனர். அப்போது ஒரு பனை மரத்தின் கீழ் மகாலிங்கம் இறந்து கிடந்தார். 

     இது குறித்து தகவல் அறிந்த சேரகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான மகாலிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சோமன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×