search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women Safety"

    • கிழிந்த புடவைகளையும், பேஷன் உடைகளாக மாற்றலாம்.
    • புதுமைகள்தான், பேஷன் துறையின் அடிநாதம்.

    நவீன காலத்து உடை நாகரிகம் பற்றியும், 'பொட்டிக்' எனப்படும் பிரத்யேக ஆடை வடிவமைப்பு தொழில் கலாசாரம் பற்றியும், அதன் மூலம் பெண்களுக்கு உருவாகி இருக்கும் வேலைவாய்ப்புகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

    'பொட்டிக்' என்பது காஸ்டியூம் டிசைனர்கள் எனப்படும் உடை வடிவமைப்பாளர்களால் நிர்வகிக்கப்படும் பிரத்யேக உடை கடை. இங்கு, பேஷன் டிரெண்டிங்கான உடைகளை வடிவமைப்பார்கள். அதேபோல வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ற, பிரத்யேக உடைகளையும் வடிவமைத்து கொடுப்பார்கள். இதில், எல்லா கலாசார உடைகளும் அடங்கும். அது சுடிதாராக இருக்கலாம். டிசைனிங் வேலைபாடுகள் நிறைந்த சேலை பிளவுஸ்களாக இருக்கலாம். பிரைடல் பிராக், லெஹெங்கா, ஸ்கர்ட், பட்டுப்புடவைகளில் இருந்து தைக்கப்படும் நவ-நாகரிக உடைகள், குறிப்பிட்ட விழாக்களை அழகாக்கும் தீம் மற்றும் கஸ்டமைஸ்ட் உடைகள், பிறந்த குழந்தைகளுக்கான விஷேச உடைகள்... இப்படி உடை கலாசாரத்தில் வரும் எல்லா வகைகளையும், தைத்துக் கொடுக்கலாம். ரெடிமேட் துணிகளுக்கு மாற்றாக, நமக்கு வேண்டியதை, சிறப்பான வேலைப்பாடுகளுடன் தைத்துக் கொடுப்பதுதான், பொட்டிக் கடைகளின் அடிப்படை.

    முன்பை விட, இப்போது நிறைய மக்கள் கஸ்டமைஸ்ட் ஆடைகளை அணிய ஆசைப்படுகிறார்கள். ஒருகாலத்தில் திருமண வரவேற்புக்கு மட்டுமே 'கஸ்டமைஸ்ட்' ஆடைகளை பயன்படுத்துவார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. நிச்சயதார்த்தத்தில் தொடங்கி, திருமணத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய போட்டோஷூட்கள், வரவேற்பு நிகழ்ச்சிகள், ஹனிமூன் பயணங்கள், கர்ப்ப கால போட்டோ ஷூட், குழந்தை பிறப்பு, குழந்தையின் முதல் வருட பிறந்த நாள் கொண்டாட்டம்... இப்படி எல்லா விஷேசங்களுக்கும், அவர்களுக்கு பிடித்த மாதிரியில், பிடித்த நிறங்களில், பிடித்த தீம் (கருப்பொருளில்) ஆடைகளை வடிவமைத்து அணிகிறார்கள். இது, இன்றைய டீன்-ஏஜ் வயதினரின் தவிர்க்கமுடியாத பழக்கமாகிவிட்டது. அதனால் 'காஸ்டியூம் டிசைனிங்' துறையிலும், பொட்டிக்கடை களிலும் சிறப்பான எதிர்காலம் இருக்கும்.

    கிரியேட்டிவிட்டி, குவாலிட்டி, டெலிவரி மற்றும் பிட்டிங்... இவை நான்கையும், சிறப்பாக பின்பற்றினால், பொட்டிக் தொழிலில் வெற்றி பெறலாம். கிரியேட்டிவிட்டி எனப்படும் படைப்பாற்றல் வெளிப்படும் வகையிலான உடைகளை உருவாக்குவது அவசியம். அதேசமயம், லாப நோக்கத்திற்காக துணிகளின் தரத்தில் (குவாலிட்டி) எந்தவித சமரசமும் இருக்கக்கூடாது. அதேபோல, 2 நாட்களில் தைத்து கொடுப்பதாக (டெலிவரி) கூறி, அதை 4 நாட்களாக தாமதப்படுத்தி கொடுக்கக்கூடாது. இறுதியாக, நாம் தைத்து கொடுப்பது அவர்களின் உடலோடு சரியாக பொருந்தக்கூடிய அளவில் பிட்டிங் துல்லியமாக இருக்க வேண்டும். இவை நான்கையும் சரியாக கடைப்பிடித்தால், வெற்றி பெறலாம்.

    புதுமைகள்தான், பேஷன் துறையின் அடிநாதம். அதில் உருவானதுதான், இந்த டெக்னிக். எல்லோர் வீட்டிலும், அம்மா, பாட்டிகளின் நினைவுகளை தாங்கிய பழைய புடவைகள் இருக்கும். அதை இப்போது உடுத்து பவர்களும் உண்டு. பழைய டிசைன் என்ற தயக்கத்தினால், உடுத்த தயங்குபவர்களும் உண்டு. அப்படி தயங்குபவர்களுக்காகவே, இந்த முயற்சி. பழைய புடவையை புடவையாகத்தான் அணியவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்களுக்கு பிடித்த வகையில், சுடிதாராக அணியலாம். இல்லையென்றால் அனார்கலி, கவுன், லாங் பிராக், ஸ்கர்ட், அம்பர்லா கவுன், குர்த்தி... இதுபோன்ற பேஷன் வடிவங்களுக்கும் மாற்றிக்கொள்ளலாம்.

    சில பெண்கள், அவர்களது அம்மா புடவையில் தங்களுக்கும், மகளுக்கும் ஒரே டிசைனில் உடை தைத்து அணிகிறார்கள். ஏதோ ஒரு வகையில், முன்னோர்களுக்கும், அவர்களுக்குமான பந்தத்தை உடை வடிவில் தொடர விரும்புகிறார்கள்.

    கிழிந்த புடவைகளையும், பேஷன் உடைகளாக மாற்றலாம். புடவையின் கிழிந்த பகுதிகளை மட்டும் விட்டுவிட்டு, நல்ல நிலையில் இருக்கும் மற்ற புடவை துணிகளிலும், நவ-நாகரிக உடைகளை தைக்கலாம். அவரவர் பட்ஜெட்டிற்கு ஏற்ப, ஆரி வேலைப்பாடுகள் செய்து, புடவைகளை அழகாக்கலாம். அதேபோல, கறை படிந்த பட்டுப்புடவைகளை கூட ஆடைகளாக மாற்றலாம்.

    ஆடம்பரமாக காட்சியளிக்கும் உடைகளை 'லைட் வெயிட்' முறையில் லேசாக வடிவமைப்பதும், அணிவதும்தான் இப்போதைய டிரெண்ட். இதனுடன், அம்மா-மகள் உடைகள், தீம் முறையில் ஒட்டுமொத்த குடும்பத்திற்குமான உடைகள், விஷேசங்களுக்கு ஏற்ற கஸ்டமைஸ்ட் உடைகள், பட்டுப்புடவைகளில் உருவாகும் பல உடைகள்... என எந்த வரம்பிற்குள்ளும் சிக்காமல், ஆடைகளின் டிரெண்ட் வளர்ந்துகொண்டே இருக்கிறது.

    தையல் கலையை பொறுத்தவரை, வாய்வழி செய்திகளாகவே பெரும் விளம்பரம் நடக்கும். நீங்கள், உங்களுக்கு தெரிந்த தோழிகளிடம் பரிந்துரைப்பீர்கள். அவர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் பரிந்துரைப்பார்கள். இதோடு கொஞ்சம், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தள புரோமோஷன் இருந்தால் போதும், சிறப்பாக முன்னேறலாம்.

    • நம்பிக்கையுள்ள பெண்கள் ஆண்களை அதிகம் ஈர்க்கிறார்கள்.
    • தங்களின் பெண் துணையிடம் தேடும் அந்த குணங்கள் குறித்து இங்கு காண்போம்.

    இன்றைய காலகட்டத்தில் ஆண்களும் பெண்களும் தற்போது ரிலேஷன்ஷிப்பில் இருப்பது பெரிய விஷயமல்ல. பெண்கள் தங்கள் துணை தங்கள் மீது அக்கறை உள்ளவராகவும், புத்திசாலித்தனமிக்க ஆளுமையுடையவராகவும் நடந்துகொள்ள வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால், ஆண்கள் தங்கள் துணையிடம் என்ன குணங்களைத் தேடுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?. அதுகுறித்து இங்கு காணலாம். அதாவது, பெண்களிடம் உள்ள இந்த 5 குணங்களை தான் ஆண்கள் விரும்புகின்றனர். மேலும். திருமணத்திற்கு முன் காதலிக்கும்போது இதனை ஆண்கள் தேடுகின்றனர். இதுகுறித்து இங்கு முழுமையாகதெரிந்துகொள்ளலாம்.

    பெண்கள் தங்களை தாங்களே கவனித்துக்கொள்பவராக இருந்தால், அவர்கள் மிகவும் தைரியமாக வாழ்க்கையை மேற்கொள்கின்றனர். தனது கருத்துக்களை வெளிப்படையாக வெளிப்படுத்துகிறார். அவர்கள் தாங்களாகவே பெரிய முடிவுகளை எடுக்க வல்லவர்கள். அத்தகைய பெண்களை ஆண்கள் மிகவும் விரும்புகிறார்கள், அவர்களுடன் நட்புக்கொள்ளவும், காதலிக்கவும் கொள்ள விரும்புகிறார்கள்.

    ஆண்களைப் போல சத்தமாக சிரித்து, ஃபன் செய்ய விரும்பும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்கிறது. ஆனால், சந்தோஷ் சுப்பிரமணியம் ஹாசினி போன்று இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அத்தகைய பெண்களிடம் ஆண்கள் மிக விரைவாக ஈர்க்கப்படுகிறார்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் கலகலப்பான பெண்களுடன் நட்பு கொள்ள விரும்புகிறார்.

    ஒரு சிலரை பார்த்தவுடன் ஈர்க்கும் வகையில் இல்லாவிட்டாலும், அவர்கள் உடற்தகுதியை பராமரிக்கும் பெண்களாக இருந்தால் ஆண்கள் அவர்களை விரும்புகின்றனர். உண்மையில், ஆண்களின் முதல் கவனம் பெண்களின் உடல் தோற்றத்தில் மட்டுமே செல்கிறது. அத்தகைய சூழ்நிலையில், தங்கள் உடலைப் பராமரிக்கும் பெண்கள் ஆண்களின் இதய ராணியாக மாறுகிறார்கள்.

    நம்பிக்கையுள்ள பெண்கள் ஆண்களை அதிகம் ஈர்க்கிறார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் சீக்கிரம் பதறாத பெண்ணை ஆண்கள் விரும்புகிறார்கள். குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு நேரம் செலவழிக்கும் பெண்கள் குறித்து ஆண்கள் பெருமைப்படுகிறார்கள். அத்தகைய பெண்கள் தங்கள் திறமையால் விரைவில் அனைவருக்கும் பிடித்தவர்களாக மாறுவார்கள்.

    சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் பெண்களை எல்லோருக்கும் பிடிக்கும். அத்தகைய பெண்களுடன் நட்பு கொள்ள ஆண்கள் தயங்குவதில்லை. அத்தகைய பெண்கள் தானாகவே ஆண்களின் கவர்ச்சிகரமான பட்டியலில் சேர்ந்துவிடுவர்கள். பெண்மை என்பதை விட விரைவான புத்திசாலித்தனமான பெண்களையும் ஆண்கள் விரும்புகிறார்கள்.

    • பிரீமியம் குறைவாக இருக்கிறது என்பதற்கான பாலிசியை தேர்ந்தெடுக்கக் கூடாது.
    • பாலிசி மூலம் கிடைக்கும் பலன்களை பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

    பொருளாதாரம் நாளுக்கு நாள் மாறிவரும் நிலையில், நமது வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. வசதிகள் அதிகரித்ததால் நாம் உடல் நலத்தில் கவனம் செலுத்தத் தவறிவிட்டோம். மருத்துவமனை செலவுகள் அதிகரித்துவிட்ட இந்த காலத்தில், அந்த செலவுகளை சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கி நின்ற அனுபவம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இருக்கவே செய்கிறது. இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறார்கள், நிதி ஆலோசகர்கள்.

    மருத்துவச் செலவுகளுக்கு என்று பணம் சேர்த்து வைப்பதைவிட ஒரு மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும். குறைந்த செலவில் குடும்பத்தினர் அனைவருக்குமான மருத்துவ செலவுகளை இதன் மூலம் சமாளிக்கலாம். இந்த காப்பீடு தனித்தனியாகவும், குடும்பத்தினருக்கும் சேர்த்து புளோட்டர் என இரண்டு வகையிலும் கிடைக்கிறது. தனிநபர் பாலிசியில், காப்பீடு செய்பவர் மட்டும் கிளைம் செய்து கொள்ளலாம். புளோட்டர் பாலிசியில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கிளைம் செய்து கொள்ளலாம்.

    திருமணத்துக்கு முன்பு தனிநபர் பாலிசி எடுத்திருந்தால் திருமணத்துக்கு பிறகு மனைவி மற்றும் குழந்தைகளையும் இணைத்துக் கொண்டு புளோட்டர் பாலிசியாக மாற்றிக்கொள்ளலாம். முதியவர்களுக்கு அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும். எனவே இவர்களை புளோட்டர் பாலிசியில் சேர்க்காமல் தனிதனி தனிநபர் பாலிசி எடுத்துக் கொள்வதும் நல்லது. 3 மாத குழந்தை முதல் 86 வயது வரை இந்த பாலிசி அனுமதிக்கப்படுகிறது. நமது மருத்துவ தேவைகளைப் பொறுத்து மருத்துவக் காப்பீட்டை முடிவு செய்ய வேண்டும். பிரீமியம் குறைவாக இருக்கிறது என்பதற்கான பாலிசியை தேர்ந்தெடுக்கக் கூடாது. பாலிசி மூலம் கிடைக்கும் பலன்களை பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

    பாலிசியின் வரம்புகளுக்கு ஏற்ப கிளைம் செய்து கொள்ளலாம். மருத்துவக் காப்பீட்டை அனுமதிக்கும் மருத்துவமனைகள் குறித்த விவரம் பாலிசிதாரர்களுக்குக் கொடுக்கப்படும். இந்த மருத்துவமனைகளில் உள்நோயாளியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் காப்பீட்டு தொகையில் இருந்து மருத்துவ செலவுகளை கழித்துக் கொள்வார்கள். புறநோயாளியாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவை கிளைம் செய்து கொள்ள முடியாது. ஆனால் பாலிசி அனுமதிக்கும் பட்சத்தில் இதற்கு ஆகும் செலவுகளையும் கிளைம் செய்து கொள்ளலாம். சில நோய்களுக்கு புற நோயாளியாக தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்போம். சில நோய்களுக்கு மருத்துவ பரிசோதனை அடிக்கடி எடுக்க வேண்டியிருக்கும். மேலும் சில நோய்கள் மருத்துவமனையை விட்டு வந்த பிறகும் நீடிக்கும். இது போன்று நிலைமைகளில் பாலிசி அனுமதிக்கும் வரை கிளைம் செய்து கொள்ள முடியும்.

    • பட்ஜெட் போட்டு செயல்படும் போது செலவுகளை எளிதாக குறைக்க முடியும்.
    • ஒவ்வொரு பொருளிலும் கவனம் செலுத்தினால் பெருமளவு செலவை குறைக்கலாம்.

    வருமானத்திற்கு ஏற்ற வகையில் திட்டமிட்டு செலவு செய்வதால் சேமிப்பு அதிகரிக்கும். பட்ஜெட் போட்டு செயல்படும் போது செலவுகளை எளிதாக குறைக்க முடியும். பெண்கள் மளிகைபொருட்கள் வாங்குகையில் சில வழிமுறைகளை பின்பற்றினால் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

    மளிகைப்பொருட்களை சிறுக சிறுக வாங்காமல் ஒரு மாதத்திற்கு தேவையானவற்றை மொத்தமாக வாங்குவது நல்லது.

    ஒவ்வொரு மாதமும் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு முன்பு பட்டியல் தயார் செய்வது அவசியமானது.

    சமையல் அறைக்குள் சென்று என்னென்ன பொருட்கள் தேவை? என்பதை கவனித்த பின்பு பட்டியல் போடலாம்.

    முந்தைய மாதத்தில் வாங்கிய பொருட்களில் ஏதேனும் மீதம் இருந்தால் இந்த மாதம் வாங்க இருக்கும் பொருட்களின் அளவை குறைத்து கொள்ளலாம்.

    அடிக்கடி சமைக்கும் உணவுகளுக்கு தேவையான பொருட்களை மட்டும் அதிகமாக வாங்கிகொண்டு மற்றவற்றை குறைத்து கொள்வது சிறந்தது.

    பலசரக்கு அங்காடிகளில் பொருட்கள் வாங்கும் போது கண்ணில் பட்டதையெல்லாம் எடுத்துக்கொண்டிருக்காமல் முதலில் நமக்கு தேவையான பொருட்களை வாங்கிய பின்னரே மற்றவற்றை வாங்க வேண்டும். இது பணம் விரயமாகாமல் தடுக்க உதவும்.

    பண்டிகை காலங்களில் தேவைக்கு ஏற்றவாறு மளிகைப்பொருட்கள் வாங்குவது பணத்தை சேமிக்க உதவும்.

    மளிகை பொருட்களளுக்கான பட்ஜெட் போடும் போது காய்கறிகள், பழங்கள், இறைச்சி போன்றவற்றுக்கும் சேர்த்து பணம் ஒதுக்க வேண்டும்.

    ஷாப்பிங் செய்யும் போது தள்ளுபடி என்ற வார்த்தையை பார்த்து மயங்காமல் அவசியமான பொருட்களை மட்டும் வாங்கினால் பணத்தை சேமிக்கலாம்.

    அந்தந்த சீசனுக்குரிய காய்கறிகள், பழங்களை வாங்கினால் விலை குறைவாக இருக்கும். பணமும், மிச்சமாகும்.

    காய்கறிகளை மொத்தமாக வாங்கி வைத்து வீணாக்காமல் என்ன சமைக்கலாம் என்ற திட்டமிடுதலோடு வாராவாரம் வாங்கினால் பணத்தை சேமிக்கலாம்.

    மளிகைப்பொருட்களை பட்டியல் போடுவதற்கு முன்பு குடும்பத்தினரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.

    உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்பவர்கள் தாங்கள் முக்கியத்துவம் கொடுக்கும் உணவுகளுக்கு ஏற்றவாறு மளிகைப்பட்டியல் தயார் செய்யலாம்.

    இவ்வாறு ஒவ்வொரு பொருளிலும் கவனம் செலுத்தினால் பெருமளவு செலவை குறைக்கலாம்.

    • இ-மெயிலில் பல பரிவர்த்தனைகள் ஏமாற்று பேர்வழிகள் மூலம் கவர்ச்சிகரமான வாசகங்களுடன் வருகின்றன.
    • மின்னணு சார்ந்த பணப்பரிவர்த்தனையை பலரும் பயன்படுததுகின்றனர்.

    பணம், சொத்துக்கள், தனிப்பட்ட தகவல்கள் போன்றவற்றை ஒருவருடைய அனுமதி இல்லாமலேயே ஏமாற்றி பறிக்கும் செயல்கள் நம்மைச்சுற்றி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் அகப்பட்டுக்கொள்ளலாமல் பாதுகாப்பாக இருப்பதற்கான சில வழிகளை பார்க்கலாம்.

    ஆன்லைன் தகவலை பாதுகாக்கவும்.

    நாம் பயன்படுத்தும் கணினி, மொபைல் உள்ளிட்டவற்றை தகுந்த பாதுகாப்பு சாப்ட்வேர் பயன்படுத்தி பாதுகாக்க வேண்டும். இவற்றில் தனிப்பட்ட எந்த தகவலையும் பதியாமல் இருக்க வேண்டும். குறிப்பாக நிதி சார்ந்த எந்த தகவலையும் மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பதியாமல் இருக்க வேண்டும்.

    கணக்கை நிர்வகித்தல்

    வங்கிக்கு நேரடியாக சென்று பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு பதிலாக இணையத்தளம், மொபைல் செயலி போன்ற பல தொழில் நுட்பங்கள் நடைமுறையில் உள்ளன. இவற்றால் எந்த அளவுக்கபணி எளிமையாகியுள்ளதோ, அதே அளவுக்கு ஏமாற்றும் முறைகளும் அதிகரித்துள்ளன. செயலியை பயன்படுத்துபவர்கள் தினமும் ஒருமுறையாவது தங்கள் வங்கி கணக்கில் உள்ள இருப்பு பிற பரிவர்த்தனைகள் குறித்து கவனிக்க வேண்டும். வங்கி பரிவர்த்தனை குறித்த எச்சரிக்கை குறிப்புகள் அனுப்புமாறு வங்கிக்கு கோரிக்கை விடுப்பது நமக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும்.

    இ-மெயிலில் கவனம் தேவை

    இ-மெயிலில் பல பரிவர்த்தனைகள் ஏமாற்று பேர்வழிகள் மூலம் கவர்ச்சிகரமான வாசகங்களுடன் வருகின்றன. இவற்றை திறந்து பார்க்கும் போது நம் ரகசிய தகவர்கள் அனைத்து எளிதில் திருடப்படும் வாய்ப்புள்ளது. எனவே எதையும் ஒருமுறைக்கு இருமுறை படித்து நம்பகமானது என்று உறுதி செய்த பின்பு உள் நுழையவும்.

    தெரியாத அழைப்புகளை தவிர்க்கவும்.

    பரிச்சியம் இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்கும் போது எளிதில் நம் தகவல்களை திருட வாய்ப்பு ஏற்பட்டு விடும். எனவே வரும் அழைப்புகள் நம்பகமானதா?என்பதை கவனத்தில் கொண்டு பாதுகாப்பனது என்று உறுதி செய்யும் அழைப்புகளுக்கு மட்டும் பதிலளித்தால் போதுமானது. நம்பகமில்லை என்பது தெரிந்தால் உடனடியாக அந்த அழைப்பை துண்டித்து விடுவது நல்லது.

    தவறான பயன்பாடு

    நமக்கு தெரியாமல் நம்மிடம் இருந்து திருடும் தகவலை கொண்டு யார் வேண்டுமானாலும் நம் கணக்கை இயக்க முடியும். இது போல் நம கணக்கை பிறர் இயக்குவது குறித்து தெரிந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட அமைப்பை தொடர்பு கொண்டு அந்த கணக்கை முடக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    பணப்பரிவர்த்தனையில் கவனம்

    மின்னணு சார்ந்த பணப்பரிவர்த்தனையை பலரும் பயன்படுததுகின்றனர். இதில் நீங்கள் பதிவு செய்யும் கடவுச்சொல் உங்களுக்கு மட்டும் தெரிந்ததாக இருக்க வேண்டும். கூட்டம் அதிகமுள்ள பகுதியில் கடவுச்சொல்லை பயன்படுத்துவதாக இருந்தால் அந்த கடவுச்சொல்லை உடனடியாக மாற்றி புதிய கடவுச்சொல்லை பதிவு செய்து கொள்ளலாம்.

    தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப நாம் வியந்து பார்க்கும் வகையில் பலஏமாற்று வேலைகள் நம்மை சுற்றி அரங்கேறுகின்றன. இதில் மற்றவர்களை குறைகூறுவதை விட நாம் விழிப்புணர்வுடன் இருந்தாலே மோசடிப் பேர்வழிகளிடம் இருந்து காத்து கொள்ளலாம்.

    • வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
    • ஆண்களைப்போல் பெண்களும் இரவு ஷிப்ட்டில் பணியாற்றுகிறார்கள்.

    வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் திருமணத்திற்கு முன்பு குடும்பப் பொறுப்புகளை சுமக்கவேண்டியதில்லை. அலுவலகப் பணிகளை பார்த்தால் போதுமானது. ஆனால் திருமணமாகிவிட்டால், குடும்ப நிர்வாகத்தையும் அவர்கள் சேர்த்து சுமக்க வேண்டியதிருக்கிறது. இந்த இரண்டு பணிகளையும் சேர்த்து கவனிக்கும் பெண்கள் உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? அல்லது வருத்தத்தோடு இரண்டு பணிகளையும் செய்துகொண்டிருக்கிறார்களா? என்பதை எல்லாம் அலசும் வித்தியாசமான சர்வே இது!

    * குடும்ப நிர்வாகம், அலுவலகப் பணி இரண்டையும் கவனிப்பது உங்களை எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது என்ற கேள்விக்கு..?

    - 51.8 சதவீத பெண்கள் 'மகிழ்ச்சியடைந்து கொள்வதைவிட வேறு வழியில்லை' என்று சற்று சலிப்பு கலந்த நிலையில் பதில் கூறியிருக்கிறார்கள்.

    - மகிழ்ச்சியாக இருக்கிறது என்ற பதில், 37.5 சதவீத பெண்களிடமிருந்து கிடைத்திருக்கிறது.

    - கொஞ்சம்கூட மகிழ்ச்சியில்லை என்று 10.7 சதவீதம் பேர் கருத்துக் கூறியிருக்கிறார்கள்.

    * நீங்கள் குடும்ப நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டு, வெளியே சென்று வேலையும் செய்ய என்ன காரணம் என்ற கேள்விக்கு..?

    - ஊதியத்திற்காக என்று 55 சதவீதம் பேரும், வேலை தரும் ஆத்ம திருப்திக்காக என்று 40 சதவீதம் பேரும் கூறியுள்ளார்கள்.

    - மீதமுள்ள பெண்கள் 'சமூகத்திலும், உறவினர்கள் மத்தியிலும் கிடைக்கும் கவுரவத்திற்காகவும்- வீட்டிலே இருந்தால் போரடித்துப்போவதை தவிர்க்கவும்' வேலைக்குப் போவதாக சொல்கிறார்கள்.

    தனியார் அமைப்பு ஒன்று நடத்திய இந்த சர்வேயில் கருத்து தெரிவித்திருக்கும் பெண்களில் பெரும்பாலானவர்கள் 26 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களில் கணிசமான அளவினர், குடும்பம் மற்றும் வேலையால் அதிக மனஅழுத்தம் ஏற்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். இரவில் தூங்கச் செல்லும்போது மறுநாள் காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருப்பது, காலை உணவு என்ன தயாரிப்பது, கியாசை அணைத்தோமா, வீட்டை பூட்டினோமா.. என்றெல்லாம் நூறு கேள்விகள் மூளையை மொய்த்துக்கொண்டிருக்கும் போதே தூங்கிப்போவதாகவும், திடுக்கிட்டு விழிக்கும்போது விடிந்துவிடுவதாகவும் அலுப்போடு சொல்கிறார்கள். ஒவ்வொரு நாளையும் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி தொடங்கி, ஒரே மாதிரி முடிப்பது எரிச்சலை தருவதாகவும் சொல்கிறார்கள்.

    * வீட்டு நிர்வாகத்தைவிட அலுவலகப் பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா என்ற கேள்விக்கு..?

    - 60.7 சதவீத பெண்கள், இரண்டையும் சமமாக பாவிப்பதாக சொல்கிறார்கள்.

    - அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும்போது வீட்டை மறந்துவிடுவதாக 25 சதவீதம் பேர் பதிலளித்திருக் கிறார்கள்.

    - 13 சதவீத பெண்கள், 'வீட்டில் இருந்து தேவையான அன்பு கிடைக்காதபோது, அலுவலக வேலையில் மூழ்கிவிடுவதாக' சொல்கிறார்கள்.

    - மீதமுள்ளவர்கள் 'கணவரோடு சண்டையிட்டால் கவனம் முழுவதும் வேலையில் திரும்பி விடும்' என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

    * அலுவலகத்தில் வேலை முடிந்து வீடு திரும்ப தாமதமானால், வீட்டில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு எந்த அளவுக்கு கிடைக்கும் என்ற கேள்விக்கு..?

    - அமைதியாக வரவேற்று, அடுத்து செய்யவேண்டிய வீட்டு வேலைகள் அனைத்திலும் உதவுவார்கள் என்று 54.6 சதவீதம் பேர் சொல்லியிருக்கிறார்கள்.

    - அரைகுறை மனதோடு வீட்டு வேலைகளில் உதவுவார்கள் என்று 30 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்திருக் கிறார்கள்.

    - பத்து சதவீதம் பேர், வீட்டில் எடக்கு மடக்காக கேள்வி கேட்பார்கள் என்று தங்கள் வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

    - மீதமுள்ளவர்கள், 'அன்று முழுவதும் வீட்டில் உள்ளவர்கள் இறுக்கமாக காணப்படுவார்கள்' என்று கூறியிருக் கிறார்கள்.

    * உங்கள் வேலைச் சுமையை உணர்ந்து, கணவர் உங்களுக்கு உதவுவாரா என்ற கேள்விக்கு..?

    - வேலைச் சுமையை உணர்ந்துகொள்வார். ஆனால் எப்போதாவதுதான் உதவுவார் என்பது 39.3 சதவீத பெண் களின் கருத்து.

    - தாமாகவே முன்வந்து உதவுவார் என்று கூறி, 32.1 சதவீத பெண்கள் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள்.

    - 20 சதவீதத்தினர், 'உதவி செய்வது என்பது அவரது அப்போதைய மனநிலையை பொறுத்தது' என்று கூறியிருக்கிறார்கள்.

    - மீதமுள்ளவர்கள் என்ன கூறியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள். 'திரும்பிக்கூட பார்ப்பதில்லை' என்று சொல்லியிருக்கிறார்கள்.

    பொதுவாக வேலைக்கு செல்லும் மனைவிக்கு வீட்டு வேலைகளில் தன்னால் முடிந்த அளவுக்கு உதவவேண்டும் என்றுதான் கணவர் விரும்புகிறார். 'இன்று வீட்டு வேலைகளை நீ செய். குழந்தைகளை நான் கவனித்துக்கொள்கிறேன்' என்று மனைவியிடம் சொல்லவும் செய்வார்கள். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் நடக்காது. கடைசியில் எல்லா வேலைகளும் சேர்ந்து வழக்கம்போல் மனைவி தலையில்தான் விழும். அதனால் இந்த விஷயத்தில் கணவர் கொடுக்கும் வாக்குறுதி காற்றில் பறந்துவிடுவதால், மனைவி மார்கள் பெரும்பாலும் அவர்களை நம்புவதில்லை.

    அதே நேரத்தில் 'வேலை முடிந்து வீடு திரும்புவதில் தாமதம் ஏற்படுதல்' என்ற சிந்தாந்தம் மறைந்துகொண்டிருக்கிறது. ஏன்என்றால் முன்பெல்லாம் பெண்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரைதான் என்ற நிலை இருந்தது. அதனால் அவர்கள் வேலைமுடிந்து, அடுத்த ஒன்றிரண்டு மணி நேரத்தில் வீடு திரும்பும் வாய்ப்பு இருந்தது. இன்றைய நிலை அதுவல்ல. ஆண்களைப்போல் பெண்களும் இரவு ஷிப்ட்டில் பணியாற்றுகிறார்கள். நள்ளிரவிலோ, அதிகாலையிலோ வீடு திரும்புகிறார்கள். அதனால் இரவு, நள்ளிரவு, தாமதம் என்பன போன்றவை எல்லாம், வேலைக்குப் போகும் பெண்களிடமிருந்து வழக்கொழிந்து கொண்டிருக்கின்றன.

    * பஸ், ரெயிலில் பயணம் செய்து வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பெரும்பாலான பிரச்சினைகள் என்னென்ன என்ற கேள்விக்கு..?

    - 61 சதவீதம் பேர், சரியான நேரத்தில் அலுவலகத்திற்கு செல்ல முடிவதில்லை என்றும், அதுபோல் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீடு திரும்ப முடியவில்லை என்றும் கூறியிருக் கிறார்கள்.

    - 27 சதவீதம் பேர், பயணத்திலே அதிக நேரத்தை செலவிடுவதால் ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுவதாக சொல்கிறார்கள்.

    - 12 சதவீத பெண்கள் பாலியல்ரீதியான தொந்தரவுகள் பயணத்தில் உருவாகுவதாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

    • சுயதொழில் செய்யும் பழக்கம் பெண்களிடம் அதிகரித்து வருகிறது.
    • தென்னை நார் மருத்துவ குணம் கொண்டதுடன், எளிதில் கிடைக்கக்கூடியது.

    வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்யும் பழக்கம் பெண்களிடம் அதிகரித்து வருகிறது. அதற்கான கடன் உதவி, வழிகாட்டுதல், சந்தைப்படுத்துதல் என பல்வேறு வகையிலான திட்டங்களை அரசும், தனியார் அமைப்புகளும் உருவாக்கி, சுயதொழிலில் ஈடுபடும் பெண்களை ஊக்கப்படுத்தி வருகின்றன. எனினும், நாம் செய்யும் தொழிலின் தயாரிப்பும், உற்பத்திப் பொருளும் தனித்துவமாக இருந்தால் அதில் அதிக லாபம் பெற முடியும்.

    அந்த வகையில், குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் 'தென்னை நார் கால்மிதியடி தயாரிப்பு' தொழில் குறித்த விளக்கமான தகவல்களை இங்கு பார்க்கலாம்.

    பொதுவாக நாம் தயாரிக்கும் பொருள் இயற்கையாகவும், சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையிலும் இருந்தாலே அது நிச்சயம் வெற்றி பெறும். அந்த வகையில் தென்னை நார் கால் மிதியடி, பயன்படுத்துபவர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்தவிதத்திலும் கெடுதல் அளிக்காது. ஆகையால், இவற்றை விற்பனை செய்வதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது.

    இது தவிர, நாம் உற்பத்தி செய்யும் பொருளின் சிறப்பம்சம் மற்றும் நன்மைகளை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமான ஒன்று. தென்னை நார் மருத்துவ குணம் கொண்டதுடன், எளிதில் கிடைக்கக்கூடியது. விலை குறைவானது. எளிதில் பயன்படுத்தக்கூடியது. மேலும், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் துணியால் செய்யப்பட்ட கால்மிதியடிகளை விட பாதுகாப்பானது, உடல் நலம் மற்றும் சுற்றுப்புறத்துக்கு தீங்கு விளைவிக்காது.

    கால்மிதியடிகள் தயாரிக்க தேங்காய் நார், கயிறு திரிக்கும் இயந்திரம் மற்றும் மேட் தயாரிக்கும் இயந்திரம் தேவைப்படும். இதை இயக்குவது மிகவும் எளிதானது. அரசு மானியத்தின் மூலம் அல்லது சுயதொழில் கடன் உதவி மற்றும் மகளிர் சுய உதவி மூலமாக மானிய முறையில் இயந்திரம் வாங்கலாம். இந்த இயந்திரத்தில் முதலில் தேங்காய் நாரை கயிறாக திரிக்கும் வசதி இருக்கும்.

    அதைப் பயன்படுத்தி கயிறு திரித்து பின் அதை சீராக்கி, கால்மிதியாக தயாரிக்கலாம். இதற்கான பயிற்சி, மத்திய கயிறு வாரியத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது. ஒரு கிலோ தேங்காய் நாரில் 2 கால்மிதியடிகள் தயாரிக்கலாம். குறைந்த பட்சமாக ஒரு வாரத்தில் 100 கிலோ தேங்காய் நார் கொண்டு 200 கால்மிதியடிகள் தயாரிக்க முடியும். ஒரு கிலோ தேங்காய் நாரின் இப்போதைய விலை 50 ரூபாய்.

    ஆனால், நேரடியாக தென்னை சாகுபடி செய்பவர்களிடம் மொத்த விலைக்கு வாங்கும்போது இதன் விலை மேலும் குறையலாம். தவிர, தயாரிப்பு செலவுகள் சேர்த்து ஒரு 'மேட்' தயாரிக்க சுமார் 70 ரூபாய் ஆகும். ஒரு மேட்டை 90 முதல் 120 ரூபாய் வீதம் நேரடியாக சந்தையில் விற்கலாம். அல்லது மொத்த விலைக் கடையில் பங்குதாரர் முறையில் விற்கலாம். ஆன்லைனில் தனியாகவும், மொத்தமாகவும் விற்கலாம்.

    • எளிதில் உணர்ச்சிவசப்பட்டால் எந்த காரியமும் கைகூடாது.
    • எதிர்மறையான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது.

    வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிரமங்களை எளிதாக கையாள்வதற்கும், தேர்ந்தெடுக்கும் வேலையை திறமையாக செய்து முடிக்கவும் மனம் தெளிந்த நிலையில் இருக்க வேண்டும். ஏதேனும் மன குழப்பங்களுக்கு ஆளானால் எந்தவொரு காரியத்தையும் சிறப்பாக செய்துமுடிக்க முடியாது.

    எளிதில் உணர்ச்சிவசப்பட்டாலும் எந்த காரியமும் கைகூடாது. உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். எதிர்மறையான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. கோபம், சோகம், வேதனை, மன அழுத்தம் போன்றவை உணர்வுகளை தடுமாற வைக்கும். வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை சமாளித்து உணர்வுகளை நிர்வகிப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

    எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். அது உணர்ச்சிகளை கையாள்வதற்கு உதவிகரமாக அமையும். சந்தோஷமாக இருந்தாலோ, மனக்கவலை அடைந்தாலோ உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு தயங்கக்கூடாது. உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் அதனை பகிர்ந்து கொள்ளுங்கள். ஒருபோதும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாதீர்கள். ஏனெனில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.

    ஏதாவதொரு சூழலில் மன நெருக்கடிக்கு ஆளானால் சிறிது நேரம் தனிமையில் இருக்கலாம். எந்த வேலையிலும் ஈடுபடாமல் மனதை அமைதியாக வைத்திருக்கலாம். அந்த சமயங்களில் அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்கக்கூடாது. மனதை வேறு செயல்களில் ஈடுபடுத்தலாம். அல்லது ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.

    மன அழுத்தம்தான் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய எதிரி. ஒருவேளை மன அழுத்தத்திற்கு ஆளானால் அதில் இருந்து மீள்வதற்குரிய வழிமுறைகளை கற்றுக்கொள்ள வேண்டும். மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் பயிற்சிகளில் ஈடுபடலாம். ஆழ்ந்த சுவாசம், தியானம், உடற் பயிற்சி போன்ற உடலை தளர்வடைய செய்யும் பயிற்சிகளில் கவனம் செலுத்தலாம். விளையாடுவதற்கும் போதிய நேரம் ஒதுக்குங்கள். குழந்தைகள்தான் ஓடி ஆடி விளையாட வேண்டும் என்றில்லை. அவர்களுடன் சேர்ந்து குழு விளையாட்டுகளில் ஈடுபடலாம். மனதிற்கு பிடித்தமான எந்தவொரு விளையாட்டையும் தயங்காமல் மேற்கொள்ளலாம். நடனமும் ஆடலாம்.

    தவறாமல் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவை உண்பது, போதுமான நேரம் தூங்குவது போன்றவை மன நலனை பாதுகாக்கவும், உணர்வுகளை சம நிலையில் பராமரிக்கவும் உதவும். மன நெருக்கடியில் இருக்கும் சமயங்களில் நெருக்கமானவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துங்கள். அவர்களுடன் குழு விவாதங்களிலும் ஈடுபடலாம்.

    வெளி உலக தொடர்பை வளர்த்துக்கொள்வதும் அவசியமானது. தொண்டு நிறுவனங்களில் சேர்ந்து பணி புரியலாம். தன்னார்வலர்களாக மாறி அவ்வாறு சமூக சேவைகள் புரிவது மனதிற்கு ஆத்ம திருப்தியை தரும். அர்த்தமுள்ள செயல்களில் நேரத்தை செலவிடுகிறோம் என்ற மன நிறைவும் கிடைக்கும்.

    உங்கள் நலனில் அக்கறை கொள்பவர்களுடன் சிரித்து பேசி மகிழ்வதும் உணர்ச்சி ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க துணை புரியும்.

    • சமைக்கும்போது என்ன சமைத்தாலும், அதனை மூடி வைத்து சமைக்க வேண்டும்.
    • சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால் கேஸ் வீணாவதைத் தடுக்கலாம்.

    நாம் அன்றாடம் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வரும் நிலையில் இல்லத்தரசிகள் எப்படி சிக்கமான பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்ப்போம்.

    சமையலைத் தொடங்குவதற்கு முன்பே வெட்டப்பட்ட காய்கள் மற்றும் தேவையான பாத்திரங்களைத் தயாராக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்துவிட்டு ஒவ்வொரு பொருட்களாக தேடித் தேடி எடுத்துப் போடுவதன் மூலம் கேஸ் அதிகம் செலவாகும்.

    ஃப்ரிட்ஜில் வைத்த உணவு மற்றும் குழம்பு பாத்திரத்தைச் சூடுபடுத்தும் முன், அதை வெப்பநிலையில் சிறிதுநேரம் வைக்கவும். ஃபிரிட்ஜில் இருந்து நேரடியாக அடுப்பில் வைத்து சூடுபடுத்தினால் கேஸ் செலவு அதிகரிக்கும்.

    சமைக்கும்போது என்ன சமைத்தாலும், அதனை மூடி வைத்து சமைக்க வேண்டும். காய்கறிகள் சமைப்பதாக இருந்தாலும் சரி, அரிசியாக இருந்தாலும் மூடி வைத்து சமைத்தால் சீக்கிரமாகவே வெந்துவிடும்.

    பிரஷர் குக்கர் மூலம் சமைப்பது நல்லது. அகலமான பாத்திரத்தில் சமைப்பது எரிபொருளைச் சேமிக்க உதவும்.

    வெந்நீர் வைக்க கேஸ் ஸ்டவ்வுக்குப் பதிலாக rod water heater பயன்படுத்தலாம்

    இண்டக்ஷன் ஸ்டவ்வில் செய்ய முடிகிற சமையலை அதிலேயே செய்யலாம். கேஸ் ரெகுலேட்டர், ட்யூப், பானர் ஆகியவற்றில் கசிவு இருக்கிறதா என்பதை அடிக்கடிப் பார்த்துக் கொள்ளவும்.

    சமையல் முடிந்தவுடன் ரெகுலேட்டர் சுவிட்சை அணைக்க மறக்க வேண்டாம். வீட்டில் அனைவரும் ஒரே நேரத்தில் சாப்பிடுவது சிறந்தது. இது உணவினைச் சூடு செய்வதை தவிர்க்கும்.

    சமைப்பதற்கு முன்னதாக அரிசி, பருப்பு, பயறு வகைகளை ஊற வைக்க வேண்டும். அப்படி ஊற வைத்து சமைத்தால் வெகு சீக்கிரமாகவே எல்லாமே வெந்துவிடும். இதன் மூலமாக சிலிண்டர் மிச்சமாகும்.

    கேஸ் அடுப்பில் உள்ள பர்னர் எப்போதும் அழுக்குகள் படியாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் பிசு பிசுப்பு மற்றும் அழுக்குகள் இருந்தால் அடைப்பு ஏற்பட்டு பிரச்னை ஏற்படும். இதனால் கேஸ் லீக் ஆகும் வாய்ப்பு கூட உண்டாகும். இதனால், சிலிண்டர் சீக்கிரமாக கூட தீர்ந்துவிடும். அதனால், பர்னர் எப்போதும் சுத்தமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். அடிக்கடி தனியாக எடுத்து சுத்தம் செய்து வைப்பது நல்லது.

    காலையில் சமையலை முடிக்க வேண்டிய அவசரத்தில் ஈரமான பாத்திரங்களைக் கொண்டு சமையல் செய்வார்கள். முதல் நாள் இரவு கழுவாமல் பேட்ட பாத்திரத்தை மறுநாள் காலையில் அவசர அவசரமாக கழுவி, அதனை அப்படியே சமையலுக்கு பயன்படுத்த கூடாது. அந்த ஈரமான பாத்திரம் காய்வதற்கு 2 முதல் 4 நிமிடங்கள் வரை ஆகலாம். ஒரு நாள் இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. ஒவ்வொரு நாளும் இது போன்று இருந்தால் சிலிண்டர் சீக்கிரமே காலியாகிவிடும்.

    இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தி கேஸ் வீணாவதைத் தடுத்து, மிச்சப்படுத்துவதன் மூலம் மேலும் நான்கு நாட்கள் அல்லது ஒரு வாரம் சிலிண்டரைப் பயன்படுத்தலாம்.

    தொழில் துறையில் ஈடுபடும் பெண்கள் ஆடை, அணிகலன்கள் மற்றும் தோற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும். தன்னம்பிக்கை நிறைந்த உங்கள் தோற்றமே மேலும் பல வெற்றிகளை பெற்றுத்தரும்.
    உடுத்தும் முறை:

    உங்கள் தோற்றமே உங்களது அடையாளம். வேலைச் சூழலுக்கு ஏற்றவாறு நீங்கள் உடைகள் உடுத்தும் விதமும் இருக்க வேண்டும். முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் ஆகியோர் உங் களிடம் மதிப்பை காட்டும் வகையில், நீங்கள் அணியும் ஆடைகள் இருக்க வேண்டும். உங்களை சந்திப்பவர்கள், உங்கள் கண்களை பார்த்து பேசும் வகையில், உங்கள் தோற்றம் மரியாதைக்கு உரியதாக இருப்பது சிறந்தது.

    வாசனை திரவியங்கள் உபயோகித்தல்:

    அடர்த்தியான வாசனை தரும் திரவியங்களை உபயோகிப்பதை தவிர்க்கவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் அவற்றை பிடித்திருந்தாலும், தொழில் முறை இடங்களில் பயன்படுத்துவதற்கு அவை ஏற்றது அல்ல. குழுவுடன் சந்திப்பில் ஈடுபடும்போது அடர்த்தியான வாசனை திரவியங்கள் சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தலாம். சிலருக்கு அவை ஆஸ்துமா பிரச்சினையை அதிகரிக்கலாம். சந்திப்பு நிகழும் அறை முழுவதும் அந்தத் திரவியத்தின் வாசனையை பரப்பி விடலாம்.

    விரல் நகங்கள் மற்றும் கைகள்: பெரும்பாலான பெண்கள் பேசும்போது கைகளின் அசைவினை அடிக்கடி பயன்படுத்துவார்கள். அவ்வாறான தருணங்களில் கைகள் கவனம் ஈர்க்கும் புள்ளியாக மாறும். எனவே கைகள் மற்றும் நகங்கள் தொழில்முறை தோற்றத்துடன் இருப்பது அவசியம். நகங்கள் சுத்தமாக பராமரிக்கப்பட்டும், அளவாக வெட்டப்பட்டும் இருக்க வேண்டும். கண்களைப் பறிப்பது போன்ற 'பளிச்' வண்ண நகப்பூச்சினைத் தவிர்க்க வேண்டும்.

    சிகை அலங்காரம்: தலைமுடி சுத்தமாகவும், நன்றாக படியும்படி வாரப்பட்ட நிலையிலும் இருக்க வேண்டும். கவனத்தை ஈர்க்கும்படியான வண்ணங்களைக் கொண்ட நிறப்பூச்சுகளை தவிர்க்க வேண்டும். அதிகமாக வாசனை வீசக்கூடிய எண்ணெய் மற்றும் ஜெல்களை பயன்படுத்தக்கூடாது.

    நகைகள்: சத்தம் எழுப்பக்கூடிய உலோக நகைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். பெரிய மற்றும் ஆடம்பரமான நகைகளுக்குப் பதிலாக, சிறிய அளவிலான காதணிகளை அணியலாம். அவை காது மடலுக்கு மேல் இருக்க வேண்டும். மெல்லிய கழுத்து சங்கிலி அணியலாம். கைகளில் தரமான கைக்கடிகாரம் அணிவது தோற்றத்தை மேம்படுத்தும்.

    ஒப்பனை: எளிமையாகவும், பகல் நேரத்திற்கு ஏற்றதாகவும் ஒப்பனை செய்வது நல்லது. முழுவதுமாக ஒப்பனை செய்யாமல் இருப்பதும், அதிகப்படியாக ஒப்பனை செய்வதும் தவிர்க்கக் கூடியதாகும்.
    இன்றைய நிலையில் சுயமாகத் தொழில் தொடங்குவதற்கு பெண்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது. சுயதொழில் தொடங்குவதற்கு முன்பு சில விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவற்றை தெரிந்து கொள்வோமா..?
    இன்றைய நிலையில் சுயமாகத் தொழில் தொடங்குவதற்கு மக்களிடம், குறிப்பாக பெண்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது. கல்வித் தகுதியை விட ஆர்வம், தன்னம்பிக்கை, நேர்மறை எண்ணம், எவ்வித பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் துணிவு ஆகியவையே சுயதொழில் தொடங்க முக்கியம். அதனால் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்கள் முதல் முதுகலைப் பட்டம் படித்தவர்கள் வரை யார் வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம். தொழில்முனைவோர் ஆகலாம். இருப்பினும் சுயதொழில் தொடங்குவதற்கு முன்பு சில விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவற்றை தெரிந்து கொள்வோமா..?

    முன்னேற்பாடு

    சுய தொழில் தொடங்கும்போது தொடக்க காலத்தில் லாபம் உடனடியாக கிடைக்கும் என்று கூற இயலாது. சில தடைகள் மற்றும் கஷ்டங்களை தொழில்முனைவோர்கள் எதிர்கொண்டாக வேண்டும். அப்போது, சுயதொழில் மூலம் வரும் வருமானத்தில் குடும்ப வாழ்க்கையை நடத்துவது இயலாத காரியமாகி விடும். அதனால், சுயதொழில் தொடங்குகிறோம் என்று செய்யும் வேலையை விட்டுவிடாது, அதில் இருந்து கொண்டே தொழிலை தொடங்க வேண்டும். தொழில் ஓரளவுக்கு முன்னேறி விட்டது, லாபகரமானதாக தொழில் நடைபெறுகிறது என்பதை உறுதி செய்த பின்னரே, வேலையை விட வேண்டும்.

    திட்டமிடுதல் மற்றும் பயிற்சி சுய தொழில்

    தொடங்க முடிவு செய்யும் இளைஞர்கள், முக்கியமாக இரு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். தொழிலை நடத்த சிறப்பான திட்டமிடுதல், மற்றொன்று, தேர்ந்தெடுக்கப்பட்ட துறை சம்பந்தப்பட்ட நுணுக்கங்களையும், இப்போதைய தொழில் நுட்பங்களையும் தெரிந்து கொள்ள முறையாக பயிற்சி எடுக்க வேண்டும். எனினும், திட்டமிடுதலில் சிறந்து விளங்கும் இளைஞர்கள் சிலர், அதை செயல்படுத்துவதில் தோல்வி அடைகின்றனர். அத்தகைய இளைஞர்கள், அனுபவசாலிகளின் வழிகாட்டுதல்களைப் பெற்று, தொழில் குறித்த தெளிவை பெற்ற பின்னரே, தொழிலில் களம் இறங்க வேண்டும். சுய தொழில் தொடங்கும் தொழில்முனைவோர்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சித் திட்டங்கள், திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்டவற்றில் பங்கேற்று இளைஞர்கள் தங்களது திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்.

    முதலீடு

    குடும்பப் பின்னணி செல்வச் செழிப்புடையதாக இல்லா விட்டாலும், தொழில் தொடங்குவதற்காக கடனுதவிகளை அரசு வழங்கி வருகிறது. மேலும், தனி நபரிடம் இருந்து கடன் பெறுவதை விட, அரசிடம் இருந்து கடன் பெறுவது பாதுகாப்பானது. அதனால், முதலீடு குறித்த கவலையை விடுத்து தன்னம்பிக்கையுடன் தொழில் தொடங்கலாம். ஒருவரால் மட்டுமே முதலீடு செய்வது கடினம் என்பதால், தொழில் பெருகப் பெருக அதற்கேற்றவாறு முதலீட்டாளர்களை ஈர்க்கலாம்.

    சக பணியாளர்கள்

    நாம் திறமையானவர்கள் என்ற நம்பிக்கை நமக்கு அதிக அளவில் இருக்கும். எனினும், அனைத்து திறமைகளும் நம் ஒருவரிடம் மட்டும் இருக்காது. அதனால், சுயதொழில் தொடங்கும்போது, தொழில் கணக்கை நிர்வகிக்க பொருத்தமான கணக்காளரை நியமிக்கலாம். அதன் மூலம், தொழிலில் இருக்கும் வீண் செலவுகளை குறைக்கலாம். விற்பனைப் பிரிவை வலுப்படுத்தும் வகையில், மேலாளரை நியமித்தால்தான் தொழில் லாபகரமானதாக மாறும். அதுபோல, மற்ற பிரிவுகளுக்கும் தகுந்த நிபுணர்களை நியமிக்க வேண்டும்.

    ஆலோசனைகள்

    தொழில் தொடங்குவது தொடர்பாக மூத்த தொழில்முனைவோர்களிடத்தில் ஆலோசனைகளைக் கேட்டு பெறுவது மட்டுமின்றி, தொழில்முனைவோர் ஆலோசனை நிறுவனங்களை அணுகலாம். தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கு அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் உதவியாக இருக்கும். வரி விலக்குகளுடன் பணத்தை எவ்வாறு சேமிப்பது, வாடிக்கையாளர்களை எவ்வாறு கவர்வது உள்ளிட்ட நுணுக்கங்களை அனுபவசாலிகளிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்.

    மதிப்பீடு

    நமது தொழிலைப் பலப்படுத்த மேற்கண்ட அனைத்தும் இருந்தாலும், தொழில் நிலை குறித்து அவ்வப்போது மதிப்பீடு செய்ய வேண்டியது மிக முக்கியம். தொழிலில் வரும் லாப, நஷ்டங்களைக் கணக்கிட்டு அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், சுயதொழிலில் வெற்றிகரமாகப் பயணிக்க முடியும்.
    குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாக்கும் வகையில் 807 தங்குமிடங்கள் மற்றும் 700-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
    பெண்களுக்கு எதிராக குடும்பத்தினரால் இழைக்கப்படும் அநீதிகளை தடுப்பதற்கு கொண்டு வரப்பட்ட பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 65,481 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    நாட்டிலேயே குறைந்த எண்ணிக்கையில் குடும்ப வன்முறை வழக்குகள் பதிவான மாநிலமாக டெல்லி விளங்குகிறது. அங்கு 65,481 வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த தகவல் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு களின் எண்ணிக்கையை மேற்கோள்காட்டி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

    உத்தர பிரதேசத்துக்கு அடுத்தபடியாக 38,381 வழக்குகளுடன் ராஜஸ்தான் இரண்டாவது இடத்தையும், 37,876 வழக்குகளுடன் ஆந்திரப் பிரதேசம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. கேரளா (20,826), மத்தியப் பிரதேசம் (16,384), மகாராஷ்டிரா (16,168), அசாம் (12,739), கர்நாடகா (11,407), மேற்கு வங்காளம் (9,858), ஹரியானா (7,715) போன்ற மாநிலங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

    நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் படி, குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் மொத்தம் 2 லட்சத்து 95 ஆயிரத்து 601 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை கையாள்வதற்கு 6 ஆயிரத்து 289 நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாக்கும் வகையில் 807 தங்குமிடங்கள் மற்றும் 700-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற மையங்கள் போதுமான எண்ணிக்கையில் இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக அடிப்படை கட்டமைப்புகள் இல்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.

    ×