search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Woman Arrest"

    அரூர் அருகே கோவில் திருவிழாவுக்கு வந்த பக்தர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்க வைத்திருந்த 300 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த இருளப்பட்டியில் காணியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது.

    இந்த திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு விற்பனை செய்ய ஒரு பெண் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக ஏ.பள்ளிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் நேரில் சென்று ஏ.பள்ளிப்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தி ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 300 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக கல்யாணி (வயது 62) என்ற பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அரசு பஸ் டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூரிலிருந்து உளுந்தூர்பேட்டைக்கு செல்லும் அரசு பஸ் பண்ருட்டி பஸ் நிலையத்துக்கு வந்தது. அந்த பஸ்சை பிரபு (43) என்பவர் ஓட்டி வந்தார்.

    பண்ருட்டி பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்க வசதியாக பஸ் நிலையத்தின் உள்ளே பஸ்சை நிறுத்த முயன்றார்.

    அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அம்பேத்கர் நகரை சேர்ந்த பாலு என்பவரது மனைவி ரெஜினா என்பவரை ஓரமாக போய் நிற்கும்படி கூறினார். இதில் ஆத்திரமடைந்த ரெஜினா, டிரைவர் பிரபுவை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது பற்றி பிரபு பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் விஷ்ணுப்பிரியா வழக்குப்பதிவு செய்து ரெஜினாவை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். வழக்கை நீதிபதி கணேஷ் விசாரித்து அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து கடலூர் சிறையில் ரெஜினா அடைக்கப்பட்டார்.

    குளிர்சாதன பெட்டி வாங்கி ரூ.37 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrestcase

    போரூர்:

    நெசப்பாக்கம் கிழக்கு வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் பிரசாந்த் குமார். இவர் நூகன் ஏர்கான்ஸ் என்கிற பெயரில் குளிர் சாதனப் பெட்டி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

    இவரிடம் கிண்டி எம்.கே.என் சாலையில் ஸ்கை லக்சரி இண்டியா சர்வீசஸ் என்கிற பெயரில் அலுவலகம் நடத்தி வந்த சக்தி முருகன் கடந்த 2017-ம் ஆண்டு முதல் குளிர்சாதனப் பெட்டி வாங்கி வந்தார்.

    இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மே மாதம் வரையில் மொத்தம் 107 குளிர்சாதனப் பெட்டிகளை பிரசாந்த் குமார் நிறுவனத்தில் இருந்து சக்தி முருகன் வாங்கினார்.

    இதன் மதிப்பு சுமார் ரூ.37லட்சம். பிரசாந்த் குமாருக்கு தொடர்ந்து பணம் தராமல் ஏமாற்றி வந்தார்.

    இந்த நிலையில் திடீரென தலைமறைவானார். இது குறித்து பிரசாந்த் குமார் கே.கே. நகர் போலீசில் புகார் அளித்தார்.

    அசோக் நகர் உதவி கமி‌ஷனர் வின்சென்ட் ஜெய ராஜ் மற்றும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இதையடுத்து சக்தி முருகனின் மனைவி பூர்ணிமா மற்றும் சக்தி முருகனின் சகோதரர் ஹரிகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சக்திமுருகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். #arrestcase

    அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்துக்கு ஆதரவான அமைப்பினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி, ரஷிய உளவாளியாக நடித்த பெண்ணை வாஷிங்டன் போலீசார் கைது செய்தனர்.
    வாஷிங்டன்:

    ரஷியா நாட்டை சேர்ந்தவர் மரியா புட்டினா(29). அமெரிக்காவுக்கு வந்து அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மரியா, ரஷியா நாட்டின் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமைகளுக்காக போராடும் அமைப்பின் நிறுவனராகவும் உள்ளார்.

    இந்நிலையில், வாஷிங்டன் மற்றும் நியூயார்க் நகரில் அமெரிக்க அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளுக்கு மிகப்பெரிய விருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, மெல்லமெல்ல பிரபலமடைந்த மரியா, தன்னை ரஷிய அரசின் உளவாளியாக சிலரிடம் அறிமுகம் செய்துகொண்டார்.

    பல்வேறு பிரபலங்களுடன் இருக்கும் புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வந்த மரியா, அமெரிக்க அரசின் நிதித்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் வெளிநாட்டு  சொத்துகள் கட்டுப்பாட்டு துறையால் தடைவிதிக்கப்பட்ட அலெக்ஸான்டர் டோர்ஷின் என்பவருடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார்.


    ரஷியா மத்திய வங்கியின் துணைத் தலைவரான அலெக்ஸான்டர் டோர்ஷின் ஆலோசனைப்படியும், அவரது திட்டப்படி அதிகாரத்தில் உள்ள சிலரை வளைத்துப்போட்டு அமெரிக்க அரசின் தேசிய முடிவுகளில் தலையீடு செய்யவும், குறிப்பாக, அமெரிக்க அரசின் துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டத்தை தளர்த்தவும் மரியா புட்டினா முயன்று வந்துள்ளார்.

    இவரது நடவடிக்கைகளை மோப்பம் பிடித்த அமெரிக்க உளவுப்படையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரை கைது செய்தனர். நாளை (புதன்கிழமை) அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

    அலெக்ஸான்டர் டோர்ஷின் மட்டுமின்றி மரியாவுடன் அமெரிக்காவை சேர்ந்த இருவருடனும், துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டத்துக்கு எதிரான அமைப்பினருடனும் தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. #Russianwomanarrested #actingasRussianagent
    சென்னை நெசப்பாக்கத்தில் கொடூரமாக மகன் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக கள்ளக்காதலனை தீர்த்துக்கட்ட துப்பாக்கி வாங்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    சென்னை எம்.ஜி.ஆர். நகர் நெசப்பாக்கத்தில் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ரித்தேஸ்சாய் என்ற 10 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக எம்.ஜி.ஆர். நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. சிறுவனின் தாய் மஞ்சுளாவின் கள்ளக்காதலன் நாகராஜ் கைது செய்யப்பட்டார்.

    சிறுவன் ரித்தேஷ் சாயை கடத்திச் சென்ற, நாகராஜ், அவனை மிகவும் கொடூரமாக துடிக்க துடிக்க கொலை செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் சென்னை மாநகர் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் மகன் கொலை செய்யப்பட்டு 5 மாதங்களுக்கு பிறகு தாய் மஞ்சுளா, கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதற்காக கள்ளத்துப்பாக்கியை வாங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:-

    கடந்த பிப்ரவரி மாதம் சிறுவன் கொலை செய்யப்பட்டபோதே மகன் ரித்தேஸ் கொலைக்கு பின்னர் மஞ்சுளா, நாகராஜனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ? என்று அஞ்சி வாழ்ந்துள்ளார். அதே நேரத்தில் மகனின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவும் அவர் முடிவு செய்தார். கணவர் தன்னை விலக்கி வைத்து இருந்ததால் அவரை கொலை செய்யவும் திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து தனக்கு தெரிந்த நண்பர் பிரசாந்த், சுதாகர் ஆகியோருடன் இது பற்றி அவர் கூறினார்.

    துப்பாக்கி வாங்குவதற்காக அவர்களிடம் ரூ.2 லட்சம் பணம் கொடுக்கவும் சம்மதித்தார். இதை தொடர்ந்து இருவரும் துப்பாக்கி ஒன்றை அவருக்கு வாங்கி கொடுத்தனர். ஆனால் அது பொம்மை துப்பாக்கி என்பது தெரிய வந்தது.

    இந்த விவகாரம் சைதாப்பேட்டை போலீசுக்கு தெரிய வந்தது. இதுபற்றி அவர்கள் அதிரடி விசாரணையில் இறங்கினர்.

    சைதாப்பேட்டை உதவி கமி‌ஷனர் அனந்தராமன் இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி மஞ்சுளா, பிரசாந்த், சுதாகர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    பொள்ளாச்சி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.14 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள சோமந்துறை சித்தூரை சேர்ந்தவர் முருகானந்தம். பெயிண்டர். இவரது மனைவி லோகநாயகி. இவர் ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி அப்பகுதி பெண்களிடம் பணம் வசூலித்தார்.

    அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சுந்தரம்மாள் என்பவரிடம் முதலில் ரூ.5 ஆயிரம் பணம் வசூலித்துள்ளார். ஒரு வாரம் கழித்து ரூ.10 ஆயிரமாக கொடுத்துள்ளார். இதனால் இரட்டிப்பு பணம் கிடைத்ததால் சுந்தரம்மாள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் லோகநாயகியிடம் பணம் கொடுத்துள்ளனர்.

    அவர் ரூ.14 லட்சத்து 30 ஆயிரம் வரை வசூல் செய்துள்ளார். பின்னர் பணம் கொடுத்தவர்களுக்கு திருப்பி கொடுக்கவில்லை. இதுதொடர்பாக சுந்தரம்மாள் கோட்டூர் போலீசில் புகார் செய்தார்.

    விசாரணையில் லோகநாயகி பணம் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். #Tamilnews
    காசிமேட்டில் 2 கிலோ கஞ்சா பதுக்கிய பெண் வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    காசிமேடு பகுதியில் காசிபுரம் ஏ பிளாக்கை சேர்ந்தவர் நண்டுகுமார். இவரது மனைவி தனலட்சுமி (48). வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே நேற்று இரவு காசிமேடு போலீசார் அவரது வீட்டில் சோதனையிட்டனர் . அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து சிறு பொட்டலமாக்கி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. தனலட்சுமி கைது செய்யப்பட்டார். மது பாட்டில்கள் விற்றதாக ஏற்கனவே இவர் கைது செய்யப்பட்டவர் ஆவார். #tamilnews

    திருக்கழுக்குன்றம் அருகே சாராயம் விற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றத்தை அடுத்த அம்மணம்பாக்கம் பகுதியில் கள்ளச் சாராயம் விற்பதாக திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சாராயம் விற்றுக் கொண்டிருந்த கெம்புராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த பெண் சாராய வியாபாரிகள் ரூபாவதி, தனலட்சுமி ஆகியோரும் பிடிபட்டனர்.

    பெருந்துறை அருகே கணவரின் கள்ளக்காதலி மகளை பெண் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள கருமாண்டி செல்லிபாளையம், அங்கப்பா வீதி பகுதியில் வசித்துவரும் சண்முகநாதன், கனகா தம்பதியினரின் இரண்டாவது மகள் கனிஷ்கா ( வயது 7) நேற்று முன்தினம் இவரது வீட்டின் அருகில் உள்ள ஒரு மரத்தடியில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் சிறுமி கனிஷ்கா இறந்து கிடந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் உடலை கைப்பற்றிய பெருந்துறை போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் கோவையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் சிறுமி கனிஷ்கா குரல் வளை நசுக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    இதனடிப்படையில் சிறுமியின் வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு மூதாட்டி சிறுமியின் பக்கத்து வீட்டில் குடியிருந்து வரும் வனிதா என்பவர் அந்த குழந்தையை தோளில் போட்டு கொண்டு சென்றதை பார்த்ததாக கூறினார்.

    இதனால் பக்கத்து வீட்டு வனிதாவிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்தான் கனிஷ்காவை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    சிறுமியை கொன்ற வனிதா

    குன்னூர், தூளூர் மட்டம் பகுதியை சேர்ந்தவர் வனிதா (33). இவருக்கும் சேலம் மாவட்டம் குறிச்சி பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன்(35) என்பவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் கருமாண்டி செல்லிபாளையம் பகுதிக்கு குடிவந்துள்ளனர்.

    பக்கத்து வீட்டில் வசித்து வந்த சண்முகநாகன், கனகா குடும்பத்தினருடன் இவர்கள் நட்பாக இருந்துள்ளனர்.

    இந்த நிலையில் வனிதாவின் கணவரான கமலக்கண்ணனுக்கும் கனகாவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கனகாவின் இளைய மகள் கனிஷ்காவை தன் மகள் போல் பாவித்து அந்த சிறுமிக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்துள்ளார்.

    இதனால் கமலக்கண்ணனுக்கும் வனிதாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த கனிஷ்கா உயிருடன் இருந்தால் தனக்கும் தனது மகனுக்கும் பிரச்சனை ஏற்படக்கூடும் என கருதிய வனிதா கனிஷ்காவை கொலை செய்ய முடிவு செய்தார்.

    இதனால் நேற்று முன் தினம் வீட்டின் அருகில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த கனிஷ்காவை தின்பண்டங்கள் தருவதாக கூறி கடத்தி சென்று அங்கு அந்த சிறுமியின் வாயை பொத்தி கழுத்தின் குரல்வளையை நெரித்து கொலை செய்துள்ளார்.

    பின்னர் சிறுமியின் உடலை தனது தோளில் போட்டு கொண்டுசென்று அருகில் உள்ள ஒருமரத்தடியில் போட்டு விட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். இதனதைத்தையும் ஒப்புக்கொண்டு வனிதா போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார்.

    கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட வனிதாவை நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் வனிதா கோவை மத்திய சிறையில் அடைக் கப்பட்டார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    வத்தலக்குண்டுவில் மாணவியிடம் நகை பறித்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் அருகில் உள்ள தாடிக்கொம்பை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகள் ஷாலினிதேவி. கல்லூரி மாணவி. இவர் நேற்று போடியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார்.

    வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து திண்டுக்கல் பஸ்சில் ஏற முயன்றபோது 2 பெண்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்துக்கொண்டு ஓடினர். உடனே அங்கிருந்த தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் அகிலன் மற்றும் பொதுமக்கள் அவர்களை விரட்டி பிடித்து வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணையில் அவர்கள் தாராபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் மனைவி செல்வி (30), கண்ணன் மனைவி முத்துமாரி (35) ஆகியோர் என தெரிய வந்தது. இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட 2 பெண்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×