என் மலர்
நீங்கள் தேடியது "kill threat"
- காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
- கலப்பு திருமணம் செய்ததால் உறவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த வாயலூர் குப்பத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார். கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த மாலதி என்பவரை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி கலப்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ஆனந்தகுமாரும், மாலதியும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் தொடர்ந்து எதிர்ப்பு வந்தது. உறவினர்கள் கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிகிறது. இதனால் காதல் தம்பதி பயந்து வாழும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து அவர்கள் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. கொலை மிரட்டலால் பயந்து போன ஆனந்தகுமார் வீட்டை விட்ட வெளியே செல்லாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் மாலதி, தனது கணவர் ஆனந்தகுமார் மற்றும் 2 மகன்களுடன் வந்து பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தார். அதில் கலப்பு திருமணம் செய்ததால் உறவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். இதனால் எனது கணவர் வீட்டை விட்டு வெளியே போகாமல் கடந்த 2 வருடமாக வீட்டில் உள்ளார். எனவே எனது கணவர், குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள சுந்தர்ராஜபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 42). இவருக்கும் மணிமேகலை (40) என்பவருக்கும் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஷாலினி (12) என்ற மகள் உள்ளார்.
கருத்துவேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த முத்துச்சாமி அழகம்மாள் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அழகம்மாள் மற்றும் முத்துச்சாமி ஆகியோர் மணிமேகலை வீட்டுக்கு சென்று தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். மேலும் கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
இது குறித்து ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் மணிமேகலை புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து முத்துச்சாமி மற்றும் அழகம்மாளை கைது செய்தனர்.
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள மேலஉளூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமுருகானந்தம் (வயது 38). இவர் தஞ்சை தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளராக உள்ளார்.
இவருக்கும் தஞ்சையில் கடை நடத்தி வரும் பிரபாகரன் என்பவருக்கும் பொருள் வாங்கியது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதைதொடர்ந்து பிரபாகரன் உள்பட 7 பேர் கும்பல் மேலஉளூர் சென்று தங்கமுருகானந்தத்தை தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாகவும் தெரிகிறது.
இதுபற்றி தங்க முருகானந்தம் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் டி.எஸ்.பி (பொறுப்பு) நாகராஜன் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள வழுவூர் பகுதியைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் மணிகண்டன் (வயது35). பாட்டாளி மக்கள் கட்சியில் இவர் முன்னாள் இளைஞரணி செயலாளராக இருந்தவர்.
மணிகண்டன் நேற்று சீனிவாசபுரம் அருகே தேவசேனாநகரில் உள்ள அவரது வீட்டு மனையை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது திடீரென தேவசேனாநகரில் சென்றபோது 3 பேர் கையில் அரிவாள் மற்றும் கத்தியுடன் மணிகண்டனை வழி மறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் சத்தம் போட்டார். உடனே 3 பேரும் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து மணிகண்டன் மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு வழக்கு பதிவு செய்து ஆலவெளி சேமங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் (30), எலந்தங்குடியைச் சேர்ந்த பாரதிராஜா (37), சீனிவாசபுரத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மயிலாடுதுறை அருகே உள்ள ஆரோக்கியநாத புரத்தைச் சேர்ந்த தேவசகாயம் மகன் கபிரியேல் என்பவருக்கும், மணிகண்டனுக்கு இடையில் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இதனால் அவரது தூண்டுதலின் பேரில் இந்த 3 பேரும் மணிகண்டனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
இதையடுத்து ஜெயராஜ், பாரதிராஜா, தினேஷ்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி புறக்காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் பரமசிவம். இவர் நேற்று வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஆஸ்பத்திரிக்கு மணம்தளர்ந்தபுத்தூர் பகுதியை சேர்ந்த பரதன் (வயது 28), பிரபாகரன் (25) ஆகியோர் வந்தனர்.
அவர்கள் ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவு முன்பு நின்று கொண்டு ஆஸ்பத்திரி ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டு இருந்தனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பரமசிவம் அங்கு சென்று அந்த 2 பேரிடமும், இந்த இடத்தில் நின்று தகாத வார்த்தைகளால் பேசாதீர்கள். உடனே இங்கிருந்து சென்று விடுங்கள் என்று கூறினார்.
ஆனால், பரதனும், பிரபாகரனும் அதனை ஏற்கவில்லை. இதனால் அவர்களுக்கும், ஏட்டு பரமசிவத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியது. ஆத்திரம் அடைந்த பரதன், பிரபாகரன் ஆகிய 2 பேரும் ஏட்டு பரமசிவத்தை தகாத வார்த்தைகளால் திட்டி கொலைமிரட்டலும் விடுத்தனர்.
இது குறித்து ஏட்டு பரமசிவம் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜவாது உசேன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரபாகரன், பரதன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே உள்ள வலசக்காடு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 33). விவசாயி.
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜதுரை (27) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இருவரும் அடிக்கடி மோதி கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலை ராஜதுரை தனது நண்பர் கலைமணி (28) என்பவருடன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ராதாகிருஷ்ணன், அவரது நண்பர் முத்துக்குமார் ஆகியோர் சேர்ந்து ராஜ துரையிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ராஜதுரையையும், கலைமணியையும் தாக்கி விட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து சோழத்தரம் போலீசில் ராஜதுரை புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் மகேசுவரி வழக்குப்பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்தார். தலைமறைவாகி விட்ட முத்துக்குமாரை போலீசார் தேடிவருகின்றனர்.
கடலூரிலிருந்து உளுந்தூர்பேட்டைக்கு செல்லும் அரசு பஸ் பண்ருட்டி பஸ் நிலையத்துக்கு வந்தது. அந்த பஸ்சை பிரபு (43) என்பவர் ஓட்டி வந்தார்.
பண்ருட்டி பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்க வசதியாக பஸ் நிலையத்தின் உள்ளே பஸ்சை நிறுத்த முயன்றார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அம்பேத்கர் நகரை சேர்ந்த பாலு என்பவரது மனைவி ரெஜினா என்பவரை ஓரமாக போய் நிற்கும்படி கூறினார். இதில் ஆத்திரமடைந்த ரெஜினா, டிரைவர் பிரபுவை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி பிரபு பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் விஷ்ணுப்பிரியா வழக்குப்பதிவு செய்து ரெஜினாவை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். வழக்கை நீதிபதி கணேஷ் விசாரித்து அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து கடலூர் சிறையில் ரெஜினா அடைக்கப்பட்டார்.
பவானி அருகே உள்ள மயிலம்பாடி, போத்தநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ராம்நாயக்கர் (வயது 50). இவரது மகன் பிரசன்னா (22).
இவர் தனது தந்தையிடம் ரூ. 2 லட்சம் பணம் கேட்டார். ‘‘அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன்’’ என்று கூறிய தந்தை ராம்நாயக்கர் பணம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரசன்னா தனது தந்தையிடம் வாக்குவாதம் செய்தார். தந்தையை திட்டிய அவர் கொலை மிரட்டலும் விடுத்தாராம்.
எனவே ராம் நாயக்கர் வீட்டைவிட்டு வெளியே சென்றார். இந்த நேரத்தில் வீட்டில் இருந்த தனது தாயை பிரசன்னா தாக்கினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராம் நாயக்கர் வீட்டுக்குள் சென்று பிரசன்னாவை தடுத்தார். அப்போது ராம் நாயக்கரை பிரசன்னா தாக்கி கீழே தள்ளி விட்டார்.
இந்த கைகலப்பு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதை பார்த்த பிரசன்னா அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
இது குறித்து பவானி போலீஸ் நிலையத்தில் ராம் நாயக்கர் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பிரசன்னாவை கைது செய்தார். #Tamilnews
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் அரசு மணல் குவாரி யாடு உள்ளது. அங்கு தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கண்டமங்கலத்தை சேர்ந்த பால முருகன் (வயது 37) மற்றும் பாலச்சந்திரன் (36) ஆகிய 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை ஆபாசமாக பேசி, தகராறில் ஈடுபட்டனர். பணியில் இருந்த காட்டு மன்னார்கோவில் தலைமை காவலர் சண்முக சுந்தரம், ஏன் இங்கு நின்று கொண்டு தகராறில் ஈடுபடுகிறீர்கள் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்றார்.
இதை கேட்டு ஆத்திரமடைந்த பாலமுருகன், பால சந்திரன் ஆகியோர் சேர்ந்து தலைமை காவலர் சண்முகசுந்தரத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து காட்டு மன்னார் கோவில் போலீசில் சண்முகசுந்தரம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் வழக்குபதிவு செய்து போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாலமுருகன், பாலசந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews
மராட்டிய மாநிலம் புனேயில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் “அல்கார் பரிஷத்” என்ற அமைப்பின் மாநாடு நடந்தது.
அப்போது பீமா- கோரே கான் பகுதிகளில் திடீர் கலவரம் ஏற்பட்டது. புனே போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
மும்பை, டெல்லி, நாக்பூரில் இருந்து புனேக்கு வந்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் விவரம் வருமாறு:-
1. சுதீர் தவாலே-மும்பை (தலித் இயக்க தலைவர்)
2. சுரேந்தரா கட்லிஸ் (மனித உரிமை வழக்கறிஞர்)
3. மகேஷ் ரவுத் (பழங்குடி இன பிரதிநிதி)
4. சோமாசென் (நாக்பூர் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை பேராசிரியர்)
5. ரோனா வில்சன் (டெல்லி)
இவர்கள் 5 பேருக்கும் நக்சலைட் அமைப்பின் மூத்த தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். நக்சலைட்டுகள் தூண்டுதலின்பேரில் இவர்கள் 5 பேரும் பீமா- கோரே கான் பகுதியில் திட்டமிட்டு கலவரத்தை நடத்தினார்கள் என்று போலீசார் சொல்கிறார்கள்.
கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்ட அந்த 5 பேரின் வீடுகளிலும் நேற்று முன்தினம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். டெல்லியில் உள்ள ரோனா வில்சன் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட போது சில கடிதங்கள் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதங்கள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் எழுதியது என்று கூறப்படுகிறது.
“ஆர்” என்று கையெழுத்திட்டு பிரகாஷ் என்பவருக்கு அந்த கடிதம் கடந்த ஆண்டு அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் பிரதமர் மோடியை ராஜீவ்காந்தி கொல்லப்பட்டது போன்ற பாணியில் தாக்குதல் நடத்தி படுகொலை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு, “மோடியை கொலை செய்வதற்காக எம்-4 ரக துப்பாக்கிகளை வாங்கவும், 4 லட்சம் குண்டுகளை வாங்கவும் ரூ. 8 கோடி தேவைப்படுகிறது” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கூறுகையில், “மோடியின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்” என்று கூறியுள்ளார். மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறுகையில், “பா.ஜ.க.வுக்கு எதிராக மாவோயிஸ்டு தீவிரவாதிகளை சில கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன. இது ஆபத்தில் முடியும் என்பதை அந்த கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட 5 பேரையும் புனே கோர்ட்டில் நேற்று முன்தினம் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அப்போது பிரதமர் மோடியை கொல்ல சதி திட்டம் தீட்டி மாவோயிஸ்டுகள் எழுதிய கடிதத்தையும் போலீசார் தாக்கல் செய்தனர்.
அந்த கடிதத்தை சுட்டிக்காட்டி பேசிய அரசு வக்கீல் உஜ்வாலா பவார், “கைதான 5 பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது” என்று எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு 5 பேருக்கும் மாவோயிஸ்டு அமைப்புடன் எத்தகைய வகைகளில் தொடர்பு இருக்கிறது என்பதையும் அவர் கோர்ட்டில் விளக்கமாக கூறினார்.
இதற்கு குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வக்கீல் தோசீப் ஷேக் ஆட்சேபம் தெரிவித்தார். அவர் கூறுகையில், “மோடியை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் கடிதம் திருத்தி எழுதப்பட்டுள்ளது. அது போலியானது. அதன் உண்மைத்தன்மை பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.
இந்த நிலையில் மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சி மோடி உயிருக்கு அச்சுறுத்தல் என்பது அனுதாபம் தேட நடத்தப்படும் முயற்சி என்று விமர்சனம் செய்துள்ளது. இதுபற்றி மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய்நிருபம் கூறியதாவது:-
பிரதமர் மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்த போதும் அவரைக் கொல்ல சதி சென்று தகவல் வெளியானது. இப்போதும் அதே பாணியில் கடிதம் வெளியிட்டுள்ளனர். இது மோடி தனது செல்வாக்கை காப்பாற்றிக் கொள்ள, தற்போதைய பிரச்சனைகளை திசை திருப்பும் முயற்சியோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
பிரதமர் மோடி தன்னை கொல்ல சதி நடப்பதாக கூறி அனுதாபம் தேட முயற்சி செய்கிறார். அவருக்கு செல்வாக்கு சரியும் போதெல்லாம் இப்படி ஏதாவது ஒன்றை செய்வார்கள். தற்போதும் பா.ஜ.க.வினர் அத்தகைய கதைகளை உலவ விட்டுள்ளனர்.
இந்த தடவை மாவோயிஸ்டுகள் சதி என்று சொல்கிறார்கள். இது முழுக்க முழுக்க பொய் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் கடித வார்த்தைகளில் சந்தேகம் உள்ளது.
மாவோயிஸ்டுகள் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் எங்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளது. அதில் உண்மை என்பது வெளியில் கொண்டு வரப்பட வேண்டும்.
எனவே அந்த சதி திட்டம் கடிதம் பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு சஞ்சய் நிருபம் கூறினார். #PMModi #Congress