search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Woman Arrest"

    மகனை கொலை செய்த கள்ளக்காதலனை கூலிப்படை உதவியுடன் தாய் கொலை செய்து பழிவாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவண்ணாமலை:

    சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த மஞ்சுளா (37) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

    இதை தெரிந்துகொண்ட மஞ்சுளாவின் 10 வயது மகன் ரித்தேஷ் என்பவரை நாகராஜ், கடந்த மார்ச் மாதம் கடத்தி கொலை செய்தார். இந்த வழக்கு தொடர்பாக எம்.ஜி.ஆர். நகர் போலீசாரால் கைது செய்யப்பட்ட நாகராஜ் சமீபத்தில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    இதையடுத்து, நாகராஜ் திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து அய்யங்குள தெருவில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 29-ந்தேதி மாலை கடைக்கு அருகே மர்ம கும்பலால் நாகராஜ் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக, திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கூலிப்படை உதவியுடன் நாகராஜை கொலை செய்ய மஞ்சுளா ஏற்பாடு செய்ததும் தெரிய வந்தது.

    இந்நிலையில், நாகராஜ் கொலையில் தேடப்பட்டு வந்த மஞ்சுளா மற்றும் சூளைமேட்டை சேர்ந்த தினேஷ்குமார், அரும்பாக்கத்தை சேர்ந்த ஷியாம்சுந்தர், சந்தோஷ்குமார், சரவணன் உள்ளிட்ட 5 பேர் சென்னை ஜார்ஜ் டவுன் 7-வது நீதிமன்ற நீதிபதி பஷீர் முன்னிலையில் நேற்று சரணடைந்தனர். 5 பேரையும் 4-ந் தேதி வரை சிறையில் அடைக்கவும், அன்றைய தினம் திருவண்ணாமலை கோர்ட்டில் 5 பேரையும் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த கொலை சம்பவம் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

    மகனை கொன்றவனை தீர்த்துகட்ட மஞ்சுளா முடிவு செய்தார். நாகராஜ் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் கொல்வதற்காக மஞ்சுளா துப்பாக்கி வாங்கினார். கடந்தவாரம் சைதாப்பேட்டை கோர்ட்டில் நாகராஜ் ஜாமீன் பெற மனுதாக்கல் செய்திருந்தார்.

    அப்போது நாகராஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அவரை கொலை செய்வதற்காக கோர்ட்டுக்கு வெளியே துப்பாக்கியுடன் மஞ்சுளா காரில் காத்திருந்தார்.

    இதனையறிந்த நாகராஜ் தரப்பினர் அவரை சைதாப்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதுபற்றி போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் துப்பாக்கியுடன் காத்திருந்த மஞ்சுளாவை கைது செய்தனர்.

    அவரது துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மஞ்சுளாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கபட்டது. அவர் சைதாப்பேட்டை கோர்ட்டில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.

    மஞ்சுளா அவரது நண்பர் தினேஷ்குமார், ஷியாம்சுந்தர், சந்தோஷ்குமார், சரவணன் ஆகியோர் மூலம் நாகராஜை கொலை செய்ய திட்டம் தீட்டினார். கடந்த 24-ந்தேதி திங்கட்கிழமை நாகராஜ் சென்னையில் இருந்து பஸ்சில் திருவண்ணாமலைக்கு வந்தார். அதே பஸ்சில் தினேஷ்குமார் உள்ளிட்ட 5 பேர் வந்தனர்.

    திருவண்ணாமலை ராமலிங்கனார் தெருவில் உள்ள வீட்டிற்கு நாகராஜ் சென்றார். அங்கும் கும்பல் சென்றது.

    பின்னர் நாகராஜ் அய்யங்குள தெருவில் உள்ள செல்போன் கடைக்கு சென்றார். அவரை பின் தொடர்ந்த கும்பல் ஒரு நாள் முழுவதும் அவரை நோட்டமிட்டனர். மதிய நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதை அறிந்து அந்த நேரத்தில் கொலையை அரங்கேற்ற திட்டமிட்டனர்.

    திருவண்ணாமலையில் இருந்து சென்னை திரும்பிய கும்பல் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலைக்கு சென்றனர்.

    நாகராஜை கொலை செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர். கிளிப்பட்டு என்ற இடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு பஸ்சில் வந்தவாசி சென்றுள்ளனர்.

    அங்கிருந்து புதுச்சேரி சென்று தங்கிவிட்டு சென்னை சென்றுள்ளனர். அங்கு அவர்கள் கோர்ட்டில் சரணடைந்தனர்.

    திருவண்ணாமலை டவுன் போலீசார் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். அதன் பிறகே கொலையில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும்.

    மகனை கொலை செய்த கள்ளக்காதலனை கூலிப்படை உதவியுடன் தாய் கொலை செய்து பழிவாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுவையில் நடந்த ஏ.டி.எம். கொள்ளையில் வங்கி ஊழியர் உடந்தையா? என்று கைதான பெண்ணிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மறைமலை அடிகள் சாலையில் புதிய பஸ் நிலையம் எதிரே ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணியளவில் இந்த ஏடி.எம். மையத்தில் ஒரு இளம்பெண் நுழைந்தார்.

    அந்த பெண் முறை கேட்டில் ஈடுபட்டு பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக மும்பையில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் வந்தது. இதையடுத்து புதுவை வங்கி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

    மேலும் அருகில் உள்ள உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனே வங்கி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    ஆனால், அதற்குள் அந்த பெண் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணத்தை கொள்ளயடித்து விட்டு தப்பி சென்று விட்டார். மொத்தம் ரூ.5 லட்சத்து 8 ஆயிரத்து 700 கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து உருளையன்பேட்டை போலீசார் அங்கு சென்று கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது பணத்தை கொள்ளையடித்து சென்ற பெண்ணை அடையாளம் கண்டனர்.

    இதையடுத்து புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை வெளியூருக்கு தப்பி செல்ல முயன்ற அந்த பெண்ணை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர் பெங்களூரை சேர்ந்த சித்ரா என்ற ஏஞ்சல் (வயது 28) என்பதும், கணவரை விட்டு பிரிந்த இவர் புதுவை கரியமாணிக்கம் பூந்தோட்டம் பகுதியில் தங்கி எய்ட்ஸ் நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தன்னார்வலராக இருந்து வந்தது தெரிய வந்தது.

    மேலும் ஏ.டி.எம். மையத்தில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசாரிடம் சித்ரா கூறியதாவது:-

    சம்பவத்தன்று ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்த போது ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கும் கதவு திறந்து இருந்ததால் பணத்தை எடுக்க சென்றதாக தெரிவித்தார்.

    ஆனால், அவரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 98 ஆயிரத்து 120-ஐ மட்டுமே போலீசார் கைப்பற்றினர். மீதி பணம் எங்கே? என கேட்ட போது, செலவு செய்து விட்டதாக சித்ரா தெரிவித்தார்.

    இதற்கிடையே நள்ளிரவு 11 மணிக்கு கரியமாணிக்கத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு சித்ரா வர காரணம் என்ன? மேலும் ஒரே நாள் நள்ளிரவில் ரூ. 1 லட்சம் ரூபாயை செலவு செய்ததாக சித்ரா கூறியது போன்றவற்றால் போலீசாருக்கு சித்ரா மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இந்த கொள்ளையில் அந்த வங்கியை சேர்ந்த பணம் நிரப்பும் ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதையடுத்து அந்த வங்கியில் பணம் நிரப்பும் ஊழியர்கள் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலி நிறுவனங்களை தொடங்கி ஜி.எஸ்.டி. வரி ரூ.40 கோடி மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்த பின்னர், அதனை முறைப்படுத்தவும், முறைகேடுகளை தடுக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    ஜி.எஸ்.டி. வரியை கட்டுபவர்கள் முறையான ஆவணங்களை தாக்கல் செய்கிறார்களா? என்பதை கண்டறிவதற்காக ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவு ஒன்று தனியாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலும் இந்த பிரிவு, ஜி.எஸ்.டி. வரி செலுத்துபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

    அதிகாரிகள் நடத்திய ரகசிய விசாரணையில், சென்னை மற்றும் மதுரையில் போலியான நிறுவனங்களை நடத்தி ஜி.எஸ்.டி. வரியை தாக்கல் செய்தது போல கணக்கு காட்டி ஒரு கும்பல் கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக சென்னை மற்றும் மதுரையில் ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவினர் அதிரடி சோதனை மேற்கொண்டதில் இதில் 2 பேர் போலியான கம்பெனிகளின் பெயரில் பொருட்களை வாங்கியது போலவும், அந்த பொருட்களை கொண்டு தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டது போலவும் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். ஒரு கம்பெனியை கூட தொடங்காமல் 30 கம்பெனிகளை தொடங்கி நடத்தியது போன்று கணக்கு காட்டியுள்ளனர். இதற்காக தங்களது குடும்பத்தினர், நண்பர்கள் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து ரூ.220 கோடிக்கு ஜி.எஸ்.டி. வரி தாக்கல் செய்தது போல கணக்கு காட்டியுள்ளனர்.

    தொழில் நிறுவனங்களின் கொள்முதல் மற்றும் விற்பனைக்கு ஏற்ப தொழில் முனைவோர் உள்ளீட்டு வரி வரவை (இன்புட் டேக்ஸ் கிரெடிட்) திரும்ப பெற முடியும், ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதன் அடிப்படையில் இந்த பணம் வரி வருவாயாக திரும்ப கிடைக்கும்.

    அந்த வகையில்தான் சென்னையை சேர்ந்த 2 பேர் ரூ.220 கோடி ஜி.எஸ்.டி. வரியை கட்டியதாக ஏமாற்றி ரூ.40 கோடி ரூபாயை மோசடியாக பெற்றுள்ளனர்.

    இதனையடுத்து மோசடியில் ஈடுபட்ட 2 பேரையும் ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதன் பின்னணியில் மேலும் சிலர் உள்ளனர். வங்கி அதிகாரிகள் சிலரும் இதற்கு உடந்தையாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்கள் யார்-யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஜி.எஸ்.டி. வரி மோசடியை தடுப்பதற்காக தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஓசூர் ஆகிய 5 இடங்களில் தனித்தனியாக அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. புதுவையிலும் தனியாக ஒரு அலுவலகம் இயங்கி வருகிறது. ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு பற்றி தகவல் தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும், அதுபோன்று செயல்படுபவர்களுக்கு தகுந்த சன்மானம் அளிக்கப்படும் என்று ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

    போலி விலைப்பட்டியல் மூலம் சென்னையில் ரூ.43 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி செய்த பெண் தொழில் அதிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #GST

    சென்னை:

    சென்னையை சேர்ந்த பெண் தொழில் அதிபர் பூனம் சர்மா. இவர் 3 நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்களின் இயக்குனராக இருக்கிறார்.

    இந்த நிறுவனங்களுக்கு பொருட்கள் எதுவும் வாங்காமல் போலி விலைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் போலி விலைப்பட்டியல் தயாரித்து தங்கள் பொருட்களை விற்பனை செய்துள்ளனர்.

    இதன் மூலம் ரூ.43 கோடியே 52 லட்சம் ஜி.எஸ்.டி. வரி மோசடி செய்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த தகவலை ஜி.எஸ்.டி. இயக்குனரக சென்னை வடக்கு முதன்மை கமி‌ஷனர் ராகேஷ் குமார் சின்கா தெரிவித்துள்ளார்.

    ஜி.எஸ்.டி. வரி மோசடி சட்டத்தின் கீழ் பூனம் சர்மா நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜி.எஸ்.டி. வரி மோசடி வழக்கில் இவரையும் சேர்த்து சென்னையில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கு முன்பு கடந்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி வர்த்தகர் தனராம் என்பவர் கைது செய்யப்பட்டார். 29-ந்தேதி திலீப்குமார் (45). கைதானார். இவர் ஸ்டீல், ரசாயன பொருட்கள், பிளாஸ்டிக், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தோல் பொருட்கள் விற்பனை செய்து வந்தார். #GST

    மகளிர் சுய உதவிக்குழு தவணை செலுத்தாததால் சிறுவனை கடத்தி சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    மேலசொக்கநாதபுரம்:

    போடி பரமசிவன் கோவில் தெருவை சேர்ந்த ராஜூ மனைவி சுலோச்சனா (வயது48). இவர் மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக உள்ளார். இந்த குழுவில் குலாளர்பாளையத்தை சேர்ந்த வீரணன் மனைவி ராணி (29). உறுப்பினராக உள்ளார்.

    இவர் ரூ.25 ஆயிரம் கடன் பெற்றிருந்தார். அதற்காக 15 நாட்களுக்கு ஒருமுறை தவணை செலுத்தி வந்தார். கடந்த 2 மாதமாக ராணி தான் வாங்கிய கடனுக்கு தவணை கட்டாமல் இருந்துள்ளார்.

    ஆத்திரம் அடைந்த சுலோச்சனா, ராணியின் வீட்டில் வந்து சத்தம்போட்டு சென்றார். நேற்று மாலையில் ராணியின் மகன் செல்வகணபதி (11) என்பவனை சுலோச்சனா பள்ளி முடிந்து வரும்போது வழியிலேயே மடக்கி கடத்தி சென்று விட்டார். தன் மகன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததை அறிந்த ராணி பள்ளியில் தேடி பார்த்தார். அங்கு தனது மகன் இல்லை. அவனது நண்பர்களிடம் கேட்டபோது சுலோச்சனா அழைத்து சென்றதாக கூறினர்.

    அப்போது ராணியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய சுலோச்சனா நீ கட்ட வேண்டிய தவணை தொகையை செலுத்தி விட்டு உன் மகனை அழைத்து செல் என கூறினார். இதை கேட்டதும் பதறி போன ராணி போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சுலோச்சனா வீட்டிற்கு சென்று அங்கிருந்த சிறுவன் செல்வகணபதியை மீட்டனர். மேலும் பணத்திற்காக சிறுவனை கடத்தி சென்ற சுலோச்சனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். #tamilnews
    நிதி உதவி வாங்கித் தருவதாக கூறி வயதானவர்களிடம் நூதனமுறையில் நகைகளை கொள்ளையடித்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோயம்பேடு:

    கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வரும் வயதானவர்களை குறி வைத்து பெண் ஒருவர், கலைஞர் நிதி உதவி தொகை ரூ.10 ஆயிரம் தருகிறார்கள் என்று கூறி அவர்களிடம் இருந்து நகைகளை பெற்று தலைமறைவாகி விடும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது.

    இதுபற்றி நகைகளை ஏமாந்த சிலர் கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது நூதன முறையில் நகை கொள்ளையில் ஈடுபட்ட ரெட்டேரி கண்ணகி நகர் திருவள்ளூர் தெருவைச் சேர்ந்த லட்சுமி (40) என்ப வரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

    அவர் வெளியூரில் இருந்து வரும் வயதான பெண்களை குறிவைத்து நிதி உதவி வாங்கித் தருவதாக கூறி அவர்கள் அணிந்து இருந்த நகையை ஏமாற்றி வாங்கிக் கொண்டு தலைமறைவாகி வருவது தெரிந்தது. அவரிடமிருந்து 1 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது.

    அரக்கோணம் அருகே போதையில் தகராறு செய்த கணவனை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த மோசூரை சேர்ந்தவர் பிரபு (வயது 30). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி லட்சுமி (27). தம்பதிக்கு ஜோதி (8) என்ற மகள், சூர்யா (7) என்ற மகன் உள்ளனர்.

    பிரபுவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அடிக்கடி குடித்துவிட்டு வந்து லட்சுமியிடம் தகராறு செய்து வந்தார். நேற்று இரவு போதையில் வீட்டுக்கு வந்த அவர் தகராறு செய்து அவரது மனைவியை அடித்து உதைத்தார். அக்கம் பக்கத்தினர் வந்து அவரை சமாதானம் செய்து வைத்தனர்.

    நள்ளிரவு வரை தொடர்ந்து தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமி துப்பட்டாவால் பிரபுவின் கழுத்தை இறுக்கினார். மூச்சு திணறல் ஏற்பட்டு பிரபு துடிதுடித்து இறந்தார்.

    பின்னர் வீட்டுக்குள் இருந்தபடி லட்சுமி கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்றனர். அங்கு பிரபு பிணமாக கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பிரபுவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து லட்சுமியை கைது செய்தனர். கணவர் குடிபோதையில் அடித்து உதைத்ததால் ஆத்திரத்தில் துப்பட்டாவை எடுத்து கழுத்தை இறுக்கிவிட்டதாக லட்சுமி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    இதனால் அவர்களது மகன், மகள் தவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ராமநாதபுரம் அருகே சிறுமியிடம் நகை அபேஸ் செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே உள்ள அத்தியூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது47). இவர் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார்.

    புது பஸ் நிலையம் வந்த அவர்கள் அங்குள்ள கடையில் பழம் வாங்கினார். அப்போது கருப்பசாமியின் பேத்தி ஸ்ரீநிதி (2½) கழுத்தில் கிடந்த நகையை ஒரு பெண் அபேஸ் செய்ய முயன்றார்.

    அப்போது ஸ்ரீநிதி அழத உடனேயே உறவினர்கள் பார்த்தபோது ஒரு பெண் நகையை திருட முயற்சித்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நகை திருட்டில் ஈடுபட்ட பெண்ணை பொதுமக்கள் பிடித்து கேணிக்கரை போலீசில் ஒப்படைத்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை கைது செய்தார்.

    விசாரணையில் அவரது பெயர் ரதிதேவி (43) என்பதும், பரமக்குடி மஞ்சள்பட்டணத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

    சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் திருந்தி வாழ்வதாக கூறிய பெண் கஞ்சா விற்றபோது போலீசார் கைது செய்தனர்.
    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 40). இவர் கஞ்சா விற்றதாகவும், மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதாகவும் புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, காசிமேடு மீன்பிடி துறைமுகம் போன்ற போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த மே மாதம் 22-ந்தேதி குற்ற விசாரணை சட்டத்தின் கீழ் புதுவண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் பழனி முன்னிலையில் வண்ணாரப்பேட்டை துணை கமி‌ஷனர் ரவளி பிரியாவிடம் சாந்தி 1 வருடம் திருந்தி வாழ்வதாக பிராமண பத்திரம் கொடுத்தார்.

    இந்த நிலையில் சில மாதங்களே ஆன நிலையில் சாந்தி மீண்டும் கஞ்சா விற்றார். இதையடுத்து அவரை இன்ஸ்பெக்டர் பழனி கைது செய்தார்.

    1 வருடத்தில் சாந்தி திருந்தி வாழ்ந்த நாட்கள் போக மீதமுள்ள 239 நாட்கள் அவரை சிறையில் அடைக்க வண்ணாரப்பேட்டை துணை கமி‌ஷனர் ரவளிபிரியா உத்தரவிட்டார். இதையடுத்து சாந்தி புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    மாந்திரீகம் பலிக்காததால் மந்திரவாதியை கொன்றதாக கைதான பெண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து கைதான அப்பெண் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    சென்னை:

    பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சைய்யது பஸ்ருதீன் (63). மந்திரவாதியான இவர் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனது கட்டிடத்தில் குறி சொல்லும் தொழில் செய்து வந்தார்.

    கடந்த 27-ந்தேதி இவர் குறி சொல்லி கொண்டிருந்த போது பர்தா அணிந்த பெண் ஒருவர் ஆசிட்டை அவர் மீது வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் முகம் கருகிய சைய்யது பஸ்ருதீன் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஆசிட் வீசிய பெண் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் அப்பெண் அடிக்கடி குறி கேட்க வரும் ஐஸ்அவுசை சேர்ந்த நபீன் தாஜ் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை தேடினர். அப்போது அவர் கீழ்ப்பாக்கம் அரசு மனநலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரிந்தது. அவரிடம் போலீசார் விசாரித்த போது மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசினார்.

    இதையடுத்து அவர் உண்மையிலேயே மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா? அல்லது கொலை வழக்கில் இருந்து தப்பிக்க நாடகம் ஆடுகிறாரா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மனநல பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில் அவருக்கு மனநிலை பாதிக்கப்படவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அவர் கொலை வழக்கில் இருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து டாக்டர்கள் அளித்த சான்றிதழை அடிப்படையாக வைத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

    நபீன் தாஜ் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    எனது கணவர் மரக்கடையில் வேலை பார்த்து வருகிறார். குடும்ப பிரச்சனைக்காகவும், தொழில் விருத்திக்காகவும் மந்திரவாதி சைய்யது பஸ்ரூதினை அடிக்கடி சந்தித்து வந்தேன். அப்போது பூஜை பொருட்கள் வாங்கி செல்வேன். ஒவ்வொரு முறையும் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கினார். தொடர்ந்து 13 வாரம் வருமாறு அவர் கூறினார்.

    ஆனாலும் பிரச்சனை தீராததால் அவருடன் சண்டை போட்டேன். அதன் பின் மீண்டும் 13 வாரம் வருமாறு கூறினார். இது போல் கடந்த 2 ஆண்டுகளாக அவரை சந்தித்து வந்தேன். ஆனால் எனது பிரச்சனை எதுவுமே தீரவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்தேன்.

    இது தொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நான் மந்திரவாதி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தேன். பின்னர் அங்கிருந்து தப்பி உறவினர் வீட்டிற்கு சென்றேன். அப்போது எனக்கு மன உளைச்சல் இருப்பதாக கூறியதால் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கைது செய்யப்பட்ட நபீன் தாஜ் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
    அம்பத்தூரில் போலீஸ் அதிகாரி வீட்டில் 30 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் தொழிற்பேட்டை பி.ஜி.என். சாந்தி நகர் தேவதாஸ் தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணசாமி. மத்திய பாதுகாப்பு படையில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    நேற்று வரலட்சுமி விரதத்திற்காக கிருஷ்ணசாமியின் மனைவி பீரோவில் இருந்த நகைகளை எடுத்து பூஜை அறைக்கு கொண்டு சென்றார். அப்போது 30 பவுன் நகை மாயமாகி இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கிருஷ்ணசாமி வீட்டில் வேலை செய்து வந்த விருகம்பாக்கத்தைச் சேர்ந்த லலிதா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் நகையை திருடியதை ஒப்புக் கொண்டார். திருடிய நகைகளை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த விவேகானந்தன் என்பவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் விவேகானந்தனை பிடித்தனர். அவரிடமிருந்து 20 பவுன் நகை மீட்கப்பட்டது. வேலைக்கார பெண் லலிதாவை போலீசார் கைது செய்தனர்.

    கொல்கத்தாவில் சேல்ஸ்மேன்களுக்கு விஷம் வைத்து கொல்ல முயன்றதாக பெண்ணை போலீசார் கைது செய்தனர். #BengalHousewife
    கொல்கத்தா:

    கொல்கத்தாவின் நியூ அலிப்பூரைச் சேர்ந்த மதுமந்தி சகா என்ற பெண், கடந்த மாதம் 27-ம் தேதி உள்ளூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் சமையலறை புகைபோக்கி மற்றும் சில சாதனங்கள் வாங்கி உள்ளார். இதற்காக ரூ.40 ஆயிரத்துக்கு காசோலை கொடுத்துள்ளார். ஆனால் அவரது வங்கிக்கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பிவிட்டது.

    இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் மதுமந்தியை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். அப்போது தன் வீட்டிற்கு வந்து பணம் வாங்கிக்கொள்ளும்படி மதுமந்தி கூறியிருக்கிறார்.

    இதையடுத்து அவரது வீட்டிற்கு 2 சேல்ஸ்மேன்கள் நேற்று பணம் வாங்க சென்றுள்ளனர். அவர்களுக்கு குளிர்பானம் கொடுத்துள்ளார். குளிர்பானத்தை ஒரு சேல்ஸ்மேன் குடித்ததும் திடீரென மயங்கி விழுந்துவிட்டார். இதனால் மற்றொரு சேல்ஸ்மேன் அங்கிருந்து தப்பி ஓடி, நியூ அலிப்பூர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி மதுமந்தியை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சேல்ஸ்மேனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். குளிர்பானத்தில் விஷத்தை கலந்து தன்னை கொல்ல முயன்றதாக அந்த சேல்ஸ்மேன் குற்றம்சாட்டியுள்ளார்.  #BengalHousewife
    ×