என் மலர்
செய்திகள்

ராமநாதபுரத்தில் சிறுமியிடம் நகை திருடிய பெண் கைது
ராமநாதபுரம் அருகே சிறுமியிடம் நகை அபேஸ் செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள அத்தியூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது47). இவர் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார்.
புது பஸ் நிலையம் வந்த அவர்கள் அங்குள்ள கடையில் பழம் வாங்கினார். அப்போது கருப்பசாமியின் பேத்தி ஸ்ரீநிதி (2½) கழுத்தில் கிடந்த நகையை ஒரு பெண் அபேஸ் செய்ய முயன்றார்.
அப்போது ஸ்ரீநிதி அழத உடனேயே உறவினர்கள் பார்த்தபோது ஒரு பெண் நகையை திருட முயற்சித்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நகை திருட்டில் ஈடுபட்ட பெண்ணை பொதுமக்கள் பிடித்து கேணிக்கரை போலீசில் ஒப்படைத்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை கைது செய்தார்.
விசாரணையில் அவரது பெயர் ரதிதேவி (43) என்பதும், பரமக்குடி மஞ்சள்பட்டணத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
ராமநாதபுரம் அருகே உள்ள அத்தியூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது47). இவர் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார்.
புது பஸ் நிலையம் வந்த அவர்கள் அங்குள்ள கடையில் பழம் வாங்கினார். அப்போது கருப்பசாமியின் பேத்தி ஸ்ரீநிதி (2½) கழுத்தில் கிடந்த நகையை ஒரு பெண் அபேஸ் செய்ய முயன்றார்.
அப்போது ஸ்ரீநிதி அழத உடனேயே உறவினர்கள் பார்த்தபோது ஒரு பெண் நகையை திருட முயற்சித்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நகை திருட்டில் ஈடுபட்ட பெண்ணை பொதுமக்கள் பிடித்து கேணிக்கரை போலீசில் ஒப்படைத்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை கைது செய்தார்.
விசாரணையில் அவரது பெயர் ரதிதேவி (43) என்பதும், பரமக்குடி மஞ்சள்பட்டணத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
Next Story






