search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவண்ணாரப்பேட்டை"

    புதுவண்ணாரப்பேட்டையில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை சிவன் நகரைச் சேர்ந்தவர் லோகேஷ். பெயிண்டர். இவரது மனைவி ராதிகா. இவர் களது 3 வயது மகள் மூனேஷி. நேற்று மாலை ராதிகா வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது சிறுமி மூனேஷி சமையல் அறைக்குள் சென்று அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் உள்ள நீரை எடுக்க முயன்றாள். அப்போது தலைகுப்புற தண்ணீருக்குள் விழுந்து விட்டாள்.

    மகளை காணாததால் ராதிகா வீட்டுக்குள் சென்று பார்த்தபோது தண்ணீர் தொட்டிக்குள் சிறுமி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே சிறுமியை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.

    புதுவண்ணாரப்பேட்டையில் டாஸ்மாக் சுவரில் துளைபோட்டு ரூ.2½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகிறார்கள். #Tasmac #MoneyRobbery
    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை -திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை மற்றும் பார் உள்ளது.

    இன்று மதியம் கடையை திறக்க ஊழியர்கள் வந்தபோது சுவற்றில் துளை போடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடையில் இருந்த ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பணம் கொள்ளை போய் இருந்தது.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    இதில் நள்ளிரவில் கொள்ளையர்கள் மதுபான பாருக்குள் புகுந்து டாஸ்மாக் கடையின் பின்புறம் உள்ள சுவரில் துளைபோட்டு உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள். #Tasmac #MoneyRobbery

    சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் திருந்தி வாழ்வதாக கூறிய பெண் கஞ்சா விற்றபோது போலீசார் கைது செய்தனர்.
    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 40). இவர் கஞ்சா விற்றதாகவும், மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதாகவும் புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, காசிமேடு மீன்பிடி துறைமுகம் போன்ற போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த மே மாதம் 22-ந்தேதி குற்ற விசாரணை சட்டத்தின் கீழ் புதுவண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் பழனி முன்னிலையில் வண்ணாரப்பேட்டை துணை கமி‌ஷனர் ரவளி பிரியாவிடம் சாந்தி 1 வருடம் திருந்தி வாழ்வதாக பிராமண பத்திரம் கொடுத்தார்.

    இந்த நிலையில் சில மாதங்களே ஆன நிலையில் சாந்தி மீண்டும் கஞ்சா விற்றார். இதையடுத்து அவரை இன்ஸ்பெக்டர் பழனி கைது செய்தார்.

    1 வருடத்தில் சாந்தி திருந்தி வாழ்ந்த நாட்கள் போக மீதமுள்ள 239 நாட்கள் அவரை சிறையில் அடைக்க வண்ணாரப்பேட்டை துணை கமி‌ஷனர் ரவளிபிரியா உத்தரவிட்டார். இதையடுத்து சாந்தி புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    புதுவண்ணாரப்பேட்டையில் டாஸ்மாக் கடை சுவற்றில் துளைபோட்டு ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை, ஏ.இ. கோவில் தெருவில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. சூப்பர் வைசராக சபரி உள்ளார்.

    நேற்று இரவு விற்பனை பணம் ரூ.9 லட்சத்து 28 ஆயிரத்து 200-ஐ கல்லாப் பெட்டியில் வைத்து விட்டு ஊழியர்கள் கடையை மூடிச் சென்றனர்.

    நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளைபோட்டு உள்ளே புகுந்தனர். பின்னர் கல்லாப்பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.9 லட்சத்து 28 ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.

    இன்று காலை ஊழியர்கள் மதுக்கடையை திறக்க வந்த போது சுவற்றில் துளைபோடப்பட்டு பணம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×