என் மலர்
நீங்கள் தேடியது "Alcohol sales"
- திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் இரு மடங்கு விற்பனை
- அதிகளவில் வருவாய் ஈட்டி உள்ளதாக அதிகாரிகள் தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் 216 கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் ரூ.3 கோடி முதல் ரூ.3½ கோடி வரை மதுபான விற்பனை நடைபெறும்.
ஆனால் இந்த வருடம் தீபாவளி அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் இரு மடங்கு மதுபானம் விற்பனை நடைபெற்று உள்ளது. இதில் 8 ஆயிரத்து 79 பெட்டி பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மதுபான வகைகளும், 10 ஆயிரத்து 637 பெட்டி பீர் வகைகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரூ.7 கோடியே 62 லட்சத்து87 ஆயிரத்து 920 வருவாய் ஈட்டி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 5 லிட்டர் சாராயம் பறிமுதல்
- ஜெயிலில் அடைப்பு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் காதர்கான், அரசு மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடு பட்டனர்.
அப்போது அண்ணான்ட ப்பட்டி சுடுகாடு அருகே மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 38) என்பவர் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் மற்றும் 5 லிட்டர் சாராயம் மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கர்நாடக மாநில 10 மது பாக்கெட்டுகள் மற்றும் 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை திருப்பத்தூர்கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி சிறையில் அடைத்தனர்.
- 41 பாட்டில்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமம் குட்டிச் சாலை புளிய மரத்தின் அருகே கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதாக கீழ்கொடுங்காலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது கீழ்கொடுங்கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (வயது 51) என்பவர் மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
பின்னர் போலீசார் முத்துராமலிங்கத்தை கைது செய்து அவரிடம் இருந்த 41 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- 25 பாட்டில்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
ரணிப்பேட்டை மாவட் டம், பனப்பாக்கம் பஸ் நிலைய பின்புறம் உள்ள புளியந்தோப்பு பகுதியில் அரசு மதுபாட்டில்கள் வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்ப தாக தனிப்பிரிவு சப்-இன்ஸ் பெக்டர் பிரபாகரனுக்கு தக வல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.
அப்போது பெண் ஒருவர் மதுவை அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2,500 மற்றும் 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- 70 பாட்டில்கள் பறிமுதல்
- ஜெயிலில் அடைத்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது ரெட்டியூர் பகுதியில் அரசு மது பாட்டில்கள் கள்ளத்தனமாக விற்று கொண்டிருந்த மேலும் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் ரெட்டியூர் பகுதியில் சோதனை செய்தனர்.
சின்ன கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சேட்டு (வயது 40) என்பவரை பிடித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
மேலும் அவரிடமிருந்து சுமார் 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஜோலார்பேட்டை போலீசார் சேட்டு மீது வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோல் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அதிபெரமனூர் பகுதியில் அரசு மது பாட்டில்கள் விற்பனை செய்த நந்தகுமார் (33) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து சுமார் 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்
- ஜெயிலில் அடைப்பு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது சின்ன பொன்னேரி பகுதியில் மது பாட்டில்கள் மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது சின்னபொன்னேரி பகுதியைச் சேர்ந்த கீதா (வயது 38) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மதுபாட்டில் களை மறைத்து விற்பனை செய்ததை கண்டுபிடித்து கீதாவை கைது செய்தனர்.
அதேபோல் ரவிச்சந்திரன் மனைவி திலகவதியும் (45) மது விற்றபோது கைது செய்யப்பட்டார். இருவரிடமும் மதுபாட் டில்களை பறிமுதல் செய்தனர். கைதான இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
- வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்
ஆரணி:
ஆரணி தாலுக்கா இன்ஸ்பெக்டர் புகழ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆரணி அடுத்த விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த தீர்த்தம்மாள், லாடவாரம் பகுதியை சேர்ந்த ஆந்தாயி மட்டதாரி கிராமத்தை சேர்ந்த சுசிந்திரன் ஆகிய 3 பேர் அரசு மதுபாட்டிகள் பதுக்கி வைத்து விற்று கெண்டிருந்தனர். அவர்கள் போலீசார் பிடித்து சுமார் 52 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் 3 பேர் மீது வழக்கு பதிந்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- 17 பார்கள் புதுப்பிக்காமல் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு பணம் கட்டவில்லை
- போலீஸ் சோதனையில் 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் அரசு டாஸ்மாக் கடைகளில் டாஸ்மாக் பாரும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த டாஸ்மாக் பார்கள் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு விடபட்ட நிலையில் காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் என 17 பார்கள் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் பாரை ஒப்பந்தம் எடுத்தவர்கள் சிலர் முறையாக புதுப்பிக்காமல் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு பணம் கட்டவில்லை என கூறப்படுகிறது.
கடந்த 25-ந் தேதி மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகையில் உரிய பணம் செலுத்தாமல் செயல்பட்ட 10 பார்களுக்கு டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வெள்ளியங்காடு பகுதியில் சீல் வைக்கபட்ட டாஸ்மாக் பாரில் உள்ளவர்கள் கள்ளத்தனமாக டாஸ்மாக் பாரின் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் வைத்து கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்தனர்.
இது தொடர்பாக காரமடை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு மது விற்பனை செய்தவர்களிடம் இருந்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை இதுபோன்று விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து விட்டு சென்றனர்.
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
- திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி சப் இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது பால்னாங்குப்பம் பகுதியில் மது பாட்டில்கள் மறைத்து வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பெயரில் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது பால்னாங்குப்பம் பெருமாள் கோவில் வட்டம் பகுதியைச் சேர்ந்த புகழேந்தி (வயது 52) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் புகழேந்தியை கையும் களமாக பிடித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவரிடமிருந்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- 70 பாட்டில்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த வண்ணந்தாங்கல் கிராமத்தில் நேற்று வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த தனசேகர் (47) என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது.
அதனைத் தொடர்ந்து, தனசேகரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடி அருகே ஜி.எஸ்.குப்பம் கிராமத்தில் மதுவிற்று கொண்டிருந்தவர்கள் போலீஸ் வருவதை கண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இருப்பினும், அங்கிருந்த 30 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து, வழக்குப்பதிந்து தனசேகரை ஜெயிலில் அடைத்தனர்.
- 60 லிட்டர் பறிமுதல்
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
கண்ணமங்கலம்:
சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் நேற்று கண்ணமங்கலம் அடுத்த ஏ.கே.படவேட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த முனியாண்டி (48), சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அவர் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், படவேடு கிராமத்தில் அரசு மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த தயாளன் (38) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 7 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்தனர்.
- தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் பாரில் மது குடித்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாமக்கல்:
தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து, தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் பாரில் மது குடித்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவங்கள், மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதையடுத்து, தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில், எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில் கூடுதல் எஸ்.பி., ராஜூ தலைமையில், கலால்துறை உதவி கமிஷனர் செல்வி, இன்ஸ்பெக்டர் அம்பிகா, எஸ்.ஐ.முருகன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர், மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் காரணமாக, மாவட்டத்தில் லைசென்ஸ் இல்லாத பார்கள், சந்துக் கடைகள் பெருமளவில் குறைந்துள்ளன. இருந்தும், ஆங்காங்கே ஒரு சில சந்துக் கடைகளில், கள்ளத்தனமாக மது விற்பனை நடந்து வருகிறது.
இந்த நிலையில், மோக னூர் அடுத்த ஆண்டாபுரம் பகுதியில், கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதாக, நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ் கண்ணனுக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின் பேரில், மோகனூர் எஸ்.ஐ., சிவக்குமார் தலைமையி லான போலீசார் அங்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அப்பகுதியில் மளிகை கடை நடத்திவரும், தி.மு.க கிளை செயலாளர் குமரவேல் (42) என்பவர், தனது கடையில் கள்ளத் தனமக மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் மளிகை கடையில் இருந்து, மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.