search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alcohol sales"

    • 206 டாஸ்மாக் மதுக்கடைகளில் வசூல்
    • நாள் ஒன்றுக்கு சராசரியாக 7.33 கோடி விற்பனை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 நாட்களில் 22 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    நவம்பர் 12-ந்தேதி தீபாவளி பண்டிகையை திருவண்ணாமலை மாவட்ட மக்கள் பட்டாசுகள் வெடித்தும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    நவம்பர் 10, 11 மற்றும் 12 ஆகிய 3 நாட்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 206 டாஸ்மாக் மதுக்கடைகளில் 22 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் 3 கோடியே 50 லட்சத்திற்கு மது விற்பனை நடைபெறும் நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாள் ஒன்றுக்கு சராசரியாக 7.33 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது.

    • திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் தண்ணீர் பந்தல் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.
    • மது விற்பனையில் ஈடுபட்ட கரூர், புஞ்சைபுகலூர், காந்திநகரை சேர்ந்த ராஜன் என்பவரது மகன் வீரமணி (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர்

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் தண்ணீர் பந்தல் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இங்கு செயல்பட்டு வரும் பாரில் அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு ஆய்வு மேற்கொண்டதில் அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 180 மில்லி மது பாட்டில்கள் 10-ம், மது விற்பனை செய்த ரொக்கம் ரூ. 750-ம் பறிமுதல் செய்யப்பட்டது. மது விற்பனையில் ஈடுபட்ட கரூர், புஞ்சைபுகலூர், காந்திநகரை சேர்ந்த ராஜன் என்பவரது மகன் வீரமணி (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 115 டாஸ்மாக் கடைகள் உள்ளன
    • அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளில் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட விசேஷ நாள்களில் மது விற்பனை வழக்கத்தைவிட அதிகளவில் இருக்கும். இந்த நிலையில், ஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி, அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

    இந்த தொடர் விடுமுறை காரணமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிக அளவு மது விற்பனை நடைபெற்றது.

    இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:-

    வேலூர் டாஸ்மாக் மாவட்டத்துக்கு உட்பட்ட வேலூர்,திருப்பத்தூர் மாவட்டங்களில் மொத்தம் 115 டாஸ்மாக் மதுக் கடைகள் உள்ளன.

    இவற்றில் கடந்த 3 நாள்களில் மட்டும் ரூ.11.56 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 83 கடைகள் உள்ளன. இவற்றில் ரூ.7.34 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

    அந்த வகையில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் ரூ.18.90 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனை நடைபெற்றுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • 20 பாக்கெட்டுகள் பறிமுதல்
    • போலீசார் சோதனையில் சிக்கியது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது புது ஓட்டல் தெரு அருகே கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் மறைத்து வைத்து விற்பனை செய்வதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது புது ஓட்டல் தெரு சமத் சாய்பு தெருவைச் சேர்ந்தவர் சமியுல்லா (வயது 44) என்பவர் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை விற்பனை செய்தபோது அவரை பிடித்து கைது செய்து அவரிடமிருந்து 20 மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • 300 பாட்டில்கள் பறிமுதல்
    • 3 பேர் கைது

    வேலூர்:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று தமிழக முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வேலூர் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சைதாப்பேட்டை முருகன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்காளம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த விமலா(வயது 75), கமலா ( 70), லட்சுமி (76) ஆகியோர் கள்ளத்தனமாக வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

    மேலும் போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.40,000 மதிப்பிலான 300 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • ரோந்து பணியில் சிக்கினர்
    • 12 பாட்டில்களை பறிமுதல்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் மாதனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் போலி மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி ஆம்பூர் தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அருளானந்தம் மற்றும் போலீசார் மாதனூர், பெரியாங்குப்பம், சுபேதர் தெரு, தோட்டாளம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சுபேதர் தெருவை சேர்ந்த கண்ணப்பன் மனைவி ராதிகா (வயது 36) என்பவர் போலி மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்ததுடன், அவரிடமிருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • 47 பாட்டிகள், பைக் பறிமுதல்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி 5 கண் பாலம் அருகே வந்தவாசி-திண்டிவனம் சாலையில் தெற்கு போலீஸ் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அந்த வழியாக வந்த பைக்கை மடக்கி சோதனை செய்தனர்.

    இதில் வந்தவாசி திண்டிவனம் சாலையைக் சேர்ந்த தேவேந்திரன் (வயது 47) மது பாட்டில் களை கடத்தியது தெரிய வந்தது.

    அவரை கைது செய்தபோலீசார் 47 மதுபாட்டிகள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவரது வீட்டில் சோதனை செய்தபோது பதுக்கி வைத்திருந்த 120 மது பாட்டில்களை கைப்பற்றினர்.

    பின்னர் தேவேந்திரனின் மனைவி சைதானியை (44) கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தேவேந்திரன் இதயநோயாளி என்பதால் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

    • 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்
    • போலீசார் சோதனையில் சிக்கினார்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சி பக்கிரித்தக்கா பகுதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் அரசு டாஸ்மாக் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெட்டிக்கடையில் சோதனையிட்டனர். அப்போது விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    அதே பகுதியை சேர்ந்த அனுமுத்து என்பவர் என் மனைவி பவுனம்மாள் (வயது 71) என்பவரை போலீசார் செய்தனர்.

    • 10 பாட்டில்களை பறிமுதல்
    • சிறையில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள சோலையூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ெரயில்வே குடியிருப்பு பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு மது பாட்டில்களை விற்பனை செய்த குமார் (52) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தன்.

    மேலும் குமாரை திருப்பத்தூர் கோர்ட்டி ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
    • 200 பாட்டில்கள் பறிமுதல்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சிறுணமல்லி பகுதியில் நெமிலி சப்இன்ஸ்பெக்டர் லோகேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது புத்தேரி கிராமத்தில் சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    அவர் சிறுணமல்லி கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் அருண் (வயது 23) என்பதும், அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்றதும் தெரிய வந்தது.

    போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 200 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • 10 பாட்டில்கள் பறிமுதல்
    • சிறையில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசிதலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவா சன் மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

    ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி ஊராட்சிரெட்டியூர் அருகே சென்றபோது குண்டு மாரி யம்மன் வட்டம் பகுதியை சேர்ந்ததிருப்பதி என்பவரின் மகன் சேட்டு (வயது 40) என்ப வர் ஒரு வீட்டின் பின்புறம் டாஸ்மாக் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்தார்.

    அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவ ரிடமிருந்து 10 மது பாட்டில் கள் பறிமுதல் செய்யப்பட் டன. பின்னர் அவரை போலீ சார் திருப்பத்தூர் கோர்ட் டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ரோந்து பணியில் சிக்கினர்
    • ஜெயிலில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே கள்ள சாராயம் மற்றும் வெளி மாநில மது பாக்கெட்டுகளை விற்பனை செய்தவரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஜோலார்பேட்டை அடுத்த கருப்பனூர் பகுதியில் கள்ள சாராயம் மற்றும் வெளிமாநில மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்பனை செய்து கொண்டு இருந்த தென்னரசு (வயது 37) என்பவரை கைது செய்தனர்.

    இதனையடுத்து தென்னரசு திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    ×