search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜோலார்பேட்டையில் மது விற்ற முதியவர் கைது
    X

    ஜோலார்பேட்டையில் மது விற்ற முதியவர் கைது

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
    • திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி சப் இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது பால்னாங்குப்பம் பகுதியில் மது பாட்டில்கள் மறைத்து வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அந்த தகவலின் பெயரில் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது பால்னாங்குப்பம் பெருமாள் கோவில் வட்டம் பகுதியைச் சேர்ந்த புகழேந்தி (வயது 52) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் புகழேந்தியை கையும் களமாக பிடித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவரிடமிருந்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×