search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருக்கழுக்குன்றம்"

    • சங்குதீர்த்த குளத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை சங்கு தோன்றுவதாக நம்பப்படுகிறது.
    • சங்கு நன்னீரில் உருவாவது அதிசயமாக பார்க்கப்படுகிறது.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இங்குள்ள சங்குதீர்த்த குளத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை சங்கு தோன்று வதாக நம்பப்படுகிறது. சங்குகள் பெரும்பாலும் கடலில் உள்ள உப்பு நீரில் தோன்றும். ஆனால் நன்னீரில் உருவாவது அதிசயமாக பார்க்கப்படுகிறது.

    சங்கு தீர்த்த குளத்தில் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெப்பக்குளத்தில் சங்கு தோன்றியது. அதன்பின்னர் நேற்று காலை அந்த குளத்தில் மீண்டும் புனித சங்கு தோன்றி வெளியே வந்தது. இதனை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர். இதனை காண ஏராளமான பக்தர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் புதிதாக தோன்றிய சங்கிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிறிய பல்லக்கில் மேள தாளத்துடன் ஊர்வலமாக மாடவீதியை சுற்றி வந்து தாழக்கோவிலை வந்தடைந்தது.

    பின்னர் பக்தர்கள் பார்வைக்காக அங்கு சங்கு வைக்கப்பட்டது. நேற்று இரவு 8 மணிவரை திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சங்கை பார்த்து தரிசனம் செய்து சென்றனர்.

    இன்று சிவராத்திரி என்பதால் காலை முதலே கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. குளத்தில் தோன்றிய சங்கை பார்க்க ஏராளமான பக்தர்கள் சுற்றுப்புற பகுதியில் இருந்து வந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பக்தர்கள் பக்தியுடன் சங்கை பார்த்து வழிபட்டு சென்றனர்.

    உள்ளுர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் சங்கை பார்க்க வருவதால் வருகிற 13-ந் தேதி வரை சங்கு தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. சங்கை சுற்றி பூ அலங்காரம் செய்து பக்தர்கள் பார்வைக்கு வைத்து உள்ளனர்.

    சிவராத்திரியை முன்னிட்டு தாழக்கோவில் கிழக்கு கோபுரம் மின்வி ளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது. சங்கு தரிச னம் நடைபெறும் நாட்கள் வரை கோபுர மின் அலங்காரமும் இருக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • திருக்கழுக்குன்றம் தாலுகாவில் ஜமாபந்தி வருவாய் தீர்வாய நிகழ்ச்சி, கடந்த மே.30ல் துவங்கி நேற்று நிறைவடைந்தது.
    • பேரூராட்சி தலைவர் யுவராஜ், தனி சப் கலெக்டர் சாகிதா பர்வீன், தாசில்தார் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் தாலுகாவில் "ஜமாபந்தி" வருவாய் தீர்வாய நிகழ்ச்சி, கடந்த மே.30ல் துவங்கி நேற்று நிறைவடைந்தது. இதில் 857 பேருக்கு, 2.07, கோடி ரூபாய் மதிப்பு, இலவச வீட்டு மனை பட்டா, சமூக பாதுகாப்பு, குறு, சிறு, நடுத்தர தொழில் மேம்பாடு, வேளாண்மை, தோட்டக்கலை, பொறியியல் உள்ளிட்ட துறைகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் எம்.பி செல்வம், திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ பாலாஜி, செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ பாபு, ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ், தனி சப் கலெக்டர் சாகிதா பர்வீன், தாசில்தார் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • கிணற்றில் கன்னியப்பன் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த ஆனூர் பகுதி வெண்பாக்கத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது82). இவர், அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிப்பது வழக்கம்.

    இந்த நிலையில் குளிக்க சென்ற கன்னியப்பன் நீண்ட நேரம் வரை திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கிணற்றில் கன்னியப்பன் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து கன்னியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×