என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருக்கழுக்குன்றம் அருகே கிணற்றில் மூழ்கி 82 வயது முதியவர் பலி
- கிணற்றில் கன்னியப்பன் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் அடுத்த ஆனூர் பகுதி வெண்பாக்கத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது82). இவர், அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிப்பது வழக்கம்.
இந்த நிலையில் குளிக்க சென்ற கன்னியப்பன் நீண்ட நேரம் வரை திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கிணற்றில் கன்னியப்பன் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து கன்னியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story