search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife killed"

    திருப்பூரில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவியை குத்தியால் குத்தி கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கே.வி.ஆர். நகர் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி கோமதி (வயது 30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் செல்வம் நகரில் உள்ள பிரிண்டிங் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தனர்.

    வேலைக்கு செல்லும் மூர்த்தி தினசரி மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். இதனை கோமதி கண்டித்தார். இதனால் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மூர்த்தி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் மனவேதனை அடைந்த கோமதி கணவரிடம் கோபித்துக்கொண்டு அருகே உள்ள தாய் ஜோதி வீட்டுக்கு குழந்தைகளை அழைத்து சென்று வசித்து வந்தார். பின்னர் மூர்த்தி மனைவியை சந்தித்து இனிமேல் குடிக்க மாட்டேன் என கூறினார். எனவே கோமதி தனது கணவரை தாய் வீட்டில் சேர்ந்து வசிக்க சம்மதித்தார்.

    நேற்று வேலைக்கு சென்ற மூர்த்தி நேற்று இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் நள்ளிரவு கோமதியை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். அவர் வர மறுத்து விட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த மூர்த்தி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கோமதியின் வயிறு, மார்பு பகுதியில் சரமாரியாக குத்தினார்.

    இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். மகளின் சத்தம் கேட்டு வந்த கோமதியின் தாய் ஜோதி மூர்த்தியை தடுக்க முயன்றார். அவரையும் மூர்த்தி கத்தியால் சரமாரியாக குத்தினார். பின்னர் அங்கு இருந்து தப்பி ஓடினார்.

    சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கோமதி, ஜோதி ஆகியோரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோமதி பரிதாபமாக இறந்தார்.

    படுகாயம் அடைந்த ஜோதிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவான மூர்த்தியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஓரினச் சேர்க்கையாளருடனான காதல் கண்ணை மறைக்க இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவியை கொன்றுவிட்டு உல்லாசமாக வாழ ஆசைப்பட்ட இந்தியருக்கு பிரிட்டன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. #jessicaPatel #Miteshpatel #gaylover #Indiaoriginman #mankilledwife
    லண்டன்:

    பிரிட்டன் நாட்டில் உள்ள மான்செஸ்ட்டர் பல்கலைக்கழகத்தில் படித்துவந்த ஜெசிக்கா, தன்னுடன் படித்த மித்தேஷ் பட்டேல் என்ற இந்திய வம்சாவளி மாணவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இங்கிலாந்தின் வடகிழக்கில் உள்ள நார்த் யார்க் ஷைர் பகுதிக்குட்பட்ட மிடில்ஸ்பரோ நகரில் ராயல் சாலையில் ஜெசிக்கா - மித்தேஷ் பட்டேல் தம்பதியர் ஒரு மருந்துகடை நடத்தி, வாழ்ந்து வந்தனர்.

    இந்நிலையில், இங்குள்ள லிந்தோர்ப்பே புறநகர் பகுதியில் உள்ள வீட்டில் கடந்த மே மாதம் ஜெசிக்கா(34) பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடித் தோற்ற நிலையில் இறந்து கிடந்தார்.

    தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அளவுக்கதிகமான இன்சுலின் ஊசி மருந்தை ஜெசிக்காவின் உடலில் செலுத்தி மயங்கவைத்த பின்னர், முகத்தை பிளாஸ்டிக் கவரால் பொத்தி, மூச்சுத்திணற வைத்து அவரை கொன்றுவிட்ட விபரம் பிரேதப் பரிசோதனை முடிவில் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து, போலீசார் சந்தேகத்தின்பேரில் மித்தேஷ் பட்டேலை கைது செய்து விசாரித்தபோது, தனக்கும் ஜெசிக்காவின் மரணத்துக்கு எந்த தொடர்பும் இல்லை என அவர் சாதித்தார். ஆனால், அவரது கைபேசியை ஆராய்ந்தபோது போலீசாருக்கு பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தது.

    இளம் வயதில் இருந்தே ஆண்களுடனான ஓரினச் சேர்க்கையில் அதிகமான பிரியம் கொண்டிருந்த மித்தேஷ், திருமணத்துக்கு பின்னரும் இதை தொடர்ந்து வந்துள்ளார். உலகளாவிய அளவில் ஓரினச் சேர்க்கை பிரியர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு பிரத்யேக ‘ஆப்’ மூலம் ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் வாழ்ந்துவரும் அமித் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகமாகியுள்ளார்.

    ஆஸ்திரேலியா சென்று தனது ஆசைப்படி அமித்துடன் தம்பதியராக சேர்ந்துவாழ மித்தேஷ் திட்டமிட்டார். ஆனால், இந்து சம்பிரதாயப்படி மனைவியை விவாகரத்து செய்வதில் உள்ள சிக்கலால் ஜெசிக்காவை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார்.

    மேலும், ஜெசிக்காவின் ஆயுள் இன்சூரன்ஸ் முதிர்ச்சி தொகையான 20 லட்சம் பவுண்டு பணமும் இந்த கொலை திட்டத்துக்கு தூபம் போட்டது. ஜெசிக்காவின் உடலில் இருந்து எடுக்கப்பட்டு உறைநிலையில் வைக்கப்பட்டிருந்த கருமுட்டையை அமித் உடலில் செலுத்தி பிள்ளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவரது விபரீத புத்தி வேலை செய்தது.

    இதை தொடர்ந்து, எப்படி அவரை கொல்லலாம்? என ஆலோசித்த மித்தேஷ், இதுதொடர்பாக பல இணையதளங்களில் அலசி, ஆராய தொடங்கினார். இறுதியாக, அதிகப்படியான இன்சுலின் மருந்தை செலுத்தி ஜெசிக்காவை கடந்த மே மாதம் 14-ம் தேதி கொன்றுள்ளார். 

    இந்த கொலையில் தனக்கிருக்கும் தொடர்பை மறைப்பதற்காக வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களின் கைவரிசை இது என்று போலீசாரை நம்பவைப்பதற்காக சில பொருட்களை உடைத்து ‘செட்அப்’ காட்சிகளை உருவாக்கினார் என்பதும் போலீசாரின் புலன் விசாரணை மூலம் தெரிய வந்தது.

    இதற்கான ஆதாரங்களின் அடிப்படையில் மித்தேஷ் பட்டேல்(37) மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை டீஸ்சைட் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் மித்தேஷ் பட்டேலுக்கு ஆயுள் தண்டனை விதித்து  நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

    இந்த தண்டனை காலத்தில் 30 ஆண்டுகள்வரை அவரை பரோலில் விடுவிக்கவும் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. #jessicaPatel #Miteshpatel #gaylover #Indiaoriginman #mankilledwife
    கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியை கொன்ற ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராமலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 42). இவர் மேற்கு வங்காளத்தில் ராணுவத்தில் புணிபுரிந்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த முருகலெட்சுமி (வயது 34) என்பவருக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு பிரேம்நாத் (14), ஹரிபிரசாத் (10) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். கண்ணன் தனது குடும்பத்தினருடன் ஆண்டிப்பட்டி பாலாஜி நகரில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் முருகலெட்சுமி குன்னூர் அருகே ஆற்றுப்பாலத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முருகலெட்சுமியின் உடலை கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது கணவர் கண்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தார்.

    பின்னர் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது மனைவிக்கும் வேறு ஒரு வாலிபருக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது. இது குறித்து எனக்கு தெரியவரவே நான் என் மனைவியை கண்டித்தேன். ஆனால் அவர்கள் கள்ளத் தொடர்பு நீடித்து வந்தது.

    மேலும் அந்த வாலிபரை 2-வது திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் முருகலெட்சுமி வசித்து வந்தார். எனது மனைவி பெயரில் உள்ள சொத்துக்களை எனது பெயரில் மாற்ற முயன்றேன். இதற்காக முருகலெட்சுமியிடம் கேட்ட போது அவர் மறுத்து விட்டார்.

    நேற்று முன்தினம் எனது மகன்களின் பள்ளி சான்றிதழ்களை வாங்குவதற்காக முருகலெட்சுமி அவர்கள் படித்த பள்ளிக்கு வந்திருந்தார். இதை அறிந்த நான் அங்கு சென்று முருகலெட்சுமியை நைசாக பேசி சமாதானம் செய்து ஆட்டோவில் அழைத்து வந்தேன். பின்னர் ராமலிங்காபுரத்தில் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.

    அதன் பிறகு எனது தந்தை சாமிக்கண்ணு, தாய் ராஜம்மாள் ஆகியோர் உதவியுடன் முருகலெட்சுமியின் உடலை ஆற்றில் வீசி விட்டேன்.

    இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியிருந்தார். இதனையடுத்து போலீசார் மனைவியை கொலை செய்த கண்ணன் மற்றும் அவரது பெற்றோரை கைது செய்தனர்.

    என் மனைவியை போலி சாமியார் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது குறித்து அவரது கணவர் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.

    புதுவை:

    கிருஷ்ணவேணியை போலி சாமியார் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது குறித்து அவரது கணவர் அசோக் கண்ணீர் மல்க கூறியதாவது:-

    என் வீட்டின் எதிரே போலி சாமியார் கோவிந்தராசு தனது மகளுடன் குடிவந்த போது ஆதரவற்றவராக இருந்ததால் அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து பழகினோம்.

    என் மனைவி மற்றும் எனது குடும்பத்தினர் அதிக தெய்வ பக்தி கொண்டவர்கள். இதனை பயன்படுத்தி போலி சாமியார் எங்களிடம் பணம் பறிக்க தொடங்கினார்.

    திருமணம் நடைபெறாமல் இருந்த எனது தங்கைக்கு கோவிந்தராசு பரிகார பூஜை செய்தால் உடனே திருமணம் நடைபெறும் என கூறியதால் கோவிந்தராசு மீது அதிக நம்பிக்கை வைத்தோம்.

    ஒரு கட்டத்தில் எனக்கு தெரியாமல் என் மனைவியிடம் எனக்கு 2-வது திருமணம் நடைபெறும் என்றும் எனது மனைவிக்கு தெரியாமல் என்னிடம் கிருஷ்ணவேணி உன்னை விட்டு பிரிந்து போய் 2-வது திருமணம் செய்து கொள்வார்.

    அதற்கு பரிகார பூஜை செய்ய வேண்டும் என கூறி எங்களிடம் தனித்தனியாக பணம் பறித்து கொண்டார். அதோடு புதிதாக திருமணம் முடிந்த எனது தங்கை கணவரை சந்தித்தும் இதேபோல் கூறி பணம் பறித்துள்ளார்.


    பணம்- நகை வேண்டும் என்று கேட்டால் கூட கொடுத்து இருப்போம். அநியாயமாக என் மனைவியை கொன்று விட்டு என்னையும், என் குழந்தைகளையும் மோசடி பேர்வழி கோவிந்தராசு தவிக்க விட்டதுடன் அப்பாவி போல் என்னுடன் சேர்ந்து எனது மனைவியை தேடிய போது போலி சாமியார் கோவிந்தராசுவுக்கு கண்டிப்பாக ஆண்டவன் தக்க தண்டனை கொடுப்பார்.

    இவ்வாறு அசோக் கண்ணீர் மல்க கூறினார்.

    மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய ரெயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டார்.

    பெரம்பூர்:

    திரு.வி.க. நகர் கோபாலபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (36). ரெயில்வே ஊழியர். இவருடைய மனைவி கல்பனா. 10 வருடங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சுரேஷ்-கல்பனா தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    சுரேஷ் வேறு பெண்களுடன் தொடர்பு வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி மனைவி கல்பனா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக, சுரேஷ் திரு.வி.க. நகர் போலீசில் புகார் செய்தார். உடல் மருத்துவ பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    பிரேத பரிசோதனையில் கல்பனா கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது. தெரியவந்தது.

    இதையடுத்து சுரேசிடம் திரு.வி.க. நகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது தன்னை தட்டிக்கேட்ட மனைவி கல்பனாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது.

    இதையடுத்து திரு.வி.க. நர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், ரெயில்வே ஊழியர் சுரேசை கைது செய்தார். அவர் மீது கொலை வழக்குபதிவு செய்யப்பட்டது.

    கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சுரேஷ், நீதிபதி உத்தரவுப்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    காட்டுமன்னார்கோவில் அருகே சொத்தை எழுதி தராததால் மனைவியை தீர்த்துகட்டினேன் என்று கைதான கணவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    சிதம்பரம் அருகே உள்ள தவர்த்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58). விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார். இவருடைய மனைவி உமாராணி(41). இவர் கடந்த மாதம் 21-ந்தேதி காலை வீட்டின் அருகில் உள்ள வாய்க்காலில் பிணமாக கிடந்தார்.

    அப்போது அங்கு வந்த உமாராணியின் அண்ணன் உமாசங்கர், தனது தங்கையின் சாவில் சந்தேகம் இருப்பதாக குமராட்சி போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலீசார் விரைந்து சென்று, இறுதிசடங்கை தடுத்து நிறுத்தி உமாராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சந்தேக மரணம் என்று கூறி வழக்குப்பதிவு செய்தனர்.

    பிரேத பரிசோதனையில் உமாராணியின் தலையில் காயம் இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் அவரை யாரோ அடித்து கொலை செய்து இருக்கிறார்கள் என்பதை போலீசார் உறுதிசெய்தனர். தொடர்ந்து இது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் செல்வராஜ் மேலவன்னியூர் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டனிடம் சரணடைந்தார். அப்போது அவர், தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர், அவர் குமராட்சி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து செல்வராஜை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அப்போது செல்வராஜ் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எங்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் மனமுடைந்த நான், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். தொடர்ந்து எனக்கும், எனது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் உமாராணி, விவாகரத்து கேட்டு விருத்தாசலம் கோர்ட்டில் மனு செய்தார். அதில் எங்களிடம் சமரசம் செய்து குடும்பம் நடத்த அறிவுறுத்தினர். இதேபோல் குமராட்சி போலீஸ் நிலையத்திலும் குடும்ப பிரச்சினை தொடர்பான வழக்கு உள்ளது.

    உமாராணி பெயரில் உள்ள சொத்துகளை எனது பெயருக்கு மாற்றி எழுதி தருமாறு கூறினேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்தேன்.

    விவசாய நிலத்தில் நின்று கொண்டிருந்த உமாராணியின் தலையில் கத்தியால் குத்தினேன். பின்னர் அவரை வாய்க்காலில் தள்ளிவிட்டு கொலை செய்தேன். பின்னர் எதுவும் தெரியாததுபோல் நாடகமாடினேன். இருப்பினும் போலீசாருக்கு என் மீது சந்தேகம் ஏற்பட்டதை அறிந்து, கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    வரதட்சணை கேட்டு மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவனை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 32). இவர் வானூர் அருகே உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அதே கம்பெனியில் புதுவை கூடப்பாக்கத்தை சேர்ந்த சவீதா (25) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

    வெங்கடேசுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது. அதனை மறைத்து, சவீதாவை காதலித்து 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதனை அறிந்த வெங்கடேசின் முதல் மனைவி கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். வெங்கடேஷ் தனது 2-வது மனைவி சவீதாவுடன் பூத்துறை காலனி பகுதியில் வசித்து வந்தார். இவர்களுக்கு 1 மகன், 2 மகள்கள் உள்ளனர்.

    வெங்கடேஷ் தனது மனைவி சவீதாவிடம் உன் வீட்டில் இருந்து எனக்கு வரதட்சணையாக பணம், நகை வாங்கிகொடு. இல்லை என்றால் உன்னை விவாகரத்து செய்துவிடுவேன் என கூறிவந்தார். இதற்கு சவீதா எங்கள் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கிதர முடியாது என்றார். இதனால் கணவன்-மனை விக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு வெங்கடேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மாமியார் வீடான புதுவை கூடப்பாக்கத்துக்கு சென்றார். அங்கு வைத்து மாமியார் செல்லம்மாளிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். பின்னர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பூத்துறைக்கு வந்தார்.

    அப்போது கணவன்- மனைவிக் கிடையே வரதட்சணை பணம் சம்பந்தமாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வெங்கடேஷ் ஆத்திரமடைந்து சவீதாவை கட்டையால் தாக்கினார். பின்னர் சிலிண்டர் பைப்பை எடுத்து சவீதாவின் கழுத்தை நெரித்தார். இதில் மூச்சுத்திணறி சவீதா பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து தடயங்களை மறைப்பதற்காக வீட்டில் படிந்திருந்த ரத்தக் கறைகளை வெங்கடேஷ் சுத்தப்படுத்தினார். சவீதா அணிந்திருந்த புடவையை அப்புறப்படுத்தி வேறு புடவையை சவீதாவுக்கு கட்டினார்.

    சவீதாவின் தாய் செல்லம்மாளுக்கு போன் செய்து உங்கள் மகள் தூக்குபோட்டு தற் கொலை செய்து கொண்டார். என கூறி போனை துண்டித்தார். பின்னர் வீட்டில் இருந்து வெங்கடேஷ் தப்பி ஓடிவிட்டார்.

    தகவல் கேட்டு செல்லம்மாள் மற்றும் உறவினர்கள் அலறியடித்துக் கொண்டு பூத்துறைக்கு வந்தனர். அங்கு சவீதா பிணமாக கிடந்ததை பார்த்து கதறி அழுதனர்.

    இதுகுறித்து வானூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த சவீதாவின் உடலை பார்வையிட்டு வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து சவீதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை சம்பவம் குறித்து சவீதாவின் தாய் செல்லம்மாள் வானூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய வெங்கடேசை தேடிவருகின்றனர்.


    இந்த நிலையில் இன்று காலை செல்லம்மாள் தனது உறவினர்களுடன் வானூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். சவீதாவை கொலை செய்த வெங்கடேசை உடனே கைது செய்யக் கோரி கோ‌ஷம் எழுப்பினர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் எழிலரசி சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியை குத்தி கொலை செய்த கணவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேளச்சேரி:

    பள்ளிக்கரணை நாராயணபுரத்தில் வசித்து வருபவர் ஐய்யப்பன். இவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு ஜெயஸ்ரீ (10), வர்ஷினி (8) ஆகிய 2 மகள்கள் உள்ளன.

    நேற்று இரவு குழந்தைகள் ஜெயஸ்ரீ, வர்ஷினி ஆகியோர் வெளியே விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்த போது கதவு பூட்டு போட்டு இருந்தது. இதுபற்றி அவர்கள் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தனர். உடனே பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது சுகந்தி கட்டிலில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

    அப்போது சுகந்தி கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சுகந்தியின் கணவர் ஐய்யப்பன் தலைமறைவாக இருப்பது தெரிந்தது. விசாரணையில் கள்ளக்காதலில் ஈடுபட்ட சுகந்தியை அவர் கத்தியால் குத்தி கொன்று விட்டு வீட்டை பூட்டி தப்பியது தெரியவந்தது.

    சுகந்திக்கும் ஒரு வாலிபருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதை அறிந்த ஐய்யப்பன் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். ஆனால் சுகந்தி கள்ளக் காதலை கைவிட வில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஐய்யப்பன் மனைவியை கொன்றுள்ளார்.

    தப்பி ஓடிய ஐய்யப்பனை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் சேலையூரில் வாகன சோதனையின் போது போலீசாரிடம் ஐய்யப்பன் சிக்கினார். அவரை பிடித்து பள்ளிக்கரணை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் மனைவியை கொன்றதை அவர் ஒப்புக் கொண்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    சங்கராபுரம் அருகே வேலைக்கு செல்லாததை கண்டித்ததால் மனைவியை கணவன் எரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ரிஷிவந்தியம்:

    விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மணக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 42), தொழிலாளி. இவரது மனைவி உமா (33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    ராஜா வேலைக்கு செல்லாமல் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதை உமா கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்றும் ராஜா குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவி உமாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி ஆத்திரம் அடைந்த ராஜா வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உமா மீது ஊற்றி தீ வைத்தார்.

    இதில் உடல் கருகிய நிலையில் உமா உயிருக்கு போராடி அலறினார். இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதைப்பார்த்ததும் ராஜா, மனைவி உமாவை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரது உடலிலும் தீப்பற்றி காயம் ஏற்பட்டது.

    உடல் கருகிய நிலையில் இருந்த கணவன்-மனைவி இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அவர்கள் 2 பேரும் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் உமா நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். ராஜாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து உமாவின் தாய் ராணி சங்கராபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    விருதுநகர்:

    விருதுநகர் சேர்வைக் காரன்பட்டியைச் சேர்ந்தவர் மாயழகன் (வயது 65) விவசாயி. இவருடைய மனைவி அழகம்மாள் (60). இவர்களது மகன்கள் மாணிக்கம், சன்னாசி ஆகியோர் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    மாயழகன் அடிக்கடி போதையில் வந்து அழகம்மாளுடன் தகராறு செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தாக்கியதால் அழகம்மாள் வீட்டில் இருந்து வெளியேறி தனது தம்பி மாரி வீட்டுக்கு சென்றார்.

    அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இது மாயழகனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இன்று காலை 7 மணிக்கு, அழகம்மாள் தனது மகன் மாணிக்கத்தின் பருத்தி காட்டுக்கு சென்று பணி செய்தார். அவருடன் மருமகள் பொன்னுத்தாய், பேத்தி சுமதி ஆகியோரும் இருந்தனர்.

    அப்போது அங்கு மாயழகன் கையில் அரிவாளுடன் வந்தார். அவர், மனைவி அழகம்மாளுடன் வாக்குவாதம் செய்தார். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால், பொன்னுத்தாய் மற்றும் சுமதி உறவினர்களை அழைக்கச் சென்றனர்.

    அந்த நேரத்தில் ஆத்திரம் அடைந்த மாயழகன், அரிவாளால் மனைவியை வெட்டினார். தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயம் அடைந்த அழகம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    ஆத்திரத்தில் மனைவியை வெட்டி கொன்ற மாயழகன் அதிர்ச்சியடைந்தார். வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர், அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    பொன்னுத்தாய் மற்றும் சுமதி கொடுத்த தகவலின் அடிப்படையில் பருத்திக்காடு வந்த உறவினர்கள், அழகம்மாள் கொலை செய்யப்பட்டு கிடப்பதையும் மாயழகன் தற்கொலை செய்திருபபதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ஆமத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து 2 உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியை வெட்டிக் கொன்று விட்டு கணவர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திண்டுக்கல் அருகே காதல் மனைவியை தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே சிறுமலை அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராமையா (வயது 23). இவருக்கும் அம்மைய நாயக்கனூரைச் சேர்ந்த ரேணுகா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    ராமையா சரக்கு வேன் ஓட்டி வருகிறார். ரேணுகாவுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். மீண்டும் அவரை அழைத்துக் கொண்டு சரக்கு வேனில் ராமையா சிறுமலைக்கு வந்து கொண்டு இருந்தார்.

    சிறுமலை பழையூர் பகுதியில் வேனை நிறுத்தி விட்டு காட்டு பகுதிக்குள் கணவன், மனைவி சென்றுள்ளனர்.

    அப்போது ரேணுகாவின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். மேலும் அவரது சேலையை மரத்தில் கட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது போல் தொங்க விட்டுள்ளார்.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. புறநகர் டி.எஸ்.பி. கோபால் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயந்திரன் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் தப்பி ஓடிய கணவர் ராமையாவை தேடி வருகின்றனர். ராமையாவிடம் விசாரணை நடத்திய பிறகுதான் கொலைக்கான உண்மை நிலவரம் வெளிவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    லாஸ்பேட்டை அருகே மனைவி என்னை மதிக்காததால் கொலை செய்தேன் என்று அவரது கணவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை அசோக் நகர் வாணிதாசன் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சரஸ்வதி (வயது 47). நேற்று முன்தினம் இரவு கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் சரஸ்வதியை ஆறுமுகம் அடித்து கொலை செய்தார். இது தொடர்பாக லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஆறு முகத்தை தேடி வந்தனர்.

    ஆறுமுகம் இன்று காலை முத்தியால் பேட்டை சாராயக்கடையில் மது குடித்து கொண்டு இருந்தார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர். மனைவியை கொலை செய்தது ஏன் என்பது குறித்து போலீசில் அவர் வாக்கு மூலம் கொடுத்தார். அதில் அவர் கூறியதாவது:-

    நான் சமீப காலமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தேன். அதே நேரத்தில் என்னால் குடிக்காமல் இருக்க முடியாது. எனவே, குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி மனைவியிடம் தொல்லை கொடுத்து வந்தேன்.

    இதனால் என்னை அவர் மதிப்பதில்லை. அதே போல் நேற்று முன்தினம் இரவும் குடிக்க பணம் கேட்டேன். என்னை அவமதிக்கும் வகையில் திட்டினார். அதன் பிறகு இருவரும் படுத்து விட்டோம்.

    இருந்தாலும் என்னை அவர் அவமதித்ததால் எனக்கு அத்திரம் ஏற்பட்டது. தூங்கிக் கொண்டிருந்த அவர் மீது இரும்பு தடியால் தாக்கினேன். இதில் மண்டை உடைந்து ரத்தம் வந்தது.உடனே பயந்து போன நான் அங்கிருந்து சென்று விட்டேன். இரும்பு தடியை சாந்தி நகரில் வீசினேன். பின்னர் அங்கிருந்து முத்தியால் பேட்டை சென்று தலைமறைவாக இருந்தேன்.அப்போது போலீ£ர் என்னை கைது செய்தனர்.

    இவ்வாறு வாக்கு மூலத்தில் கூறி உள்ளார்.

    ×