search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனைவியை கொலை செய்த கணவர் போலீசில் சிக்கினார்
    X

    மனைவியை கொலை செய்த கணவர் போலீசில் சிக்கினார்

    லாஸ்பேட்டை அருகே மனைவி என்னை மதிக்காததால் கொலை செய்தேன் என்று அவரது கணவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை அசோக் நகர் வாணிதாசன் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சரஸ்வதி (வயது 47). நேற்று முன்தினம் இரவு கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் சரஸ்வதியை ஆறுமுகம் அடித்து கொலை செய்தார். இது தொடர்பாக லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஆறு முகத்தை தேடி வந்தனர்.

    ஆறுமுகம் இன்று காலை முத்தியால் பேட்டை சாராயக்கடையில் மது குடித்து கொண்டு இருந்தார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர். மனைவியை கொலை செய்தது ஏன் என்பது குறித்து போலீசில் அவர் வாக்கு மூலம் கொடுத்தார். அதில் அவர் கூறியதாவது:-

    நான் சமீப காலமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தேன். அதே நேரத்தில் என்னால் குடிக்காமல் இருக்க முடியாது. எனவே, குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி மனைவியிடம் தொல்லை கொடுத்து வந்தேன்.

    இதனால் என்னை அவர் மதிப்பதில்லை. அதே போல் நேற்று முன்தினம் இரவும் குடிக்க பணம் கேட்டேன். என்னை அவமதிக்கும் வகையில் திட்டினார். அதன் பிறகு இருவரும் படுத்து விட்டோம்.

    இருந்தாலும் என்னை அவர் அவமதித்ததால் எனக்கு அத்திரம் ஏற்பட்டது. தூங்கிக் கொண்டிருந்த அவர் மீது இரும்பு தடியால் தாக்கினேன். இதில் மண்டை உடைந்து ரத்தம் வந்தது.உடனே பயந்து போன நான் அங்கிருந்து சென்று விட்டேன். இரும்பு தடியை சாந்தி நகரில் வீசினேன். பின்னர் அங்கிருந்து முத்தியால் பேட்டை சென்று தலைமறைவாக இருந்தேன்.அப்போது போலீ£ர் என்னை கைது செய்தனர்.

    இவ்வாறு வாக்கு மூலத்தில் கூறி உள்ளார்.

    Next Story
    ×