search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகரில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் தற்கொலை
    X

    விருதுநகரில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் தற்கொலை

    மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    விருதுநகர்:

    விருதுநகர் சேர்வைக் காரன்பட்டியைச் சேர்ந்தவர் மாயழகன் (வயது 65) விவசாயி. இவருடைய மனைவி அழகம்மாள் (60). இவர்களது மகன்கள் மாணிக்கம், சன்னாசி ஆகியோர் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    மாயழகன் அடிக்கடி போதையில் வந்து அழகம்மாளுடன் தகராறு செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தாக்கியதால் அழகம்மாள் வீட்டில் இருந்து வெளியேறி தனது தம்பி மாரி வீட்டுக்கு சென்றார்.

    அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இது மாயழகனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இன்று காலை 7 மணிக்கு, அழகம்மாள் தனது மகன் மாணிக்கத்தின் பருத்தி காட்டுக்கு சென்று பணி செய்தார். அவருடன் மருமகள் பொன்னுத்தாய், பேத்தி சுமதி ஆகியோரும் இருந்தனர்.

    அப்போது அங்கு மாயழகன் கையில் அரிவாளுடன் வந்தார். அவர், மனைவி அழகம்மாளுடன் வாக்குவாதம் செய்தார். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால், பொன்னுத்தாய் மற்றும் சுமதி உறவினர்களை அழைக்கச் சென்றனர்.

    அந்த நேரத்தில் ஆத்திரம் அடைந்த மாயழகன், அரிவாளால் மனைவியை வெட்டினார். தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயம் அடைந்த அழகம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    ஆத்திரத்தில் மனைவியை வெட்டி கொன்ற மாயழகன் அதிர்ச்சியடைந்தார். வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர், அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    பொன்னுத்தாய் மற்றும் சுமதி கொடுத்த தகவலின் அடிப்படையில் பருத்திக்காடு வந்த உறவினர்கள், அழகம்மாள் கொலை செய்யப்பட்டு கிடப்பதையும் மாயழகன் தற்கொலை செய்திருபபதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ஆமத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து 2 உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியை வெட்டிக் கொன்று விட்டு கணவர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×